Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

புதன், 11 ஏப்ரல், 2012

வாழ்வுக்கு ஆதாரமான அறநெறிகள்





 1. வாழ்வின் நோக்கம்,, தேவைகள், விருப்பங்கள் இவற்றை மதிப்பிட்டுக் கொள்ள வேண்டும். இவை ஒன்றுக்கொன்று முரண்படாமல் அமைத்துக்கொள்ள வேண்டும்.

2. தனக்கு அமைந்துள்ள சூழ்நிலைகளையும் வாய்ப்புகளையும் கணித்துக் கொள்ள வேண்டும்.
...
3. இயற்கையின் ஒழுங்கமைப்பும், அதன் ஆற்றலின் விளைவான காரண காரிய விளைவு விதியைப் பற்றி உணர்ந்து கொண்டு மதித்து போற்றி நடக்க வேண்டும்.

4. வாழவேண்டிய முறைகளையும், ஆற்றவேண்டிய செயல்களையும் வரிசைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

5. இத்தகைய வாழ்வுக்குத் தன்னைத் தகுதியாக்கிக் கொள்வதற்கு உடல் வலிமையையும், திறனையும், அறிவையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

6. விடாமுயற்சியோடும், எண்ணம், சொல், செயல் இவற்றைப் பயன்படுத்த வேண்டும்.

7. அவ்வப்போது வாழ்க்கையில் ஏற்படும் தவறுகளைத் தற்சோதனை, செயல்திருத்தம் என்ற இரண்டு வழிகளிலும் திருத்தித் தன்னை தூய்மையாக்கிக் கொண்டே இருத்தல் வேண்டும்.

இத்தகைய அறநெறிகளை வாழ்விலே பின்பற்றி செயல்பட்டால், வாழ்வு இனிமையாகவும், அமைதியாகவும், சிறப்பாகவும் இருக்கும்.

அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக