Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

செவ்வாய், 27 ஜூலை, 2021

*வேதாத்திரிய மெய்விளக்கம் 27-07-2021 உலக சமாதான ஆண்டு நாள் 27-07-0036*



*"மனத்தூய்மை செய்வதற்கு நல்லதோர் பயிற்சிதான் "மவுனம்" (Silence)"*


*"ஒவ்வொருவரிடமும் எண்ணிப்பார்க்க முடியாத அளவிற்கு ஆயிரம் தேவையில்லாத கருத்துகள் இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். ஒரு நாளைக்கு மௌனத்தில் உட்கார்ந்தீர்களானால் தானே வரும்."*  


*அதில் பத்து பதினைந்து கருத்துகளை எடுத்து முடிவு கட்டுங்கள். ஓரிரு மாதங்களில் முடிவு பண்ணிவிடலாம்.*  


*மறுபடியும் அதே கருத்து வரும் போது அதே அழுத்தம் கொடுத்து கெட்டக் கருத்துகள், செயல்கள், எண்ணங்கள் எத்தனை உண்டோ அத்தனையும் நல்லதாக்கி விடலாம்.*  


*இதற்கு உட்கார்ந்து யோசித்துப் பார்த்தால்தானே நேரம் கொடுத்தால் தானே வரும்? நாம் கொடுக்கிறோம்.  நமக்கு இறைவன் கொடுத்த மௌனம் ஒன்று இருக்கிறது.  அதுதான் ராத்திரியில் தூக்கம். அங்கே மறந்து விடுகிறோம்.  அதனால் ஒன்றும் செய்ய முடிவதில்லை.*  


*எனக்கு வேலையில்லை.  அதனால் ஒரு மாதம் மௌனத்தில் உட்கார்ந்தேன். முடிந்தவர்கள் ஒருநாள் இரண்டு நாள் உட்கார்ந்தார்கள்.  சிலருக்கு ஒரு நாளைக்குக் கூட உட்கார முடியவில்லையே என்று மன வருத்தம் இருக்கிறது.  அதற்காக வருந்தவே வேண்டியதில்லை.*  


*யாராகிலும் ஒருவர் நமக்குத் தேவை இல்லாத வார்த்தையைச் சொன்னார்கள்.  அதற்குப் பதில் சொல்லாமல் எரிந்து விழறது என்று இல்லாமல் அந்த இடத்தில் மாத்திரம் மௌனம் இருக்கிறது என்று வைத்துக் கொள்ளலாம் இல்லையா? இதற்கு நேரம் தேவையில்லை.  இந்த மவுனத்தை எல்லோரும்பண்ண வேண்டும்.*  


*ஒரு நாளைக்கு மௌனம் என்று சொல்லிவிட்டு  வீட்டிலேயே இருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள்.  பத்துப்பேர் இருக்கிற  வீட்டில் நீங்கள் மௌனமாக இருந்தீர்களானால் அவர்களுக்கு அது பொருந்தாது.  ஒருத்தர் உட்கார்ந்து மௌனமாக இருக்கிறார்களே இருக்கட்டும் என்று அவர்களால் இருக்கவும் முடியாது. எப்படியாவது தொந்திரவு (disturbance) வரும். அப்போது ஒருவர் வந்து "ஐயா இருக்கிறார்களா?" என்று கேட்பார்.  "அதோ உட்கார்ந்து கொண்டு இருக்கு பாருங்கள்" என்பார்கள் !.  ஏன் என்றால் அவர்களுக்கு சுயகவனம் (attention) வேண்டும்.  அங்கே சுயகவனம் (attention) இல்லை.*  


*ஆகையால் அனேகருக்கு வீட்டில் மௌனம் இருக்க முடியாது என்று எல்லோரும் சேர்ந்து "அறிவுத் திருக்கோயில்" என்று ஒன்றை கட்டி வைத்திருக்கிறார்கள்.*  


*சந்தர்ப்பம் வரும்போது ஒருநாளைக்கு இங்கு வந்து மௌனம் இருக்கலாம்.  இந்தக் காலத்தில்தான் இருக்கலாம் என்று இல்லை.  இருப்பதற்கு இங்கு இடம் இருக்கிறது.  என்றைக்கு வந்தாலும் மவுனம் இருக்கலாம்.*  


*நீங்கள் இரண்டு மூன்று நாள் மௌனம் இருக்கும்  வரைக்கும் மேலாக இருக்கிற அலையெல்லாம் வந்து கொண்டிருக்கும்.  போகப் போக ஆழமாகவுள்ள பதிவுகளெல்லாம் வரும்.  அதற்கும் மேலே போனால் இயற்கை உண்மைகளெல்லாம் வர ஆரம்பித்து விடும்.*


*ஏனென்றால் நீங்கள் பேசாதிருக்கும் போது இறைவன் பேசுகிறான்.  இப்படிச் சொல்வது வேறு ஒன்றுமில்லை. எப்போதும் அவன் இருக்கிறான், அவன் பேசுகிறான், அதைக் கேட்பதற்கு இல்லாமல் நாம் வேறு எதையோ கேட்டுக் கொண்டிருந்தால் அவன் பேசுவது கேட்பதில்லை.*  


*அதனால் நம் வேலைகளையெல்லாம் நிறுத்திவிட்டு கொஞ்சநேரம் அதற்கு கொடுக்க வேண்டும் என்பதற்காக மௌனம் இருக்க வேண்டும். மௌனத்தை உணர்ந்து, அதன் பெருமையை, நன்மையை உணர்ந்து செய்யுங்கள்.  பிறர் கருத்தை ஒத்துக் கொள்ள முடியாதபோது அவர்களிடம் எரிந்து விழாமல் அந்த இடத்தில் மௌனமாக இருப்பது நல்லது.*  


*எல்லோரும் தூங்கும்போது மௌனமாகத்தான் இருக்கிறார்கள்.  தூங்கும்போது மௌனமாக இருந்தால் அமைதி வந்துவிடுகிறதே தவிர அந்த அமைதியினால் அறிவு விருத்தி ஆவது இல்லை.  எனவே இதையெல்லாம் ஆராய்ந்து பார்த்தால் மவுனத்தில் அதன் பெருமையை உணர்ந்து கொள்ளலாம்.*


*எப்படி கண்ணாடி அதிகமான சூரிய வெளிச்சத்தை வாங்கி மற்றதை எரிக்கக்கூடிய வல்லமை பெறுகிறதோ அதேபோல மவுனத்தில் ஏற்படக் கூடிய (Vortex) சுழல் மையம் நம்முடைய ஜீவகாந்த சக்தி (Bio-Magnetic force) அதிகமாக ஆக ஆக அதில் சுழற்சி அதிகமாக ஆக ஆக மைய ஈர்ப்பு அதிகமாகும்.  அந்த மைய ஈர்ப்பு அதிகமாகி விட்டதென்றால் எண்ணங்களையும் ஒழுங்குபடுத்திக் கொள்ளலாம்.* 


*மற்றவர்களுடைய நட்பும் அதிகமாக இருக்கும்.  எல்லோருக்கும் உங்கள் பேரில் விருப்பமும் மதிப்பும் தானாகவே உருவாகும்.  இத்தகைய பெருமையெல்லாம் தரக்கூடியது மௌன நோன்பு.  இரண்டு நாள், மூன்றுநாள் என்று புள்ளி விபரம் (statistics) கொடுக்காமல் மவுனத்தில் சாதித்தது என்ன? என்று பாருங்கள்.  வீட்டிற்குச் செல்லும்போது மௌனத்தின் பயனை அனுபவிக்க வேண்டும்.* 


*அப்படியில்லாமல் "நீங்க எங்கே போய்விட்டு வந்தீர்கள் எட்டு நாளா?.. என்றால்,  'நான் மௌனத்திற்காக அறிவுத் திருக்கோயிலுக்குப் போய்விட்டு வந்தேன்"...  "ஆமா, அறிவுத் திருக்கோயிலில் என்ன பண்ணினீர்கள்?"..  "ஆ, அதையெல்லாம் உனக்கு சொல்லிக் கொண்டு இருக்க முடியாது".  உனக்குத்தான் ஒன்றும் புரியாது" என்று கூறி உடனே ஒரு சண்டை,..  இது என்ன மவுனம்?* 


*அமைதியாக இருந்து இன்னும் இரண்டு தடவை யார் கேட்டாலும் சரி. அதற்கு நல்ல பதிலைச் சொல்லி, முடிந்தவரைக்கும் சொல்ல வேண்டும்.  முடியாதபோது நான் இன்னும் விளக்குகிறேன். மீண்டும் விளக்குகிறேன்.  என்று சொல்லலாம் அல்லவா?,*  


*மௌனத்தின் பயனை எல்லோரும் பயன்படுத்த வேண்டும். மௌனத்திலே ஒரு பெரிய ஆத்ம சக்தி உருவாவதை உணர வேண்டும். மனிதனுடைய கருமையத்தை தூய்மையான எண்ணங்களால் அழுத்தம் கொடுத்துக் கொண்டேயிருந்தால் ஆயிரமாயிரம் பங்கு விளைவுகளை கொடுத்துக் கொண்டேயிருக்கும்.*


*மனத்தூய்மை செய்வதற்கு நல்லதோர் பயிற்சிதான் "மவுனம்"*.


*வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!*


*தத்துவஞானி வேதாத்திரி மகரிசி*

திங்கள், 29 மார்ச், 2021

கேள்வி: சுவாமிஜி, நாம் வாழும் பூமிக்கருகில் உள்ள சூரியக் குடும்பத்திலுள்ள ஒன்பது கோள்களுக்கும் சூரியன் மையமாக உள்ளது. மற்ற கோள்களெல்லாம் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வட்டப் பாதையில் வலம் வந்து கொண்டிருப்பதற்குக் காரணம் கோள்களின் பருமனா? கோள்களின் சுழல் வேகமா?*

பதில்:* சூரியனுடைய தற்சுழல் வேகம் அதில் அடங்கிய அணுக்களின் கூட்டுத் தொகையைப் பொறுத்தது. அது இன்னொரு கிரகத்தைச் சுற்றி வருவது, சூரியனுடைய சுழல் வேகத்தில் தோன்றும் அலை எவ்வளவு தூரம் சுழன்று கொண்டிருக்கிறதோ அந்த அலையில் மிதக்கிற கோள்கள் எல்லாம் அதே வேகத்தில் சுழன்று கொண்டிருக்கும். ஆனாலும் கோள்களின் பருமனுக்குத் தக்கவாறு களத்தில் பின் தங்கிச் செல்லும்.


சூரியன் 25 நாட்களுக்கு ஒரு முறை தன்னைத்தானே சுற்றிக் கொள்கிறது. அந்த சுழல் வேகத்தில் வரக்கூடிய அலையானது ஆயிரம் கோடி மைலில் வரை விரிந்திருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த அலையில் எந்தெந்தக் கோள்கள் இருந்தாலும் அது அப்படியே ரெங்கராட்டினத்தில் ஆள் வைத்து சுற்றிக் கொண்டு போவது போல சுற்றிக் கொண்டேயிருக்கிறது. அதனால் அந்தந்த கிரகத்தின் எடைக்கும், தூரத்திற்கும் தகுந்தவாறுதான் சுற்றுவேகம் வித்தியாசம் ஏற்படும்.

வாழ்க வளமுடன்!!


*அருள்தந்தை வேதாத்திரி மகரிஷி*

ஞாயிறு, 28 மார்ச், 2021

கேள்வி: சுவாமிஜி, பிரபஞ்சம் என்பது ஒன்றுதான் இருக்க முடியுமா?*

 


பதில்:* ஆம். ஒன்றுதான் இருக்க முடியும். இரண்டு இருக்க முடியாது. ஏனென்றால் இரண்டிருந்தால், இரண்டையும் சேர்த்து அழுத்திக் கொண்டிருக்கிற சுத்தவெளி எனும் பேராற்றல் சூழ்ந்தழுத்தி இறுக்கி ஒன்றாக்கி விடும். பின் ஒன்றுக்குள் ஒன்றாய் நின்று சுற்றிக் கொண்டிருக்கும்.

வாழ்க வளமுடன்!!

*அருள்தந்தை வேதாத்திரி மகரிஷி*

சனி, 27 மார்ச், 2021

கேள்வி: சுவாமிஜி, நட்சத்திரங்கள் எவ்வாறு உருவாகின்றது? அதற்கு ஏன் சுழற்சி ஏற்படுவதில்லை?

 


பதில்:* இறைவெளியில் தோன்றும் விண்ணின் சுழற்சியில் பஞ்ச பூதக் கூட்டில் அண்டங்கள் உருவாகிறது. மேலும் காலம் செல்லச் செல்ல தற்சுழற்சியால் அண்டத்தின் மையப் பகுதியில் திணிவு அதிகமாகி, அணுச் சிதைவு ஏற்பட்டு வெப்பக் குழம்பாகி, நீர் சுண்டி, பலகோடி ஆண்டுகளுக்குப் பின் நெருப்புக் கோளமாகி விடும். இத்தகைய அண்டங்கள் தான் சூரியன்கள் எனப்படுகின்றன. இவ்வாறான தொலைவிலுள்ள சூரியன்களை நட்சத்திரங்கள் என்கிறோம்.

நட்சத்திரங்களும் சுழன்று கொண்டுதானிருக்கின்றன. வெகு தொலைவுக்கப்பால் இருப்பதால் நமக்கு சுழற்சி தெரிவதில்லை. பிரபஞ்சத்தில் எந்தப் பொருளாக இருந்தாலும் அது அணுக்களின் கூட்டுத்தான். ஒவ்வொரு அணுவும் தன்னைத்தானே சுற்றிக் கொண்டிருப்பதால் அதனால் ஆன ஒட்டு மொத்தத்திலும் அந்த சுழற்சி இருக்கும். நாமும் பூமியோடு சேர்ந்து சுழன்று கொண்டு தான் இருக்கிறோம்.

வாழ்க வளமுடன்!!

*அருள்தந்தை வேதாத்திரி மகரிஷி*

வெள்ளி, 26 மார்ச், 2021

கேள்வி: ஐயா, தனிமங்கள் இணையும் பொழுது ஒன்றின் இடைவெளியை மற்றது நிறப்புகிறது என்கிறீர்கள்? புரிந்து கொள்ள இயலவில்லை?



பதில்:* 100 ml. தண்ணீரில் 100 கிராம் தூய்மையான உப்பைக் கரைத்தால்  200 ml. ஆகாது. அதே 100 ml. அளவு தான் இருக்கும். அணுச் சேர்க்கையில் ஒன்றின் இடைவெளியை மற்றொன்று நிரப்புவதால், நீர், உப்பு எல்லாம் வேதான்களின் கூட்டுதானே.


வாழ்க வளமுடன்!!


அருள்தந்தை வேதாத்திரி மகரிஷி*

ஞாயிறு, 21 மார்ச், 2021

கேள்வி: சுவாமிஜி, ராமா என்ற பெயரை வாயால் சொன்னால் மன அமைதி கிடைக்கும், நமக்கும் நமது குடும்பத்திற்கும் நல்லதே நடக்கும் என்று சொல்கிறார்களே? உண்மையா?*

பதில்:* இதே போன்ற கேள்வியை அமெரிக்காவில் மன இயல் தத்துவ பேராசிரியர்களிடம் கேட்டார்கள். இந்தியாவில் ராமா, கிருஷ்ணா என்று சொல்லியே பக்தி மார்க்கத்தில் மக்கள் அதிக ஆற்றலைப் பெற்றுக் கொள்கிறார்களே, எவ்வாறு என்று.

அவர்கள் பரிசோதனைக்காக நான்கு அன்பர்களைத் தேர்ந்தெடுத்தார்கள். அவர்களின் Heart Beat, Pulse, B.P. அனைத்தையும் குறித்துக் கொண்டார்கள். மேலும், “கொக்கோ கோலா” என்ற வார்த்தையைக் கொடுத்து ஐந்து நாட்கள் தொடர்ந்து உச்சரிக்க வைத்தார்கள். அதன் பிறகு அவர்களை பரிசோதிக்கும் பொழுது அவர்களுடைய Heart Beat, Pulse, B.P. அனைத்தும் குறைந்து இருந்தது. அவ்வாறு வார்த்தையை உச்சரித்து வரும்பொழுது பல நல்ல விளைவுகள் தோன்றியதாகக் கூறினார்கள்.


உச்சரிக்கும் வார்த்தையில் மக்களுக்கு இறை நம்பிக்கையும் சேர்ந்துள்ள போது பயன் அதிகமாகவே இருக்கும்.


வாழ்க வளமுடன்!!


அருள்தந்தை வேதாத்திரி மகரிஷி

செவ்வாய், 16 மார்ச், 2021

சுவாமிஜி, ஒரு தனிமம் மற்றொரு தனிமமாக எவ்வாறு மாற்றம் பெறும் என்பதை விளக்க வேண்டுகிறேன்


பதில்:* ஒரு தனிமத்தில் நுண்விண் துகள்கள் சேர்ந்து இயங்குகிறது என்றால் அவை ஒன்றையொன்று ஈர்த்துக் கொண்டு விலகாமல் ஒரே தனிமமாக பரிமளிக்க (Maintain) அவற்றிற்கு ஒரு குறிப்பிட்ட சுழல் விரைவு இருக்க வேண்டும். அந்த தனிமமானது தன்னியக்கத்தால் தன் நிலையிலிருந்து அதிக விரைவு பெற்றாலும் அல்லது சூழ்நிலையின் ஆதிக்கத்தால் (Activation) விரைவு பெற்றாலும் அந்த சுழற்சிக்கு தக்கவாறு தன்னுடைய நுண்துகளை இழந்து மாற்றம் பெற நேரிடும். ஒரு தனிமம் காலத்தால் அதே தனிமமாக நிலைத்து நிற்க முடியாது.

இரண்டு விண் துகள்களின் சேர்க்கையை ஹைட்ரஜன் என்று வைத்திருக்கிறோம். இதே போன்ற ஹைட்ரஜன் கூட்டு மேலும் சேரச்சேர ஒரே குழுவாக மாறுகிறது. அது குழுவாக இருந்தாலும் இறைவெளியின் தன்னிறுக்கச் சூழ்ந்தழுத்தத்தால் அது சுழன்று கொண்டே தான் இருக்கும், அச்சுழற்சி இயக்கத்தால் கனமான துகள்கள் மையத்திலும் லேசான துகள்கள் அதன் ஓரப்பகுதியிலும் (Periphery) இடம் எடுத்துக் கொள்ளும். இவ்வாறு இயங்கி, ஒத்து இணையும் பொழுது இரண்டு நான்காகவும், நான்கு எட்டாகவும், எட்டு பதினாறாகவும் பொருத்திக் கொள்கிறது. அவ்வாறு 16 துகள்கள் சேர்ந்தியங்கும் பொழுது அதற்கு ஆக்ஸிஜன் என்று பெயர் கொடுத்திருக்கிறார்கள். இவ்வாறு சுழன்று கொண்டே வரும் பொழுது இடத்திற்கு தகுந்தவாறு ஒன்று மற்றொன்றோடு பொருந்தி வேறு தனிமமாக மாறிக் கொண்டே வருகிறது.

இப்பொழுது இரு விண்துகள்களைக் கொண்ட ஹைட்ரஜன் 16 விண் துகள்களைக் கொண்ட ஆக்ஸிஜனோடு சேர்ந்து சுழலும் பொழுது சுழற்சி வேகம் குறைந்த கனமான ஆக்ஸிஜன் மையத்திற்கு வரும். இவை இரண்டும் ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் (Ratio) வரும் பொழுது  ஒன்றில் உள்ள காலியிடத்தை மற்றொன்று அடைத்துக் கொள்கிறது. இல்லையெனில் அது சேர முடியாது. உதாரணமாக 5 யூனிட் பருமணுள்ள ஹைட்ரஜனும் 5 யூனிட் பருமணுள்ள ஆக்ஸிஜனும் இணையும் பொழுது இரண்டும் சேர்ந்த கூட்டு 5 யூனிட் பருமன்தான் வரும். இதனை விளங்கிக் கொள்ள, சுத்தமான உப்பு ஒரு லிட்டர், தண்ணீர் ஒரு லிட்டர் எடுத்துக் கொண்டு இரண்டையும் ஒன்றாகப் போட்டு நன்றாகக் கலக்க வேண்டும். உப்பு முழுவதும் தண்ணீரில் கரைந்த பிறகு பார்த்தால் கலவை இரண்டு லிட்டர் ஆகாது. ஒரு லிட்டர் தான் இருக்கும். இங்கு என்னவாயிற்று என்றால் (There is space between the Two) உப்பில் அமைந்த விண்களுக்கிடையேயுள்ள வெளியை (Space) தண்ணீரில் உள்ள வெளியை உப்புத் துகள்களும் ஒரு கோர்வையாக இணைந்து அடைத்து ஒன்றில் ஒன்றாகி விடுகிறது.

இதே போன்ற ஒரு கோர்வை, ஒரு தொடர்ச்சி ஹைட்ரஜனிலும் (H2) ஆக்ஸிஜனிலும் (O) ஏற்படும்பொழுது தான் அது தண்ணீர் (H2O) ஆகிறது.

வாழ்க வளமுடன்!!

அருள்தந்தை வேதாத்திரி மகரிஷி

திங்கள், 15 மார்ச், 2021

கேள்வி: சுவாமிஜி, தாங்கள் விளக்கும் போது இறைநிலை விளக்கத்தை எளிதாக புரிந்து கொள்ளமுடிகிறது. ஆனால் பிற ஆன்மீக நூல்களைப் படித்து எளிதாக விளங்கிக் கொள்ள முடியவில்லையே ஏன்?*



பதில்:* இறைநிலை பற்றிய விளக்கம் மிகவும் எளிதானதே. எல்லோராலும் சுலபமாக விளங்கிக் கொள்ள முடியும். இவ்வளவு எளிதாக உள்ளதை ஏன் இவ்வளவு சிக்கலாக்கினார்கள் என்று எண்ணிய போது என் உள்ளத்தில் எழுந்த ஒரு காட்சி இது. ஒரு நூல்கண்டை குழந்தையிடம் கொடுத்து விட்டு தாய் சென்று விடுகிறார். குழந்தை அதை எடுத்து கலைத்துப் போட்டு சிக்கலாக்கி விடுகிறது. பிறகு தாய்க்கு எது ஆரம்பம் என்று தெரியாமல் வெட்டி வெட்டி போட்டு விடுகிறாள். அதே போன்று தான் இறைநிலை விளக்கம் எல்லாம் துண்டு துண்டாகப் போய்விட்டது. பின்னால் வந்தவர்கள் அதை ஒன்றுபடுத்திப் பார்க்க இயலாமையே இறைநிலை பற்றிய விளக்கம் சிக்கலாகக் காரணமாகிறது.


வாழ்க வளமுடன்!!


அருள்தந்தை வேதாத்திரி மகரிஷி*

ஞாயிறு, 14 மார்ச், 2021

கேள்வி: ஐயா, மகான் என்று யாரை அழைக்கின்றோம்?*

பதில்:* “மகா” என்றால் “பெரிய” என்று பொருள். “ஆன்” என்றால் “ஆள், அதாவது எல்லாவற்றையும் உணர்ந்தவர் அறிவில் உயர்ந்தவர் என்று பொருள். மகானுக்கு நேரிடையான தமிழ்ச்சொல் பெரும் + ஆள். அதாவது “பெருமாள்”.

வாழ்க வளமுடன்!!

அருள்தந்தை வேதாத்திரி மகரிஷி*

வெள்ளி, 5 மார்ச், 2021

கேள்வி: சுவாமிஜி, இன்பத்தை உணர்வது எது, உடலா, உயிரா, மனமா?


*

பதில்:* உயிர் தான் மனம் என்ற மலர்ச்சியில் இன்பத்தை உணர்கிறது. அதற்குப் புலன்கள் உதவியாக இருக்கின்றன. புலன்களின் வழியாக ஏற்படும் உயிரின் காந்த தன்மாற்றமே இன்பத்துக்கும், துன்பத்துக்கும் காரணமாக அமைகின்றன. எல்லா உயிரினங்களிலுமே பெருக்கம், இருப்பு மற்றும் செலவு என்ற வகையிலே உயிர்ச் சக்தி இயங்குகிறது.

உடலிலே இருக்கக் கூடிய உயிரின் இருப்பு அதிகமாகி, அந்தக் கூடுதலான இருப்பு புலன் வழியாகச் செலவாகும். அந்தச் செலவு, உடலுக்கும் உயிருக்கும் பொருத்தமான நிகழ்ச்சியாக அமைந்தால் இன்பமாக உணரப்படுகிறது. உயிர்ச்சக்தியின் குறைந்தபட்ச இருப்பை அச்செலவு தாண்டும் போது துன்பம் தோன்றுகிறது. உடலைக் கருவியாகக் கொண்டு புலன்வழியே தன் அலைகளால் உயிரே செலவாகி இன்ப, துன்பத்தை உணர்கிறது.

வாழ்க வளமுடன்!!

அருள்தந்தை வேதாத்திரி மகரிஷி

திங்கள், 27 ஜனவரி, 2020

"சுவாமிஜி, இப்பொழுது உலகமெங்கும் பரவிவரும் ஆயுதக் கலாச்சாரத்தை ஒழிக்க நாம் நமது தவத்தில் அமைதி அலைகளைப் பரப்பி வரலாமா?"


.
மகரிஷியின் பதில் :-
"நாம் அவ்வாறு தானே செய்து வருகிறோம், தற்பொழுது வல்லரசு நாடுகளுக்கெல்லாம் நல்லெண்ணம் வந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனாலும் பழைய மரபு வழிவந்த விலங்கினப் பதிவுகளின் காரணமாக உள்ள முனைப்பும், 'தான்' என்ற அதிகாரமும் தொடர்ந்து வந்து கொண்டேயிருக்கின்றன.
.
எல்லா மக்களும் பிறந்து வாழ்ந்து மடியும் இடமான உலகம் ஒன்றுதான். நீர்வளம் அளிக்கும் கலக்கும் கடல் ஒன்றுதான். மூச்சுவிடும் காற்று ஒன்றுதான். வெளிச்சம் மற்றும் ஆற்றல்களை அளிக்கும் சூரியனும் ஒன்றுதான். இந்த உண்மையை அனைவரும் கல்வி கற்கும் காலத்திலேயே அறிந்து கொள்ள வேண்டும். நன்றாகச் சிந்தித்துப் பார்த்தால் சண்டை என்பது நாடுகளுக்கோ, மனிதனுக்கோ தேவையில்லை. அண்டை நாட்டான் ஆயுதம் இராணுவமெல்லாம் வைத்துள்ளானே, அவன் நம்மைத் தாக்கினால் என்ன செய்வது என்பதற்காக நாமும் வைத்துக் கொண்டோம். இதற்குப்பின் ஒரு கால கட்டம் வரும்போது அனைத்து நாடுகளும் ஒன்று கூடி மனித குலத்தை அழிக்கும் ஆயுதங்களும் அதற்கு ஆகும் செலவும் இனி தேவையில்லை, ஐ.நா.சபையின் மூலமாக அனைத்து நாடுகளின் பாதுகாப்பை எல்லோரும் ஏற்றுக் கொள்வோம் என்ற முடிவை 5 நிமிடத்தில் எடுத்து விடலாம். இம்முடிவு காலத்தால் வரும்.
.
உலகத்தில் ராணுவத்திற்கு ஒரு ஆண்டு செலவாகும் தொகையில் உலகத்தை செழிக்கச் செய்யலாம். மனிதன் வாழ்வின் வளங்களைக் கூட்டாகப் பெருக்கிக் கொள்ளவும், ஒருவரை ஒருவர் பறித்துண்ணாது உதவி வாழவும் செய்யலாம். சமுதாயத்தில் சட்டங்களால் போட்ட எல்லைகள்தான் நாட்டு எல்லைகள். ஒருவரை ஒருவர் அழிப்பதற்காகவோ, ஒரு குழுவை பிற குழு அழிப்பதற்காகவோ எல்லைக் கோடுகள் இருக்கக்கூடாது.
.
ஆனால் ஆயுதம் வாங்கும் விற்கும் இடத்தில் கிடைக்கும் வருமானத்தை எந்த அரசியல்வாதியும் விட்டுக் கொடுக்கமாட்டார். இது மனித குல வாழ்வில் மரபு வழியே வந்து நீடிக்கும் ஒரு வலுப்பெற்ற மனோவியாதியாகி விட்டது.
.
நாம் தொடர்ந்து தவத்திலும் (Simplified Kundalini Yoga - SKY), மவுனத்திலும் (silence) இருந்து அமைதியலைகளைப் பரப்பி வருவோம். காலத்தால் மனித உள்ளங்கள் கனிந்து திருந்தும் என்பது உறுதி."
.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

செவ்வாய், 31 டிசம்பர், 2019

❓ *கேள்வி: சுவாமிஜி! இன்றைய அரசியல், பொருளாதார நிலைகளில் உள்ள சீர்கேடுகள் எவ்வாறு நீங்கும்?*


 *பதில்:* உழைக்காமல் இருக்கக் கூடாது என்று கடமைகளை வலியுறுத்தவும், கடமையின் மேன்மை பற்றி உணர்த்தவும் வகுக்கப்பட்ட நெறிமுறைகள் தான் பிற்காலத்தில் பொருளாதாரம் என்ற துறையாகியது. பொருட்கள் ஈட்டல், காத்தல், உய்த்தல், பிறர்க்களித்தல் என்ற கூட்டுறவை உணர்த்த வகுக்கப்பட்ட சமுதாய நெறிமுறைகள் அரசியல்துறையாகியது. கடமைகளைச் செய்வதிலும் பொருள்துறையிலும் ஒருவருக்கொருவர் துன்பப்படுத்தாமல் இருக்க உணர்த்திய நெறிமுறைகள் மதங்கள் என்றாயிற்று. என்றாலும் இப்பொறுப்பில் உள்ள மனிதர்கள் பொருள், புகழ், செல்வாக்கு புலனின்பத்திற்கு அடிமையாகி இன்னும் வேண்டும் இன்னும் வேண்டும் என்று பேராசை கொண்டு வாழும் நிலையால் தான் இத்தனை சீர்கேடுகளும் ஏற்பட்டுள்ளன.
பொருளாதாரம், அரசியல், மதம் என்ற மூன்று துறைகளும் ஒன்றுக்குள் ஒன்றாக பின்னிப் பிணைந்துள்ளன. இந்த மூன்று துறைகளிலும் பொறுப்பிலுள்ளவர்களுடன் சமுதாய நலத்தொண்டில் ஈடுபட்டுள்ளவர்களும் கூடி, தன்னல நோக்கமின்றி விஞ்ஞான அடிப்படையில் திட்டமிட்டுச் செயல்பட்டுத்தான் இச்சீர்கேடுகளைப் போக்க வேண்டும்.
வாழ்க வளமுடன்!!
*அருள்தந்தை தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி*

வெள்ளி, 20 டிசம்பர், 2019

❓ கேள்வி: சுவாமிஜி! தாங்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்?


 பதில்: நான் எந்த மதத்தையும் சேர்ந்தவன் அல்ல. உலகப் பொது அருள்நெறி சமயத்தைச் சேர்ந்தவன். கர்மயோக நெறியே அதன் வேதமாகும். மனிதன் உடல் நலம், மன நலம் காத்து செயல் விளைவை மதித்து எவ்வுயிர்க்கும் துன்பம் இழைக்காமல் வாழ்வதே கர்மயோக நெறியாகும். இந்து மதத்திலுள்ள நம்பிக்கை, இஸ்லாமிய மதத்தில் உள்ள தொழுகை முறை, கிறிஸ்துவ மதத்தில் உள்ள தொண்டு, புத்த மதத்தில் உள்ள ஆராய்ச்சி, ஜைன மதத்தில் உள்ள ஜீவகாருண்யம் இவை எல்லாம் எனக்குப் பிடிக்கும்.
வாழ்க வளமுடன்!!
அருள்தந்தை தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

சனி, 23 நவம்பர், 2019

பிழைப்பு ஓர் சிந்தனை



அன்று ஒரு நாள் ஈரோடு மன்றத்திலே வாழ்க்கை தத்துவம் குறித்து மகரிஷி அவர்களின் அற்புத அருளுரை.

கேள்வி நேரத்தில் ஒரு அன்பரின் கேள்வி : வாழ்க்கையை ஏன் பிழைப்பு என்று கூறுகிறோம்?

நான் கூட நினைத்தேன், இது என்ன கேள்வி என்று. வெறும் வழக்கு சொல்தானே பிழைப்பு,,

ஆனால் ஸ்வாமிஜி அவர்கள் அழகாக விளக்கம் சொன்னார்கள் பாருங்கள் எல்லோரும் அசந்து விட்டோம்.

நீண்ட பதில். இங்கு எளிமையாக உட்கருத்தை மட்டும் பதிவிடுகிறேன்.

உலகம் சுழல்கின்ற வேகத்தால் அதன் விளிம்பில் மையத்தை விட்டு விலக்கும் அல்லது தள்ளும் சக்தி உண்டாகிறது. இதனால் உடலில் இருந்து கோடிக்கணக்கான நுண்ணியக்கத் துகள்கள் உடலை விட்டு தொடர்ந்து வெளிநடப்பு செய்கின்றன.

அதே போல பூமியின் மைய ஈர்ப்பு ஆற்றலால் முதிர்வுற்ற கோடிக்கணக்கான செல்களை தினமும் உடல் இழந்து கொண்டிருக்கிறது.

இந்த இழைப்பை ஈடு செய்ய புதிய சக்தி மிக்க செல்கள் உணவிலிருந்தும் காற்றிலிருந்தும் கோள்களிளருந்தும் நீரிலிருந்தும் பெறுவதால் உடலை நாம் புதுப்பித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு உடலின் ஆற்றல் இழப்பிற்கும், சேர்க்கைக்கும் இடையில் நாள்தோறும் மனிதன் சாவிலிருந்து தப்பி பிழைத்துக் கொண்டேயிருக்கிறான். இதனால் தான் வாழ்க்கைக்கு பிழைப்பு என்ற பெயர் வந்தது.

எங்கு தேடினாலும் கிடைக்காத
விளக்கம். அவர் ஒருஞானச் சுரங்கம்.

குருவே சரணம்,,
வாழ்க வளமுடன்,,

புதன், 20 நவம்பர், 2019

*Practice and Proficiency*

*Daily A Noble Thought - Nov 20*


Six temperaments (Greed, anger, miserliness, immoral sexual passion, vanity and vengeance) blossoming as sinful actions, just not only taints life and mind.  They taint the physical body too.

Streamlining six temperaments to six good qualities, is the important part of introspection, second stage of SKY Yoga. Just rate how were you when indulging in six temperaments?  Rate as well how have you improved after learning SKY Yoga now.  Try further. Succeed in it.

Practice Introspection regularly. Can do once a week, on Sunday. Can do once a month, on full moon day. Can do whenever convenient to you. Allocate atleast one hour then. Meditate for half an hour. Analyse well in Thuriyam stage.  Analyse the thoughts. Analyse six temperaments one by one. Find the deficiencies of you.  Analyse the ways to clear it. 

Take the strong auto-suggestions to clear the deficiencies. Mental strength obtained through meditation, Clarity obtained through introspection would help to you keep in awareness, protect by rescuing from the influence of six temperaments and sinful acts.

Analyse all the sinful acts committed in the past, one by one. If you can do any remedies for them now, plan to do it immediately.  If you cannot do any remedial action now, seek forgiveness in mind, from the affected. Bless them wholeheartedly that they come out of the sufferings created by you and lead good life.

Don't hold the guilty consciousness in mind. Guilty consciousness would spoil our life. Can correct the correctable mistakes. There is no use in fusing (worrying) that 'alas, I have committed mistake!'.  Do introspection.  Be proficient in maneuvering six temperaments.

*- Vethathiri Maharishi*

வெள்ளி, 15 நவம்பர், 2019

Spiritual Service

Daily A Noble Thought -Nov 14


Even while my physical body is operating, the consciousness emanated and expanded from it, functions worldwide as fountain of love. At some specific times, it spreads whole universe and overflows in great calmness.

Peace enjoying consciousness on expanding, after realizing all three layers of knowledge (attached knowledge, learnt knowledge and ultimate wisdom), while it is operating conditioned to any object or living, the evolving properties are compassion, love, morality, duty and sacrifice.

Same consciousness while expanded but before attaining peace, conditioned to objects, shapes as six temperaments and sinful acts causing miseries.  Thus considering the long term continuous history of consciousness, the responsibility increases in life and activities.

I’m overflown with your flood of love, along with the light of consciousness and special responsibility of experiences, penetrating in you.  All of you are joined in my spiritual service on this life link and oneness of consciousness. 

- Vethathiri Maharishi

Silence Period

*Daily A Noble Thought - Nov 15*

*Silence Period*

By practicing SILENCE only, we can win over the thoughts. Life would improve once we record and implement the good thoughts available in silence and the imprints of the previous good deeds.

You may notice all these in experience.  We are at emotional state when we speak. (During that state) We would get the thoughts of all those emotional people from universal magnetism.  They would mingle with our brain and come as our thoughts.

But, in silence once we reach calm state, quietly analyse, realize almighty and connect with it; all those saints who realized this, their powers and thoughts would come as our thoughts. We can experience all those things.  Ideal time to experience the same is silence period.

How long we can practice Silence?

You can be silent for a day.  There may be two days. But, record in mind all those benefits realized in silence period. Utilize all those in life.

Over a period, even one hour silence is fine.  But, even that one hour would be successful.  You can hold the mind instead of running here and there.

Let’s assume that we are used to do so.  Whatever we do, those things gets recorded as imprints and comes as thoughts at times, isn’t it?  Similarly, the silent imprints acquired in divine state during silence, would come even in normal period and take your mind to calm state. 

*- Vethathiri Maharishi*

செவ்வாய், 12 நவம்பர், 2019

People’s Intellectual Growth

The world is slowly changing in its habit of people considering someone as an Intellectual, Great Gentleman, Political leader, Saint, Laureate etc., who put the innocent people in more illusion and lead the life through it.
People’s intellect is growing day by day to compare and analyse on any thought whom-so-ever say it, with nature, mankind history, forefather thoughts, current trend in the world, one’s own knowledge and science.
The innocent darkness of spending useless time in praising one individual man or his thoughts and render himself as useless, is fading away from people on self-analysis.
Resultantly it is certain that in the short time frame, around the entire world, the environment would be setting-in for the man to understand his own value and lead life as a man.
- Vethathiri Maharishi