Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

சனி, 21 நவம்பர், 2015

முன் பின் பிறவிகள்


ஒரு மனிதனின் முற்பிறவிகளை அறிய வேண்டுமானால் அவன் உருவத்திற்கு மூலமான விந்துநாதத் தொடர்பை யூகத்தால் பற்றிக் கொண்டே பின்னோக்கிக் செல்ல வேண்டும். அந்தத் தொடர்பு பல்லாயிரக்கணக்கான உருவ வேறுபாடுகளையுடைய ஜீவராசிகளாகக் காட்சியளிக்கும். அத்தனை ஜீவராசிகளின், உடலியக்க்கம், அறிவியக்கம் இவைகளை அடக்கமாகப் பெற்றவனே ஒவ்வொரு மனிதனும்.
.
பின்னோக்கிக்ச் செல்லும் உருவ பரிணாமத் தொடர்பு, பல ஜீவராசிகளையும் தாண்டிப்போய் இறுதியாக பரமாணுவிலேயே முடிவுபெறும். அங்கிருந்து முன்னோக்கிப் பார்த்தால், எல்லா ஜீவராசிகளும், தோற்றப் பொருட்களும், ஒரே மூலத்தை அடிப்படையாகக் கொண்டு விரிந்து, பிரிந்து தொடர்ந்து இயங்கும் ஒரு அகண்ட பேரியக்கம் அறிவுக்குக் காட்சியாகும்.
.
ஒரு மனிதனின் பின்பிறவிகளை அறிய வேண்டுமானால் அவைகள் அவன் விந்துவின் மூலம் தோன்றும் மக்களும் அம்மக்களின் மூலம் தொடர்ந்து தோன்றும் மக்களுமேயாகும்.
.
ஆதி அல்லது அகண்ட சக்தி, அணு, அறிவு என்ற மூன்று நிலைகளைப் பற்றி அறிந்தவர்களுக்கு இந்த விளக்கம் மிகத் தெளிவாக இருக்கும். மற்றவர்கள் பொறுமையோடு பலதடவை சிந்தித்தே அறியவேண்டும்.
.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி
***********************************************
பிள்ளைகளும் பெற்றோரும்:
"பிள்ளைகளைப் பெற்றோர்கள் உடலைவிட்டால்
பெரும்பாலும் அவருயிர்கள் கருத்தொடராம்
பிள்ளைகளோடிணைந்துவிடும் இயற்கைநீதி ;
பெற்றோர்கள் தவம் ஆற்றி அறமும் செய்தால்
பிள்ளைகளை வழிவழியாய் இப்பேராக்கம்
பின் தொடர்ந்து குலக்கொடியைத் தூய்மையாக்கும்.
பிள்ளைகளும் பெற்றோரும் வினைத்தொடர் ஆம்
பேரினைப்பில் எப்போதும் ஒன்றேயாவார்."
.
மறு பிறவி :
"மரம் வளர்ந்தால் வித்து இடும்
மரத்தினது தன்மையெல்லாம் வித்தில் உண்டு.
மரம் வித்து வித்து மரம்
மாறி மாறித்தோன்றும் எல்லை இல்லை;
மரம் செத்தால் அது பிறவா,
மற்றுமதன் வித்துக்கள் மரங்களாகும்.
மரம் வித்து நிலைபோல்தான்
மனிதருக்கும் மற்றுயிர்க்கும் மறு பிறப்பு".
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக