Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

சனி, 2 மார்ச், 2013

கேள்வி : சுவாமிஜி, பரிணாம வளர்ச்சியில் முதல் பாவப்பதிவு எவ்வாறு தோன்றியிருக்கும்?



மகரிஷியின் பதில்: முதல் பாவம் என்றால் முதல் மனிதனிடமிருந்து வந்தது தான். முதல் மனிதன் விலங்கினத்தின் வித்துவிலிருந்து வந்தவன். விலங்கினங்கள் உணவிற்காகப் பிற விலங்குகளைக் கொன்று வாழ்கின்றன. பிற உயிர்களினுடைய வாழும் உரிமையைப் பறித்தே வாழ்கின்றன. இவ்வாறே பிறர்வளம் பறித்து வாழ்தல் என்பது மனிதனிடமும் வந்திருக்கின்றது. அன்றிலிருந்து இன்று வரை மனிதகுலம் இக்குணத்தை மாற்றிக் கொள்ள சிந்திக்கவில்லை. 'நான் ஏன் பிறருடைய வாழ்க்கையைப் பறித்து வாழ்கிறேன்' என்ற எண்ணம் வந்தவர்களெல்லாம் ஞானியராகி விட்டனர். அவ்வாறு சிந்திக்காதவர்கள் எல்லோரும், ஒருவர் மற்றவரை வாழவிடாது செய்து கொண்டிருக்கிறார்கள். இது தான் இன்றைய உலகம். பாவம் என்பது விலங்கினத்திலிருந்தே வந்தது. மனித உருவம் விலங்கினத்தின் வித்துத் தொடரிலிருந்தே தோன்றியது. ஆதலால் அங்கேயே பாவத்துக்கான அடிப்படை ஆரம்பித்து விட்டது.


 - தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக