"அறிவை உணர்ச்சி வெல்வது இயல்பு, அறிவால் உணர்ச்சியை வெல்வது உயர்வு ".
Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
புதன், 23 அக்டோபர், 2019
செவ்வாய், 22 அக்டோபர், 2019
ஞாயிறு, 20 அக்டோபர், 2019
நிருவிகற்ப நிலை
நிருவிகற்ப நிலை என்றால் என்ன?
யோகத்தின் இறுதி நிலையாகிய சமாதி நிலையில் பல்வேறு நிலைகள் இருப்பதாக மகான்கள் கூறுகின்றனர். அதில் ஒரு நிலை நிருவிகற்ப சமாதி நிலை. இதனை,
“நேசநிருவிகற்ப நிஷ்டையல்லால் உன்னடிமைக்கு ஆசை உண்டோ நீ அறியாதது
அன்றே பராபரமே”என்கிறார் தாயுமானவர்.
இதனை உறக்கமற்ற உறக்கநிலை என்பர்.
இந்த நிலையில் உறக்கத்தில் தான் என்ற உணர்வும், தன்னைச் சூழ்ந்துள்ள உலகைப்
பற்றிய நினைவுகளும் இல்லாமல் இருக்கும். இந்த நிலையை அடைந்தவன் அனைத்து
சுக போகங்களிலிருந்து விடுபட்டு பூரணப் பொலிவுடன் விளங்குவான்.
ஆசையும் துன்பமும் அவனை அணுகாது. இந்த நிலையையே வேதாத்திரி மகரிஷி அவர்கள்
“நிருவகற்ப நிலை” என்கிறார்.
வாழ்க வளமுடன் !
வழக்க பழக்கங்கள் விளக்கம்
வேதாத்திரிய மெய்விளக்கம் 20-10-2019 உலக அமைதி நாள் 20-10-0034
வழக்க பழக்கங்கள் விளக்கம்
'

எந்தெந்தப் புலன்கள் மூலமாக செயல்கள் செய்து அனுபோகம், அனுபவம் பெறுகிறோமோ அவையெல்லாம் அந்தந்த உறுப்புகளில் பதிவாகி திரும்பத் திரும்ப மீண்டும் அந்த எண்ணம்; நினைவு வரும் பொழுது அதே நினைவு, அதே காட்சி இவை மூலமாக எண்ணம் வந்து விடுகிறது.
எண்ணமும் செயலும் தேவையாக, பழக்கமாக, சூழ்நிலைக் கவர்ச்சியாக மாறி அடிக்கடி மனிதனிடம் செயல்படுகின்றது. இது போன்றே நாம் பேசும் பேச்சுக்களும் பதிவாகின்றன.
நாவில் இயக்கப் பதிவாக, உடல் முழுவதும் ஒலியலை அதிர்வுப் பதிவாக, மூளையில் நினைவுப் பதிவாக, வித்தில் தரப்பதிவாக, பிரபஞ்ச உயிரிலும், பிற உயிர்களிலும் பிரதிபலிப்புப் பதிவாக அமைகின்றன.
இந்த விளக்கத்தைக் கொண்டு ஓர் எண்ணம், ஒரு செயல் எவ்வாறு பதிவு, பிரதிபலிப்பு, செயலால் இன்ப துன்ப விளைவுகள் என்ற நான்காக மாற்றம் பெறுகிறது என்பதை உணரலாம்.
இந்த உண்மையை உணர வேண்டும். இதற்குப் படிப்பு ஒன்றும் பயன்படாது. எந்த விஞ்ஞான கருவியும் கூட பயன்படாது.
நம்முடைய மனம், நம்முடைய வாழ்க்கை முறை, நம்முடைய இன்ப துன்ப உணர்வுகள், நம் சிந்தனை இதனைக் கொண்டு உட்கார்ந்து அதற்கு உரிய முறையில் ஆராய்ச்சி செய்து அவரவர்களே தெரிந்து கொள்ள வேண்டியது தான்.
நற்பழக்கம்
பழக்கத்திற்கும் கூர்ந்த விளக்கத்திற்கும் இடையே
பாருலகில் மனிதரெல்லாம் போராடு கின்றார்.
பழக்கத்தில் வளர்ந்தமக்கள் மாற்றுவது கடினம்
பாலர்களின் நற்பழக்கம் பலன்விளைக்கும் எளிது.
பாருலகில் மனிதரெல்லாம் போராடு கின்றார்.
பழக்கத்தில் வளர்ந்தமக்கள் மாற்றுவது கடினம்
பாலர்களின் நற்பழக்கம் பலன்விளைக்கும் எளிது.
(ஞானக்களஞ்சியம் கவி: 634)
நல்லோர் தந்த பரிசு :
வாழ்வை வளப்படுத்தும்
வழக்க பழக்கங்கள் எனும்
ஒழுக்கங்கள் எல்லாம்
ஆழ்ந்த சிந்தனையாளர்
அன்பினால் உலகுக்கு
அளித்த பரிசு ஆகும்.
வழக்க பழக்கங்கள் எனும்
ஒழுக்கங்கள் எல்லாம்
ஆழ்ந்த சிந்தனையாளர்
அன்பினால் உலகுக்கு
அளித்த பரிசு ஆகும்.
(ஞானக்களஞ்சியம் கவி: 638)
சிறந்த பண்பாடு
பழக்கமென்றும், பழமையென்றும், பகுத்தறிவுக்கு ஒவ்வா
பல செயல்களையே மாற்றிப் பண்பாட்டை வளர்ப்போம்.
ஒழுக்கமது துன்பம்எழா அளவு முறையோடு
உணர்ச்சிகளைச் சீர்செய்து வாழும் முறையே யாகும்;
அழுக்காறு அவாவெகுளி ஆகாது போக்கி,
அன்பிரக்கம், தொண்டு தவம், அறிவின் விழிப்பேற்போம்.
பழுத்தறிவு முழுமைபெறும்! பரஉணர்வு கிட்டும்!
பற்றறிந்து பலனுணர்ந்து பண்புடனே வாழ்வோம்.
பல செயல்களையே மாற்றிப் பண்பாட்டை வளர்ப்போம்.
ஒழுக்கமது துன்பம்எழா அளவு முறையோடு
உணர்ச்சிகளைச் சீர்செய்து வாழும் முறையே யாகும்;
அழுக்காறு அவாவெகுளி ஆகாது போக்கி,
அன்பிரக்கம், தொண்டு தவம், அறிவின் விழிப்பேற்போம்.
பழுத்தறிவு முழுமைபெறும்! பரஉணர்வு கிட்டும்!
பற்றறிந்து பலனுணர்ந்து பண்புடனே வாழ்வோம்.
(ஞானக்களஞ்சியம் கவி: 1595)
வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!!
தத்துவஞானி வேதாத்திரி மகரிசி
வியாழன், 17 அக்டோபர், 2019
புதன், 16 அக்டோபர், 2019
❓ கேள்வி: சுவாமிஜி! பகவதி கோவில்களில் பேய் பிடித்தவர்களை அடக்குகிறார்கள் என்று சொல்கிறார்கள். அது எப்படிச் சாத்தியமாகும்?
✅ பதில்: அத்தகைய கோவில்களில் மகான் ஒருவருடைய உயிர் அடக்கமாகி இருக்கலாம் அல்லது அங்கே ஒர் எந்திரத்தை நிறுவி, அதற்கு மந்திரங்களைச் செபித்து, அங்கு ஓர் ஆற்றல் களத்தை (Energy Field) ஏற்படுத்தி வைத்திருப்பார்கள்.
அந்த ஆற்றல் களத்திற்குச் சென்றால் இணைந்த ஆவிக்கு ஒரு வேகமான உணர்ச்சி மிக்க இயக்கம் உண்டாகும். தானாகவே நடைபெற்றுக் கொண்டிருக்கக் கூடிய சொந்த ஆன்மா மயக்கநிலையில் (Trance State) இருக்கும். அந்தச் சமயம் இணைந்த ஆவி தானாகவே ஆடி ஆடி வெளியேறக் கூடிய அளவுக்கு வந்துவிடலாம்.
ஆனால், அது வெளியேறுவது என்பது இல்லை. தான் அடைக்கலமாக எந்த உயிருடன் சேர்ந்திருக்கிறதோ அந்த உயிருடனேயே கலந்து ஒன்றுபட்டுவிடும். இதுவரை பொருந்தாது தொல்லைகள் செய்து வந்த ஆவி இப்பொழுது அமைதி பெற்று விடும்.
சில பூசாரிகள் அவற்றிற்கு ஒவ்வொரு அம்மன் பெயர்களை வைத்து , அந்த அம்மன் மலையேறிவிட்டது என்பார்கள். பின் நன்மையே வரும்.
எவ்வாறென்றால், நம்மிடமுள்ள அந்த உயிரை வணங்குந்தோறும் நன்மையே அளிக்கும். எதிர்க்கும்தோறும் தீமையே தரும்.
வாழ்க வளமுடன்!
அருள்தந்தை வேதாத்திரி மகரிஷி
திங்கள், 14 அக்டோபர், 2019
செவ்வாய், 8 அக்டோபர், 2019
Reason for spoiling friendship with Society?
War is not at all required now as people’s contemplating skills have risen. Any nation can live without fearing or antagonising other nation, by handing over the management of border security to the security council of United Nations (UN).
War can destroy all wealth of the society. War is a rough action, formed when the early generation of human beings, without thinking capabilities, were living like animals troubling other species. When we compare those generation with the current one, man’s thinking skills have grown manifold.
Man’s intelligence level has grown to travel to even moon, and to even apply computer equipments to daily life. Even now, war occurs in the human society. It’s a grave mistake that even now the war destroys the people. Everybody can easily understand, ‘ how many lifes are harmed on war? How many are destroyed? ‘ It’s a high time now to streamline the mankind’s life by constituting and managing the laws on economic rights, the social laws to prevent the strong to harm the weak.
Presently how many religious are found and functioning to make to realise the Almighty, educate the virtues, to protect the morality and culture? Then, where is the mistake if many lives are being harmed, killed and their properties are destroyed on war is continuing, even now. Is it not the cause, the irresponsibility in governance and lack of knowledge on Almighty?
- Vethathiri Maharishi
திங்கள், 7 அக்டோபர், 2019
ஆன்மீகத்தில் மூன்று ஓட்டைகள்
வேதாத்திரிய இரகசியங்கள்: அக்டோபர் - 07
ஆன்மீகத்தில் மூன்று ஓட்டைகள்
நமது நாட்டிலும் பிறநாட்டிலும் ஆன்மீகத் துறையில் ஒரு குறைபாட்டைக் காணலாம். ஒரு மகானுக்கும், இன்னொரு மகானுக்கும் கால இடைவெளியிருக்கும். ஒரு மகானைக் தொடர்ந்து அவர் கருத்தைப் பரப்ப இன்னொரு மகான் உடனடியாகத் தோன்றினார் என்று கிடையாது. கடைசியாக நாம் அறிந்த அத்தகு மகான் வள்ளலாராவார். அவர் மறைவுக்குப் பின் ஓரளவு இடைவெளிக்குப் பிறகே நம் வேதாத்திரி மகான் தோன்றியுள்ளார்.
இவருக்குப் பிறகும் மேற்கண்ட விதி குறுக்கிடுமா? மகரிஷியைத் தொடர்ந்து உடனடியாக அவருக்கு நிகரான மகான் தோன்றுவாரா? தோன்றி தொண்டினைத் தொடர்வாரா? இரு அன்பர்களுக்கிடையில் ஏற்பட்டது இந்தச் சர்ச்சை. மகரிஷிக்குப் பின் ஒருகால இடைவெளிக்கு பின்புதான் இன்னொரு மகான் தோன்றி இவரது பணியைத் தொடர்வார் என்று ஒருவர் கூறினார். மற்றவர் மறுத்தார். இதற்கான விடை மறுப்புத் தெரிவித்தவருக்கு மகரிஷியிடமிருந்து கிடைத்தது.
1977 ஏப்ரல் முதல் வாரத்தில் நீலகிரி சிறப்புப் பயிற்சியில் கலந்துகொண்ட அந்த அன்பர், ஓய்வு நேரத்தில் மகரிஷியிடம் இவ்வினாவை எழுப்பினார். “அதான் இருந்த ஓட்டைகள் மூன்றையும் நான் அடைத்துவிட்டேனே. அந்த மூன்று ஓட்டைகளால் தானே அப்படிக் கால இடைவெளி மகான்களுக்கிடையில் ஏற்பட்டது. அந்த மூன்று ஓட்டைகள் அடைபட்டுப் போகவே மகான்கள் என்றென்றும் ஒருவர் பின் ஒருவராகக் கால இடைவெளியின்றியும் ஒருவர் இருக்கும்போதே ஒருவராகவும் தோன்ற வேண்டியதுதானே” என்று பளிச்சென பதில் கூறினார்.
அந்த மூன்று ஓட்டைகள்:
1. இறைநிலையைப் பற்றிய தெளிவான விளக்கம் சொல்லப்பட்டு அது வெட்டவெளிதான் என்பது நிறுவப்படவில்லை. (மகரிஷி உறுதி செய்தார்.)
2. உயிரைப் பற்றி அறியாமலே மனதைக் கொண்டு இறைவனை அறிந்துவிடலாம் என்றிருந்த குறை. (மனதையும் இறைநிலையையும் இணைக்கும் உயிர் பற்றிய தெளிவை மகரிஷி அளித்துவிட்டார்.)
3. பிரம்மச்சர்யம் தான் ஆன்மீகத்திற்கு ஏற்றதென்ற தவறான கருத்து. இல்லறத்திலிருந்து கொண்டே குண்டலினி தவம் பயில மகரிஷி வழி வகுத்துள்ளார்.
அகத்தவத்தின் பொருள்கண்டு அதன்பெருமை யுணர்ந்திடுவீர்;
அகத்தவமோ உயிரினிலே அறிவை ஒடுக்கும் பயிற்சி;
அகத்தவத்தால் மேலும்உயிர் அம்மாகி மெய்ப்பொருளாம்;
அகத்தவத்தால் வீடுணர்ந்து அமைதி பெற்று இன்புறலாம்.
அகத்தவமோ உயிரினிலே அறிவை ஒடுக்கும் பயிற்சி;
அகத்தவத்தால் மேலும்உயிர் அம்மாகி மெய்ப்பொருளாம்;
அகத்தவத்தால் வீடுணர்ந்து அமைதி பெற்று இன்புறலாம்.
அகத்தவத்தால் ஐம்புலனை அடக்கி அறிவறிந்திடலாம்;
அகத்தவத்தால் ஆறுகுண ஆளுமைப் பேறடைந்திடலாம்;
அகத்தவத்தால் இல்லறத்தை அன்பகமாய் ஆற்றிடலாம்;
அகத்தவத்தால் அனைத்துயிர்கள் அரும்நட்பைப் பெற்றிடலாம்.
அகத்தவத்தால் ஆறுகுண ஆளுமைப் பேறடைந்திடலாம்;
அகத்தவத்தால் இல்லறத்தை அன்பகமாய் ஆற்றிடலாம்;
அகத்தவத்தால் அனைத்துயிர்கள் அரும்நட்பைப் பெற்றிடலாம்.
அகத்தவம் தீவினையகற்றும்; அருள் நெறியை இயல்பாக்கும்;
அகத்தவமே இறை வழிபாடனைத்திலும் ஓர் சிறந்த முறை;
அகத்தவமே உயிர் வழிபாடதனை விளக்கும் ஒளியாம்;
அகத்தவமே மதங்கள் எல்லாம் அடைய விரும்பும் முடிவு.
அகத்தவமே இறை வழிபாடனைத்திலும் ஓர் சிறந்த முறை;
அகத்தவமே உயிர் வழிபாடதனை விளக்கும் ஒளியாம்;
அகத்தவமே மதங்கள் எல்லாம் அடைய விரும்பும் முடிவு.
📚 ஞானக்களஞ்சியம் கவி: 1496 📚
ஞாயிறு, 6 அக்டோபர், 2019
உடல் நலம் பேணும் வழிமுறைகள்
உடல் நலம் பேணும் வழிமுறைகள் உங்களுக்காக அருட்தந்தை அருளியது!
1. அணுக்களின் கொத்து இயக்க நிகழ்ச்சியே தூல உடல்.
அதனூடே பரமாணு நிலையில் ஊடுருவிச் ஓடிச் சுழன்று கொண்டேயிருப்பது உயிர்ச்சக்தி.
அதனூடே பரமாணு நிலையில் ஊடுருவிச் ஓடிச் சுழன்று கொண்டேயிருப்பது உயிர்ச்சக்தி.
உயிர்ச்சக்தியின் ஓட்டத்தில் தடையுண்டானால் அதுவே உணர்ச்சியாகின்றது.
அந்த உணர்ச்சி ஒரு ஜீவன் தாங்கும் அளவிற்கும் தாங்கிப்பழகிய அளவிற்கும் மேலாக ஓங்கும்போது அது வல்லுணர்ச்சியாகி துன்பமாக, நோயாக உணரப்பெறுகின்றது.
அந்த தடை நீடித்து, அதன் விளைவாக உடலில் மின் சாரம், காற்று, இரத்தம், ஆகிய மூன்று சுழல்களும் தடைப்படுமானால் உடலுக்கு மூலமான வித்து, தாங்கும் அளவுக்கு மேல் கனல் கொண்டு, அதன் நாளங்களைத் தகர்த்து வெளியேறிவிடும்.
உணர்ச்சி என்ற அறிவோடு கூடிய உயிச்சக்தி தொடர்ந்து அந்த உடலில் சுழன்று இயங்க முடியாமல் உடலை விட்டு வெளியேறி விடும்.
இந்த நிகழ்ச்சியே மரணம் எனப்படுகிறது.
2. உயிர்ச்சக்தி உடலில் ஒழுங்காக ஓடிக்கொண்டிருப்பதே இன்ப உணர்வாகும்; உடல் நலமாகும். அதைப் பாதுகாக்க (1) உணவு, (2) உழைப்பு, (3) உறக்கம், (4) ஆண்-பெண் உடலுறவு, (5) எண்ணம் இந்த ஐந்து அம்சங்களில் தொடர்ந்த கவனம் தேவை.
இவை அளவுக்கு அதிகமானாலும் குறைந்தாலும் முறை தவறிக் கொள்ளப் பெற்றாலும் உயிர்ச்சக்தி ஓட்டம் பாதிக்கப்படும். நோய்கள் உண்டாகும்.
3. வாரத்திற்கு ஒரு முறை இரவில் உணவு கொள்ளாமல், இலேசாகப் பழ வகை உண்டோ, அல்லது சிறிது பால் அருந்தியோ உறங்குவது நோய்களை ஒரு அளவில் தடுக்க உதவும்.
உடல் ஜீரணிக்கத்தக்க அளவு உணவு உண்டால் அது நன்மை பயக்கும். அளவுக்கு மீறினால், அந்த உணவு உடலை ஜீரணிக்கும்.
4. கருவமைப்பு, எண்ணம், செய்கை, கோள்களின் சஞ்சாரத்தில் அமையும் நிலை, சந்தர்ப்ப மோதல் ஆகிய காரணங்களால் உடலில் இரசாயன வேறுபாடுகள் உண்டாகின்றன.
இத்தகைய வேறுபாடுகளால் உடலிலுள்ள அணு மூலகங்கள் அதற்கு ஏற்ப விரைவில் வேறுபடும். அதன் பயனாக உடலில் சுழன்றோடிக்கொண்டிருக்கும் காந்தம், மின்சாரம், இரத்தம், காற்று ஆகிய நால்வகையும் அவற்றின் விரைவில் ஏற்றத்தாழ்வுகளைப் பெறும்.
விளைவாக ஒவ்வொரு அவயங்களூடேயும் ஊடுருவிச் செல்லும் அவற்றின் ஓட்டத்தில் தடையும் உண்டாகும்.
இந்தத் தடை நோயாக உணரப்படுகிறது.
எந்த அவயத்தில் எந்த அளவு எந்தச் சக்தியின் ஓட்டத்தில் தடைப்படுகிறதோ அதற்கு ஏற்ப நோயின் வலுவும், பெயரும், அதற்குக் காலமும் நிர்ணயிக்கப்பெறுகின்றன.
5. நோய்களை நீக்கிக் கொள்ளும் சக்தி இயற்கையாக உடலில் அமைந்துள்ளது.ஒத்த முறையில் பத்தியம் காத்து ஓய்வும் எடுத்துக்கொண்டால் நோய்கள் மிகவும் விரைவாகத் தீர்ந்துவிடும்.
நோய் கடினமாக இருந்தால் தக்க மருந்து வகைகளை உபயோகிக்கலாம்.
6. நோயற்ற உடலில்தான் அறிவும் திறன்பட இயங்கும். இயற்கை இன்பங்களைத் துய்க்க இயலும். எனவே ஒவ்வொருவரும் நோயுற்று வாழ வழிகண்டு நின்று ஒழுகி வாழவேண்டும்.
7. மனத்தூய்மை, ஒழுங்கான உணவு, அளவான உழைப்பு இவற்றுடன் கூடிய வாழ்க்கை, நோய்கள் இல்லா உடல் நலத்தோடு இருக்க உதவும்.
பொறாமை, சினம், வஞ்சம், கவலை, காம எண்ணங்கள் இவை உடல் காந்த சக்தியினை அளவுக்கு மீறி அழித்து விடும்.
தவத்தாலும் ஆராய்ச்சியாலும் இந்த உணர்ச்சி நிலைகளை மாற்றி விடலாம். உணர்ந்தோரை அண்டி முயலுங்கள். வெற்றி நிச்சயம்.
8. உணவு உண்ட உடனே ஓட்டம், சைக்கிள் சவாரி, கடினமான வேலை, ஆண் பெண் உடலினைப்பு இவை கூடாது. அடுத்தடுத்து இச்செயல்களில் ஈடுபடுவோருக்கு வயிற்றுப்புண் உண்டாகிவிடும். அது குன்மம் (Peptic Ulser) நோயாக வழங்கப் பெறுகின்றது.
9. உடலிலிருந்து கழிவாகி வெளியேறும் எந்தப் பொருளும் உடலின் மீது தங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
அவை உடனே கிருமிகளாக மாறும் வாய்ப்பு இருக்கின்றது. ஒரு நாளைக்கு ஒரு முறையாகிலும் வெந்தநீரிலோ, தண்ணீரிலோ குளிக்க வேண்டியது அவசியம். மலபந்தம் (Constipation) அஜீரணம் இவை ஏற்படாமல் பாதுகாப்பது உடல் நலத்தைப் பேணும் வழிகளில் மிக முக்கியமானது.
10. எந்தக் காரணத்தைக் கொண்டும் பிறர் அணியும் செருப்பு, உடுத்தும் துணி, படுக்கும் பாய் இவற்றை மற்றவர் உபயோகிக்கக் கூடாது.
தவிர்க்க முடியாத சமயத்தில் பிறர் பாயின் மீது துணி விரித்துப் படுப்பது நல்லது. மக்கள் கூட்டமாக கூடும் இடங்களில் மூன்று அடிக்கு ஒருவர் மேல் நெருங்கி இருக்கக் கூடாது.
மூச்சு விடும்போது அவற்றில் வெளிவரும் சத்துக்கள் மிகவும் வேகமானவை. இருவர் மூச்சும் ஒன்று சேரும்போது உடனே கிருமிகளாக மாறும் தன்மையுடையன.
அத்தகைய காலங்களில் கிருமி நாசினிப் புகையோ அல்லது சாம்பிராணிப் புகையோ இடைவிடாமல் பரப்பிக் கொண்டே இருக்கவேண்டும்.
வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!!
தத்துவஞானி வேதாத்திரி மகரிசி
வியாழன், 3 அக்டோபர், 2019
புதன், 2 அக்டோபர், 2019
❓ கேள்வி: சுவாமிஜி! முற்காலப் பெண்கள் குடும்பத்தில் பணம் தனியாகச் சேமிக்கும் பழக்கத்தைக் கைக்கொள்ளவில்லை. ஆனால் தற்காலப் பெண்கள் தனியாகச் சேமிக்கிறார்களே ஏன்?
✅ பதில்: வரவுக்கு அதிகமாகச் செலவு செய்யும் குடும்பத்தில் குடும்பத்தலைவன் பொறுப்பில்லாமல் செலவு செய்து கொண்டே வந்தால் “பின்பு குழந்தைகளின் நலன், படிப்பு, பிற்கால வாழ்க்கை என்னாவது என்பதை மனதில் கொண்டு, நமக்குப் பொருள் வேண்டுமே” என்ற அக்கறையில் பெண்களுக்குப் பொருள் சேர்க்க வேண்டும் என்ற பொறுப்புணர்ச்சி வருகிறது.
அது தவறில்லை.
அந்தப் பொறுப்பு கணவனுக்கும் இருந்தால் இருவரும் சேர்ந்தே சேமிக்கலாம். இருவரும் தனித்தனியாக ஒருவருக்குத் தெரியாமல் மற்றவர் சேமிப்பதும், செலவு செய்வதும் குடும்ப அமைதியைக் கெடுக்கும்.
வாழ்க வளமுடன்!
திங்கள், 30 செப்டம்பர், 2019
வேதாத்திரிய மெய்விளக்கம் - 30-09-2019 உலக அமைதி நாள் 30-09-0034
வேதாத்திரிய மெய்விளக்கம் - 30-09-2019 உலக அமைதி நாள் 30-09-0034
அமைதியும் நிறைவும் பெற்றவன் தான் உண்மையான அமைதிக்கு*
வழிகாட்ட முடியும்.
வழிகாட்ட முடியும்.
மனிதனாக வந்த பிறகும் பேரமைதிக்கு உரிய ஆறாவது அறிவு
முதலிலேயே வளர்ச்சி பெறுவது இல்லை.
முதலிலேயே வளர்ச்சி பெறுவது இல்லை.
புலன் உணர்ச்சிகளிலேயே இச் சிறந்த நிலையான ஆறாவது அறிவு
முடக்கப் பெற்று இயற்கை வளங்களை உருமாற்றியும் நிலைமாற்றியும் அழகுபடுத்தியும் துய்க்கும் ஆற்றலாகச் செயல்படுகிறது.
முடக்கப் பெற்று இயற்கை வளங்களை உருமாற்றியும் நிலைமாற்றியும் அழகுபடுத்தியும் துய்க்கும் ஆற்றலாகச் செயல்படுகிறது.
மனித உருவின் நோக்கம் அறிவிற்கு எட்டாததாலும், புதிய புதிய பொருட்களை உற்பத்தி செய்தல் அனுபவித்தல் என்பதில் பெறும் உணர்ச்சி மயக்கத்தாலும், விளைவறியாது பல செயல்களைப் புரிந்து, அவை பழக்கப் பதிவுகளாகவும் எண்ணப் பதிவுகளாகவும் பரம்பரைக் குண அமைப்பாகவும், களங்கங்களை மனிதன் ஏற்படுத்திக் கொள்கிறான்.
மேலும் எந்த உணர்ச்சியையும் துய்க்கும்போது விழிப்பு நிலையின்றி
புலன் மயக்கில் இருப்பதால் அதே வித துய்ப்பில் ஆசை பெருகிக்கொண்டேயிருக்கும். இதனால் நிறைவு ஏற்படுவதில்லை.
புலன் மயக்கில் இருப்பதால் அதே வித துய்ப்பில் ஆசை பெருகிக்கொண்டேயிருக்கும். இதனால் நிறைவு ஏற்படுவதில்லை.
இவ்வாறு, நிறைவுபெறாமை, பாவப் பதிவுகள், மனிதனாக வந்த நோக்கம் அறியாத மயக்கநிலை, இம்மூன்றும் மனித அறிவின் முதற்பகுதியில் உயிர்க் களங்கங்களாக அமைகின்றன.
துன்பங்களும் வாழ்க்கை சிக்கல்களும், சோர்வும் பெருகுகின்றன.
இங்குதான் மனிதன் சிந்திக்கிறான்.
இங்குதான் மனிதன் சிந்திக்கிறான்.
இங்குதான் இயற்கைக்கும் அறிவிற்கும் உள்ள தொடர்பு சிறிது சிறிதாக விளங்குகிறது. விழிப்புணர்வு பெற்று உடலுக்கும் உயிருக்கும் அறிவிற்கும் உள்ள தொடர்பை உணர்கிறான்.
உடலை நன்கு நோயுராது பாதுகாக்கவும் மனதின் வளத்தைப் பெருக்கிக் கொள்ளவும் மன அமைதியினை பாதுக்காக்கவும் அக்கறை உண்டாகிறது. ஆற்றலும் பெருகுகிறது.
விழிப்பு நிலையில் உலக இன்பங்களைத் துய்த்து அறிவைப் பெருக்கி நிறைவு பெறுகிறான். பொருள் மயக்கத்திலிருந்து விடுபடுகிறான்.
இயற்கையோடு ஒத்து "தனக்கும் பிறர்க்கும் தற்காலத்துக்கும் பிற்காலத்துக்கும், உடலுக்கும், அறிவிற்கும் துன்பம் விளையாத
முறையிலும் அளவிலும் செயலாற்றி", பழிச் செயல்களை விளங்கிக் கொள்வதோடு மட்டுமின்றி முன்னம் அறியாமையால் அமைந்த
பழிச்செயல் பதிவுகளையும் மாற்றிக் கொள்கிறான்.
முறையிலும் அளவிலும் செயலாற்றி", பழிச் செயல்களை விளங்கிக் கொள்வதோடு மட்டுமின்றி முன்னம் அறியாமையால் அமைந்த
பழிச்செயல் பதிவுகளையும் மாற்றிக் கொள்கிறான்.
பொருள் மயக்கமும், பாவப் பதிவுகளும் போன பின் உயிரின் நிலையென்ன? தூய்மையடைந்து விட்டது என்பதுதான். பேரறிவு, ஒளிவிடத் தொடங்குகின்றது. இந்த அறிவின் ஒளியிலே தனது மூலமாகிய மெய்ப்பொருள் நிலையை உணர்ந்து கொள்கிறான்.
உணர உணர, உணர்ந்ததில் நிலைக்க நிலைக்க, அவனும் மெய்ப்பொருளாகவே விளங்குகிறான்.
"ஐயப்படாது அகத்தது உணர்வானைத் தெய்வத்துள் வைக்கப்படும்" என்ற வள்ளுவப் பேரறிஞரின் விளக்கம் இத்தகைய பேரறிவின் அமைதி நிலையினைத்தான் விளக்குகிறது. அமைதியும் நிறைவும் பெற்றவன் தான் உண்மையான அமைதிக்கு வழிகாட்ட முடியும்.
வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!!
தத்துவஞானி வேதாத்திரி மகரிசி
ஞாயிறு, 29 செப்டம்பர், 2019
கர்மநோய்
நாள்பட்ட கர்மநோய் என்று ஒன்று சொல்வார்கள்.
அதாவது இதுதான் வியாதி என்று தீர்மானமாகத் தெரிந்துகொண்டாலும், அதற்கு நிச்சயமாக இதுதான் மருந்து என்று கண்டுபிடித்துக்கொடுத்தாலும், அந்த வியாதி தீராது. அதுதான் கர்மநோய்.
நீண்டகாலமாக இருந்து கொண்டே இருக்கும். அப்படிப்பட்ட , எவ்வளவு நாளாக இருந்து கொண்டு இருக்கக் கூடிய கர்ம நோயாக இருந்தாலும்கூட, நீண்டகாலம், ஒருமாதம், இரண்டுமாதம், பலமாதங்கள், என்று தினந்தோறும் பல வேளை சாந்தியோகம் மட்டுமே செய்து வந்தால், மற்ற பத்திய நிமித்தங்களையும் கடைப் பிடித்துவரும் பட்சத்தில், அந்த நோய் மெல்லத் தீர்ந்து விடும்.
பைத்தியம் முதலிய மனநோய்கள் கூட சாந்தியோகமே செய்துவரும் அளவில் குறையும். காலத்தால் நீங்கும்.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
(இதை மனதில் வைத்து தேவையான இடத்தில் தேவையான அன்பர்களுக்கு பயன்பட வைப்போம். வாழ்க வளமுடன்)
அதாவது இதுதான் வியாதி என்று தீர்மானமாகத் தெரிந்துகொண்டாலும், அதற்கு நிச்சயமாக இதுதான் மருந்து என்று கண்டுபிடித்துக்கொடுத்தாலும், அந்த வியாதி தீராது. அதுதான் கர்மநோய்.
நீண்டகாலமாக இருந்து கொண்டே இருக்கும். அப்படிப்பட்ட , எவ்வளவு நாளாக இருந்து கொண்டு இருக்கக் கூடிய கர்ம நோயாக இருந்தாலும்கூட, நீண்டகாலம், ஒருமாதம், இரண்டுமாதம், பலமாதங்கள், என்று தினந்தோறும் பல வேளை சாந்தியோகம் மட்டுமே செய்து வந்தால், மற்ற பத்திய நிமித்தங்களையும் கடைப் பிடித்துவரும் பட்சத்தில், அந்த நோய் மெல்லத் தீர்ந்து விடும்.
பைத்தியம் முதலிய மனநோய்கள் கூட சாந்தியோகமே செய்துவரும் அளவில் குறையும். காலத்தால் நீங்கும்.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
(இதை மனதில் வைத்து தேவையான இடத்தில் தேவையான அன்பர்களுக்கு பயன்பட வைப்போம். வாழ்க வளமுடன்)
வியாழன், 26 செப்டம்பர், 2019
வேதாத்திரிய மெய்விளக்கம் -நாள் 26-09-0034

மனிதன் எல்லாம் வல்லவன் எல்லாம் உள்ளவன் என்பதை உணர இயற்கையை உணர வேண்டும்!
நிலையாமையை நினைவிற்கொள் - பிறப்பு இறப்பு
நடுவே பூவுலக வாழ்வு; இதை மறக்கும்
நிலையில் உள்ள மதியின் போக்கே மாயை.
நடுவே பூவுலக வாழ்வு; இதை மறக்கும்
நிலையில் உள்ள மதியின் போக்கே மாயை.
இந்த உலகத்தில் நூறு ஆண்டுகளுக்கு முன்னே வாழ்ந்தவர்களெல்லாம் இன்று இல்லை. இன்றைக்கு இருக்கக் கூடியவர்களெல்லாம் இன்னும் நூறு ஆண்டுகள் கழித்துப் பார்த்தால் இருக்க மாட்டார்கள்.
அப்படி எத்தனையோ நூற்றாண்டுகள் கழிந்த பின்னர்தான், இன்றைக்கு இருக்கக் கூடிய மக்கள் இருக்கிறார்கள்.
இவ்வாறு மனதை விரித்துப் பார்த்தால் பிரிவினை என்பது இருக்காது. ஒவ்வொரு மனிதனும் பிறக்கிறான்; வாழ்கிறான்; முடிந்து போகிறான். முடிந்து போகும் நாள் அவனுக்குத் தெரியவில்லை.
ஜீவகாந்த சக்தியில் பதிந்து இருக்கிறது. அது எந்த முடிச்சில் (Code) இருக்கிறது என்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால்தான் எவ்வளவோ காலம் இருக்கப் போகிறேன் என்று நினைக்கிறான். அப்படிப் பார்த்தோமேயானால் கொண்டு வந்ததும் இல்லை. கொண்டு போகப் போவதும் இல்லை.
இப்போது உலகம் முழுவதும் ஒன்றுகூடி விட்டது. ஒவ்வொரு நாட்டிலேயும் உள்ள மக்களில் பலர் பிற நாடுகளிலேயும் வாழ்கிறார்கள்.
இந்தக் காலத்தில் நான் அந்த ஜாதி, இந்த ஜாதி, அந்த நாடு, இந்த நாடு என்று வேறுபடுத்திக் கொண்டு, பிணக்கு வைத்துக் கொண்டு மனிதன் வாழும்போது துன்பத்தைத் தவிர இன்பத்தை அடைய முடியாது.
மனித இனம் தன்னுடைய மூலம், முடிவு இவற்றின் பெருமையை உணர்ந்து கொண்டால், இவ்வளவு பெருமைக்கு உரிய உலகத்தில் பிறந்து விட்டதனால் "நானும் ஓர் உரிமையாளன். எனக்கு எல்லா உரிமைகளும் இருக்கின்றன. எல்லா வசதிகளும் இருக்கின்றன" என்பது புரியும்.
நான் எப்படி வாழ வேண்டும்? என்று எண்ணிப் பார்த்தால், ஒவ்வொருவருக்கும் ஆயிரமாயிரம் இன்பங்களை அனுபவிக்க வேண்டிய அமைப்பு தான் இருக்கிறது. அதற்கு முரணில்லாமல், நான் செயல்பட வேண்டும். மற்றவர்களுக்குத் துன்பம் தராமல் வாழ வேண்டும்.
ஆனால், அதற்கு முரணாகச் செயல்பட்டு நாம் கெடுத்துக் கொள்கிறோம். ஒருவருக்கொருவர் தீங்கு செய்துதான் மனிதனாக வாழ வேண்டுமா?
இந்த உண்மையை உணர்ந்து கொண்டால் உலகத்தில் இன்பம், துன்பம், அமைதி, பேரின்பம் என்ற உணர்ச்சிகளோடு வாழக்கூடிய மனிதன் இயற்கை வளத்தை வாழ்வின் வளமாக மாற்றி செம்மையாகத் தானும் வாழலாம். பிறரையும் வாழ வைக்கலாம்.
உண்மையில் என்னிடத்தில், சமுதாயத்தில், இயற்கையில் எவ்வளவு உயர்வு இருக்கிறது என்பதைத் தெரிந்து கொண்டால் பயப்பட வேண்டியதே இல்லை. கவலைப்பட வேண்டியதே இல்லை. அது மாத்திரமன்று.
இன்னொருவரிடம் கையேந்த வேண்டியதில்லை. மனிதனிடம் மனிதன் கேட்டு வாங்குவதற்கோ, கையேந்துவதற்கோ தேவை இல்லை.
இயற்கையினுடைய அமைப்பு மனிதனை எல்லாம் வல்லவனாகவும், எல்லாம் உள்ளவனாகவும் வைத்து இருக்கிறது.
அதைத் தெரிந்து கொள்ள வேண்டுமானால் உள்ளதை உணர வேண்டும். இயற்கையை உணர வேண்டும்.
உயிருக்குள்ளாகத் தெய்வமே அறிவாக இருக்கிறது
என்று விளக்கிக் காட்டுவது தான் அகத்தவப்பயிற்சி.
என்று விளக்கிக் காட்டுவது தான் அகத்தவப்பயிற்சி.
துன்பங்கட்கு மூலம்
பிறந்து வாழ்ந்து பின் இறந்துபோகும் மனிதர்க்குப்
பேருலக இன்பங்கள் அனைத்துமே பொது உடைமை.
மறந்து மதிகுறுகி, மண்மீது எல்லைகட்டி,
மனிதர்கள் போராடும் மயக்கமே துன்பங்கள்!
பேருலக இன்பங்கள் அனைத்துமே பொது உடைமை.
மறந்து மதிகுறுகி, மண்மீது எல்லைகட்டி,
மனிதர்கள் போராடும் மயக்கமே துன்பங்கள்!
(ஞானக்களஞ்சியம் கவி: 1258)
வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!!
தத்துவஞானி வேதாத்திரி மகரிசி
புதன், 25 செப்டம்பர், 2019
வேதாத்திரிய மெய்விளக்கம் 25-09-0034
வேதாத்திரிய மெய்விளக்கம் 25-09-2019 உலக அமைதி நாள் 25-09-0034

வாழ்த்து - "வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்"
மிகவும் நுண்ணிய இயக்கத்திற்கு மனம் வந்தாலன்றி வாழ்த்தவே முடியாது,
அந்த அளவு நுண்ணிய இயக்கத்திற்கு மாறும்போது ஒரு வலுவு, ஒரு தெளிவு, அந்த அமைதி நிலை, அதை ஒட்டி நம்முடைய வியாபகம் விரிந்து பலரோடு ஊடுருவி நிறைந்து அந்த உயிர்க்கலப்பு ஏற்படக்கூடிய நிலை, இவை எல்லாம் அதிகமாகும்.
அந்த நுண்ணிய நிலையிலே நாம் வாழ்த்துக் கூறும்போது அவர்களுக்கும் நமக்கும் தெரியாமலேயே இரண்டுபேருடைய அடித்தளமான அந்த உயிர்நிலையில் ஒரு பரஸ்பர ஓட்டம் (interaction) ஏற்படுகின்றது; ஊடுருவிப் பாய்ந்து நிற்கின்றோம்.
இரண்டு தடவை, நாலு தடவை செய்யச் செய்ய நமக்கும் அவர்களுக்கும் ஒரு தொடர் இயக்கம் வந்து விட்டதானால், அது எப்பொழுதும் நமக்கு அலை வீசிக்கொண்டிருக்கும்,
அந்த அலை நாம் நினைத்தாலும் நினைக்காவிட்டாலும் முன்பே ஏற்படுத்திவிட்ட தொடர்புப்படி வந்து கொண்டும் போய்க்கொண்டும் இருக்கும்; அந்த தொடர் அறுபடாது இருக்கும்.
அதனால் அவருக்கு வேண்டியதை நாம் செய்ய வேண்டும் என்று நினைப்பது நமக்கு வேண்டியதை அவர்கள் செய்ய வேண்டும் என்று நினைப்பது, அவர்கள் நன்மைக்காக நாம் எண்ணுவது இவை எல்லாம் சாதாரண நிகழ்ச்சியாக மாறிவிடும்.
அப்படி வாழ்த்தி வாழ்த்தி எப்பேர்பட்டவர்களையும் கூட நண்பர்களாக மாற்றிவிட முடியும்; அவர்களுடைய செயல்களைத் திருத்திவிட முடியும்; எண்ணங்களை எல்லாம் ஒழுங்குபடுத்தி விட முடியும்; நல்லவர்களாக மாற்றிவிட முடியும்.
தவம் முடித்த பிறகு வாழ்த்துகிறோம். தவத்தில் இருக்கும்போதே நாம் சாதாரணமாக நுண்ணிய நிலையில் Alpha Wave க்கு வந்து விடுகிறோம். அந்த நிலையில் நுண்ணிய செல்கள் (Subtle cells) எல்லாம் மூளையில் இயக்கத்திற்கு வந்துவிடும். அந்த இடத்தோடு அங்கேயிருந்து அந்த அலையை நாம் வீசுகிறோம். "வாழ்க வளமுடன்" என்ற அந்த எண்ணத்திற்கு வலுவு அதிகம்.
உதாரணமாக ஒரு வில் இருக்கிறது அம்பு இருக்கிறது. அம்பு எய்வதற்கு ஓரளவு நாணைப் பின்னுக்கு இழுத்துவிடுவது ஒன்று, கடைசிவரைக்கும் இழுத்து அம்பு விடுவது என்பது ஒன்று.
எவ்வளவு தூரம் நாணை இழுக்கிறோமோ, அந்த அளவுக்கு அம்புக்கு வேகம்;
அதே போன்று நாம் எவ்வளவு அமைதிக்கு அறிவை, மனதைக் கொண்டு வருகிறோமோ அங்கேயிருந்து கொடுக்கக்கூடிய வாழ்த்துக்கு கூட வேகம் அதிகம், செயல்படும் வேகம் அதிகம்.
ஆகவே நாம் தவம் செய்யும் போது இன்னும் நுண்ணிய நிலையில் இருந்து அந்த நேரத்தில் நாம் சொல்லக்கூடிய சொல்லுக்கு, எண்ணக் கூடிய எண்ணத்திற்கு வலுவு அதிகம்; சீக்கிரமாகச் செயலுக்கும் வந்துவிடும்.
நமக்காக என்னென்ன வேண்டுமோ அதைச் செயல்படுத்துவதற்குச் சில நாட்களானாலும் சரி, பிறருக்காக நாம் வேண்டுதல் வெகு சீக்கிரமாக அதிக பயன் விளைவிக்கும்.
வாழ்க வளமுடன் என்று வாழ்த்தும் போது பிறர்
உள்ளத்திலே நமது கருத்து நலதொரு இனிய
நட்புறவை வளர்க்கிறது.
உள்ளத்திலே நமது கருத்து நலதொரு இனிய
நட்புறவை வளர்க்கிறது.
வாழ்த்தும் போது மனம் ஒரு நுண்ணிய நிலைக்கு
அமைதி நிலைக்கு வருகிறது. அதனால் மனதிற்கு
வலுவும் தெளிவும் ஏற்படுகிறது.
அமைதி நிலைக்கு வருகிறது. அதனால் மனதிற்கு
வலுவும் தெளிவும் ஏற்படுகிறது.
வாழ்த்து வீண் ஆகாது. "வாழ்க வளமுடன்"-
"வாழ்க வளமுடன்" என்று சொல்லச் சொல்ல
உடல், மனம் நன்றாக இருக்கும்.
"வாழ்க வளமுடன்" என்று சொல்லச் சொல்ல
உடல், மனம் நன்றாக இருக்கும்.
வாழ்த்து எல்லா மந்திரங்களுக்கும் மேலான
திருமந்திரமாகும்.
திருமந்திரமாகும்.
தவமுறை அகவல் - வாழ்த்து
வாழ்க வாழ்கவென் வாழ்க்கைத் துணைவர்!
வாழ்க வாழ்கவென் குழந்தைகள் எல்லாம்!
வாழ்க வாழ்க என்னுடன் பிறந்தோர்கள்!
வாழ்க வாழ்கவென் நண்பர்கள் அனைவரும்!
வாழ்க வாழ்கவென் தொழில்துறை அனபர்கள்!
வாழ்க பகைவர்கள் வளமொடு திருந்தி!
வாழ்க இவ்வுலகில் வாழ் மக்களெல்லாம்!
வாழ்க வாழ்க இவ்வையகம் வாழ்க!
வாழ்க அறநெறி! வாழ்க மெய்ஞானம்!
வாழ்க வாழ்கவென் குழந்தைகள் எல்லாம்!
வாழ்க வாழ்க என்னுடன் பிறந்தோர்கள்!
வாழ்க வாழ்கவென் நண்பர்கள் அனைவரும்!
வாழ்க வாழ்கவென் தொழில்துறை அனபர்கள்!
வாழ்க பகைவர்கள் வளமொடு திருந்தி!
வாழ்க இவ்வுலகில் வாழ் மக்களெல்லாம்!
வாழ்க வாழ்க இவ்வையகம் வாழ்க!
வாழ்க அறநெறி! வாழ்க மெய்ஞானம்!
(ஞானக்களஞ்சியம் கவி: 1500 -(8) )
வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!!
தத்துவஞானி வேதாத்திரி மகரிசி
ஞாயிறு, 22 செப்டம்பர், 2019
சனி, 21 செப்டம்பர், 2019
கரு தவம்!!
*நிலத்திலிருந்து முளை எழுந்தபோது முரசொன்றும் முழங்கவில்லை*
*பழம் பழுத்து பக்குவமடைந்த போது ஊதுகொம்பின் ஒலியில்லையே....!!!*
*ஒளிதரும் ஞாயிறும், நிலவும் எழுந்தபோது வீரமுழக்கமில்லையே.......!!!*
*ஆனால், மனிதன் மட்டும் எச்செயலை செய்தாலும்......!!!*
*ஒன்று முழக்கமிடுகிறான்*
*அல்லது முழக்கதை மற்றவரிடமிருந்து எதிர்பார்த்துக் கொண்டே இருக்கிறான்.......!!!*
*தான் என்னவோ உலகில் யாருமே, எதுவுமே செய்யாததை செய்துவிட்டோம் என்றும்*
*சாதித்து விட்டோம் என்றும் கூக்குரலிட்டு வீர முழக்கமிடுகிறான்*
*அல்லது சித்து வேலை செய்வோரிடம் தஞ்சம் புகுகிறான்*
*அன்றாடம் அவன் கண் முன்னே தாவரங்களும், இயற்கையும்*
*இதைத் தானே மௌன நிலையில் செய்து கொண்டு என்பதையும் மறந்தே மயக்கமுற்று இருக்கிறான்*
**என்று விலகுமோ இந்த மாயத் திரை........?!?*
*கல்லும் மரமும் மௌன நிலையில் நின்று கடமை தவறாது பயன் ஆற்றும் போது சொல்லும், கருத்தும் உடைய மனிதன் மட்டும் ஏனோ...சுகங்கெட்டு சமூகத்தை மறக்க வேண்டும்.....???அல்லும் பகலும் ஆசையை அழிக்கவென்றே ஆசைதனை பேராசை ஆக்கிக் கொண்டு அல்லல்படும் அன்பர்களே சுருங்கச் சொல்வேன் சுய நிலையை அறிய கரு தவமே போதும்"*
*தத்துவ ஞானி வேதாத்திரி மகரிஷி*
*பழம் பழுத்து பக்குவமடைந்த போது ஊதுகொம்பின் ஒலியில்லையே....!!!*
*ஒளிதரும் ஞாயிறும், நிலவும் எழுந்தபோது வீரமுழக்கமில்லையே.......!!!*
*ஆனால், மனிதன் மட்டும் எச்செயலை செய்தாலும்......!!!*
*ஒன்று முழக்கமிடுகிறான்*
*அல்லது முழக்கதை மற்றவரிடமிருந்து எதிர்பார்த்துக் கொண்டே இருக்கிறான்.......!!!*
*தான் என்னவோ உலகில் யாருமே, எதுவுமே செய்யாததை செய்துவிட்டோம் என்றும்*
*சாதித்து விட்டோம் என்றும் கூக்குரலிட்டு வீர முழக்கமிடுகிறான்*
*அல்லது சித்து வேலை செய்வோரிடம் தஞ்சம் புகுகிறான்*
*அன்றாடம் அவன் கண் முன்னே தாவரங்களும், இயற்கையும்*
*இதைத் தானே மௌன நிலையில் செய்து கொண்டு என்பதையும் மறந்தே மயக்கமுற்று இருக்கிறான்*
**என்று விலகுமோ இந்த மாயத் திரை........?!?*
*கல்லும் மரமும் மௌன நிலையில் நின்று கடமை தவறாது பயன் ஆற்றும் போது சொல்லும், கருத்தும் உடைய மனிதன் மட்டும் ஏனோ...சுகங்கெட்டு சமூகத்தை மறக்க வேண்டும்.....???அல்லும் பகலும் ஆசையை அழிக்கவென்றே ஆசைதனை பேராசை ஆக்கிக் கொண்டு அல்லல்படும் அன்பர்களே சுருங்கச் சொல்வேன் சுய நிலையை அறிய கரு தவமே போதும்"*
*தத்துவ ஞானி வேதாத்திரி மகரிஷி*
வியாழன், 9 ஆகஸ்ட், 2018
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)

