Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

புதன், 30 நவம்பர், 2011

வேதாத்திரிய திருக்குறள் உட்பொருள் விளக்கம்

“பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவனடி சேரா தார்”

ஓர் உயிருக்குப் பிறவித் தொடர் நீண்டு கொண்டே போவதற்கு மூன்று காரணங்கள் உள்ளன.

1) உலகப் பொருட்களைத் துய்த்தும் நிறைவு பெறாமல் அவற்றின்மீது பற்றி நிற்பது.
2) விளைவறியாது பழிச்செயல்களை ஆற்றி ஆன்மாவில் பாவப் பதிவுகளைக் கூட்டிக் கொண்டிருப்பது.
3) தனக்கு மூலநிலையான தெய்வ நிலை உணர்ந்து அதனோடு இணைப்பு பெறாதது.

இம்மூன்று குறைபாடுகளால் உயிர் உலகக் கவர்ச்சியில் நிற்கின்றது. வான் கவர்ச்சிக்கு வழியில்லை. பரம்பொருளாகிய இறைவனின் நிலையுணர்ந்து தன்னை அதனோடு இணைத்துக் கொள்ளும் பேற்றை ஒருவன் பெறாவிட்டால் வினைப்பதிவுகளால் பிறவித் தொடர் நீண்டு கொண்டே போகும். பிறவிக் கடலைக் கடக்க முடியாது என்று தெளிவுபடுத்துகின்றார் இந்தக் குறளில்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக