Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

சனி, 21 செப்டம்பர், 2019

கரு தவம்!!

*நிலத்திலிருந்து முளை எழுந்தபோது முரசொன்றும் முழங்கவில்லை*

 *பழம் பழுத்து பக்குவமடைந்த போது ஊதுகொம்பின் ஒலியில்லையே....!!!*

 *ஒளிதரும் ஞாயிறும், நிலவும்  எழுந்தபோது வீரமுழக்கமில்லையே.......!!!*

 *ஆனால், மனிதன் மட்டும் எச்செயலை செய்தாலும்......!!!*

 *ஒன்று முழக்கமிடுகிறான்*

 *அல்லது முழக்கதை மற்றவரிடமிருந்து எதிர்பார்த்துக் கொண்டே இருக்கிறான்.......!!!*

 *தான் என்னவோ உலகில் யாருமே, எதுவுமே  செய்யாததை செய்துவிட்டோம் என்றும்*

 *சாதித்து விட்டோம் என்றும் கூக்குரலிட்டு வீர முழக்கமிடுகிறான்*

 *அல்லது சித்து வேலை செய்வோரிடம் தஞ்சம் புகுகிறான்*

 *அன்றாடம் அவன் கண் முன்னே தாவரங்களும், இயற்கையும்*

 *இதைத் தானே மௌன நிலையில் செய்து கொண்டு என்பதையும் மறந்தே மயக்கமுற்று இருக்கிறான்*

 **என்று விலகுமோ இந்த மாயத் திரை........?!?*

 *கல்லும் மரமும் மௌன நிலையில் நின்று கடமை தவறாது பயன் ஆற்றும் போது சொல்லும், கருத்தும் உடைய மனிதன் மட்டும் ஏனோ...சுகங்கெட்டு சமூகத்தை மறக்க வேண்டும்.....???அல்லும் பகலும் ஆசையை அழிக்கவென்றே ஆசைதனை பேராசை ஆக்கிக் கொண்டு அல்லல்படும் அன்பர்களே சுருங்கச் சொல்வேன் சுய நிலையை அறிய கரு தவமே போதும்"*

 *தத்துவ ஞானி  வேதாத்திரி மகரிஷி*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக