Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

வியாழன், 26 ஏப்ரல், 2012

வேதாத்திரிய சிந்தனைகள் : - "தொழில்"

* தொழிலும் வருவாயும் உள்ளவர்களே கடமைகளை ஒழுங்காகச்
... செய்யமுடியும். அறவழியில் நடக்கமுடியும். ஆகவே உடல்
வலிவுள்ள யாவரும் தொழில் செய்தேயாகவேண்டும்.
செலவுக்கேற்ற வருவாய் தேடியே ஆகவேண்டும்.

* முற்றிலும் தனக்குத் தெரியாத ஒரு வாணிபத்தில் இறங்குவது
கூடாது. பெரிய அளவில் செல்வ முதல் உடையோர்கள் ஊதியத்தின்
மூலம் பலருடைய தொழில் நுட்பத் திறமைகளை ஒன்றுசேர்த்து
பயன்பெறலாம். மற்றவர்களுக்கு புதுத் துறை ஏற்றதல்ல.

* முறையாகச் செய்யும் தொழிலானது உடல், உள்ளம், குடும்பம்,
ஊர், நாடு, உலகு இவற்றிற்கு மேன்மை தரும். வசதியிருந்து
பொருள் ஈட்டாமல் உணவு கொண்டு வாழ்பவர்கள் பொருளாதாரச்
செழிப்பை அரிக்கும் கிருமி, சமுதாயாத்திற்கு ஒரு நோய்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக