Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

செவ்வாய், 20 நவம்பர், 2012

மனிதன் முழுமை பெற ஏழு விதிகள்




1. வாழ்வின் நோக்கம், தேவைகள், விருப்பங்கள் இவற்றை மதிப்பிட்டுக் கொள்ள வேண்டும். இவை ஒன்றுக்கொன்று முரண்படாமலும் அமைத்துக் கொள்ள வேண்டும்.

2. தனக்கு அமைந்துள்ள சூழ்நிலைகளையும் வாய்ப்புக்களையும் கணித்துக் கொள்ள வேண்டும்.
  3. இயற்கையின் ஒழுங்கமைப்பையும், அதன் ஆற்றலின் விளைவு நியதியையும் உணர்ந்து கொண்டும், மதித்தும் நடக்க வேண்டும்.

4. வாழ வேண்டிய முறைகளையும், ஆற்ற வேண்டிய செயல்களையும் ஒழுங்காகத் தொகுத்துக் கொள்ள வேண்டும்.

5. இத்தகைய வாழ்விற்குத் தன்னைத் தகுதியாக்கிக் கொள்ள உடல்வலிமையையும், திறனையும், அறிவையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.இவற்றிற்கு முறையான உடற்பயிற்சியையும், உள்ளப்பயிற்சியையும், சிந்தனை ஆற்றலையும் பழகிக் கொள்ள வேண்டும்.

6. விழிப்போடும் விடாமுயற்சியோடும் எண்ணம், சொல், செயல் இவற்றைப் பயன் படுத்த வேண்டும்.

7. அவ்வப்போது ஏற்படும் தவறுகளை, தற்சோதனை, செயல்திருத்தம் என இரண்டு வழிகளிலும் திருத்தித் தன்னை தூய்மையாக்கிக் கொள்ள வேண்டும்.

- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி -

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக