Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

புதன், 1 ஏப்ரல், 2015

"இயற்கை விதி (Law of Nature)"

ஆகர்ஷண சக்தி (Attractive Force), பிரதிகிருஷ்ண சக்தி (Repulsive Force) என்ற இரண்டுதான் பிரபஞ்சத்தில் நடைபெறும் எல்லா நிகழ்ச்சிகட்கும் அடிப்படை. அணுவின் இயக்கத்தால் பிரதிகிருஷ்ண சக்தியும், வெட்ட வெளியின் அழுத்தத்தால் ஆகர்ஷண சக்தியும் உண்டாயின. ஆகர்ஷண சக்தியை எதிர்த்துப் பிரதிகிருஷ்ண சக்தி இயங்குகின்றது. பிரதிகிருஷ்ண சக்தி தோல்வியுறும் போது அந்த அளவில் ஆகர்ஷண சக்தி செயல்படுகிறது....
.

ஆகர்ஷண சக்தி, பிரதிகிருஷ்ண சக்தி என்ற இரண்டும் வெட்ட வெளியின் அழுத்தச் சக்தி என்ற ஒரே சக்தியின் பிரிவு இயக்கங்களே. பரம அணுக்களும் வெட்ட வெளியும் ஒரு மண்டலத்தில், அல்லது கொத்து நிகழச்சியில் எந்த அளவு விகிதத்தில் அடங்கியுள்ளனவோ அதற்கு ஏற்ப அந்த மண்டல நிகழ்ச்சி சிறப்புறும். ஆகர்ஷண சக்தி, பிரதிகிருஷ்ண சக்தி இவற்றின் இயக்க விதியும் அதன் விளைவுகளும் தான் இயற்கை விதி (Law of Nature) யாக மதிக்கப் பெறுகின்றன. இந்த விதி அணு முதல் அண்டம் வரையில் ஒரு சீரானது, மாறாதது, தவறாதது.
.
ஆகர்ஷண சக்தியின் அடித்தளத்தையும் அறிவின் மூலத்தையும் விஞ்ஞானம் உணரும்போது அது மெய்ப்பொருள் விளக்கமாக, தத்துவ ஞானமாக ஆகிவிடும்.
.
தத்துவஞானம் வேறு, விஞ்ஞானம் வேறு என்று கூற முடியாது. பொருள் நிலையை யூகித்து உணர்ந்து அதன் நிகழ்ச்சி நிலைகளைக் கூறுபடுத்தி விளக்குவது தத்துவம். பொருள் நிலையை மறந்து அல்லது காணமுடியாமல் விடுத்து அதன் நிகழ்ச்சிகளையே பொருள் என மதித்தும் விளக்கிப் பிரித்தும் பேசுவது விஞ்ஞானம். தத்துவ ஞானத்தில் விஞ்ஞானம் அடங்கியுள்ளது. விஞ்ஞானம் தத்துவ ஞானத்தை நாடிச் சென்று கொண்டிருக்கிறது.
.
விஞ்ஞானமாயினும் தத்துவஞானமாயினும் இன்ப துன்ப உணர்ச்சிகளை முறைப்படுத்த மனிதன் எடுத்த முயற்சியின் விளைவுகளே. எனவே வாழ்வின் நலத்திற்கே - தெளிவிற்கே - இனிமைக்கே - விஞ்ஞானமும் தத்துவ ஞானமும் உரியன."
.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
.
விஞ்ஞானத்தோடு மெய்ஞ்ஞானமும் வளர வேண்டும் :
" விஞ்ஞான அறிவு வாழ்வில் இன்பம்
விளைக்கவெனில் பொறுப்புடைய தலைவரெல்லாம்
மெய்ஞ்ஞானம் பெறவேண்டும் அகத்தவத்தால்
மெய்யுணர்வும் உயிர்த்தொண்டும் உலகைக்காக்கும்."
.
விஞ்ஞானிகளுக்கு:
" அறிவினிலே மிக உயர்ந்து நுட்பத்தோடு
அணுவினிலும் நின்றொடுங்கி ஆழ்ந்தாராய்ந்து
அறிவாலே அண்டம், பிண்டம், அரூபம், ரூபம்
அறிந்து விட்டீர் விஞ்ஞான நிபுணரே ! நம்
அறிவு எது? எங்குள்ளது? அந்தமென்ன?
அணுவினிலே உள சக்தி பிறந்த தெங்கே?
அறிவாலே ஒன்றி ஒன்றி ஆய்ந்து பாரீர் !
அணுநிலைக்கு அப்பாலே இரண்டும் ஒன்றாம்."
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக