Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

ஞாயிறு, 5 அக்டோபர், 2014

YOU CAN LIVE FOR 100 YEARS

If you Practise Kaya Kalpa Yoga
Yogiraj Vethathiri Maharishi
The inevitable phenomenon of ageing (growing old) and the infirmities and disabilities associated with it have been engaging the attention of Medical Scientists for centuries; and in a different manner, the attention of philosophers too. We have taken up the subject for today’s talk and the analysis, as usual in our classes, shall be on systematic and scientific lines.

The Physical body is where the imprint of Ageing is most marked. The functioning system called the human being actually comprises
(1) the physical body; (2) the mind; (3) the life-force and (4) the sexual vital fluid.
 These four are interrelated, as I shall proceed to explain.
The concrete part of the body is made up of millions of cells, all these cells being held together by polar attraction. The cells are of different categories – there are flesh–cells, blood–cells, marrow–cells, bone-cells and so on.
Every cell is a laboratory by itself – a complete structure with its own magnetic, electrical and chemical functions. Each cell draws just what it needs from the running system and it eliminates what it no longer requires. Every cell could be likened to a mini-city, with its own infrastructure of service-connections, recycling plants and effluent-network. The cells, as I said, are held together by polar attraction and that is how the body stays in one piece. If this polar attraction were to disappear, what would happen? The cells would no longer be held together and so the body would begin to disintegrate, to fall apart.
It would now be clear to you all that if this polar attraction is to be maintained, some force, some power, is necessary. That is the bio-current or the human magnetism. To find out what is this human magnetism, let us consider the life-force. Every particle of the life-force is infinitesimally tiny and it has a self-rotative force. On account of this self-rotative force, every particle radiates a spreading wave which is intensified in the whole body. The surplus of this wave is released through the skin and the sense-organs-ears, eyes, nose and tongue after being converted into pressure, sound, light, smell and taste. The charged wave of the life-force is called the bio-current or the human magnetism. Only the intensity of the bio-current in the force of its circulation in the body maintains the polar attraction between cells and prevents disintegration of the body.
It is evident that the strength of this magnetic force should be adequate, in proportion to the number of the cells in the body-the weight of the cells. If it becomes less, the bio-current would also be diminished to that extent and its would not be equal to the task of maintaining all the functions of the body.
Role of Bio-current
A major portion of the bio-current is taken up by the physical body for the purpose of maintaining the metabolic routine – digestion, elimination of waste – products, transporting nutrients to where they are needed and transforming food into juice, juice into blood, blood into flesh, flesh into bone, bone into marrow and marrow into sexual vital fluid. In this manner, continuous conversion and manufacture are going on within the body. This is the metabolic routine. All this cannot be done unless there is sufficient intensity in the biocurrent. This intensity giving pressure to the bio-current is called the human magnetism.
The pressure in the force of its conversion becomes heat and this is how the temperature of the body is maintained. Again, it is this pressure that works for the manufacture of chemicals, amino-acids and so on required for the upkeep of the body. So much for the metabolic routine.
A portion of the spreading wave of the life-force goes to the brain-cells  where those cells condition the wave into mental frequency. To feel, understand, compare and calculate and imprint and reflect the experiences and enjoyment – all these are done only by the mental force, the mental frequency. 
To repeat, one portion of the bio-current which is charged by the life-force intensified in the body is taken up for the metabolic routine and the remaining portion is availed of by the brain-cells conditioning the mental frequency.
If, for some reason, the intensity of the bio-current becomes less, it may just be adequate for the maintenance of the metabolic routine. The result is short-supply for mental frequency. Your level of alertness comes down, your eyelids become heavy and you doze off. During sleep no supply is required for the mental functions. Metobolic routine routine – breathing, digestion and blood – circulation – alone is going on and the intensity of the bio-current picks up gradually. When surplus becomes available for mental functions, there is automatic reconnection and the mind resumes functioning.
Value of Sexual Vital Fluid
When the intensity of the bio-current is diminished to such an extent that it is not adequate for physical functions even, the inter-cell polar action slows down. If the short-circuit lasts for only a short time, that experience is pain; and longer duration means disease. When the bio-current is wholly exhausted that point signifies death.
Now you have come to understand the value of the bio-current. Needless to say, if the bio-current is to be increased or intensified, the number or the quantity of the life-force particles should be stepped up. What is it that retains these life-force particles in the body? It is only the sexual vital fluid. The sexual vital fluid is in the nature of battery for the bio-current. What is the quantity and quality of the sexual vital fluid, that much will be the strength and character of the life-force and the bio-current.

Against this background consider what will happen if the sexual vital fluid gets reduced in quantity. The life-force becomes correspondingly less and the bio-current is also depleted. The cells are not able to get supply and so the machinery slows down to start with and breaks down in the course. Thus, in order to maintain the bio-current, adequate life-force particles are necessary; and in order to hold the life-force, the sexual vital should be sufficient. To sum up, in order to maintain the health of the body and the mind, the sexual vital fluid should be adequate in quantity and also quality.

At this point, let me correct a wrong notion that is quite widespread. Most people think that the sexual vital fluid comes into being only after a person attains maturity. Actually, the sexual vital fluid is present even in a child. The opening stock has come from its parents and it is being steadily added to. When there is surplus in stock and this surplus is to be eliminated from the body, then only the symptoms of maturity become manifest.
Having understood the origin of the sexual vital fluid and its value for maintaining the health of our body and the mind, let us now proceed to find out the reasons for Ageing. Listen diligently, for the science of the subject is being unfolded in the world for the first time.
Effect of Earth’s Rotation
This planet Earth, on which we all happen to live and move and have our being, rotates on the axis once during every 24 hours; and this rotation makes the Sun appear to move across the sky from East to West determining day and night for us. Because of this rotation the heavier elements such as the metals are drawn towards the middle of the Earth. Granite and basalt from the base of continents and ocean-basins. Water which is lighter stands on top of this solid base. Air which is lighter than water is outside of this and that is the Earth’s atmosphere held to the Earth by gravity. Visualise this arrangement, for it is germane to the theory I am going to develop.
Man is on the Earth and he is not exempt from the operation of Nature’s laws arising out of the rotation of the Earth. In our body there are five layers viz., solid, liquid, heat, air and energy, each of which is lighter than the previous one. Blood (liquid) is lighter than the concrete cells of the solid body, heat is lighter than blood, air is lighter than heat and energy is the lightest of the five. Because of the rotation of the Earth all these five layers are also in constant movement at differing speeds or velocities. Life-force (energy) moves faster than air, which moves faster than blood. The movement of the solid cells is slower than that of blood. The solid cells are attracted towards the Earth because of gravity while the  outermost layer viz., life-force is being constantly and continuously drawn away from the body due to the natural centrifugal force. It is almost like a wedge being driven between the body and the life-force, the cleavage becoming wider with every passing day.
All species on the Earth are operating only under this arrangement. Some decades back, when I observed vegetation around my ashram after a heavy downpour on the previous day, I began to wonder why some weeds grow only to a height of a few centimetres while other plants could grow up to some feet. Certain trees rise up to 60 fest even and there is a limit for each species. Then it struck me that each species is having a velocity of its own countering the pull of gravity, so to say. A balance or dynamic equilibrium is set at a point and Nature, in effect says. “Thus far and no further.”
In man the velocity carries his head up to a height of about six feet from his base. The potential for this growth is packed or compressed in child and that is why the child has so much stamina to wave its tiny little hands and feet-an exercised that would tire a grown-up within minutes! It is because of this velocity that growth is more during the early years of man when Nature says; “Up up!” By the age of 30 or 35 the growth grinds to a halt and thereafter the life-force is only being taken away, much in the manner of soil being eroded by a stream. It is at this point that Ageing starts.
Ageing signifies that the stock of your life-force is being reduced because the secretion of the sexual vital fluid is coming down. The intensity of the biocurrent which, as we already saw, is only the charged wave of the life-force, is being reduced as a consequence of the sexual vital fluid going down. This is the background to the phenomenon of Ageing. Two factors are at work here: (1) The cells of the body are being drawn or pulled down towards the Earth; and (2) the life-energy is being drawn away from the body with every passing day.
Victory for Mankind
Having identified the factors that cause Ageing, what should you do to
withstand it?
 You should find out ways and means
(1) to tone up your nerves and reverse their sagging, and
(2) to conserve your sexual vital fluid which is the container for the life-force.
The KAYA KALPA YOGA which I was able to perfect about three back is the only means to withstand the Ageing process. Through a simple exercise we are enabled to tone up our nerves and recycle the sexual vital fluid.
The sexual vital fluid actually has its origin in the brain-cells from where it comes down the spinal column to accumulate in the sexual gland. When there is a surplus there, gravity draws it towards the Earth and hence the tendency to leakage, giving rise to the sexual instinct and urge. If this process is to be reversed the essence or the sublimate of the sexual vital fluid has to be taken back and stored at the place of origin viz., the brain. When this exercise is mastered, the outgo of the fluid is gradually reduced and the craving is no longer there. Potency is preserved and thoughts do not stray in the direction of indulgence. Actually, a primitive weakness that was being handed down from generation to generation has been overcome. Is this not a great victory for mankind?
Before I conclude, let me elucidate another point. Modern Medicine is still not able to determine the exact moment of death Cessation of breathing, pulse, heart-beat-all these, it is agreed, are not conclusive proof of death. Then how are we to certify that life has become extinct in a person? I will tell you: Only when the sexual vital fluid stands completely excreted does Death come to an individual. For then, there is no container to hold the life-force. The battery having been wrecked, where is the question of current?
Conversely, Death cannot claim a person as long as he or she is able to conserve the sexual vital fluid. In the normal course, anyone who adopts the science of KAYA KALPA and so orders one’s life as to be peaceful and useful to self and others should be able to live up to 100 years and even 20 years beyond that, depending on how early in life the aspirant has come to the path of this precious Yoga...
(Lecture in Los Angeles, 1982)

சனி, 4 அக்டோபர், 2014

சுவாமி ஜி! நாடி ஜோதிடத்தில்’ எல்லோருக்கும் எவ்வாறு ஜாதகம் அமைகிறது ? அது எந்த அளவு சரியாக இருக்கும்?

ready made shirt தைத்து விற்கிறார்களே , அதே போன்று ஜோதிடத்தில் வல்லவர்கள் எல்லாம் உட்கார்ந்து ஊகத்தினால்..
...
ஒரு குறிப்பிட்ட பாதையில் லக்னம், ஒரு குறிப்பிட்ட பாதையில் ராசி மற்றும்
மற்ற மற்ற கிரகங்கள் அமைந்திருக்கும் பொழுது , அந்த காலத்தில் பிறக்கும் ஒரு குழந்தை எவ்வாறு வாழும் என்று கணித்துள்ளார்கள்.

அப்படிக்கணித்து எதிர்காலப் பலன் என்று எழுதி வைத்துள்ளார்கள்.
.
பிறகு ஒரு கிரகம் மாறி இருந்தால் என்ன பலன் இருக்கும், இரண்டு கிரகம் மாறி இருந்தால் என்ன பலன் இருக்கும் என்று பல யூகங்களில் கணித்தார்கள்.
கிரகங்களின் பாதைகள் தொடர்ந்து சுழற்சியால் மாறிவரும்பொழுது ஏற்படும் பலன்களை யூகித்து கணித்து அந்த ready reckoner முறையிலே ஜாதகங்களை அமைத்தார்கள்.
.
.அந்த காலத்தில் வந்த ஒரு சில நிபுணர்கள் இதையெல்லாம் செய்துபார்த்துள்ளார்கள். ஆனால் மொத்த பலனையும் அனைவருக்கும் கணிக்க முடியவில்லை.
.
எத்தனை கோடி நிலைகளில் கோள்கள் அமைந்தாலும் எல்லா மக்களுக்கும் எல்லா நிலைகளும் பொருத்தமாக அமைவது கடினம
.

-வேதாத்திரி மகரிஷி

வெள்ளி, 3 அக்டோபர், 2014

சுவாமி ஜி ! திருமணம் செய்து கொள்ளாதவர்களுடைய உயிரின் நிலை என்னவாகும்../?


இந்த உடல் எடுத்துவந்த வினைப்பதிவை மட்டும் தவம் மற்றும் அறம் ஆற்றி உயிர்த்தூய்மை செய்து, நல்லபடியாக முடித்துவிட்டால் போதும்....
  .
இறந்த பிறகு மீதியுள்ள கர்ம வினைப் பயனை முடிப்பதற்காக, வாழும் உயிகளுடன் ஏற்படும் தொடர்பும் வேண்டியதில்லை. அதுமட்டுமின்றி கருவழியே ஏற்படும் பிறவித்தொடரும் அற்றுப் போகிறது.இரண்டுவகையாகவும் பிறவித்தொடரை அறுத்துக்கொள்ளலாம்.
  .
திருமணம் செய்து கொண்டாலும், செய்து கொள்ளாமற்போனாலும் தவம் ,அறம் ஆற்றித்தன்னையறிந்து இறைநிலையோடு இணையாவிட்டால்..

உடல் விட்ட பின்னர் மீதமிருக்கும் வினைப்பதிவுகளைக் களையத்தக்க ஒரு உடலோடு இணைந்துதான் அமைதியும் நிறைவும் முடிவும் பெறவேண்டும்.
.
.
-வேதாத்திரி மகரிஷி
.

வியாழன், 2 அக்டோபர், 2014

ஆன்மீக ஒளி :


நாம் உலகில் வாழ்ந்து வருகின்ற போது எத்தனையோ இடையூறுகள் வருகின்றன. அப்போது நாம் தேக்கமடைகின்றோம். சோர்வடைகின்றோம். ஆனால் இந்த இடையூறுகளை கூர்ந்து கவனிப்போமானால் இவையாவும் மனிதன் தானாகவே ஏற்படுத்திக் கொண்டதாகத்தான் இருக்குமே ஒழிய இயற்கையாக உண்டானதாக இருக்காது. பிறக்கும் ஒவ்வொரு ஜீவனுக்கும் போதிய வசதிகள் யாவும் இயற்கை ஒழுங்கமைப்பில் ஏற்பாடு செய்யப்பட்டே இருக்கின்றன. பற்றாக்குறை என்பது மனிதன் தானாக ஏற்படுத்திக் கொள்வதுதான். மனிதன் மனிதனை ...உணர்ந்து கொள்ளாமை தான் பெருத்த குறைபாடாக இருந்து வருகிறது. ஆன்மீக அறிவு பரவினால் தான் மனிதன் இக்குழப்பங்களிலிருந்து விடுபட முடியும். ஆன்மீக அறிவு ஏற்படும் போதுதான் அன்பு மலரும். அன்பு மலர்ந்தால் தான் பிற ஜீவனிடமிருந்து கருணை பிறக்கும். அப்போதுதான் மனிதன் ஒத்தும், உதவியும் ஒழுக்கத்தோடு வாழ்ந்து இன்பம் காண முடியும்.
இயற்கை பரிணாமத்தில் ஐயறிவு உயிரின் தொடர்பாகவே மனிதன் தோன்றியிருப்பதால் அவன் இன்னும் ஐம்புலன் அறிவிலேயே சிக்கிக் கொண்டு அல்லல் படுகிறான். ஆறாவது அறிவின் நோக்கமாகிய தன் உணர்வு என்ற கட்டத்திற்கு இன்னும் அவன் முனையவில்லை. ஆகவேதான் மறதியில் இருந்து வேதனையும் சிக்கலும் அனுபவிக்கிறான். எனவே சிந்தனை ஆற்றல் மிக்க எல்லோரும் ஆன்மீக ஒளி பரவ வேண்டும் என்ற நன்நோக்கத்தை சதா நினைவில் இறுத்தி வரவேண்டும்.
நாம் எல்லோரும் சமுதாயத்தின் மத்தியில் இருந்துதான் வாழ வேண்டியிருக்கிறது. ஆகவே சமுதாய அமைப்பு நல்ல முறையில் இருந்தால் தான் நாமும் நல்லமுறையில் வாழ முடியும். எனவே நாம் சமுதாய நன்மையிலே நாட்டம் கொண்டு கடமையைச் செய்து வருவோமானால் நிச்சயம் நம்வாழ்வு மேம்பாட்டடையும். நம் குடும்பத்தில் முதலில் இனிமையை வளர்க்க வேண்டும். ஆன்மீக மணம் கமழும்படி நினைவோடு செயலாற்ற வேண்டும். அறிவை எப்போதும் விழிப்பு நிலையிலேயே இருக்கும்படி பழக்கி வர வேண்டும். உணர்ச்சி வயப்பட்டு செலாற்றுவது தவிர்க்கப்பட வேண்டும். மனோதிடம் வளர்க்கப்பட வேண்டும். ஒவ்வொரு செயலுக்கும் ஒரு விளைவு உண்டு என்பதை நன்கு உணர்ந்து கொண்டு எப்போதும் விழிப்போடு இருக்க வேண்டும். அப்போதுதான் துன்பம் இன்றி வாழ முடியும்.
நமக்கு வேண்டுவது என்ன? அதை அடையும் முறையில் ஏதும் தவறில்லாமல் இருக்குமா? இதனால் பிறர்க்கு ஏதும் கேடுண்டாகாமல் இருக்கமா? என்றெல்லாம் சிந்தித்து செயல்பட வேண்டும். இதற்குத் தவமும் தற்சோதனையும் பெரிதும் பயன் அளிக்கும். இவை இரண்டும் நம் இரு கண்களுக்கு ஒப்பாகும். இவை வாழ்வை ஒளிமயமாக்கி இன்பத்தை கூட்டித் தரும்.
–தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

புதன், 1 அக்டோபர், 2014

குடும்பக் கட்டுப்பாடு ஆபரேஷன், குடலிறக்க நோய் ஆபரேஷன் செய்து கொண்டவர்கள் காயகல்ப பயிற்சியை எப்பொழுது மீண்டும் தொடங்கலாம்?

மகரிஷியின் விடை:
ஆபரேஷன் நடந்து 6 மாத காலம் ஆனபிறகுதான் மேற்கொள்ள வேண்டும். அப்பொழுது கூட ஓஜஸ் மூச்சு போடும்போது சிரமமோ வலியோ தென்பட்டால் மேலும் 3 மாதம் தள்ளி போடலாம். சிறிது சிறிதாக ஓஜஸ் மூச்சு இழுத்து பார்த்து வலியில்லாத அளவுக்கு ஆக்கிக் கொள்ளவேண்டும். இந்த முற்பயிற்சி குடல்நிலை தேறுவதற்கும் பயனுள்ளதாக அமையும்

செவ்வாய், 30 செப்டம்பர், 2014

உயிர்களின் பரிணாம வளர்ச்சியாக மனிதன் வந்துள்ளான். இதுவே உயிர்களின் பரிணாம வளர்ச்சியின் முடிவாகுமா?? அல்லது இன்னும் பல தோற்ற மாற்றங்கள் உருவாகுமா??

இந்த பிரபஞ்சத்தில் என்ன இருக்கிறது என்பதை அறிவதற்காகத்தான் இத்தனை பரிணாமங்களும் வருகின்ற...ன. அழுத்தம் (உருவம்), ஒலி. ஒளி, சுவை, மனம் இவற்றை ஐந்தறிவு விலங்குகளும் அறிகின்றன. .
.
மனிதனுக்குள்ள ஆறாவது அறிவோ,மறைபொருளான மனதை அறிவதற்குத்தான். மனிதன் ஆகாசத்தில் பறக்கவேண்டுமென்று நினைத்தால், அதற்காக இறக்கை வேண்டுமென்ற அவசியமில்லை.
.
இந்த எண்ணத்தின் விளைவாக கருத்தொடரில் இன்னுமொரு சீவன் இறக்கையுடனுருவாக வேண்டுமென்ற அவசியமுமில்லை.
.
மனிதன் தன்னுடைய ஆறாவது அறிவைக் கொண்டு செயற்கையாக உருவாக்கிய கருவியின் மூலமாக ஆகாசத்தில் பறக்கிறான்.
.
இதற்கு மேலாக என்னென்ன அடையவேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும், அதற்கு ஆறாவது அறிவை கருவியாக வைத்துக்கொண்டு பல உப கருவிகளை உற்பத்தி செய்யும் சக்தி மனிதனுக்கு வந்துவிட்டது.
.
இதற்குமேலும் தோற்றத்தில் மாற்றம் ஏற்பட இயல்பூக்கத்தில் இடமில்லை. ஆனால், அறிவின் வளர்ச்சி மட்டும் அதன் முழுமையை நோக்கி இறையுணர்வு பெறும் வரையில் வளர்ந்துகொண்டே இருக்கும்.

வாழ்க வளமுடன்

-வேதாத்திரி மகரிஷி

திங்கள், 29 செப்டம்பர், 2014

விலங்கினங்களுக்கு ஆன்மா உண்டா? உண்டு எனில், மனித ஆன்மாவிலிருந்து அது எங்ஙனம் வேறுபட்டது ?


சீவகாந்தக் கருமையம் தான் ஆன்மாவாகும். மரபு வழியாக வந்த பதிவுகள் அனைத்தும் ஒவ்வொரு சீவனின் கருமையத்திலும் அடங்கியுள்ளன. ஒவ்வொரு சீவனிலும் - இனத்திலும்... - மரபு வழிப்பதிவுகள் வேறுபடும். இந்த வேறுபாடே மனிதனுக்கும் மற்ற உயிர்களுக்கும் ஆன்மாவில் உள்ள வேறுபாடு.

ஆன்மா என்பதும், கருமையம் என்பதும் ஒன்றுதான். ஈரறிவிலிருந்து ஆறறிவு வரை உள்ள எல்லா உயிரினங்களுக்கும் அதன் கருமையமே ஆன்மாவாகும்.

ஓரறிவுள்ள தாவரங்களுக்கு மட்டும் பூ உண்டாகின்ற பகுதியில் காந்த சுழற்சி ஏற்பட்டு அதன் வித்திலேயே அதன் கருமையம் அமையும்.

பரிணாம வளர்ச்சியில் விலங்குகளிடமிருந்து வந்துள்ள மனிதன், தன்னுடைய ஆறாவது அறிவைக்கொண்டு தன்னுடைய ஆன்மாவை, அதாவது மறைபொருளான மனம், உயிர், சீவகாந்தம், மெய்ப்பொருள் என்கிற அளவில் அறிந்து வாழ்கின்ற அறிவை பெற்றுள்ளான். விலங்கினங்களோ புலன் அளவிலேயே நிற்கின்றன.

ஆனால் மனித ஆன்மாவோ ஒழுக்கத்தை ஏற்படுத்தி அதைக் கடைபிடித்தும், பிறகு அதை தாண்டியும் போகின்றது.

விலங்குகளோ ஒழுக்கத்தை கற்கவும் இல்லை, அதைத்தாண்டி செல்வதும் இல்லை

வாழ்க வளமுடன்

-வேதாத்திரி மகரிஷி

ஞாயிறு, 28 செப்டம்பர், 2014

அறிவின் வழியே வாழவேண்டிய காலம் விஞ்ஞான யுகம்

அறிவின் தெளிவில்லாத ஒரு முரடன் கொலை என்னும் ஒரு கொடிய குற்றத்தை செய்துவிடுகிறான். ஆனால் திருத்தவேண்டிய கடமையில் உள்ள சமுதாயம் அவனுக்கு உரிய தண்டனையைக் கொடுத்து, சீர்திருத்துவதற்கு ஒரு அறிஞரை நீதிபதியாக அமைத்துக் கொடுத்திருக்கிறது.

இத்தகைய நீதிபதிகளில் சிலர் இயற்கையின் நீதிநெறியை அவர்கள் கல்வியாக கற்காத காரணத்தினால், தொடர்ந்து வரும் மனித இனப்பண்பாட்டின் தொடர் நிகழ்ச்சிகளின் காரணமாக, தனி மனிதனை திருத்தவேண்டிய அவர்கள், அவனுக்கு மரணதண்டனைக் கொடுத்து அழித்துவிடுகிறார்கள்.

மேலோடு பார்த்தால், கொலைக்குற்றத்திற்குத் தக்க தண்டனை மரணம் தான் என்பது நீதியாகத்தோன்றும்.

கொலை தண்டனை பெற்றவனுக்கோ பெற்றோர், மக்கள், மனைவி மற்றும் உறவினர்கள் இருக்கின்றார்கள். அவன் சட்டத்தின் மூலம் தண்டனை என்ற பெயரால் கொலையுண்ட நிகழ்ச்சி அத்தகையவர் வாழ்வில் குறுக்கீடு செய்து வாழ்நாள் முழுவதும் அவர்களுக்கு துன்பம் அளிக்கவில்லையா?

அறிவின் வழியே வாழவேண்டிய காலம் விஞ்ஞான யுகம். அந்த யுகம் இப்போது மலர்ந்துவிட்டது.
இனி சிந்தனையும், சீர்திருத்தமும் தனிமனிதனின் வாழ்விலும், சமுதாய வாழ்விலும் எல்லா இடங்களிலும் பின்பற்ற வேண்டும்

-வேதாத்திரி மகரிஷி

சனி, 27 செப்டம்பர், 2014

இன்பத்தை உணர்வது உடலா, உயிரா, மனமா??

உயிர்தான் மனம் என்ற மலர்ச்சியில் இன்பத்தை உணர்கிறது. அதற்கு புலன்கள் உதவியாக இருக்கின்றன.

புலன்களின் வழியாக ஏற்படும் உயிரின் காந்த தன்மாற்றமே இன்பத்துக்கும், துன்பத்துக்கும் காரணமாக அமைகின்றன....

எல்லா உயிரினங்களிலுமே பெருக்கம், இருப்பு மற்றும் செலவு என்ற வகையிலே உயிர்சக்தி இயங்குகிறது

உடலிலே இருக்கக்கூடிய உயிரின் இருப்பு அதிகமாகி, அந்தக் கூடுதலான இருப்பு புலன் வழியாக செலவாகும். அந்தச்செலவு, உடலுக்கும் உயிருக்கும் பொருத்தமான நிகழ்ச்சியாக அமைந்தால் இன்பமான உணரப்படுகிறது.

உயிர்ச்சக்தியின் குறைந்தபட்ச இருப்பை அச்செலவு தாண்டும் போது துன்பம் தோன்றுகிறது.

உடலை கருவியாகக் கொண்டு புலன்வழியே தன் அலைகளால் உயிரே செலவாகி இன்ப, துன்பத்தை உணர்கிறது



-வேதாத்திரி மகரிஷி

வெள்ளி, 26 செப்டம்பர், 2014

விருப்பு, வெறுப்புகளே சினம் உருவாக காரணங்களாம். சினமற்ற இடத்தில் மனம் அடங்கியே இருக்கும்.ஆனால், “சினமடங்க கற்றாலும், சித்தியெல்லாம் பெற்றாலும் மனம் அடங்க கல்லார்க்கு வாயேன் பராபரமே”, என்று தாயுமானவர் சொல்லுகிறார்.அப்படியானால் சினம் அடங்கினால் மனம் அடங்காதா??

மகரிஷி :
மனம் அடங்கும் என்பதற்கு சரியான பொருள் உணர வேண்டும். மனதை எப்போதுமே அடக்க முடியாது.
ஆழ்ந்த உறக்கத்திலே மனம் அடங்கி நிற்கும். மயக்க மருந்தான குளோரோபாம்(chloroform) கொடுக்கும் இடத்திலே மனம் அடங்கி நிற்கும்.

பிற வேளைகளில் மனம் இயங்கிக்கொண்டுதான் இருக்கும்.
ஆகவே மனதை அடக்க முடியாது. யோகத்தின் மூலம், அகத்தவத்தின் மூலம், மனத்தை உயிர்மேல் செலுத்தி உயிர் உணர்வு பெற்று உயிருக்கு மூலமான மெய்ப்பொருள் நிலையை உணர்ந்து, அந்த விரிவு நிலையிலே ‘அவனே நானாக இருக்கிறான்’ என்ற உண்மையை அறிந்து தன்னடக்கம் பெற்றுவிட்டால்,

தன்முனைப்பு நீங்கி அந்த இடத்திலே மனம் விரிந்து விரிந்து, அதன் ஆதி நிலையோடு எப்போதும் ஒன்றி நின்றுகொண்டிருக்கும்.

இதனை ‘சகஜ நிட்டை ‘ என்று சொல்லுவார்கள். அந்நிலையிலே மனம் விரிந்து நிற்கும். அதுகூட அடங்குவது அல்ல.

விரிந்த நிலையிலே மனம் உடையவர்களுக்குச் சினம் எழாது. சினம் எழவேண்டிய அவசியமே அவர்களுக்கு இல்லை.

ஆனாலும் உலக வாழ்க்கையிலே விருப்பு, வெறுப்பு என்ற உணர்ச்சிகளுக்கு உட்பட்டு வாழும் மக்களிடையே அந்த நிலையிலே இருந்து சினம் எழாமல் காத்து மனதை அமைதி நிலைக்கு கொண்டு வருவதற்கு ஏற்ற பயிற்சியைதான் நான் கொடுத்து வருகிறேன்

 

வியாழன், 25 செப்டம்பர், 2014

அவனின்றி ஓர் அணுவும் அசையாது, அனைத்து இயக்கங்களுக்கும் காரணம் இறைவன்” என்கிறோம். அவ்வாறெனில், மனிதனின் தவறுகளுக்கு இறைவந்தானே காரணம் ? மனிதனை என் தண்டிக்க வேண்டும்?


மின் சக்தியால் இயங்கும் விசிறியோ, விளக்கோ பழுதடைந்துவிட்டால் மின்சாரத்தைக் குறை கூறமுடியாது பழுதடைந்த பொருளைத்தான் சீர் செய்ய வேண்டும்

அதேபோன்று, மனிதனானவன் இறையாற்றலால் இயங்கும் ஒரு கருவியே. இறைவனைக்கண்டுபிடித்து அவனையே தண்டிப்பது என்பது இயலாத காரியம்.

ஆனால், அந்த இறைவன் பரிணாமத்தில் எந்த உருவத்தில் வந்து செயல்களைச்செய்து அதே பதிவுகளை அதன் கருமையத்துள்ளே பதிவாகப்பெற்று திரும்ப அதே செயலைச்செய்கின்ற அளவுக்கு கூர்தலறமாக (செயலுக்கு-விளைவு) வந்திருக்கின்றதோ, அந்த கருவியைத்தான் திருத்த வேண்டும்.

திருத்தம் செய்து சீரமைக்கும் பேரறிவின் செயலையே ’தண்டனை’என்ற சொல் குறிக்கும்

எந்த இடத்தில் இயற்கையினுடைய ஆற்றலுக்கு முரணாக செயல்கள் உண்டாயிற்றோ , எந்த செயலில் அல்லது இடத்திலிருந்து தனக்கும் பிறருக்கும் துன்பம் வருகின்றதோ, அங்ககேயே அதை மாற்றி அமைப்பதற்கான திருத்தம் பெறுவதற்காக சிந்தனை மிக்க அறிஞர்களால் வகுக்கப்பட்ட சீர்திருத்தமுறையைத்தான் ‘தண்டனை’ என்ற பெயரால் திருந்த வேண்டிய மனிதனுக்கு கொடுக்கிறார்கள்

-வேதாத்திரி மகரிஷி

புதன், 24 செப்டம்பர், 2014

ஆண்டவன் கணக்கு

ஆண்டவனைக் கேட்டு இனிமேல் எதுவும் வாங்கிட முடியும் என்று நீங்கள் கணக்குப் போட்டால் அவன் ஏமாந்தவன் அல்ல. நீங்கள் செய்து விட்டு கணக்குப் பார்த்து, எனக்கு இவ்வளவு கூலி கொடுக்க வேண்டும் என்று கேட்டாலும் கூட கணக்கு சரியாக வராது. முன்பு, பின்பு செய்திருந்தால் கூட செயல் பாக்கி இருந்தால் பிடித்துக் கொள்வான். அவனிடம் ஒரு நியதி இருக்கிறது. நீங்கள் என்ன செய்தீர்களோ அந்தச் செயலின் விளைவாக, நல்லதையோ, கெட்டதையோ உங்கள் நோக்கத்திற்கு த...க்கவாறு, செய்யும் திறனுக்குத் தக்கவாறு, அவன் செயல் விளைவாக தருவான்.
நீங்கள் நல்ல நோக்கத்தோடு நல்ல முறையில் செய்தால், செய்த செயலின் விளைவு எல்லாம் நல்ல விளைவாகவே இருக்கும். அது தான் அவன் கொடுக்கக் கூடிய வரம் என்று எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த இடத்தில், நல்ல செயலையே செய்தோமானால் எல்லாமே நலம் விளையும் என்கின்ற பொழுது சமுதாயத்திற்கு நலம் தர வேண்டும் என்பது ஒன்று ஆயிற்று; கடமை செய்கின்றோம் என்பது ஒன்று ஆயிற்று. இரண்டாவதாக நல்லதையே ஒவ்வொரு செயலிலும் செய்து கொண்டே வந்தால் இறைவனுடைய ஆற்றலை நாம் காணக்கூடிய அளவுக்கு ஒரு விழிப்பு நிலை வந்துவிடுகிறது.
பிறகு நாம் இறைவனைத் தேடிக் கொண்டோ அல்லது போற்றிக் கொண்டோ இருக்க வேண்டியதில்லை. ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு செயலிலும், ஒவ்வொரு இயக்கத்திலும் அவனுடைய இருப்பைக் கண்டுகொள்ளலாம். ஆக இறைவனை உணர்ந்து கொள்வது என்பது சமுதாயத்திற்கு நலம் தருவதாகும். இந்த இரண்டும் தான் எல்லா மதங்களுடைய அடிப்படையான நோக்கம். இந்த அடிப்படையான நோக்கம் வெற்றிபெற வேண்டுமானால் ஒவ்வொருவரும் நல்ல செயலை செய்வதற்குப் பழகிக் கொள்ள வேண்டும்; அதன்பிறகு செய்து பலன் காண வேண்டும். மற்றவர்களுக்கும் அதைப் பரப்ப வேண்டும்.
                                                                                     - தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

செவ்வாய், 23 செப்டம்பர், 2014

சனிப்பெயர்ச்சியால் மாறுதல் உண்டா..??

சனி உங்களை பிடிக்கிறதா..? நீங்கள் சனியை பிடித்துக்கொண்டிருக்கிறீர்களா?? மனிதன் தான் சனியை பிடித்துக்கொள்கிறான். அதுவும் நம் நாட்டில்தான்.
-வேதாத்திரி மகரிஷி

திங்கள், 22 செப்டம்பர், 2014

ஐந்தொழுக்கப் பண்பாடு


 நீண்ட காலமாக மனித இனம் உலகில் பல இடங்களிலும் வாழ்ந்து கொண்டிருக்கிறது. 1] உடல் இயக்கத்திற்கு இன்றியமையாத தேவைகளையும், வசதிகளையும் உற்பத்தி செய்து அவற்றை அளவு முறை அறிந்து அனுபவித்தல், 2] இய...ற்கைச் சீற்றங்களிலிருந்து தங்களையும், தங்கள் உடமைகளையும் பாதுகாத்துக் கொள்ளுதல், 3] வேற்றுயிர்ப் பகையிலிருந்து தப்பித்துக் கொள்ளுதல் ஆகிய மூன்று வகையிலும் தங்கள் அறிவையும் உடல் உழைப்பையும் பயன்படுத்த வேண்டியது வாழ்க்கையின் அவசியமாகும். வாழ்க்கையின் அவசியங்களை உணர்ந்து முயற்சித்து மக்கள் வாழ்ந்தனர், வாழ்கின்றனர். ஆதிகாலம் முதற்கொண்டு இக்காலம் வரையில் மனித இனம் எடுத்த வாழ்க்கை வள முயற்சிகள், கல்வி, ஒழுக்கம், பண்பாடு, தொழில் திறன் இவையாக எல்லா நாடுகளிலும் தொடர்ந்து செயல் முறையில் உள்ளன. ஒவ்வொரு நாட்டிலும் நிலவிய வெப்ப தட்பம், நிலவளம், அறிஞர்கள் போதனை இவற்றால் சில பல பழக்க வழக்கங்கள் ஆங்காங்கு உருவாயின. அவை மற்றவர்களுக்கும் மற்ற நாட்டுக்கும் பரவி வாழ்க்கை முறையில் பழக்கமாகி விட்டன. பல காலங்களைக் கடந்து இன்று மனிதகுலம் விஞ்ஞான யுகத்திற்கு வந்திருக்கிறது. எந்தெந்த காலத்தோ, எந்தெந்த இடத்திலோ அவ்வப்போதைய பழக்க வழக்கங்கள் அனைத்தும் இப்போது எல்லா நாட்டுக்கும் எல்லா மக்களுக்கும் வாழ்வுக்கு ஒத்ததாக இருக்க முடியாது. இக்கால அறிஞர்கள் கூடிச் சிந்தனை செய்து மனித இனப் பண்பாட்டினைப் புதுப்பிக்கவேண்டியது அவசியம்.

புதிய பண்பாடு

புதியதொரு பண்பாடு உலகுக்கு வேண்டும்.
போதை, போர், பொய் ஒழித்துப் பொறுப்போடமுல் செய்வோம்
அதிகசுமை ஏதுமில்லை 1] அவரவர் தம் அறிவின்
ஆற்றலினால் உடல் உழைப்பால் வாழ்வதென்ற முடிவும்,
2] மதிபிறழ்ந்து மற்றவர்கள் மனம் உடல் வருத்தா
மாநெறியும், 3] உணவுக்குயிர் கொல்லாத நோன்பும்,
4] பொதுவிதியாய்ப் பிறர்பொருளை வாழ்க்கைச் சுதந்திரத்தை
போற்றிக் காத்தும், 5] பிறர் துன்பம் போக்கும் அன்பும் வேண்டும்.

- அருட்தந்தை வேதாத்திரி மகரிசி

ஞாயிறு, 21 செப்டம்பர், 2014

மக்களுடைய பண்பாடு சிறக்க வழி என்ன?

மகரிஷியின் விடை:
அறம், தத்துவஞானம் இவை எந்த அளவு ஓங்குகின்றனவோ, அந்த அளவே சமுதாயம் பண்பாட்டில் உயரும். மக்கள் சீரும் சிறப்பும் பெற்று இனிது வாழ்வார்கள்

சனி, 20 செப்டம்பர், 2014

இன்பமான வாழ்க்கை வாழ :

ஆன்மீக வாழ்வே தன்னையும் தூய்மை செய்து கொண்டு , மற்றவர்களுக்கும் தூய்மை அளிக்கவல்லது . இறையுணர்வும், அறநெறியும் இணைந்ததே ஆன்மீக வாழ்வு .

இயற்கையின் பேராற்றல் எங்கும் நிறைந்த தன்மை , எல்லாமறியும் பேருணர்வு, அழிவில்லா தன்மை , நியதி வழுவாத் தன்மை, பெருங்கருணை ஆகியவற்றை மதித்து , இயற்கையினுடன் இணைந்து , அதனை போற்றி வாழும் இறையுணர்வும், ஒழுக்கம் , கடமை, ஈகை ஆகிய அறநெறிகளும் மன...ிதனுக்கு மனத்தூய்மையையும் , வினைத்தூய்மையையும் அளிக்க வல்லது.

மனத்தூய்மை , வினைத்தூய்மை மறையும் பொது மனிதன் துன்பம் இல்லாத இன்பமான வாழ்க்கை வாழ முடியும் .


--அருள் தந்தை

வெள்ளி, 19 செப்டம்பர், 2014

இறைநிலையின் பேரறிவு

"மனம் இல்லா மனிதனும் இல்லை ,
மனதை அறிந்த மனிதனும் இல்லை ".

மனம் என்பது எளிதில் அறிந்து கொள்ள முடியாத தத்துவம் என்பது உண்மையே. மனதிற்கும் அதற்குள்ளாக இருக்கும் அறிவிற்கும் இருக்கின்ற உறவை அறிவைக் கொண்டு ஆராய்ச்சி செய்து நன்கு உணர்ந்து கொண்டால் பிரபஞ்சத் தத்துவங்கள் அனைத்துமே எளிதாக விளங்கி விடும் .
...
ஒவ்வொரு பொருளிலும் அறிவு தான் இயக்க நிலையில் இருக்கிறது . இதற்கும் மேலாக மனிதனுடைய அறிவு. அந்த அறிவை மனத்தால் அறிந்து கொள்ளும் ஆறாவது அறிவாக மனம் இருக்கிறது .மனம் அடங்கினால் தான் அறிவு மேலோங்கும். இறைநிலையின் பேரறிவே மனிதனிடத்தில் ஆறாவது அறிவாக உள்ளது.

--அருள் தந்தை

 

வியாழன், 18 செப்டம்பர், 2014

சீவகாந்தம்

காந்தநிலை அறியாமல் கடவுள் நிலை அறிவதோ ,
கருமையம் அறியாமல் அறிவினை அறிவதோ ."

பிரபஞ்ச காந்தம் என்று சொல்லப்படுகிற வான்காந்தம் . இதே காந்தம் உயிரினங்கலாகிய சிறு எல்லைக்குள் இயங்கும் போது சீவகாந்தம் என்று சொல்லப்படுகிறது.
...
சீவகாந்தம் என்பதையும் , கருமையம் என்பதையும் ஒருவர் நன்றாக விளங்கி கொண்டால் அவரால் ஆழ்ந்த மெய்யுணர்வு நிலைக்குச் செல்ல முடியும். அத்தகைய அறிவு விளக்கம் ஒருவருக்கு கிட்டிவிடுமானால் , வாழ்க்கைக்கு அடிப்படை நியதிகளாக உள்ள உள்ளுணர்வு பிரபஞ்ச ஒருங்கிணைப்பு ஆற்றல், உயிர்சக்தியின் ஆற்றல் , காந்த ஆற்றல் இவற்றைப் பற்றித் தெளிவாக விளங்கிக் கொள்ள முடியும் .

சீவகாந்தத்தை நாம் அழுத்தம்,ஒலி , ஒளி, சுவை, மணமாக செலவு செய்து கொண்டு இருக்கின்றோம் . சீவகாந்ததின் பெருமையை உணர்ந்து அதனை அளவு முறையோடு செலவு செய்யும் போது மனம் நல்ல முறையில் இயங்கும் . சீவகாந்ததின் திணிவை பொறுத்தே மனத்தின் இயக்கம்.

மனம் நல்லமுறையில் இருந்தால் தான் அறிவு செயலுக்கு வரும் . சீவகாந்தம் திணிவு பெற்ற இடமே கருமையமாக விளங்குகிறது. கருமையமே பிரபஞ்ச ரகசியங்கள் அனைத்தும் அடங்கிய பொக்கிஷம். கருமையத்திற்குள்ளாக இறைநிலை அறிவாக உள்ளது.

அதனை அறிவதற்கு சீவகாந்தம் திணிவோடு இருக்கவேண்டும் .சீவகாந்தத்தை கூட்டிக்கொள்ள தவமும் , அறமும் அவசியம் .

--அருள் தந்தை

புதன், 17 செப்டம்பர், 2014

நற்றொண்டு

"தனி மனிதன் தான் தன்னுடன் வாழுகின்ற மக்களுக்கு தங்கள் பொருள், வருவாய் , அறிவு , உடல் ஆற்றல்கள் இவற்றில் நூறில் ஒரு பங்கேனும் சமுதாய நலனுக்கென ஈகையாக்கி ஒதுக்கி அவர்கள் நலன் பெற பயன்படுத்துவது சமுதாயத்தைச் சிறப்பிக்கச் செய்கின்ற "நற்றொண்டு" ."

--அருள் தந்தை

செவ்வாய், 16 செப்டம்பர், 2014

அவனே நான் , நானே அவன்

உன்னிலே நானடங்க என்னுளேநீ விளங்க
உனது அருள் ஒளிர எனதுள்ளம் தூய்மை பெற்றேன்
இன்னும் வேறென்ன வேண்டும் இப்பேறு பெற்ற பின்னர்
எடுத்த மந்தப் பிறப்பெய்தியதே முழுமை "
...
நான் யார் ? என்ற கேள்வியை எழுப்ப , தன்னை அறியும் முயற்சி தான் மனிதனை மகிழ்வாக வாழச் செய்ய இன்றியமையாததாகும் .இதுவே " தன்னை அறிதல்" , "தன்னுணர் நிலை" , "நான் யார்" என்பது.

நான் என்பது ரூபமா? அரூபமா? பொருளா? சக்தியா? உடலா? மனமா?அறிவா? நான் எங்கே இருந்தேன்? எப்படி இருந்தேன்? ஏன் வந்தேன் ?எங்கே வந்தேன்? ஏன் இருக்கிறேன்? எனக்குச் செல்வேன் ? எப்படி முடிவேன்? என்று மூலமும் , முடிவும் எதுவென அறிய ஆறாவது அறிவின் பண்பட்ட நிலையே தன்னுணர் நிலை .

இதனை உணர்ந்து கொள்ளும் போது இறைநிலையே நானாக என்னுளே அறிவாக விளங்குவது தெளிவாகும். மனஅலைகளின் சுழல் விரைவு குறைய குறைய மனத்தின் நிலைபொருளான அறிவாகி மனமே தரத்தில் உயருகிறது. பிறகு மனம் அசைவற்று அறிவே அகக்காட்சியாகும்.

இங்குதான் " அவனே நான் , நானே அவன் " என்ற அறிவின் முழுமைப்பேறு கிட்டுகிறது .

---அருள் தந்தை

திங்கள், 15 செப்டம்பர், 2014

அகம் பிரம்மாஷ்மி

கடலிலிருந்து நீர் ஆவியாக மாறி , மேகமாகி, மழையாகி, வெள்ளமாகி , பூமியில் ஓடும்நீர் முடிவில் கடலையே நாடி ஓடுகிறது . கடலை அடைந்த பின்னர் தான் அதன் வேகம் தணிந்து அமைதி நிலை பெறுகிறது . அதே போன்று இறைநிலையில் இருந்து தோன்றி பற்பல நிகழ்ச்சிகளாகி , அறிவாகி இயங்கும் ஆற்றலானது அதன் மூல நிலையை நாடுகிறது. அதையறிந்து அதனை அடைந்த பின்னரே அமைதி பெறுகிறது .


அறிவை அறிய அறிவு திருப்பம் பெரும் போது தான் , தனது இயக்கக் களமான உயிரை உணர்ந்து தனது மூலநிலையை உணர்ந்து கொள்ள முடியும். அப்போது தான் "நான் யார்?" என்ற கேள்விக்கு விடை கிடைக்கும்.இறைநிலையே நானாக என்னுள்ளே அறிவாக இயங்கிக் கொண்டிருப்பதை உணர முடியும் . இதுவே "அகம் பிரம்மாஷ்மி " .


இறைநிலை என்னிடத்தில் அறிவாக இருப்பது போல எல்லா உயிர்களிடத்திலும் இறைநிலையே உள்ளது என்று உணரும் போது எந்த உயிருக்கு துன்பம் கொடுக்கமலும் துன்பப்படும் உயிர்களுக்கு தன்னால் முடிந்த உதவியை செய்து வாழ்வோம் .

தனக்கும் , மற்ற உயிர்களுக்கு துன்பம் கொடுப்பது அந்த இறைவனுக்கே கொடுக்கும் துன்பமாக நினைப்போம் . அவ்வாறு இறைநிலையே எல்லாமாக உள்ளது என்று உணர்ந்து கொள்ளும் போது "எல்லா உயிர்களிடத்தும் அன்பும் , கருணையும் தோன்றும்.

--அருள் தந்தை

ஞாயிறு, 14 செப்டம்பர், 2014

துன்பத்தின் காரணம்

மனிதன் துன்புற காரணம் தன் உடல் வரையில் எல்லைகட்டி கொண்டு குறுகி நின்று உணர்ச்சிவயப்பட்டும், இயற்கையின் நியதியறியாமலும் , செயல் விளைவு தத்துவம் புரியாமலும் செயலாற்றுவதே காரணம். இதை உணர்ந்து விழிப்புடன் செயலாற்றி வந்தால் எல்லாக் குழப்பங்களும் நீங்கியவனாய் இன்பத்தில் திளைத்திருப்பான்.

இறைநிலையே உயிராகி ,உடலாகி, மனமாக மனிதனாக வந்திருக்கிறது என்பதை உணர்ந்து ,"எல்லாம் வல்ல பர...ம் பொருளே நானாக இருக்கிறேன்" என்ற உணர்வு பெற்றதும் எல்லாச் சிக்கல்களும் தாமே மறைந்தோடி விடும் .

---அருள் தந்தை

சனி, 13 செப்டம்பர், 2014

உலக அமைதி வேள்வி

உலக மனித சமுதாயம் தனி மனிதன் அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ வேண்டுமானால் உலக மனித சமுதாயம் முழுமையுமே அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ வேண்டும் .

உலக மனித சமுதாயம் போர், பகை என்ற அச்சமின்றி உழைத்துண்டு வளம் காத்து வாழ்வதற்கு ஒவ்வொருவரும் அமைதியான நல்ல என்ன அலைகளை உலகம் முழுவதும் பரப்ப வேண்டும்.

ஒவ்வொருவரும் காலையில் எழுந்தவுடன் உலக மக்கள் முழுவதையும் நினைத்து
"வாழ்க வையகம் வாழ்க வளமுடன் "
என வாழ்த்த அந்த வாழ்த்து அலை உலக மனித சமுதாயத்தில் , அவர்கள் அறிவிலே பதிவாகி பிரதிபலித்து காலத்தால் உலகம் முழுவதிலும் அமைதியும் , மகிழ்ச்சியும் நிலவிடச் செய்யும் .

வெள்ளி, 12 செப்டம்பர், 2014

மனிதன் மெய்யுணர்வு பெரும் போது

மனிதன் மெய்யுணர்வு உணர்ந்த நிலைக்குச் சென்று விடும் போது , அவர் தன்னுடைய புலன் வழிச் செயல்களை ஒழுங்கு படுத்திக் கொண்டு அதன் மூலமாக நல்ல பயன்களைப பெற முடியும் .

மெய்யுணர்வு பெற்ற நிலையில் செயல் விளைவுத் தத்துவத்தை நன்றாக உணர்ந்து கொண்டு , எப்பொழுதும் அளவு முறை மாறாத விழிப்பு நிலையோடு செயல்படுவர்....

அந்நிலையில் அவர்களுடைய வாழ்க்கையானது வெற்றிகரமாகவும் , இணக்கம் மிகுந்ததாகவும் , உடல் நலமும் , மனவளமும் , நட்பு நலமும் நிறைந்ததாகவும், ஓர் உயர்ந்த உன்னதமான இலட்சிய நோக்குடனும் , அமைதியாகவும் விளங்கும் என்பது உறுதி .

---அருள் தந்தை

வியாழன், 11 செப்டம்பர், 2014

விதியை மதியால் வெல்லலாம்

மேல்நோக்கி வீசப்பட்ட கல் கீழ் நோக்கி வருவதற்கு காரணம் இறைநிலையின் சூழ்ந்தழுத்தும் ஆற்றலே. கல்லுக்கு ஆற்றலைக் கொடுத்து மேலே வீசிய மனிதனுக்குக் கல் கீழே விழாமல் தடுக்க முடிவதில்லை.

இறைநிலையை எல்லா இடங்களிலும் , எல்லா நேரங்களிலும் வெற்றி கொள்வது என்பது இயலாத ஒன்று தான் ....

ஆனால் இறையாற்றலோடு ஒத்துப்போகும் போது எல்லா இடங்களிலும் எல்லா நேரங்களிலும் விதியையும் வெற்றி பெறலாம்.
சிந்தனையின்றிச் செயல்பட்டுக் கொண்டிருப்போர் இறையாற்றலை உணர்ந்த மதியின் துணைகொண்டு தன்னையும் வெல்லலாம்.

--அருள் தந்தை

புதன், 10 செப்டம்பர், 2014

வினை விதைத்தவருக்கு வினையே பலன்

இறைநிலை அவரவைகளுடைய வினைக்கு தகுந்தவாறு விளைவை கொடுத்துக் கொண்டே இருக்கிறது. அவரவர் செயலாலேயே அவரவர்க்கு இன்பமோ , துன்பமோ, இலாபமோ, வெற்றியோ விளைகின்றன. இன்ப துன்ப விளைவுகள் என்ற வினை விளைவு நீதியை இறைநிலை எப்போதும் உணர்த்திக் கொண்டிருக்கிறது. இதனையே "வினை விதைத்தவன் வினையை அறுப்பான் " என்று கூறுகின்றனர்.

இயேசுநாதரைக் கைது செய்த போது , அவரது சீடர் பேதுரு என்பவர...் தனது வாளை உருவிக் கொண்டு கைது செய்தவர்களைத் தாக்கப் புறப்பட்டார் . அப்போது இயேசு அவரைக் கையமர்த்தி " நீ உன் உறையுள் இடு . ஏனெனில் வாளை வீசுகிற எல்லோரும் வாளினாலேயே மடிவார்கள் " என்றார் .

இறைநிலையின் பேரறிவினுடைய திறனை விளக்குகின்ற செயல் விளைவு என்னும் ஓர் அற்புத நாடகத்தை உணராமல் செயலாற்றினால், அதன் காரணமாக உடல் நோயோ , மன நோயோ உண்டாகின்றன . மனித வாழ்வில் அவரவர் விருப்பம் போல் செயல் புரியலாம் என்ற கருத்துக்கு இடம் இல்லை .

சமுதாயத்தால் உருவாக்கப்பட்டு காக்கப்படும் மனிதன் மற்றவர்களுடைய தேவைக்கும், விருப்பத்துக்கும், அறிவிற்கும், மதிப்பளித்து தனது வாழ்வை நடத்த வேண்டியது அவரவர் கடமை. அதற்காகத் தனது செயல்களைப் பிறருக்குத் தீமை தராத முறையில் செயலாற்ற வேண்டும் .

--அருள் தந்தை

செவ்வாய், 9 செப்டம்பர், 2014

அண்டத்த்திலும் பிண்டத்த்திலும் அவனே

அண்டத்தில் கடவுளாய் அழைக்கப் படுபவன்
பிண்டத்தில் உயிரெனப் பேசப்படுகிறான் .
கண்டத்தின் மேலே கருத்தை நிறுத்தினோன்
அண்டத்தும் பிண்டத்தும் அவனையே காண்கிறாய் ."
...
மனித மனத்தின் உட்பொருளாக , இருப்பு நிலையாக இருப்பதே இறைநிலையாகும். நிலைபொருள் நிலையில் அறிவாகவும், அலைபொருள் நிலையில் மனமாகவும் , இரண்டுமாகவும் இருப்பவன் மனிதன்.

அலையை நிறுத்தி அழைக்கு அடித்தளம் கண்டால் அதுவே நிலை. நிலை என்ற இருப்பு நிலைதான் தெய்வமாகவும், அறிவாகவும் இருக்கிறது . இதுவே அகண்டாகார பேரியக்க மண்டலத்தில் எங்கும் நீக்கமற நிலைத்து உள்ள சுத்தவெளியாக இருக்கிறது. அகண்டாகார பேரியக்க மண்டலத்தில் சுத்தவெளி அறிவும் மனமுமாக இயங்கும் சீவனில் உயிர்த்துகளாகிய விண்ணின் மையத்தில் இருப்பதுவும் அதே சுத்தவெளி தான் .

அதுவே பேரியக்க மண்டலம் அனைத்தையும் சூழ்ந்து அழுத்தி எல்லாவற்றையும் முறையாக இயங்கச் செய்கிறது . சீவனுக்குள்ளாக அமைந்த சுத்தவெளி அதன் படர்க்கை நிலையென்ற மனத்தால் தனது அலையாற்றலால் தோன்றி இயங்கும் அனைத்தையும் சீவன்களின் மூலமும் மனிதனின் சிந்தனையின் மூலமும் உணர்ந்து கொள்கிறது.

----அருள் தந்தை



 

திங்கள், 8 செப்டம்பர், 2014

திருமணம் பற்றி அருள் தந்தை

கணவன் மனைவி நட்பு மதிப்பு மிக்கது. இருவருமே எல்லாத்துறைகளிலும் உயர்வடைய, இந்த நட்பின் பாதுகாப்பு அவசியம். வாழ்நாள் முழுவதும் உதவுவது கணவன் மனைவி நட்புத் தான் . திருமணத்திற்கு முந்தைய காலகட்டம் கூட இந்த நட்புக்காகவே தன்னைத் தயாரித்துக் கொள்ளும் பயிற்சிக் காலந்தான். ஒருவக்கொருவர் எல்லா தேவைகளையும் நிறைவு செய்து கொள்ளக் கணவன் மனைவியின் நட்பால் தான் முடியும். கணவன் மனைவி நட்பின் இனிமையைத்தான் காதல் என்று சொல்ல வேண்டும். இருவர் உள்ளம் ஒன்றுபட்டு உலகில் வாழ எண்ணத்தால் ஒப்புக்கொண்டு செயலில் ஒருவர் மற்றவருக்கு உடல் பொருள் ஆற்றலை அர்ப்பணித்து நிற்கும் நிலையே திருமணம் .

---அருள் தந்தை .

ஞாயிறு, 7 செப்டம்பர், 2014

மனவளக்கலை : ஒன்பது வகை தவங்கள்

1. ஆக்கினை :
மூலாதாரத்திலிருந்து உயிரை எழுப்பி புருவமத்திக்குக் கொண்டு வந்து உயிரை உணர்வது . பிட்யூட்டரி சுரப்பி நல்ல முறையில் வேலை செய்யும் .

2. சாந்தி:
மேலே புருவமத்திக்கு சென்ற உயிர் மையத்தைத் திரும்பவும் மூலாதாரத்திற்கு கொண்டு வருவது....

3. துரியம்:
உயிர் மையத்தைத் தலை உச்சிக்குக் கொண்டு வருவது. பீனியல் சுரப்பி நல்ல முறையில் செயல் புரியும் .

4.துரியாதீதம் :
உடலிலிருந்து வெளியே வந்து பிரபஞ்சம் வரை விரிந்து மேலும் பிரபஞ்சத்திற்கு அப்பாலுள்ள சுத்தவெளி என்ற இறைநிலையோடு கலக்க விடுவது.

5. பஞ்சேந்திரியம்:
மெய் ,வாய்,மூக்கு,கண், காது என்ற ஐம்புலன்களின் மூலம்தான் சீவகாந்தம் வெளியேறி உலகில் இன்ப துன்பங்களை அனுபோகிக்கின்றோம். ஐம்புலன்களுக்கும் ஆற்றலை கூட்டி அளவுமுறை காக்க உதவுகிறது.

6.பஞ்சபூத நவகிரகம் :
நாம் பூமி மீது வாழ்கின்றோம் . நிலம் , நீர்,நெருப்பு, காற்று ,விண் என்ற ஐந்து பெளதிகப் பிரிவுகளான பொருள்களிலிருந்து வரும் காந்த அலைகளுடன் இனிமை காப்போம். சூரியன் ,புதன், வெள்ளி, சந்திரன், வியாழன் , சனி, இராகு, கேது ஆகிய ஒன்பது கோள்களிலிருந்து வரும் காந்த அலைகளுடன் இணக்கம் கொள்கிறோம்.

7.ஒன்பது மையம் :
மூலாதாரம், சுவாதிஷ்டானம் மணிப்பூரகம், அநாகதம் , விசுத்தி, ஆக்கினை, துரியம், என்று உடலுக்குள் உள்ள ஏழு இயக்க மையங்களிலும் பிரபஞ்சம், சுத்தவெளி போன்றவற்றில் மனம் வைத்து தவம் செய்வது .

8. நித்தியானந்தம்:
உடல் முழுவதும் சீவகாந்த ஆற்றலை நன்கு பரவ செய்வது.உடலும் , மனமும் நாள் முழுவதும் புத்துணர்வோடு இருக்க உதவும்.

9.இறைநிலை தவம்:
இறைநிலையிலிருந்து மனிதன் வந்த வரலாற்றை உணர்ந்து மனதை இறைநிலையோடு கலக்க விடுவது.

இந்த ஒன்பது வகை தவங்கள் மனவளக்கலை மூலமாக கற்றுக்கொடுக்கப் படுகின்றன. இவற்றை பயின்று வாழ்வில் எல்லா துறைகளிலும் வெற்றியும், மகிழ்ச்சியும் , மனநிறைவும் பெறுவதற்கு குருவருளும், திருவருளும் துணை புரியட்டும்.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன் ...

வெள்ளி, 5 செப்டம்பர், 2014

அகத்தாய்வு பயிற்சிகள் :

1.எண்ணம் ஆராய்தல்:
------------------------------
எண்ணம் தோன்றும் விதம் , அதற்கான அடிப்படைக் காரணங்கள், எண்ணம் செயல் படும் விதம் இவற்றை தெரிந்து கொண்டு எண்ணத்தை ஒழுங்குபடுத்திக் கொள்வதற்கான பயிற்சி "எண்ணம் ஆராய்தல்" .

2. ஆசை சீரமைத்தல் :...
-----------------------------
ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ள , எத்தகைய ஆசைகளை நிறைவேற்ற வேண்டும் என எண்ணிப் பார்த்து, ஆசைகளை ஒழுங்குபடுத்திக் கொள்வதற்குரிய முறையான பயிற்சியே "ஆசை சீரமைத்தல்".

3.சினம் தவிர்த்தல் :
---------------------------
சினத்தை ஒழிக்க முடியாது .சினத்தை தவிர்க்கத்தான் முடியும். சினத்தை எவ்வாறு தவிர்ப்பது? அதனால் வரும் கேடுகள் என்னென்னென்ன என்பதற்கான முறையான பயிற்சியே "சினம் தவிர்த்தல் ".

4.கவலை ஒழித்தல்:
---------------------------
கவலை என்பது என்ன ? எவ்வாறு அதை வகைப்படுத்திப் போக்கிக் கொள்வது ? இவற்றுக்கான வகுக்கப் பட்ட பயிற்சியே "கவலை ஒழித்தல்".

5. நான் யார்?:
-----------------
நான் யார்? எங்கிருந்து வந்தோம்? எங்கே போகப் வேண்டும்? என்பனவற்றையெல்லாம் தெரிந்து கொள்வதற்குத் தன்னிலை விளக்கம் அல்லது தெய்வநிலை விளக்கம் என்ற பொருளைப் பற்றி ஆராய்ச்சி செய்வதே "நான் யார்?" என்ற பயிற்சி .

 

வியாழன், 4 செப்டம்பர், 2014

மன்னிப்பை அருளிய மகான் :

வேதாத்திரி மகரிஷி அவர்கள் ஒரு முறை பேருந்தின் அருகில் நடந்து சென்று கொண்டிருக்கையில், அவர் மீது திடீரென்று ஒரு பெண்மணி வெற்றிலைச் சாறை உமிழ்ந்து விட்டார். அது மகரிஷி அவர்களின் வெள்ளைச் சட்டையில் ஆங்காங்கே பட்டு, சிகப்புக் கோலமாகியது . இதை மகரிஷி அறிந்து கொண்ட அதே வேளையில், அப்பெண்மணியும் அதைப் பார்த்துவிடுகிறார். உடனே பேருந்தை விட்டு இறங்கி வந்து தான் செய்த தவறால் கலங்கிய படியே மகரிஷி அவர்களை நெருங்குகிறார். மகரிஷி அவர்களின் கனிவான தோற்றத்தைப் பார்த்து மேலும் அதிர்ச்சி அடைகிறார்.

தனது தவறுக்காக வருந்திய அப்பெண்மணி, மகரிஷி அவர்களைப் பார்த்து "தங்களைப் பார்த்தால் ஒரு மகான் போல் ததோன்றுகிறீர்கள் . உங்களுக்கு அபச்சாரம் செய்து விட்டேன் . எனது எச்சிலை உங்கள் மீது உமிழ்ந்து விட்டேன். அறியாமல் செய்த பிழையை மன்னித்து அருள வேண்டும் ". என்று உள்ளம் பதற வேண்டுகிறார்.

"அதற்கென்ன அம்மா!துடைத்து விட்டால் போகிறது. நீங்கள் வருந்த வேண்டாம்" என்று ஆறுதல் அளித்தார் மகரிஷி . ஆனால் அப்பெண்மணி ஆறுதல் கொள்ளவில்லை. தான் செய்த தவறால் வேதனைப்பட்டார் ." தயவு செய்து உங்கள் சட்டையைக் கழட்டிக் கொடுங்கள், நான் தூய்மை செய்து கொடுத்து விடுகிறேன்" என்றார் அப்பெண்மணி.

"சட்டையில் எச்சில் பட்டதற்காக ஏனம்மா வருந்துகிறாய்? இந்த உடலே எச்சத்தால் வளர்ந்து வந்தது தானே? அதை எதில் கழுவ முடியும்? " என்ற மகரிஷியின் தெளிவான சிந்தனையால் தான் அப்பெண்மணியை உடனடியாக மன்னிக்க முடிந்தது.

ஒரு கன்னத்தில் அறைந்தால் மறுகன்னத்தையும் திருப்பிக் காட்டு என்றார் இயேசுபிரான். தான் அயர்ந்து உறங்கும் பொது காதில் இருந்த ஒரு கடுக்கனைக் கழட்டிய கள்வனுக்கு, மற்றதையும் கழட்டிக் கொள்ள வசதியாக புரண்டு படுத்து இராமலிங்க வள்ளலார். தன்னைக் காலால் உதைத்துத் தள்ளிய ஸ்மட்ஸ் என்ற ஆங்கிலேய அதிகாரிக்கு, தன் கையால் முதன்முதலாகச் செய்த காலணியை அளித்தார் மகாத்மா காந்தியடிகள் இந்த மரபில் வந்தவர் வேதாத்திரி மகரிஷி .

ஒருவர் செய்த தீமைகளையும், கொடுமைகளையும் துளியும் மனதில் கொள்ளாமல் அவரை மன்னித்து அவருக்கு உதவுவதே உயர்ந்த பண்பு அத்தகைய உயர்ந்த மாமகானை நாம் குருவாக பெற்றிருக்கின்றோம்.

புதன், 3 செப்டம்பர், 2014

உடலுக்குள் இயங்கும் இறையாற்றல் :

உண்ட உணவு ஏழு தாதுக்களாக மாறுகிறது. எவ்வளவு உணவு உண்டால் செரிமானமாகி ஏழு தாதுக்களாக மாறும்?. உடல் ஏற்றுக் கொள்ளும் அளவுக்கு உண்டால் மட்டுமே செரிமானமாகும் .உணவை ஏழுத்துக்களாக மாற்றும் செயலை இறைநிலைதான் செய்கிறது. இதில் மனிதனின் செயல் ஒன்றுமில்லை.

உடல் ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு மேலாக உணவு உண்டால் அந்த உணவு என்னவாகும்? உடலுக்குள்ளாகவே இருக்கும் இறைநிலை அந்தச் செ...யல் தவறு என்று அஜீரணத்தின் மூலம் எடுத்துக்காட்டுகிறது. இறைநிலையின் ஆற்றல் மனிதனுக்குள்ளாகச் செயல்பட்டப்போதிலும், அதற்கு முரணாக மனிதன் செயல் செய்வதால் துன்பம் வருகிறது.

எனவே இறைநிலைக்கு முரணில்லாது அதனோடு ஒத்துழைத்து அளவோடு , முறையோடு செயலாற்ற வேண்டியது அவசியம் .

--அருள் தந்தை

செவ்வாய், 2 செப்டம்பர், 2014

பேரின்பநிலையை அடைய :

மனம், அறிவு,தெய்வம், சீவகாந்தம்,வான்காந்தம் எவை தெளிவாக உணரப் பெற்றால் பெரிய இயக்கமண்டலத்தில் உள்ள கோள்கள் அனைத்தும் வான்காந்தத்தால் ஒழுங்காக இயக்கப்படும் காட்சியும் , சீவகாந்தம் உடலுக்குள் கருமையமாக அமைந்து உடலியக்கம்,மன இயக்கம் யாவும் சீராக நடைபெறும் அகக்காட்சியும்,சிந்தனையாற்றல் மிகுந்த அறிவுக்கு மகிழ்ச்சியும் நிறைவும் அளிக்கும் என்ற உண்மை உணரும் வரையில் பேராற்றல் பெற்ற அறிவு ஐம்புலன் உணர்ச்சிகளில் சிக்கித் தோய்ந்து இதன் விளைவாக துன்பங்களையும் ,பொருள் வழி வாழ்வில் சிக்கல்களையும் ஏற்று விடுபட முடியாமல் திணறித் தவித்துக் கொண்டிருக்கிறது. அதே அறிவு தன்னை அறிந்து கொண்டால் அதன் விரிவு நிலையறிந்த தெளிவில் ஐம்புலங்களாலான உணர்ச்சிவயப் பதிவுகளைத் தாண்டி விடுபட்டு இறைவனோடு இணைந்து பேரின்ப நிலையடையும் .

---அருள் தந்தை

திங்கள், 1 செப்டம்பர், 2014

மனவளக்கலையில் ஈடுபடுவோர் வாகனங்களை அதிக வேகத்தில் இயக்கக்கூடாது அல்லவா?

மகரிஷியின் விடை :
வானக வேகம் மிகுதியாய் போகின்றது என்றால், மன அலைச் சுழலும் கூடவே சேர்ந்து மிகுதியாய் போகின்றது என்று தான் பொருள். மேலும் இத்தகைய மனஉந்தம் மிகுந்த நிலையில் [stressful, excitement, thrill] செய்யப் படும் செயல்கள் அட்ரீனலினின் சுரப்பு வேகத்தை மிகுதிப்படுத்தும். அந்தச் சுரப்பியை இயற்கை சில நிகழ்வுகளுக்கு உடனடி எதிர்வினையாகப் [immiedate reaction] பயன்படுத்தத்தான் தந்திருக்கின்றது [எ.கா: பாம்பைக் கண்டால் உடனடியாக ஓடி ஒளிந்து கொள்ள[fight or flight harmone]] . புருவ மத்தியில், உச்சந்தலையில் காந்தத்தைப் பிடிப்பதின் மூலம், பிட்டியூட்ரியின் [master gland] சுரப்பு விகிதத்தை மாற்றி அதன் மூலம் மற்ற எல்லா சுரப்பிகளின் சுரப்பு விகிதத்தையும் கட்டுக்குள் கொணர இயலும் என்பதால் தான் புலன்களை முறைப்படுத்த வல்லது நம் ஆக்கினை / துரிய தவப்பயிற்சிகள் எனும் கூற்றைத் தருகின்றோம். எனவே வாகனத்தை மிக அதிக வேகத்தில் செலுத்துதல் என்பது ஆக்கினைத் தவத்துக்கு, துரிய தவத்துக்கு நேர்எதிர்மறைச் செயல் எனும் உண்மையை நினைவில் கொள்ளவேண்டும். மேலும் விபத்து என்பது மற்றோருடையை சாப அலையாலும், நமது கர்மவினை அலைகளாலும், சந்தர்ப்பவசத்தாலும் நிகழ வல்லது எனும் உண்மையை வாகனத்தில் ஏறுமுன்னர் நினைவில் கொணர்ந்து துரியத்தில் நின்று அருட்காப்பிட்டு வண்டி ஓட்டுதலே நலம்.
இதே போன்று, சில குறிப்பிட்ட வகை நடனங்கள் [மேற்கத்திய, நாட்டுப்புற], சில வகை இசைகள் [மேற்கத்திய, நாட்டுப்புற], கேட்கும் போதோ ஆடும் போதோ நமது மன அலைச் சுழலை மிகுதிப் படுத்தி, அட்ரீனல் சுரப்பு விகிதத்தை மிகுதிப்படுத்தி, நமது ஆக்கினைத் தவத்துக்கு, துரிய தவத்துக்கு நேர்எதிர்மறைச் செயல்களை விளைவிக்க வல்லது. அத்தகைய நடனங்களை, இசைகளை மனவளக்கலைஞர்கள் பயிலாமல் இருப்பதே நல்லது. ஏற்கனவே பயின்றிருந்தால் எப்போ விடமுடியும்ன்னு மனதுக்குப் படுதோ, அப்போ விட்டுடுங்க. அதுவரை நமது தவப்பயிற்சிகளில் சீராய் இயங்கி வாருங்கள்.

ஞாயிறு, 31 ஆகஸ்ட், 2014

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்

நோயற்ற உடலை உடையவர்கள் தான் அமைதியாக மன மகிழ்ச்சியாக வாழ முடியும். அவர்களுக்கு அறிவு திறம்பட இயங்கும். ஆன்மீக உயர்வு பெற்று இயற்கை இன்பங்களையும் துயித்து மகிழ முடியும். எனவே ஒவ்வொருவரும் நோயற்று வாழ வழி கண்டு ஒழுக வேண்டும்.

எந்த விதத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்டாலும், தானே அதைச் சரிபடுத்தி உடலைச சரி செய்து கொள்வதற்குரிய ஆற்றல் ஒவ்வொருவருக்கும் இயற்கையிலேயே ஓரள...வு உள்ளது. இந்த அளவை மீறும் போது தான் அது உடல்நலத்தைப் பாதிக்கிறது.

அவ்வாறு பாதிப்பு ஏற்படுகின்ற போது மனிதன் தன்னுடைய முயற்சியால் ---உடல் பயிற்சி , உளப்பயிற்சி , மனத்தூய்மை , ஒழுங்கான உணவு முறை , அளவான உழைப்பு ,ஒய்வு இவற்றுடன் கூடிய வாழ்க்கையானது நோய்கள் இல்லாமல் உடல் நலத்துடன் வாழ உதவும் .


--அருள் தந்தை

சனி, 30 ஆகஸ்ட், 2014

மனதை அறிய

மனிதனின் அறிவாட்சித் தரம் என்பது அவனிடம் உள்ள மனதின் தன்மையையும் , குணத்தையும் பொறுத்தது மனமே தன்னிடம் உள்ள அனுபவங்களைத் தீர்மானித்து, அதன் குணத்தைப் பெறுகிறது. மனதை அறியவும் , மனம் என்ற கருவி மூலம் தான் முடியும் .

வேறு எந்தக் கருவியின் மூலமும் அதை அளவிட முடியாது .மனதை அளவிட மனதை உள்நோக்கிச் செலுத்தி கவனித்தால் மனதில் தோன்றும் எண்ணங்களையும் , அவை செயல்படும் விதத்தையும், அதன் மூலத்தையும் அறியலாம். மனதின் உள்நோக்கிய பயணமே அகத்தவமாகும்.

--அருள் தந்தை

வெள்ளி, 29 ஆகஸ்ட், 2014

ஒரு மனிதனின் எண்ணம் உலகையே மாற்றும்

தீய எண்ணங்களின் வெளிப்பாடு தான் இன்று நாம் காணும் இயற்கைப் பேரழிவுகள். அதாவது புயல், வெள்ளம் என உருவெடுத்து எல்லாருக்கும் துன்பமாக மலர்ந்து கொண்டிருக்கிறது. ஏனெனில் இயற்கை தான் எண்ணமாக வந்திருக்கிறது. எண்ணமும் இயற்கையின் ஒரு கூறு தான்.

நமது எண்ணத்தை ஒழுங்கு படுத்திக்கொள்ள வேண்டும். மனிதனாகவே இருந்து எண்ண வேண்டும், மனிதத்தன்மை என்பதே தெய்வத்தன்மை. அந்த நில...ையில் இருந்து எண்ணத்தை ஒழுங்குபடுத்திக் கொண்டு நல்ல எண்ணங்களையே எண்ண வேண்டும் என்று எண்ணிக் கொண்டால் ஒவ்வொரு மனிதனின் எண்ணங்களில் இருந்து வரும் அலை நல்ல குணங்களையும், நல்ல எண்ணங்களையும் , நல்ல பதிவுகளையும் ஏற்படுத்திக் கொண்டே இருக்கும் . எனவே எண்ணங்களை இயற்கைக்கு ஒத்ததாக இருக்குமாறு எண்ண பழகிக் கொள்ள வேண்டும்

நல்ல எண்ணத்தால் உலகையே மாற்றியமைத்து விடலாம்.

"இயற்கை அறிந்து ஒத்து எண்ணுபவர் எண்ணம்
எப்போதும் எவ்விடத்தும் கவலையாய் மாறாது."

--அருள் தந்தை

வியாழன், 28 ஆகஸ்ட், 2014

"Fraction demands and Totality Supplies".



 "மனிதன் நல்ல எண்ணத்தோடு, முயற்சியோடு, ஒரு அடி எடுத்து வைத்தாய் இறைவன் பத்து அடி எடுத்து வைப்பான் என்று சொல்லப்பட்டுள்ளது. நீங்கள் உங்கள் மனதை நாடினால் போதும். "Fraction demands and Totality Supplies".

ஏனென்றால் அங்கு தான் இருப்பு இருக்கிறது. நான் யாரிடமும் எதையும் எதிர்பார்க்கமாட்டேன் என்ற நிலைக்கு வந்தவர் நல்ல எண்ணம், மனத்தூய்மை, கொண்ட ஒருவர் எல்லா...ம் வல்ல இறைவன் என்னைக் கவனித்துக் கொள்வான் என்றிருந்தால் அவரது தேவையை நிறைவற்ற உதவிகள் எல்லாத் திசைகளிலிருந்தும் வந்து சேரும்."

--அருள் தந்தை

புதன், 27 ஆகஸ்ட், 2014

தீமை செய்தவரையும் மனதார வாழ்த்துவோம் :

நாம் வாழ்த்தும் போது தெய்வீக நிலையில், அமைதி நிலையில் இருந்து கொண்டு வாழ்த்தவேண்டும். இந்த முறையில் வாழ்த்தின் மூலம் உலகத்தையே மாற்றி அமைத்து விடலாம்.
...
நமக்கு தீமை செய்தவரையும் ஏன் வாழ்த்த வேண்டும் என்றால் "அவர் அறியாமையினாலே தான் அவ்வாறு செய்தார், நம்முடைய கர்மச் சுமையின் விளைவு அவரைத் தீமை செய்ய இயக்கியது. எனவே அவர் செய்தார் , அவருக்கு உள்ளாக இயங்கிக் கொண்டிருப்பதும் எல்லாம்வல்ல முழு முதற் பொருளே" .

எனவே அவரை மானதார வாழ்த்தி "எனது தீய பதிவு ஒன்றை அகற்ற உதவிய அவருக்கு நன்றியும் செலுத்துவேன்" என்ற தத்துவ விளக்கம் நம் செயலுக்கு வந்து இயல்பாகி விட்டதென்றால், நாம் ஆன்மீகப் பாதையில் திடமாக முன்னேறிச் செல்கிறோம் என்பதற்கு அதுவே அறிகுறியாகும்

--அருள் தந்தை

வாழ்க வளமுடன்

செவ்வாய், 26 ஆகஸ்ட், 2014

மனநிறைவுக்கு இறையுணர்வும் ,அறநெறியும் துணை

பிறர் குற்றத்தை பெரிதுபடுத்தாமையும் , பொறுத்தலும், மறத்தலும் அமைதிக்கான வழிகளாகும். பிறரிடம் குறைபாட்டையே எடுத்து அலசிப்பார்ப்பதை விடுத்து, நிறைவையே காணக் கூடிய பயிற்சியைக் கொள்ள வேண்டும்.

எல்லாம்வல்ல இறைவன் அருளால் அமைத்தது எத்தனை எத்தனையோ ஆயிரம் ஆயிரம் நலன்கள் . இவற்றையெல்லாம் எண்ணி எண்ணி மகிழலாமே! "ஏதேனும் ஒரு குறைபாட்டைக் கற்பித்துக் கொண்டு,... துன்பப்படுவதை விட்டு விட வேண்டும்."

இந்த முறையில் வாழ்க்கையில் ஒவ்வொரு நாளிலும் ஒவ்வொரு நிமிடமும் குறைகளைக் களைந்து மனநிறைவு கொண்டு வாழலாம். இதற்கு இறையுணர்வும் , அறநெறியும் துணை நிற்கின்றன.

ஆன்மீக வாழ்வே தன்னையும் தூய்மை செய்து கொண்டு, பிறர்க்கும் தூய்மை அளிக்கவல்லது. இயற்கையின் பேராற்றல் எங்கும் நிறைந்த தன்மை எல்லாவற்றயும் அறியும் பேருணர்வு, அழிவில்லாத் தன்மை, நியதி வழுவாத் தன்மை, பெருங்கருணையை உணர்ந்து கொள்ளலாம்.

எல்லாமாகி நிற்பது இறைநிலையே என்ற உணர்வு எட்டும் . அந்த உணர்வு நீங்காத நிலையில் காணும் காட்சிகளெல்லாம் பரம்பொருள் . சொரூபம் அன்றி வேறில்லை என்ற உண்மை அறிவுக்கு எட்டும்.

எப்போது யார்யாரிடம் குறை காண முடியும்? குறை காண்பதற்கு ஏதுமில்லை என்பது விளங்கும். வானறிந்து உயிர் விளங்கி வரைகடந்து நிற்கும் நிலையில் வாழ்வாங்கு வாழவும் ,பிறரையும் வாழவைக்கவும் தக்க அறிவும் ஆற்றலும் உண்டாகிவிடும். இத்தகைய நிலை தானாக மலர்ந்து மன அமைதி கிடைத்து விடும்.

--அருள் தந்தை

திங்கள், 25 ஆகஸ்ட், 2014

குறை காணாதிருப்போம்

" மனிதப்பிறவியின் நோக்கமும் ,கடமையும் உயர்ந்தவை. இவற்றை நாம் பாதுகாக்க வேண்டும் . குறைகூறுவோரையும் வாழ்த்தி வர வர அவர் தானே உணர்ந்து திருந்த வழி காணலாம். இதற்குப் பொறுமையும் தன்னம்பிக்கையும் தாம் வேண்டும். பிறரை குறை கூறி தான் உயர வேண்டும் என்று நினைப்பவர்கள் மற்றவர்களது உள்ளத்தில் இது வரை அவர்கள் பெற்றிருந்த உயர்ந்த நிலையிலிருந்து கீழே தள்ளப்படுகிறார்கள் .

பிறரிடம் குறை காணும் பழக்கத்தை விட்டு விட்டு பிறரிடம் உள்ள நிறைகளைக் காண வேண்டும்.மனிதனுக்கு கிடைத்திருக்கும் வாழ்க்கைக் காலமோ மிகவும் குறுகியது. இக்குறுகிய கால வாழ்வில், பிறந்தோர் எல்லாம் வாழ வேண்டும். அதுவும் குறைகளைப் போக்கி நிறைவோடு வாழ வேண்டும்" .

"குற்றமே காணும் குறையுடையோர் வாழ்வினிலே
பெரபயன், சினம்வஞ்சம் பொறாமை வருத்தம் இவற்றால் முற்றும் இழந்தார் வாழ்வின் இன்பமும்; பிறவிப் பயன்
நற்றவத்தோர் வழிநின்று நல்லனவெலாம் ரசிப்போம் ".

--அருள் தந்தை

வாழ்க வளமுடன்

ஞாயிறு, 24 ஆகஸ்ட், 2014

இன்ப ஊற்று

என்னிடம் ஒரு முழுமையான ஆற்றலோடு எல்லாம் வல்ல இறைவன் என்னைப் படைத்திருக்கிறான் . பக்திமானாக இருந்தாலும், ஞானவானாக இருந்தாலும் அவனுடைய பிரதியாகவே , அவனுடைய பகுதியாகவே தான் இருக்கிறேன் . பேராற்றல் என்னிடம் அடங்கி இருக்கிறது . இதைக் கொண்டு என்னென்ன நலம் செய்து கொள்ள வேண்டுமோ அதை நானே விளைவித்துக் கொள்வேன் என்று எண்ணிப் பாருங்கள் .

பிறருக்கு உதவி தேவையான இடத்திலே அவர்களுக்கு உத...வி செய்து கடமை உணர்வோடு நின்று பாருங்கள் பெரிய சக்தி வாய்ந்த ஒரு ஆற்றல் உங்களிடம் பெருகி விடும். தினந்தோறும் அதைப் பயன் படுத்துங்கள் .

உங்கள் அதிகாரத்தின் கீழ் ஆயிரமாயிரம் மக்கள் துன்பப்பட்டுக் கொண்டிருக்கக் கூடும். நீங்கள் அவர்களுக்கு என்ன செய்ய முடியும் என்று எண்ணிவிட்டீர்களேயானால் , அவர்களின் தேவைகள் உங்களுக்கு தெரிய தொடங்கிவிடும். அதைச் செய்ய ஆரம்பித்தீர்களேயானால் செய்யச்செய்ய இன்ப ஊற்றுத் தான் மனதிலே வளரும். உங்களை அவர்கள் தெய்வத்தோடு தெய்வமாகவே நினைக்கும் ஒரு நல்ல காட்சி மனதில் ஏற்படும் .
உனக்கும் நல்லதாய் ஊருக்கும் நல்லதாய்
நினைப்பதும் செய்வதும் நித்தியக் கடன்".
.

"நாம் சமுதாயத்தில் ஓர் அங்கம், இந்த உடல்
சமுதாயத்தின் சொத்து, அதனைக் கெடுப்பதற்கு
நமக்கு அதிகாரம் இல்லை".
.

இறையுணர்வில் எழும் பேரின்பம்:

"இன்ப ஊற்று என நிறைந்த இறைவா எனும் போதிலே
ஏற்படும் ஓர் இன்பமதை எவ்வாறு சொல்வேன்;
நன்மை தரும் நவ கோள்கள் நட்சத்திரக் கூட்டம்
நான் அகத்தே காணுகின்றேன் நடனமாடும் காட்சியாய்;
உன் பெரிய பேரியக்க உவமையற்ற ஆற்றலால்
உலகங்கள் அத்தனையும் உருளுதே ஓர் கொத்துப்போல்;
தன்மயமாய்த் தான் அதுவாய்த் தவறிடாதியக்கும் உன்
தன்மையினை எண்ண எண்ண தவமது ஆனந்தமே".


-அருள் தந்தை

சனி, 23 ஆகஸ்ட், 2014

பொருள்துறை அவசியமா ?

மகரிஷி பதில் :

மனிதனாகப் பிறந்த பயனை அடைவதற்குப் பொருள்வளமும் அதற்கேற்ற முயற்சியும் செயல்களும் அவசியமே . அருள்துறைக்காக பொருள் துறையில் காலத்தை வீணாக்க வேண்டிய அவசியமில்லையென்று பலர் நினைக்கின்றார்கள் ....

வேறு சிலர் அருள் துறையில் தான் இறைவன் அருள் கிடைக்கும். பேரானந்த வாழ்வு கிட்டும். அதனால் பொருள் துறையை ஒதுக்கிவிட்டு அருட்துறையிலேயே முழு நேரமும் முயற்சி செய்ய வேண்டும்.

அருள் வேண்டுபவர்கள் அதற்காக தவம் அறம் முதலியவற்றில் முழுமையாக ஈடுபடுவதற்கு பொருள் துறையில் இருந்து ஒதுங்கிவிடல் வேண்டும் என்று கூறிக்கொண்டிருப்பது தவறு.

இன்பம் , துன்பம் , அமைதி, பேரின்பம் எனும் அனுபவங்களைத் துய்த்து வாழும் மனிதனுக்குப் பொருளும் வேண்டும் ,அருளும் வேண்டும் .
ஒன்றிலிருந்து மற்றொன்று இல்லாவிட்டால் வாழ்வு நிறைவு பெறாது .

அறவழியில் பொருளீட்டுவதே பொருள் செழிப்புக்கு வழியாகும்.ஈட்டும் போதே , செலவாகின்ற போதே, செலவு போக மீதமுள்ள பொருளில், பிறர் நலனுக்காக ஒரு சதவீதம் ஒதுக்கி செலவு செய்து பழகிக் கொள்ள வேண்டும்.

எஞ்சிய பொருளை நல்ல முறையில் தேவையுள்ளவர்களுக்குப் பங்கிட்டுக் கொடுக்க வேண்டும் .இதனால் எப்போதும் மனம் பளுவற்றதாகவும் ,இனிமையாகவும் , அமைதியாகவும் இருக்கும்.

அறவழியில் பொருளீட்டுபவர்களுடைய பொருள் விட்டுச் சென்றாலும் அப்பொருட்கள் பலருக்கும் நலமாளிக்கும் வகையில் செலவாகும்.
நிரந்தரமாகக் கிடைப்பதோ இன்பம் மட்டுமே அறவழியில் ஈட்டி பொருள் சேர்த்து வைப்பவரிடம் அவர் சேர்த்து வைத்து இருக்கின்ற பொருள் தனக்குப் பின்னால் நல்ல வழியில் சமுதாயத்திற்கு பயன்பட வழி வகுத்து விடுகிறார் .

பொருள் பற்று என்ற நிலையில் இருந்து தன்னைத் தானே அவர் விடுவித்துக் கொள்கிறார் . அந்த அளவுக்கு அருள் பற்று மலர்ந்து விடும்.
மனம் இனிமையான அமைதியில் திளைக்கிறது . மரணம் நெருங்க நெருங்க அந்த இன்ப வெள்ளத்திலேயே மிதந்து கொண்டு இறைநிலையோடு கலந்து விடுகிறார்.

அறநெறி மறந்து பொருள் சேர்த்தவர் மரணம் நெருங்குகின்ற போது அப்பொருளை எண்ணி வருந்துகின்றனர் . அறிவில் இருள் சூழ்கிறது மரணம் நெருங்க நெருங்க நிமிடந்தோறும் அச்சப்படுவர். இந்த அச்சத்தில் அமைதியற்ற மரணம் அடைவர் .


-----அருள் தந்தை

வெள்ளி, 22 ஆகஸ்ட், 2014

விளைவிலே தோற்றமாக வருவது இறைநிலையே

இறைநிலையே எல்லா இடத்திலேயும் , எந்தச் செயகளிலேயும் அடங்கி மறைமுகமாக இருந்து கொண்டு , செயலுக்குப் பிறகு விளைவு, செயலிலிருந்து விளைவாக வருகிறது என்பதை தெரிந்து கொள்ளும் போது . இறைநிலையை எந்த நேரத்திலும் மறக்க முடியாது.

 "மறைபொருளாக " புலன்களுக்கு எட்டாமல் எங்கும் எதிலும் ஊடுருவி நிறைந்திருக்கும் இறைநிலை, மனிதன் செய்யும் செயல்களின் செயலின் விளைவாகப் புலன்களுக்கு எட்டக் கூடிய நிலையில் வெளிப்பட்டு "விளைவாகக் " காட்சியளிக்கிறது.


மனிதன் ஆற்றும் செயல்கள் அவனது எல்லை கட்டிய அறிவின் ஆட்சிக்கு உட்பட்டவை. ஆனால் செயலுக்கு விளைவை தரக்கூடிய இறைநிலையோ எல்லையற்ற ஆற்றலுடையது. எந்தச் செயலும் இன்ப துன்ப விளைவுகளைத்தரும் என்ற இயற்கை நியதியை மறுக்க முடியாது . மறக்கவும் கூடாது .


இறைநிலையும் தானும் ஒன்றாக இருக்கக் கூடிய உண்மை நிலையை அறியாத முன்னம் செய்த தவறுகள் துன்பங்களை கொடுத்தன . ஆனால் இப்போது செயல் விளைவு நீதியை உணர்ந்த நிலையில் இறைநிலையே தானாகவும் இருக்கிறது என்ற விரிந்த நிலையிலே இனித் தவறுக்கு இடமில்லை. தவறுகளும் எழா .

-----அருள்தந்தை

வியாழன், 21 ஆகஸ்ட், 2014

மனிதன்

இறைநிலையின் பின்ன வடிவமே மனிதன். ஒரு மனிதன் இன்னொரு மனிதனை உடலாலோ, மனதாலோ வருந்தச் செய்வது இறைநிளைக்கே செய்கின்ற பழிச்செயலாகும்.
ஒருவர் எத்தகைய துன்பத்தைப் பிறருக்கு செய்தாலும் இறையாற்றலின் இருக்க ஆற்றலால் அத்துன்பம் தன்னிடமே திரும்பி வரும் என்பதை உணர்ந்து பிறர் உடலுக்கும் , மனதுக்கும் துன்பம் கொடுக்காமலும் . துன்பப்படும் போது உதவியும் வாழ்வோம் .

---அருள் தந்தை

புதன், 20 ஆகஸ்ட், 2014

மனம், ஆன்மா, பரம்

"அறநெறியில் பிறழாது வாழ்ந்து கொண்டே அறிவறிந்த பெரியோர்கள் மூலம் தனது அறிவின் நிலையையும், தோற்றமாகக் காணும் பிரபஞ்ச இயக்க விதிகளை பற்றி அறியவும், அவற்றிற்கு மூலமான மெய்ப்பொருள் நிலையை உணர்ந்து விளங்கிக் கொள்ளவும் ஏற்ற அ...கநோக்குப் ( Kundalini Yoga) பயிற்சியில் ஈடுபட்டுத் தன்னைப் பற்றியும், இயற்கை விதியைப் பற்றியும், சமுதாய அமைப்பைப் பற்றியும் அறிந்து கொள்வது "தவம்" அல்லது "யோகம்" எனப்படும். யோகம் (Meditation) என்பது அகநோக்குப் பயிற்சியாகும். இது இரண்டு கட்டங்களையுடையது.

1) மனதைப் புலன்களிலிருந்து விடுவித்து ஆன்மாவில் லயப்படுத்தல் முதற்கட்டம்,

2) ஆன்மாவைப் பரத்தில் லயப்படுத்தல் இரண்டாவது கட்டம்.

இந்தப் (Kundalini Yoga) பயிற்சியினால் மனம், ஆன்மா, பரம் என்னும் மூன்று மறை பொருட்களின் நிலைகளும் அவற்றின் சிறப்புகளும் குருவின் வழிகாட்டுதலின்படி தொடர்ந்து பயிலும் குண்டலினி யோக சாதகனுக்கு உள்ளுணர்வாக விளக்கமாகும்".

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

செவ்வாய், 19 ஆகஸ்ட், 2014

மனிதன் நான்கு விதக் குறைபாடுகளால் அமைதியிழந்து அல்லலுருகிறான், துன்பமடைகின்றான்

அவையாவன:-
1) கடவுளைத் தேடிகொண்டேயிருந்தும் காண முடியாத குறை.
2) வறுமை என்னும் ப...ற்றாக்குறை.
3) விளைவை அறியாமலோ, விளைவை அறிந்தும் அதை அலட்சியம் செய்தோ அவமதித்தோ செயலாற்றி அதன் பயனாகத் துன்பம் அனுபவிக்கும் குறை.
4) மனிதன் சிறப்பறியாமல் பிறர்மீது அச்சமும், பகையும் கொண்டு துன்புறுத்தியும், தான் துன்புற்றும் அல்லலுறும் குறை.

இந்த நான்கு குறைபாடுகள் ஒன்றோடு ஒன்று இணைந்துவிட்டன. வாழ்க்கையில் பலவிதமான சிக்கல்களாகி அவற்றை எளிதில் தீர்த்து விடுதலை பெறமுடியாமல் - வழி காணாமல் மனிதன் தவிக்கிறான். வாழ்வின் நலமிழந்து தான் வருந்தியும் - பிறரை வருத்தியும் வாழ்கிறான். தெரிந்தோ தெரியாமலோ இக்குறைகளிலிருந்து விடுதலை பெற மனிதன் முயல்கிறான். குறை நீங்கி முழுமை பெற வேண்டும் என்ற ஆர்வம் ஒவ்வொருவரிடத்தும் ததும்பிக் கொண்டிருக்கிறது. அதற்கேற்ப சிந்திக்கிறான்; முயற்சி செய்கிறான்; உணர்ந்த அளவிலே செயல்களில் இறங்கி அதன்படி விளைவுகளைக் காண்கின்றான்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

திங்கள், 18 ஆகஸ்ட், 2014

Understanding the universe


Understanding the universe is a must for all the researchers . To understand it as a whole in a single visualization can be done through the realisation of the below points .
1. Space the unexplainable primordial state , eternal , all pervasive . This is the first state...
2. The space due it's own self compressive force (due to its enormous gravity ) forms the primary energy particle . This is the second state
3. The same space due to its omnipresence and gravity it compresses the primary energy particle to generate secondary shadow waves called magnetism . This is third state
4. Magnetism functions and transforms in the five elements ( primary energy particle, air, fire, water, solids) as pressure, sound, light , tastes, smell and mind

On viewing all these in one elevates our own understanding of this entire universe


- Vethathiri Maharishi

ஞாயிறு, 17 ஆகஸ்ட், 2014

செயல்விளைவு தத்துவம்



 வாழ்க வையகம். உலகம் முழுவதும் பக்தி வழியில் பெரும்பாலான மக்கள் வாழ்ந்து வருகின்றார்கள். அவர்களிடம் உள்ள ஆழமான தெய்வ நம்பிக்கை சில சமயம் முரண்பாடான விளைவுகளைத் தருவதை அறிகிறோம். அது என்னவெனில், எல்லாம் வல்ல தெய்வத்தை நான் வணங்குகிறேன், ஆண்டவனே! எனக்கு இன்னது வேண்டும், அ...தை நீ கொடு என்று வேண்டிக் கொள்வது பழக்கமாக உள்ளது. அனைவரும் அவ்வாறு வேண்டி அவற்றை பெற்றார்களா? அத்தகைய வேண்டுதல் மூலம் தேவையான பொருட்கள் கிடைத்து மனிதகுலம் நிறைவு பெற முடியுமா? இறைநீதி என்பது மனிதன் கேட்டு இறைநிலை வழங்குவதில்லை. மனிதனுடைய ஒவ்வொரு செயலிலும் அதற்குத் தக்க விளைவுகளைத் தவறாமல் பெற ஏற்ற அமைப்புதான் ”செயல் விளைவு தத்துவம்.”

கடவுளை வேண்டிக் கொண்டு, விளைவுகளுக்குக் காத்துக் கொண்டிருப்பதை விட, என்ன செயல் செய்தால் அந்த விளைவு எனக்குக் கிடைக்கும் என்று சிந்திக்கவும், பயனடையவும் தக்க ஒரு வழியே செயல் விளைவு நீதியாகும். எந்தச் செயல் செய்தாலும் அதற்குத் தக்க விளைவு உண்டாகிறது என்பது ஒவ்வொருவருக்கும் வாழ்க்கை அனுபவமாக உள்ளது. இந்த அனுபவங்களைக் கொண்டும், முன்னோர்கள் எழுதியுள்ள நூல்களைக் கொண்டும் செயல் விளைவு தத்துவத்தை நன்றாக உணர்ந்து கொள்ள முடியும். ஏமாற்றமில்லாமல் பயன் தரக் கூடியதுதான் செயல் விளைவு நீதி.

“ஈசனே தானாக உணர்ந்த போதும்
எழும் பசியை உணவால்தான் போக்க வேண்டும்”

மனிதன் இன்பத்தை நாடுகிறான். வாழ்க்கையில் இலாபத்தை நாடுகிறான். இவற்றிற்காக கடவுளை வேண்டுவதை விட அதற்குரிய செயல்களைக் கண்டுபிடித்து முறைப்படி செய்து பயனடைவதுதான் ஏமாற்றமில்லாத உறுதியான வழிமுறையாகும்.

பொதுவாக பாவம், புண்ணியம் என்ற இரண்டு வார்த்தைகளை மனதில் கொண்டு புண்ணியத்தைத் தேடிக் கொண்டால் எல்லா வளங்களும் கிட்டுமென்பது, அது உண்மையே ஆனாலும், பாவம் எது, புண்ணியம் எது என்று தெரிந்து கொள்ள வேண்டாமா? அதைப் பற்றியும் சிறிது சிந்திப்போம்.

பாப புண்ணியம்

“எண்ணம், சொல், செயல் என்ற மூன்றினாலும்
எவர்க்கெனினும் தனக்கெனினும் இன்றோ பின்னோ
மண்ணுலகில் உணர்ச்சிக்கோ கற்பனைக்கோ
மாசுஎனும் துன்பம் எழா வகையினோடும்
உண்மையிலே இன்பத்தை விளைத்துக் கொண்டே
உலக இயல்போடு ஒட்டிவாழும் செய்கை
புண்ணியமாம், இதற்கு முரணான வெல்லாம்
புத்தி மிக்கோர் பாபமென விளங்கிக்கொள்வார்.”

எண்ணம், சொல், செயல் இவை மூன்றாலும் எவருக்கோ தனக்கோ, இன்றோ பின்னோ, உடலுக்கோ மனதுக்கோ துன்பம் தருமானால் அது, அந்தச் செயல், பாவம் என்றும், இருக்கும் துன்பத்தை நீக்கி இன்பம் அளிக்குமானால் அது புண்ணியம் என்றும் நாம் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும். நல்ல விளைவுகளைத் தரும் செயல்களை நமது வாழ்வில் தேர்ந்தெடுத்துக் கொள்வது சிரமமில்லை.

இதுவரையில் நாம் வாழ்ந்துகண்ட அனுபவங்களை வைத்துக் கொண்டே, விளைவுகளைக் கொண்டே, எந்த எந்தச் செயல் நல்லது, செய்யத்தக்கது, எந்தச் செயல் தீயது, தவிர்க்க வேண்டியது என்பதை எளிதில் உணர்ந்து கொள்ளலாம். இந்த அளவுக்குச் சிந்தனை ஆற்றல் வளராதவர்களுக்கு மன உறுதியும், செயலில் பிடிப்பும் ஏற்படுவற்காக நம்பிக்கை வழியில் தெய்வத்தை வேண்டுதல் என்ற பயிற்சியும், பழக்கமும் ஏற்பட்டது.

பழக்கம்தான் உறுதி பெறும்பொழுது பண்பாடாக மாறுகிறது. பண்பாடுதான் மனிதனை தவறாது வழிநடக்கச் செய்யும் ஒரு பாதுகாப்பு. எனவே, இக்காலத்தில் விஞ்ஞான அறிவு மிகுந்து வரும்பொழுது, கல்வியின் வளர்ச்சிக்குப் பலப் பல வாய்ப்புகள் அமைந்திருக்கும்பொழுது, அறிஞர்கள் முயன்று செயல் விளைவு தத்துவத்தை மக்களிடம் பரவ விட்டு, வாழ்க்கைப் பண்பாட்டையே உயர்த்திவிடலாம். கடவுளை வேண்டுதல் என்ற பழக்கத்தில் நின்று அதனால் பயன்காணாது சோர்வடையும் மக்களுக்கு விஞ்ஞான பூர்வமான செயல் விளைவு தத்துவத்தை இன்று விரிவாக போதித்து, மனித இனப் பண்பாட்டை உயர்த்த வேண்டியது இன்றுள்ள பேரறிஞர்கள் கடமையாகும்.

செயல் விளைவு தத்துவத்துக்குச் சான்றுகளை எடுத்துக் கூறுவதற்கு அதிக சிரமமே இல்லை. ஒவ்வொருவர் வாழ்விலும்,சமுதாயத்திலும், உலக அரங்கிலும் நடைபெறும் நிகழ்ச்சிகளைக் கொண்டே துல்லியமாக செயல்விளைவு தத்துவத்தை நாமும் நன்கு உணரலாம்; மக்களுக்கும் உணர்த்தலாம்; செயல் படுத்தி நலம் காணச் செய்யலாம்.

வாழ்க்கை நல போதகர்கள் இக்காலத்தில் அதிகமாக இருக்கின்றார்கள். அவர்களுக்கெல்லாம் கல்வி திட்டத்தில் செயல் விளைவு தத்துவத்தை விளக்கும் ஒரு முறையை அமுல்படுத்த வேண்டியது இக்காலத்தில் ஒரு இன்றியமையாத தேவை. சிந்தனையாற்றல் மிகுந்தவர்களுக்கும், சமுதாய நல நாட்டமுள்ள தொண்டுள்ளம் கொண்டவர்களுக்கும், பணிவோடு எனது கருத்தை அளிக்கிறேன். அறிஞர் பெருமக்கள் சிந்தனை செய்து, இக்கருத்துக்குப் படிகட்டியும், வடிகட்டியும் மக்கள் குல மேன்மைக்கு வழிவகுக்க வேண்டுமென்று உலக நலம் வேண்டி அறிவுத் தொண்டாற்றி வரும் அறிஞர் பெருமக்களை வேண்டிக் கொள்கிறேன். வாழ்க வையகம்!


நிறைவுரை
...
நண்பர்களே! அறிஞர் பெருமக்களே! இறைநிலையின் தன்மாற்ற சிறப்புகளை ஒரு சரித்திரமாக்கி, சுருக்கமாக எழுதி இந்த நூலை மனித குலத்துக்கு அர்பணித்திருக்கிறேன். இந்த நூலில் கண்ட உண்மைகளைப் பற்றி சிந்திக்கும் போது சில அறிஞர்களுக்கு என்னைச் சந்தித்து, சிலபல சந்தேகங்களுக்கு விடை காண வேண்டும் என்ற எண்ணம் உண்டாகும்.

அத்தகைய வரிகளை எனக்குத் தெரிவித்துவிட்டு, நாளும், நேரமும் ஒதுக்கிக் கொண்டு, என்னைச் சந்தித்து உரையாடி நிறைவு பெறலாம். மிகப் பொறுமையோடு இந்த ஆழ்ந்த கருத்துடைய ஒரு தத்துவத்தை நீங்கள் படித்திருப்பதற்கு எனது மனமார்ந்த நன்றியும், வாழ்த்துக்களும் உரியவை ஆகும்.இந்த நூலைத் தொடர்ந்து உங்கள் தொண்டு உலகுக்கு ஞான ஒளிபரப்புவதாக அமையட்டும். உங்கள் சிறப்பான கருத்தையும்,முடிவையும் எனக்குத் தெரிவித்து உங்கள் கடமையைச் செய்தால் களங்கங்கள் கரைந்த உண்மைகள் உலகுக்கு எளிதில் பரவும்
.
(1) இறைநிலை விளக்கம், (2) காந்த ஆற்றலின் விளக்கம், (3) அவ்வாற்றல் பாய்மப் பொருளாகி பிரபஞ்சக் களத்தில் நிறைந்து உருவாகும் விந்தைகள் அனைத்தும் மனித மனத்துக்கு மிகவும் உற்சாகம் தருவனவாகும். மனிதன் எப்பொழுதுமே வாழ்க்கைப் பொருட்கள், அதனால் ஏற்படும் இன்ப துன்ப உணர்வுகள் என்ற வரையில் அறிவை எல்லைக் கட்டிக் கொண்டு ஒரு மேலான உண்மையை, இறைநிலையின் திருவிளையாடல்களை மனம் விரித்து காண முடியாமல், மயக்கத்தில் தவித்துக் கொண்டிருக்கிறான். அத்தகைய மயக்கம் இந்த நூலின் மூலம் எளிதாகத் தெளிந்து விடும் என்பது உண்மை. “எனக்கு என்ன மயக்கம் இருக்கிறது?” என்று எண்ணலாம்; ஒரு குறிப்பு கொடுக்கிறேன்; அதன் மூலம் அந்த மயக்கம் நீங்கி, அதற்குரிய தெளிவும் யாருக்கு என்றாலும் வந்துவிடும்.

நாம் எங்கே வாழ்கிறோம்? உலகின் மீது, இந்த உலகமோ மணிக்கு 1000 மைல் வேகத்தில் தன்னைத் தானே சுற்றிக் கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்ல. சூரியனை 9 கோடி மைலுக்கு அப்பால் விலகி நின்று, ஆண்டுக்கு ஒருமுறை ஒரு சுற்று முடித்துக் கொண்டிருக்கிறது. என்ன விரைவிலே இந்த உலகம் ஓடிக் கொண்டிருக்கிறது? சூரியனைக் கொண்டு, அதன் சுற்றளைவைக் கொண்டு நிலவுலகின் ஓட்ட விரைவைக் கணக்குத் தெரிந்தவர்கள் சுலபமாக கணித்துக் கொண்டு மகிழலாம்.

அத்தகைய கணிப்பில் நாம் காண்பதென்ன? நாம் இருந்து கொண்டு வாழும் உலகம், தன்னைத் தானே மணிக்கு 1000 மைல் வேகத்தில் சுற்றிக் கொண்டே, சூரியனை ஒரு நாளைக்கு பதினைந்து லட்சத்து ஐம்பதாயிரம் மைல் விரவில் சுற்றிக் கொண்டிருக்கிறது. நாம் அதை விட்டு விலகியா நிற்கிறோம்? இந்த பூமியின் சுழல் வேகத்தில் நாமும் பற்றிக் கொண்டுதான் சுழலுகிறோம், ஓடுகிறோம். என்றாகிலும் இந்த உண்மையை நினைத்துப் பார்த்ததுண்டா?

இதுபோன்று நம் உடலில் நாம் உண்ணும் உணவு ஏழு தாதுக்களாக மாற்றம் பெற்றுக் கொண்டே இருக்கின்றனவே, அது எவ்வாறும் யாரால் நடைபெறுகிறது என்று சிந்தித்து பார்த்தோமா? ஆனால், உண்மையை அறியும்பொழுது எல்லையில்லா மகிழ்ச்சியால் உள்ளம் பூரித்து, இறைநிலையின் பேராற்றலை உணர்ந்து மகிழ்கிறோம். அது மட்டுமல்ல அந்தப் பேராற்றலின் நுண்துகள்கள்தானே பிரபஞ்சப் பேராற்றலின் நிகழ்ச்சிகள் அனைத்திற்கும் அடிப்படையாகும்.

இத்தகைய உண்மைகளை உணர்ந்து அறிவின் தெளிவு பெறும்பொழுது, அடையும் அனுபவம்தான் “பேரின்பம்” என்ற பெரும்பயனாகும். இந்த இன்பம் எல்லோர் உள்ளத்திலும் பொங்கட்டும். அதிலிருந்து எழும் மகிழ்ச்சி அலைகள் உலக மக்கள் அனைவரையும், உள்ளத் தூய்மையும் செயலில் நேர்மையும் பெற வைக்கட்டும். எல்லோரும் இனிது வாழ்க. வாழ்க வையகம். வாழ்க வளமுடன்.

- வேதாத்திரி

சனி, 16 ஆகஸ்ட், 2014

மனிதர்களைப் பிரிக்கும் குழு உணர்வுகள்


வாழ்க்கையில் அனுபோக அனுபவங்களால் அறிவிலும், உடல் இயக்கத்திலும், செயல்களிலும் அறிவால் உயர்ந்து வரும் மனிதன் அவ்வப்பொழுது காலத்திற்கேற்ப வாழ்க்கையில் சிறப்பான பண்பாட்டு மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டு தான் செழிப்பாகவும், அமைதியாகவும...் வாழமுடியும். முதலில் மனிதனின் தவிர்க்கமுடியாத தேவைகளை வரிசைப்படுத்தி ஆராய்ந்து தெளிந்து கொள்வோம்.

மனிதனுக்குத் தேவையானவை

“மனிதனுக்கு உணவு, உடை, வீடு வேண்டும்
மற்றவர்கள் கருத்தறிய மொழியும் வேண்டும்
இனியும் ஒருவர் உற்ற வயதடைந்தால்
ஏற்றபடி வாழ்க்கைக்கோர் துணையும் வேண்டும்
தனிமனிதன் சக்திகளை ஒழுங்கு செய்து
சகலவிதமாம் வாழ்க்கை வசதி எல்லாம்
புனித முறையில் பகிர்ந்து துய்த்து வாழ
பொதுவான கூட்டாட்சி முறையும் வேண்டும்.”

இத்தகைய இன்றியமையாத தேவைகளை அடைவதற்கு ஏற்றபடி மனித முயற்சியும், அவ்வப்பொழுது சமுதாயப் பண்பாட்டில் தகுந்த சீர்திருத்தங்களும் ஏற்பட்டு வருகின்றன. சீர்திருத்தமில்லாமல் ஒரே மாதிரியான வாழ்க்கையை மனிதனால் அனுபவிக்க முடியாது. மன நிறைவும் கிட்டாது. எனவே, ஐந்தொழுக்கப் பண்பாட்டில் வரும் கவியைப் பார்ப்போம்.

கவி

“புதியதொரு பண்பாடு உலகுக்கு வேண்டும்
போதை, போர், பொய், புகைஒழித்து அமுல்செய்வோம்.
அதிகசுமை ஏதுமில்லை (1) அவரவர்தம் அறிவின்
ஆற்றலினால், உடல்உழைப்பால் வாழ்வதென்ற முடிவும்;
(2) மதிபிறழ்ந்து மற்றவர்கள் மனம், உடல்வருந்தா
மாநெறியும்; (3) உணவுக்கு உயிர் கொல்லா நோன்பும்; (4) பொதுவிதியாய் பிறர்பொருளை, வாழ்க்கைச்சுதந்திரத்தை போற்றிக்காத்தும் (5) பிறர்துன்பம் போக்கும் அன்பும்வேண்டும்.”

நமது வாழ்வில் அரசியல் தேவை. இறையுணர்வும், அறநெறியும் கற்றுக் கொள்ளவும், பழகவும் மதங்கள் தேவை. இந்த தேவைகள் அனைவருக்கும் பொதுவாகத் தானே இருக்கின்றன. ஏன் மனிதன் அரசியல், மதம், பண்பாடு இவைகளில் ஒருவருக்கொருவர் வேறுபடுத்திக் கொண்டு, பகை, பிணக்கு, போர் இவற்றால் துன்புற வேண்டும்? எனவே இக்காலச் சமுதாயத்துக்கு ஒரு முறையான சீர்திருத்தமும் தேவை. அந்தத் தேவைகளில், ஆட்சிமுறை உலகுக்கு ஒன்று போதும். மதம் என்ற போதனை முறை ஒன்று போதும், ஒருவரைப் பிறர் மதித்து வாழ, ஒத்தும், உதவியும் வாழ்வதற்கு ஏற்றபடி பண்பாடும் தேவை.

தேவையில்லாத பழக்க வழக்கங்களால், அவை தொடர்ந்து வருவதால் மனித சமுதாயத்தில் ஆங்காங்கே குழப்பங்களும், பகை, போர், இவைகளும் நிகழ்கின்றன. போர் அவசியம் தேவைதானா? யாருக்குப் போர் தேவை? இந்த வினாவுக்கு விடை காணும்பொழுது போரில்லா உலக சமுதாயம் அமைய வேண்டும் என்றுதான் ஒவ்வொருவரும் முடிவு கொள்ள வேண்டியுள்ளது. இதைக் கருத்தில் கொண்டுதான் பதினான்கு திட்டங்கள் அடங்கிய உலக சமுதாய சீர்திருத்த நெறிகளில் போரில்லா நல்லுலகம் என்ற கருத்தை முதல் திட்டமாக வலியுறுத்தியிருக்கிறேன். இந்த இடத்தில் கீழே சொல்லியுள்ள பதினான்கு திட்டங்களையும் பற்றி ஒவ்வொருவரும் அறிந்து கொள்ளவேண்டியது அவசியம்.

கவி

போரில்லாநல்லுலகம், பொருள்துறையில் சமநீதி
நேர்மையான நீதி முறை, நிலவுலக்கோர் ஆட்சி,
சீர்செய்த பண்பாடு, சிந்தனையோர்வழி வாழ்வு,
சிறப்புணர்ந்த பெண்மதிப்பு, தெய்வநீதிவழி வாழ்தல்,
தேர்த் திருவிழா தவிர்த்தல், சிறுவர்கட்கே விளையாட்டு,
செயல் விளைவு உணர்கல்வி, சீர்காந்த நிலை விளக்கம்,
பார்முழுதும் உணவுநீர்பொதுவாக்கல், பலமதங்கள்
பலகடவுள்பழக்கம் ஒழித்து உண்மை ஒன்றை வழிபடுதல்.

இந்தப் பதினான்கு திட்டங்களும் வாழ்க்கைப் பண்பாடாக மாறவேண்டுமென்றால் முதலில் உலகப் பொதுவான ஆட்சிமுறையை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும். அடுத்த படியாக மதம் என்ற தலைப்பில் நிலவி வரும் கற்பனையான உருவக் கடவுள்களையும், அததற்குரிய கட்டுக் கதைகளையும் மாற்றி அமைக்க வேண்டும்.

முதலில் ஓராட்சி உலகுக்கு எப்படிக் கொண்டு வரலாம் என்று சிந்திப்போம். இந்தச் சிந்தனைக்கு உலகிலுள்ள அறிஞர் பெருமக்களெல்லாம் ஒருங்கிணைந்து கூடிப் பேசி முடிவு எடுத்துதான் கொண்டு வரவேண்டும். இதற்கு உலகப் பொதுவான, அதிகார பூர்வமான மையம் ஒன்று வேண்டும். இதற்கு அதிக முயற்சி எடுக்க வேண்டியதில்லை. அதிர்ஷ்டவசமாக நமது முன்னோர்கள் உலக நாடுகள் அனைத்தையும் ஒன்று சேர்த்து “ஐக்கிய நாடுகள் சபை” என்ற உலகப் பொது வாழ்க்கை நல மேம்பாட்டு மையத்தை உருவாக்கியுள்ளார்கள். அந்த மையத்தில் தேவையற்ற சில முறைகளை நீக்கித் தூய்மை செய்து கொண்டால் ஐக்கிய நாடு சபை ஒன்றே உலகப் பொது நலமையம் என்ற சிறப்பு பெற்றுவிடும்.

அந்த உலகப் பொது மையத்தில் இரண்டு தீர்மானங்கள் முதலில் அமுல்படுத்த வேண்டும். 180 நாடுகளும் சேர்ந்து U.N.O. என்னும் அமைப்பான ஐக்கிய நாடுகள் சபை அமைக்கப்பட்டிருக்கிறது. அந்தச் சபையில் நிர்வாகப் பிரிவாக இரண்டு அமைப்புகள் உள்ளன. ஒன்று பொதுச்சபை (Genaral Assembly), மற்றொன்று பாதுகாப்பு சபை (Security Council). இந்தப் பாதுகாப்புச் சபையில் யுத்த தளவாடங்கள் விற்று அதன் மூலம் கோடிக்கணக்கில் பணம் சேர்த்துக் கொள்ள ஐந்து நாடுகளுக்கு ரத்துரிமை (Veto Power) அளிக்கப்பட்டு இருக்கிறது. இந்த அநீதியான முறையால், உலகப் பொதுவான போர் ஒழித்தல் முதலான தேவைகளை முறையாகச் சீர்திருத்தம் செய்து உலக நாடுகள் நிரந்தர அமைதியின் மூலம் பயன் பெற முடியவில்லை.

இந்த ரத்துரிமை நீக்குவதற்கு உலக நாடுகள் அனைத்தும் சேர்ந்து ஒரு தீர்மானம் கொண்டு வந்து அதன் மூலம் அநீதியான ரத்துரிமையை ஒழித்து, போரில்லா நல்லுலகத்தை அமைத்துக் கொள்ளலாம். அதற்காகவே, மற்றுமொரு தீர்மானமும் தேவை. உலக நாடுகள் ஒவ்வொன்றும் தங்கள் நாட்டையும், மக்களையும் பாதுகாத்துக் கொள்ள இராணுவம் என்ற போர் நிர்வாகத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. பாதுகாப்பு ஒவ்வொரு நாட்டுக்கும் அவசியம்தான். எனினும் ஒவ்வொரு நாட்டாலும் ஏற்படுத்திக் கொள்வது என்றைக்கும், எந்தக் காலத்துக்கும் பிணக்கு, பகை, போர் இவற்றை உண்டு பண்ணிக் கொண்டேயிருக்கும். இந்த அடிப்படையை மனதில் ஆராய்ந்து கொண்டு இதற்கு ஒரு தீர்மானம், பாதுகாப்புச் சபையின் சார்பில் கொண்டு வர வேண்டும். அது மிக சுருக்கமான தீர்மானம்தான்


எந்த நாடும் தனித்தனியே போரமைப்பை உருவாக்கிக் கொண்டு தங்கள் நாட்டைப் பாதுகாக்க வேண்டியது அவசியமில்லை. உலகில் உள்ள எல்லா நாடுகளின் எல்லைப் பாதுகாப்புப் பணியை ஏற்று, ஒற்றுமையாக நடைபெற ஐக்கிய நாடு சபையில் பாதுகாப்பு பிரிவின் ஒரு தீர்மானம் அவசியம். ஐக்கிய நாடு சபை என்பது உலகில் உள்ள எ...ல்லா நாடுகளின் நலன்களையும் பாதுகாத்துக் கொள்ளவேயாகும்.

ஆகவே, “எல்லா நாடுகளின் எல்லைப் பாதுகாப்பு பொறுப்பை உலகப் பொதுவான ஐக்கிய நாடு சபையின் பாதுகாப்பு பிரிவே பொறுப்போடு ஏற்று நிர்வகித்து வர வேண்டும்.” இதற்கென ஒரு தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும். எந்த நாடும் தனித்தனியே போர் அமைப்பு வைத்துக் கொள்ள வேண்டியது அவசியமில்லை. இந்தத் தீர்மானத்தின் மீது உலகப் பொதுவான அறிஞர் பெருமக்கள் ஆழச்சிந்தித்து, உலக மக்கள் நலத்துக்கு ஏற்ற முறையில் நல்ல வாசகங்களை அமைத்து, இந்த உலகப் பொது பாதுகாப்பு திட்டத்தை உருவாக்கி அமுல் நடத்த வேண்டும்.

இந்த இரண்டு திட்டங்களையும் நிறைவேற்றி, அவற்றை அமுலாக்கி உலக மக்கள் வாழ்வில் எவ்வளவு அமைதியும், செல்வப்பெருக்கும், ஒருவரோடு ஒருவர் ஒத்தும் உதவியும் வாழக்கூடிய பண்பாடும் உருவாகும் என்பதைச் சிந்தனை ஆற்றலால் கணித்துப் பாருங்கள். மற்றொரு அவசியமான தவிர்க்க முடியாத மாற்றம், மதங்கள் ஒன்றாக வேண்டும். இறையுணர்வும், அறநெறியும் தெரிந்து கொண்டு வாழ்வதற்கே மதங்கள் ஏற்பட்டன. இங்கு இறைநிலை உணர்வில் எண்ணிறந்த கடவுள் பெயர்களை உருவாக்கிக் கொண்டு ஒவ்வொரு கடவுள் பெயராலும் மக்கள் பிரிந்துபட்டு துன்பம் அடைகிறார்கள். இந்த நிலைமையைத் திருத்தியமைக்க ஒரு தீர்மானம் அவசியம்.

ஒரு உலகப் பொது மகாநாடு கூட்டி, மதத் தலைவர்கள் அனைவரையும் மதிப்போடு வரவேற்று, அவர்களிடம் இரண்டு வினாக்களை முன் வைக்க வேண்டும்.

1. கடவுள் என்பது ஒன்றா? பலவா?

2. ஒன்றுதான் என்றால் பிரபஞ்சத்தில் உள்ள எந்த மகாசக்தியை கடவுளாக ஏற்றுக் கொள்ளலாம்? ஏன் உலகில் பல கடவுள் பெயர்களை வைத்துக் கொண்டு நாம் துன்புற வேண்டும்?

இந்த இரண்டு வினாக்களுக்கும் ஆராய்ந்து பதில் கூறுமாறு அங்கு கூடியிருக்கும் மதிப்புமிக்க மதத் தலைவர்களை வேண்டிக் கொள்வோம். இதற்கு முடிவாக என்ன விடை கிடைக்கும்? கடவுள் என்பது ஒன்றுதான் என்பார்கள். உலகிலுள்ள மக்களெல்லாம் முற்காலத்தில் சிறுசிறு பிரிவுகளாகக் கூடி வாழ்ந்தார்கள். அவர்கள் பேசிய மொழிகளும் வேறுபட்டிருந்தன. கடவுள் என்ற ஒரே சொல்லுக்கு அந்தந்த மொழியில் உச்சரிப்புகள் வேறுபட்டன. அந்த உச்சரிப்புகள் பேதத்தைக் கொண்டு கடவுள்கள் தனித்தனியாகவும், எண்ணிலடங்காத கடவுள்களாகவும் வழக்கத்தில் வந்து விட்டன.

இவற்றையெல்லாம் மக்களிடம் உணர்த்தி நல்ல முறையில் உண்மையான தெய்வ நிலையை உணர்வதற்கு நாம் முதன் முதலில் விளக்கியுள்ள கருத்துக்களை நல்ல முறையில் சீராக்கி அமைத்து, எல்லா மதத் தலைவர்களும் உண்மையான கடவுள் நிலையை உணர்ந்து கொள்ளச் செய்ய வேண்டும். இந்த முயற்சி மிகவும் அவசியமானது. செயல் முறைக்கும் எளிதானது. இந்தத் தீர்மானத்தின் மூலம் மக்களிடம் ஒரே கடவுள்தான் என்ற விளக்க அறிவு மலர்ந்து விட்டால் மதங்கள் ஒன்றைவிட அதிகமான அளவில் தேவை இருக்காது. இதன் மூலமே வாழ்க்கையின் தேவைகளை முறையாகப் பெறவும், அனுபவிக்கவும் மக்களிடம் ஒரே ஒரு பண்பாடு உருவாகிவிடும். இதன் மூலம் பல மதங்களையும் ஒன்றுபடுத்தி ஒரே மதமாக்கி உண்மையான தெய்வநிலையை வழிபடும் திருத்தத்தை உண்டாக்கலாம்.

உலகப் பொது ஆட்சியும், மதங்கள் ஒன்றுபட்டு ஒரே கடவுள் என்ற கருத்தும் மக்களிடம் உருவாகிவிட்டால் மற்ற தேவையற்றச் சடங்குகளும், கற்பனைகளும், மக்கள் ஒருவர் மீது ஒருவர் கொள்ளும் பிணக்கு, பகை இவைகளும், அவ்வப்பொழுது உலகில் நிகழ்ந்து வரும் போர்களும் அடியோடு நின்றுவிடும். அறிஞர் பெருமக்கள் தக்க முயற்சி எடுத்து மனித சமுதாயத்தில் மக்களுடைய அறிவைக் கல்வியின் மூலமும், வாழ்க்கைத் திருத்த பண்பாட்டின் மூலமும் திருத்தி அமைத்து விடலாம். அதைச் செய்வோம்.

உலக நலம், உலக அமைதி, மனித குல ஒற்றுமை இவைகளையெல்லாம் அமுலுக்குக் கொண்டு வரலாம். அறிஞர் பெருமக்களை வணங்கி நான் கேட்டுக் கொள்கிறேன். உலக ஆட்சியும், உலக மதமும் ஏற்படுத்துவதற்கு நீங்கள் அனைவரும் ஒன்று கூட வேண்டும். உங்கள் முயற்சியினால் உலகம் மேன்மை அடையட்டும். உலக மக்கள் வாழ்வில் அமைதியும், மனநிறைவும் உண்டாகட்டும். வாழ்க வையகம்.

- வேதாத்திரி

வெள்ளி, 15 ஆகஸ்ட், 2014

வானியல்

வானியல்

இதுவரையில், பிரபஞ்ச தன்மாற்றத்தில் உயிரின உற்பத்தி செயல்பாடு வரையில் சிந்தித்தோம். இவ்வளவும் உலகம் என்ற மண் உருண்டை மீது நடந்த நிகழ்ச்சிகளே ஆகும். நிலவுலகத்தைச் சுற்றியும், அப்பாலும் பல வியத்தகு நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. அந்த நிகழ்ச்சிகளை வானியல் (Cosmology) என்ற சொல்லால் வழங்கி வருகிறோம்.

முதலில் விண்கோள்கள் (Planets) எவ்வாறு தோன்றுகின்றன என்பதைப் பற்றி அறிந்து கொள்வோம். பல அற்புதமான இயக்கங்கள் நம்மைச் சுற்றி, உலகைச் சுற்றி பிரபஞ்சத்தில் நிகழ்ந்து வருகின்றன. அவற்றைப் பற்றி நாம் நினைத்து பார்ப்பது கூட இல்லை. ஒரு உதாரணம் கூறுகிறேன். நாமெங்கே வாழ்கிறோம்? நில உலகின் மீது. நில உலகம் எங்கே இருக்கின்றது? ஆகாயத்தில் மிதந்து உருண்டு ஓடிக் கொண்டிருக்கிறது. நாம் அதை விட்டுவிட்டுத் தனியாகவா இருக்கிறோம்? உலகம் சுற்றும் வேகத்திலும், மிதக்கும் தன்மையிலும், உருளும் நிகழ்ச்சியிலும் நாமும் இணைந்துதான் இருக்கிறோம்.

இந்த உலகமோ சூரியனைச் சுற்றி வரும் வேகத்தில், ஒரு நாளைக்கு நாம் பூமியின் மேல் அமர்ந்து கொண்டு சூரியனை பதினைந்து லட்சத்து ஐம்பதாயிரம் மைல் வேகத்தில் சுற்றிக் கொண்டு பிரயாணம் செய்து கொண்டு இருக்கிறோம். இந்த அற்புத நிகழ்ச்சியை நாம் என்றாகிலும் நினைந்து பார்த்து வியந்திருக்கிறோமா? இல்லை. ஏனெனில், இதுவரையிலே நமது மனதைத் தினசரி உடல் தேவை பொருட்கள், அவற்றை அனுபவிப்பதில் கிடைக்கும் இன்பம், துன்பம் போன்றவற்றால் கட்டுப்படுத்திக் கொண்டோம்.

இப்பொழுது நாம் அந்த குறுகிய எல்லையைக் கடந்து இயற்கையில் நடைபெறும் வியத்தகு நிகழ்ச்சிகளை உணர்ந்து அந்த அளவுக்கு மனவிரிவு பெற்று வியப்பும், மகிழ்ச்சியும் அடைகிறோம். ஆகையால் மனித மனம் விரிவுபட இறைநிலை ஆற்றலை ஓரளவு அனுமானம் கொள்வதற்கு வானியல் என்ற தலைப்பில் சில உண்மைகளை அறிந்து கொள்ள வேண்டும்.

கோள்களின் தோற்றம்

விண் என்ற இறைத்துகள்களின் தொகுப்பு ஆகாயத்தில் எங்கும் நிறைந்திருக்கின்றன. அவைகளில் சில இறைவெளியின் சூழ்ந்தழுத்தத்தினால் ஒன்றுகூடி தொகுப்பாக இயங்க ஆரம்பிக்கிறது. இதே முறையில்தான் எந்த தோற்றப் பொருளும் உற்பத்தியாகின்றன. ஒரு கோளுக்கும், மற்றொரு கோளுக்கும் இடையே துல்லியமான இடைவெளி உண்டு. அது எவ்வாறு அமைகிறது என்று சிந்திப்போம்.

ஒவ்வொரு அணுவிலிருந்தும் இறைதுகள்கள் தற்சுழற்சி விரைவால் எப்பொழுதும் பிரிந்து ஓடிக் கொண்டே இருக்கின்றன என்பதை முன்னமே உணர்ந்தோம். அந்தத் துகள்கள் ஒவ்வொன்றும் குறிப்பிட்ட அளவு விலக்கு வேகம் கொண்டவையாகும். ஒரு கோளில் இவ்வாறு எத்தனை இறைத்துகள்கள் வெளியேறிக் கொண்டிருக்கின்றனவோ அவற்றின் மொத்த ஆற்றலின் தள்ளுவேகம் ஒவ்வொரு கோளுக்கும் உண்டு. சூரியனுக்கும், பூமிக்கும் இடையே கூட இந்த நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கிறது. இரண்டு கோள்களுக்கு இடையே ஓடிக் கொண்டிருக்கும் இறைத்துகளின் அலையாற்றல் ஒன்றை ஒன்று தள்ளிக் கொண்டே இருக்கும். சூரியன், பூமி இரண்டிலிருந்தும் வெளியாகும் தள்ளு ஆற்றலை ஒன்று கூட்டினால் வரும் விடையே இரண்டு கோள்களுக்கும் இடையே அமையும் தொலைவு ஆகும்.

இதுபோன்று வான்வெளியில் உலவும் எல்லா கோள்களுக்கும் இடையே அமையும் தொலைவு ஆகும். வான்வெளியே இறைத்துகள்களால் ஆன காந்த ஆற்றல் நிரம்பிய ஒரு களம்தான். ஆகவே பிரபஞ்சக்களம் காந்த ஆற்றலால் ஆக்கப்பட்டதனால் எப்பொழுதும் முழுவதுமாக தற்சுழற்சி இருந்து கொண்டேயிருக்கிறது. இந்த பிரபஞ்சக்கள தற்சுழற்சியினால் இயற்கை விதிப்படி ஒரு முழுமையான துல்லிய சமதளச் சீர்மை
(Specific Gravity) அமைகிறது.

இதனால் பிரபஞ்சத்தின் மையப் புள்ளியிலிருந்து ஒவ்வொரு விண்கோளும் எவ்வளவு தொலைவில் இருக்கின்றதோ, அதன் எடை எவ்வளவோ, அதற்கேற்றவாறு ஒவ்வொன்றும் பிரபஞ்சக் களத்தில் இடம் பெற்று மிதந்து, உருண்டு, ஓடி இயங்கிக் கொண்டிருக்கின்றது. இவை ஒருபோதும் மாறுவதில்லை. மாற்றம் இருந்தால் பிரபஞ்சத்திலுள்ள விண்கோள்கள் அளவிலும், எடையிலும், ஓட்டத்திலும் அமையும் வேறுபாடுகளே அத்தகைய மாற்றங்களுக்கு காரணமாகும்.

இவையனைத்தும் வானியலில் அடங்கிய இறைநிலையால் செயல்படுத்தப்படும் வியப்புறும் நிகழ்ச்சிகளே. இத்தகைய வானியல் விந்தைகளை, மண்ணுலக நிகழ்ச்சிகளில் நடைபெறும் விந்தைகளை, உடலில் நடைபெறும் உண்ணும் உணவே ஏழு தாதுக்களாக மாறும் உண்மைகளை, இறையாற்றலின் அற்புதமான விளையாட்டாக நாம் உணர்ந்தால் நமது அறிவு எவ்வளவு விரிவாக செயல்படத்தொடங்கும்!

ஆகையால், மேலே விளக்கிய இறைநிலையின் அற்புதமான விந்தைகளை அறியும் அளவுக்கே மனிதனுடைய நன்மைகளும், அறிவின் சிறப்புகளும் அமையும். அதனால் இத்தகைய இயற்கைவளக் கல்வி மனித இனத்துக்கு எவ்வளவு உயர்வானது, சிறப்பானது என்று கண்டு மன நிறைவு பெறுவோம்.


வேதாத்திரி மகரிஷி,