Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

ஞாயிறு, 20 டிசம்பர், 2015

பெண்ணின் பெருமை

கருத்தரித்த நாள் முதற்கொண்டு ஒன்பது மாதம் பத்து நாள் வரையில் ஒரு தாய்க்கு என்ன துன்பம் இருக்கும் என்று யாராலும் எண்ணிப் பார்த்தால், அதைவிட துன்பம் உலகத்தில் மனிதனுக்கு இருக்க முடியாது. எல்லையற்ற பெருவெளியாகி மெய்ப்பொருள் தன்னில் உள்ளமைந்துள்ள ஆற்றலால் நுண்ணியக்க மூலக்கூறாகிய ஆகாசமெனும் சக்தியாகி, சிவம் சக்தி இரண்டின் கூட்டுச் சேர்க்கையில், விகிதாச்சார அமைப்புக்கேற்ப அணு முதல் அண்ட கோடிகளாக விளங்குவதை சிந்தனையாற்றல் பெற்ற அனைவரும் அறிவோம்.
.
பேரியக்க மண்டலமெனும் பிரபஞ்சத்தின் ஆக்கம், நிகழ்வு, முடிவு எனும் மூன்றும் அணுக்கள் கூடுதல், இயங்குதல், பிரிதல் எனும் நிகழ்ச்சிகளேயாகும். எனினும் உயிரினங்கள் தோற்றங்கள், காப்பு இவற்றை பெண்மையினிடத்தே அருட்பேராற்றல் அமைத்திருக்கும், ஒப்புவித்திருக்கும் பேருண்மையை உணர்ந்து போற்ற வேண்டியுள்ளது.
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
********************************************
பெண்மையின் பெருமை :
"பெண் வயிற்றிலுருவாகிப் பின்னுமந்த
பெண் கொடுத்த பால் உண்டே வளர்ந்துமேலும்
பெண்துணையால் வாழுகின்ற பெருமை கண்டு.
பெண்மையிடம் பெருமதிப்பு அறிஞர் கொள்வார்;
பெண்மையே தன் உடலில் பாதியாகும்
பேருண்மை உணர்ந்ததனால், எனினும் சில்லோர்
பெண்ணினத்தைப் பழித்தெழுதிப் பாடியுள்ளார்
பேதைமையால், அறிவுநிலை உயரா முன்னம்."
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக