Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

வெள்ளி, 1 நவம்பர், 2019

கருமையத்தூய்மை


காந்த நிலையறியாமல் கடவுள்நிலை அறிவதோ,
கருமையம் அறியாமல் அறிவினை அறிவதோ,
மாந்தராக வாழுகின்ற மாண்புடைய எவருக்கும்
மாற்றுவழி தத்துவத்தில் விஞ்ஞானத்தில் இல்லையே!
காந்தஆற்றல் உட்பொருள், கருமையத்துட் பொருள்,
கடவுளெனும் இறைவெளியே! இயக்க ஆற்ற லும்இதே!
காந்தமெனும் நிழல்விண்கள் தன்மாத்திரை ஐந்துமாய்,
கடைநிலையில் மனமுமாய்க் கலந்துளது வெளியோடு.
(ஞானக்களஞ்சியம் கவி: 1806)
உண்மைப் பொருளாகி உணர்ந்து விளக்கினேன்
காந்த நிலை உணர்ந்திடில், கடவுள் மனம் அதனிலே,
கண்டிடலாம் அதன் மாயத் திருநடனக் காட்சியாய்.,
மாந்தருக்குள் ஊறு, ஓசை, மணம், ஒளி, சுவை, மனம்
மற்றும் இன்பம் துன்பம் யாவும் மாயகாந்த விளைவுகள்.
சாந்தமான மனநிலையில் சலனமின்றி ஆய்ந்திட,
சந்தேகம் சிக்கலின்றி, சாட்சி கூறும் உன்உளம்.
வேந்தருக்கும் வேதருக்கும் வணிகருக்கும் பொதுஇது.,
விரிந்தறிவில் இறையுணர விளக்கினேன் விளங்கியே!
(ஞானக்களஞ்சியம் கவி: 1658)
தத்துவஞானி வேதாத்திரி மகரிசி
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக