Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

வெள்ளி, 19 அக்டோபர், 2012

தம்பதியர் பயிற்சி

குடும்பத்தில் கணவன் மனைவி இருவருமே குண்டலினி யோகப் பயிற்சியை ஏற்றுப் பழகுவதனால் வாழ்வில் பல நன்மைகளைப் பெறலாம். பால் உணர்ச்சி வேட்பு இவற்றில் சமநிலை, அறுகுணச் சீரமைப்பு, ஒருவரையொருவர் புரிந்து கொண்டு ஒத்தும் உதவியும் வாழ்தல் இவை அனைத்தையும் குண்டலினி யோகத்தால் பெறவும் காக்கவும் முடியும்.

பிறக்கும் குழந்தைகள் தரமுடையனவாக இருக்கும். பிறந்த குழந்தைகளை வளர்ப்பின் முறையறிந்து வளர்ப்பதால் குடும்பத்திற்கும் சமுதாயத்திற்கும் நலமளிப்பவர்களாக அவர்கள் சிறப்படைவார்கள். சுருங்கச்சொன்னால் குண்டலினி யோகம் பயிலும் ஒவ்வொருவரும் குடும்பத்திற்கும், ஊருக்கும், நாட்டிற்கும், உலக சமுதாயத்திற்கும் அறிவின் நலமளிக்கும் சுடராக, ஆன்மீக ஒளியைப் பரப்பும் நல்விளக்காகத் திகழ்வார்கள். யோகப் பயிற்சியின் மூலம் உடலையும் உயிரையும் அறிவையும் மேலான நிலையில் வைத்துக் கணவன் மனைவி மகிழ்ச்சியோடும் நிறைவோடும் வாழ முடியும்.

- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி -

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக