Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

வெள்ளி, 14 ஆகஸ்ட், 2015

தன்னுடைய மிக அத்தியாவசியத் தேவையை நாடி, அதற்குத் தடை ஏற்படும்பொழுது எழும் சினத்தை எவ்வாறு தவிர்ப்பது? சினம் மனதில் சீக்கிரம் மறைவதில்லையே? அதற்கு என்ன செய்வது?...


.
மகரிஷியின் பதில் :
--------------------------------
"நாம் வாழ்விலே எப்பொழுதுமே பிறரிடமிருந்து ஏதேனும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். அத்தகைய எதிர்பார்ப்பிலே எப்பொழுதும் கணக்கு சரியா என்று பார்த்தால் பெரும்பாலும் அது தவறாகவே இருக்கும். நமது எல்லைகட்டிய உணர்விலே இருந்து நமக்கு இது தேவைப்படும் என்பதை எண்ணிக்கொண்டு அதையே அவர்கள் செய்ய வேண்டும் அவர்கள் எனக்கு இணங்கி நடக்க வேண்டும் என்று நினைக்கிறோம். ஆனால், ஒவ்வொருவருக்கும் ஒரு பொறுப்பு உண்டு, அறிவுண்டு, அவர்கள் செயலாற்றவேண்டிய கடமையும் உண்டு. அந்தந்த நிலையிலே இருந்து கொண்டு அவரவர்கள் பணிபுரியும்போது நீங்கள் எண்ணுமாறு அவர்கள் செய்ய வேண்டும் என்று நினைப்பதிலே தவறு உங்களிடமே தவிர அவரிடம் இல்லை.
.
அப்படியே தவறு அவர்களிடம் இருந்தாலும்கூட நீங்கள் என்ன செய்யமுடியும் என்று எண்ணிப்பாருங்கள். அவரை நினைத்துப் பல தடவை வாழ்த்துங்கள். இரண்டு மூன்று நாள் வாழ்த்துங்கள். உண்மையில் நீங்கள் எதையோ பெறுவதற்கு உரிமை உடையவராக இருந்து அதனை அவர் தவறாகத் தடுப்பவராக இருந்தால் அவருடைய அந்த எண்ணம் மாறிவிடும்; அவர் உங்களுக்கு நலம் செய்வார். நீங்கள் விரும்பியதைத் தருவார். சினத்தினால் அதை நீங்கள் பெறமுடியாது. எனவே சினத்தைவிட சினமற்ற தன்மையிலே அமைதியான நிலைமையிலே, அன்பான முறையிலே அதைப் பெறலாம். அதைவிட மேலும் பெறலாம் என்று அழுத்தமாகக் கூறுகிறேன்."

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக