Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

வியாழன், 24 அக்டோபர், 2019

❓ கேள்வி: சுவாமிஜி! ஒருவர் சமுதாயத்தை முன்னேற்றுவதற்காகப் பாடுபடுகிறார். அதற்காகத் தனி ஆசிரமத்தில் தங்கி அதற்கான பணிகளைச் செய்து வருகிறார். அவருடைய இறப்பிற்குப் பின் அவருடைய உயிரின் நிலை என்ன?


 பதில்: எந்தச் சேவையைச் செய்தாலும் ஒருவர் எல்லை கட்டிய நிலையிலேயே தன் மனதைப் பழக்கியிருந்தால், உயிர்விட்ட பிறகும் அது இந்த உலகத்தையொட்டியே (Earth bound) இருக்கும். அது வாழும் மனிதரோடு இணைந்து செயல்படும்.
பூவுலகத்தின் புவியீர்ப்பு களத்தைத் தாண்டிச் செல்ல வேண்டுமானால் மனம் பரந்து விரிந்து பிரபஞ்ச நிலையிலிருக்கப் பழகியிருக்க வேண்டும். உயிரிலுள்ள ஆணவம், கன்மம், மாயை என்ற முக்களங்கங்களும் நீங்கும் வரை அது இறைநிலையை அடைய முடியாது.
வாழ்க வளமுடன்!!
அருள்தந்தை தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக