Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

வியாழன், 16 ஜனவரி, 2014

கேள்வி : சுவாமிஜி, நமக்குத் துன்பம் செய்தவரை நாம் மனதார மன்னித்து விடுகிறோம். அப்பொழுது அவர் செய்த செயலுக்கு விளைவு தோன்றக் கூடாது அல்லவா?



சுவாமிஜியின் பதில் : மற்றவரின் செயலால் துன்பம் அடைந்தவர் பெருந்தன்மையோடு மன்னித்துவிட்டாலும், துன்பம் செய்தவரின் உள்ளுணர்வாக இருக்கும் பேரறிவானது விட்டுவிடாது. அவர் செய்த செயலைப் பதிவு செய்து இருப்பு வைத்து விளைவைக் காலத்தால் அளித்துவிடும்.
தவறு செய்து கொண்டே இருப்பவன் மனிதன். அதைத் திருத்தம் செய்து கொண்டே இருப்பவன் இறைவன். அந்தத் திருத்தம் தான் விளைவாக வந்து துன்பமாகத் தெரிகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக