Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

திங்கள், 13 டிசம்பர், 2010

நல்லதை மட்டுமே சிந்தியுங்கள்


தியானத்தின் பலனாக உங்களுடைய மனதில் அமைதி நிறைந்து விளங்கும். மனதில் ததும்பும் அமைதி உடல் முழுவதும் பரவி புத்துணர்ச்சியையும், புதுபலத்தையும் அளிக்கிறது. அந்த சமயத்தில் நாம் பின்வருமாறு எண்ண வேண்டும். ""ஆண்டவன் அருளால் எனது உடலில் புதுஉணர்வும், புதியபலமும் தோன்றி இருக்கின்றன. மனதில் அமைதி தவழ்கிறது. வாழ்வும் அமைதி நிறைந்ததாகக் காட்சி அளிக்கிறது. தொடர்ந்து இறைவன் அருளால் எனக்கு அமைதியான வாழ்க்கையும், நல்ல உடல்நலமும், நீண்ட ஆயுளும் கிடைக்கட்டும்.'' என்று நீங்களே உங்களுக்கு ஆசி அளித்துக் கொள்ள வேண்டும்.
நல்ல உள்ளத்துடனும் ஆரோக்கியமான உடல் நிலையுடனும் நீங்கள் சமுதாயத்திற்குப் பயன்படக்கூடியவராக இருக்கவேண்டும் என்றால் உங்களுக்குள் நீங்களே நல்ல சிந்தனைகளை சிந்திப்பது அவசியமாகும். இப்பயிற்சி உங்கள் மனப்பதிவிலும், உடலிலும் ஆழ்ந்த முத்திரைகளை உண்டாக்கும். முதலில் தனக்குத் தானே ஆசி அளித்துவிட்டு, பின்னர் மனைவி,குழந்தைகள், குடும்பம், சமுதாயம் என்று நம்மைச் சுற்றிலும் இருப்பவர்களின் நன்மைக்காகவும் தியானிக்க வேண்டும். இப்படி சிந்திப்பதன் மூலம் நல்ல குடும்பமும் சமுதாயமும் உருவாக வழிஉண்டாகிறது.
-வேதாத்ரி மகரிஷி


வெள்ளி, 3 டிசம்பர், 2010

மனத்தூய்மை நல்வாழ்வு தரும்

வாழ்க வையகம்                                              வாழ்க வளமுடன்
 
* "நான் யார்' என்று ஒருவர் தன்னைத்தானே பற்றி செய்யும் ஆராய்ச்சி இறையுணர்வில் முடியும். இறைநிலையை உணரத் தொடங்கினால் மனதில் தெளிவுண்டாகும். ஆசைகள் ஒழுங்கு பெறும். எது எல்லாவற்றுக்கும் பெரிதோ, அதைவிடப் பெரியது வேறெதுவும் இல்லையோ, அந்தப் பரம்பொருளை உணரும்போது, ஆசை உண்டாக இடமில்லை.

* உடல் அளவில் குறுக்கிக் கொண்டிருக்கும் போது, நான் வல்லவன், செல்வந்தன், பெரியவன், அழகன் என்ற தற்பெருமை உண்டாகிறது. அல்லது ஏழை, நோயாளி என்ற தாழ்வு நிலை உண்டாகிறது. யாரோடும் ஒப்புவமை இல்லாத ஒரு பெரிய பொருளை (இறைவனை) போல நம்மையும் உணர்ந்துவிட்டால் தற்பெருமை உண்டாகாது.

* நானே பிரம்மமாக (தெய்வமாக) இருக்கிறேன். பிரம்மமே எல்லாமாக இருக்கிறது என்று உணரும்போது, எதன் மீதும் ஆசை வராது. அந்நிலையில் நான் என்னும் அகப்பற்று, எனது என்ற புறப்பற்று ஆகியவை நம்மை விட்டு விலகிவிடும்.

* தன்னை அறிந்த நிலையில் அன்பும் அறிவும் பிறக்கிறது. அந்நிலையில் ஞானிகள் எல்லாம் சொல்கின்ற ஆன்மநேய ஒருமைப்பாடு மலர்கிறது. அறிவில் பூரணத்துவமும், அடக்கமும், அமைதியும் உண்டாகிறது.

வியாழன், 18 நவம்பர், 2010

எண்ணம் போல வாழ்வு - வேதாத்ரி மகரிஷி

ஆன்மிக சிந்தனைகள் » வேதாத்ரி மகரிஷி
எண்ணம் போல வாழ்வு
* எண்ணங்க-ளின் பிறப்பிடம் மனம். மனதின் இயக்கத்தை "எண்ணம்' என்ற சொல்லால் குறிக்கிறோம். எண்ண ஓட்டத்தை உணர்ந்து, விழிப்புடன் இருந்தால் வாழ்வு உயரும். அறியாமல் அதன் போக்கிற்கு விட்டு விட்டால் வாழ்க்கை தாழ்வடையும்.

* எண்ணத்தின் சக்தி அளப்பரியது. அது எங்கும் செல்லும் வலிமை கொண்டது. விழிப்பு நிலையில் இல்லாமல் அலட்சியமாக இருந்தால் அசுத்தமான எண்ணங்கள் நம் மனதை ஆக்கிரமிக்கும்.

* தவறான எண்ணங்களில் இருந்து தப்பிக்கும் வழி எப்போதும் மனதை நல்ல விஷயங்களில் செலுத்துவதைத் தவிர வேறில்லை. விருப்பமே இல்லாவிட்டாலும் கூட, நல்லவர்களோடுதான் நாம் பொழுதைக் கழிக்க வேண்டும்.

* எண்ணங்களை கையாளத் தொடங்கி விட்டால் எல்லாமே இன்பமயம் தான். பூரணமான அமைதி நிலை பெற்ற மனதில் ஆனந்தம் நிலைத்து நிற்கும். எண்ணமே நம் வாழ்வைச் செதுக்கும் சிற்பியாகும்.

* எண்ணங்களைப் பொறுத்தே சொற்கள் அமைகின்றன. எண்ணமும், சொல்லும் ஒன்றுபடும்போது செயல்களும் உயர்ந்தவையாக அமைந்து விடும்.

வியாழன், 11 நவம்பர், 2010

ABOUT THE IMPRINTS - VETHATHIRI MAHARISHI

All actions will create appropriate imprints in man. The Law of Nature reflects such imprints again and again in the mind and the body and involves the man in the same actions and bring out proper results as pain and pleasure sensation or peace and satisfaction. Such repetition of the same type of actions makes the imprints deeper and stronger and conditions the personality appropriately.

I am telling very often to superimpose the imprints of sinful actions by virtuous deeds. There is a common notion that even good actions will cause lengthening of the birth cycle, so as to get the happiness of enjoying the results of good deeds. I have to clear this point more elaborately.

Man's existence has a purpose. His consciousness has to be developed to its perfection. Before the realisation of the purpose of the birth, he was conditioned in his pesonality by sensual limitations. Thereby, three impurities, namely,
  1. ego,
  2. imprints of sins and
  3. undue attachment to men and material have been formed in him.
When the consciousness is developed, the imprints will be purified. When the imprints are cleared or balanced the consciousness will automatically develop. Any of these two or both could be achieved only by the virtuous way of life. Any action which will help to purify the impurities develops good deed.


Repetition of the same type of actions makes the imprints deeper and stronger and conditions the personality appropriately.

It is the duty of man to do only virtuous deeds to reach his goal. Any action which would increase the aforesaid three impurities or obstruct or delay or divert the journey of the consciousness in its development towards perfection is termed sinful and negative.

So, good actions are only positive and purposeful to reach the goal of human beings. They are to be practiced and maintained to enjoy harmony, happiness and peace.

Only negative actions should be avoided. If any such action had already been done, those imprints should be superimposed by the imprints of good actions.

Some people are thinking that good actions also will cause new births to enjoy the benefits or the fruits of the good actions. Only this concept I deny.

Good actions lead one to reach the goal cutting the length of the birth cycle. What one should do is good deeds and that is duty. If it is done, that will help one to reach the goal. Good deeds also get imprinted.But, those imprints when reflected, involves one to do the same good deeds and thus help him to reach the goal.

The imprint of Karma loses its reflecting force in one hundred and forty years calculated for seven generations (twenty year period for one generation). But, if within this period, the imprint is revived by some thought or action, that will be in force for a further period of one hundred and forty years from the time of revival.

Therefore, there are more chances for endless continuance of all the imprints unless they are balanced by proper method of neutralization which has three types:- 1) expiation, 2) superimposition or 3) dissolution.

The Akashic records once created lasts for ever and cannot be erased. Once imprinted in the universal consciousness, they exist permanently. However, imprints in the physical body can be superimposed and changed. In the Super-consciousness, everything from the beginning up to the present moment stands recorded.

செவ்வாய், 9 நவம்பர், 2010

யோகிராஜ் வேதாத்திரி மகரிஷியின் பொன்மொழிகள்!

வாழ்க வையகம்                                              வாழ்க வளமுடன்
 
ஆண்
பெண் உறவுகளின் ஒழுக்கத்தின் மூலமே உயர்ந்த நாகரீகம் உண்டாகும். இந்த ஒழுக்கத்தைப் பாதுகாக்கும் கவசமே திருமணம் ஆகும்.

வாழ்க்கையின் மேம்பாடாக நற்றுணையாக மதிக்க வேண்டியது கணவனை மனைவியும் மனைவியைக் கணவனுமே. எனவே ஒவ்வொருவரும் கணவன், மனைவி உறவை உயிர்க்கு மேலானதாக மதித்துப் போற்ற வேண்டும்.

ஒரு குடும்பத்தில் கணவன், மனைவி இருவரின் உறவினர்களும் விருந்தினர்களாக வர வாய்ப்புகள் உண்டு. அவர்களை ஒத்த மதிப்போடு இருவரும் உபசரிப்பது கணவன் மனைவி இடையே அன்பு வளரச் செய்யும். எளிய உணவேயாயினும் விருந்தினரை உபசரிப்பதில் இன்முகம் காட்டுங்கள்.

கணவன் மனைவி உறவிலே பகைமை அல்லது பிணக்கு இருக்குமேயானால் ஒருவர் மற்றவர் மீது கோபம் கொள்வார்கள். அவற்றை உடனே சமாதானமாக பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும். இல்லையேல் அந்தக் கோபமே இருவருக்குமான சாபம் போல் அமைந்து விடும்.

குழந்தைகள் மத்தியில் தம்பதிகள் சண்டையிடுவதோ, ஒருவரை ஒருவர் மதிப்பில்லாமல் பேசுவதோ, குறை கூறுவதோ கூடாது. அவை குழந்தைகளின் ஒழுக்கப் பண்பாட்டின் உயர்வுக்கு தடையாக இருக்கும்.

உடல் பொருள் ஆற்றல் என்ற மூன்றையும் ஒருவருக்கொருவர் மனமுவந்து அர்ப்பணித்து வாழ்க்கைத் துணைவராகி இன்ப துன்பங்களில் பங்கு கொண்டு வாழும் பெருமை கணவன் , மனைவி உறவில்தான் அதிகமாக அடங்கியுள்ளது.

கற்பு என்பது ஆணுக்கும், பெண்ணுக்கும் உயிரைவிட மேலாகப் போற்றக்கூடிய ஒழுக்கம். உடல் உரம், மனநலம், பொருள் வளம் மூன்றையும் காக்க வல்லது கற்பு.

ஒருவர் தேவைகளையும் விருப்பங்களையும் மற்றவர் மதித்து உதவி செய்து, தன் தேவை விருப்பங்களை கட்டுப்பாட்டோடு முடித்துக் கொள்ள வேண்டிய வாழ்க்கை அறத்தை கணவன்-மனைவி இருவருமே உயிர் போல காக்க வேண்டும். துணையின் தேவையறிந்து உதவி செய்வதால் ஏற்படும் மகிழ்ச்சியின் அளவாகவே குடும்பத்தில் அமைதியும் செழிப்பும் இன்பமும் அமையும்.

அன்பு, அருள், இன்முகம், களை போன்ற அம்சங்களுடன் கூடிய உருவப்படங்களை வீட்டில் மாட்டி வையுங்கள். குடும்பத்தில் அமைதியும் இன்பமும் நிலவும். குழந்தைகளும், நல்லவர்களாக, அழகு மிக்கோராகப் பிறப்பார்கள், வளர்வார்கள்.

ஞாயிறு, 7 நவம்பர், 2010

ஆசைகளை சீர்படுத்துங்கள்



வாழ்க வையகம்                                              வாழ்க வளமுடன்

* ஒருவர் தன்னைத் தாழ்த்திக் கொள்வதும், உயர்த்திக் கொள்வதும் அவரவர் மனதைப் பொறுத்தே இருக்கிறது. மனம் தன்னை உயர்த்திக் கொள்ளப் பழகிவிட்டால் இணையில்லாத இன்பநிலையை அடையலாம்.

* உடல் நலம் பாதிக்கப்பட்டாலும், தானே அதனைச் சரிப்படுத்தி மீண்டும் ஆரோக்கியநிலைக்கு வருவதற்கான ஆற்றல் நம் ஒவ்வொருவருக்குள்ளும் இயற்கையாகவே உள்ளது. ஆனால், நாம் தான் அந்த இயல்பை உணர்ந்து செயல்படுவதில்லை.

* மனதை அடக்க நினைத்தால் அலையும். அதே சமயத்தில் அதை அறிய முனைந்தால் அது நமக்கு அடங்கிவிடும். மனம் தான் மனித வாழ்க்கையின் விளைநிலம்.

* தவறான சிந்தனைகளை ஒருபோதும் நம்முள் நுழைய அனுமதிக்கக் கூடாது. அதற்கு மாறாக நல்ல எண்ணங்களை நாமே விரும்பி முயன்று மனதில் இயங்க விட்டுக் கொண்டிருக்க வேண்டும்.

* உண்மையில் எதிரி ஒருவன் நமக்கு இருக்கிறான் என்றால் அது நம் உள்ளத்தில் எழும் ஒழுங்கற்ற எண்ணங்களே. ஒருமுறை நம் மனதிற்குள் தீய எண்ணத்தை அனுமதித்தால் அதை வெளியேற்றுவது அவ்வளவு எளிதான செயல் அல்ல.

* ஆசைகளை அடியோடு ஒழிப்பது அவ்வளவு எளிதான செயல் அல்ல. அதற்கு தேவையும் இல்லை. பதிலாக, நம் உள்ளத்தில் எழும் ஆசைகளைச் சீரமைத்து வளமான வாழ்க்கை வாழ்வதே அறிவுடைமை.

 * நம்முடைய மனம் சில நிமிடங்களுக்குள், நூற்றுக்கணக்கான ஆசைகளை நினைக்கவல்லது. ஆனால், அவற்றில் ஒரு சில ஆசைகளை, நம்முடைய உடம்பால் ஏற்றுச் சமாளிக்க முடியாது. சில விருப்பங்களை ஈடேறச் செய்வதற்குப் போதுமான வாய்ப்பும் நமக்குக் கிடைப்பதில்லை

*ஆசைகளை மேலும் மேலும் வளர்த்துக் கொண்டு அவை நிறைவேறாமல் போகும்போது நாம் ஏமாற்றத்தில் ஆழ்ந்து விடுவோம். இப்படி மனதைக் கீழ்நிலைக்குச் செல்லாமல் பக்குவப்படுத்த நம்மை தயார் செய்ய வேண்டும். ஆசைகளைக் குறைத்துக் கொள்வது அல்லது கட்டுப்படுத்திக் கொள்வது மட்டுமே இதற்கு முதல்படியாக அமையும்.

* முதலில் நாம் எண்ணும் ஆசைகள் நம் நிலைக்கு பொருத்தமானவையாகவும், மனஅமைதியைக் கெடுக்காத வகையிலும் அமைவது அவசியம். இரண்டாவதாக நம் ஆசைகள் பிறரைப் பாதிக்காத வகையில் அமைய வேண்டும். மூன்றாவதாக இயற்கை நியதிகளை ஒட்டியதாக ஆசை இருத்தல் வேண்டும்.

* இயற்கையின் ஒழுங்குக்கு மீறிய எண்ணங்கள் நிச்சயமாக நம்மைத் தண்டித்து விடும். இப்படி ஆசைகளை முறைப்படுத்தி விட்டால் நாம் நலமுடன் வாழலாம். பரலோகத்திலும் நன்மைகளைப் பெறலாம்.