Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

திங்கள், 22 அக்டோபர், 2012

காணிக்கை




மனிதன் இறந்த பிறகு அவனுடைய ஆன்மாவுக்குத் தேவைகளும், உணர்ச்சிகளும் இருப்பதாகக் கற்பித்து, இங்கே உலகில் கடவுளுக்கென்று கொடுக்கும் பொருட்களெல்லாம் சொர்க்கத்திற்குப் போன ஆன்மாக்களுக்குப் போய் கிடைப்பதாக பல காலம் பலராலும் கூறப்பட்டு, இந்நம்பிக்கையில் கடவுளுக்கு என்று உணவு அளிக்கத் திருவிழாக்களும், கடவுளுக்கென்று பலவகையான பொருட்காணிக்கைகளும் நடைபெற்று வருகின்றன.

மனிதன் உழைத்து சம்பாதிக்கும் எப்பொருளும் அவனைப் போன்று மனித உருவில் உள்ளவர்களுக்குத் தக்க முறையில் உதவி வாழ்வுக்கு வளமளிப்பது அவசியம். மனிதன் கடவுளுக்கு என்று கொடுக்கின்ற எந்தப் பொருளானாலும் எங்கே போய்ச் சேருகிறது என்று கண்டுபிடித்துக் கொள்வது ஒன்றும் சிரமமல்ல. கடவுளுக்கு மனிதன் அதைச் செய்ய வேண்டும் என்பதெல்லாம் இடைத்தரகர்களாக உள்ளவர்களின் ஏமாற்றுச் செயல்கள் தாம்.
...

மனிதகுலத்தின் வளத்தை அழிக்கின்ற பல விசயங்களில் முக்கியமானவை கடவுளுக்கென்று கொடுக்கின்ற பொருட்களும், செய்கின்ற செயல்களுமாகும். இந்தப் பெரிய பொத்தல், இந்த விஞ்ஞான காலத்தில் சிந்தனை மிக்க அறிஞர்களால்தான் அடைக்கப் பட வேண்டும். இப்பொத்தல் அடைக்கப்பட்டு விடும் என்று உறுதியாகவும் நம்பலாம். ஏனெனில், அந்த அளவுக்கு அறிவு கல்வியினாலும், ஆராய்ச்சியினாலும், விஞ்ஞானத்தினாலும், இயற்கையாகவே உயர்ந்து கொண்டு வருகிறது.

- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி -

வெள்ளி, 19 அக்டோபர், 2012

தம்பதியர் பயிற்சி

குடும்பத்தில் கணவன் மனைவி இருவருமே குண்டலினி யோகப் பயிற்சியை ஏற்றுப் பழகுவதனால் வாழ்வில் பல நன்மைகளைப் பெறலாம். பால் உணர்ச்சி வேட்பு இவற்றில் சமநிலை, அறுகுணச் சீரமைப்பு, ஒருவரையொருவர் புரிந்து கொண்டு ஒத்தும் உதவியும் வாழ்தல் இவை அனைத்தையும் குண்டலினி யோகத்தால் பெறவும் காக்கவும் முடியும்.

பிறக்கும் குழந்தைகள் தரமுடையனவாக இருக்கும். பிறந்த குழந்தைகளை வளர்ப்பின் முறையறிந்து வளர்ப்பதால் குடும்பத்திற்கும் சமுதாயத்திற்கும் நலமளிப்பவர்களாக அவர்கள் சிறப்படைவார்கள். சுருங்கச்சொன்னால் குண்டலினி யோகம் பயிலும் ஒவ்வொருவரும் குடும்பத்திற்கும், ஊருக்கும், நாட்டிற்கும், உலக சமுதாயத்திற்கும் அறிவின் நலமளிக்கும் சுடராக, ஆன்மீக ஒளியைப் பரப்பும் நல்விளக்காகத் திகழ்வார்கள். யோகப் பயிற்சியின் மூலம் உடலையும் உயிரையும் அறிவையும் மேலான நிலையில் வைத்துக் கணவன் மனைவி மகிழ்ச்சியோடும் நிறைவோடும் வாழ முடியும்.

- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி -

புதன், 10 அக்டோபர், 2012

மனதை செம்மை படுத்த வேதாத்திரி மகரிஷி கூறிய இரத்தின கருத்துக்கள் ...




வாழ்க வையகம்                                                                     வாழ்க வளமுடன்

 
* மனம் தான் மனிதவாழ்வின் விளைநிலம். அதை செம்மையாக வைத்துக் கொண்டால் வாழ்வு வளம் பெறும்.

* மனதை அடக்க நினைத்தால் அலையும். அதை அறிய நினைத்தால் அடங்கும். தவறு செய்வதும் மனம் தான். இனி தவறு செய்யக்கூடாது என்று தீர்மானிப்பதும் மனம்தான்.

* அன்றாடம் மனம் பலவிதமான விஷயங்களில் அலையவிட்டு தடுமாற்றம் பெறுகிறது. குறிப்பிட்ட நேரம் தியானம் செய்து மனதை தூய்மைப்படுத்தினால் மனநலம் மேம்பாடு அடையும்.

* வாழ்வில் இடையிடையே சிக்கல்கள் ஏற்படுவது இயற்கையே. அதைக் கண்டு மிரள்வது அறிவுடைமை ஆகாது. அவற்றை எப்படி எதிர்கொள்வது என்று சிந்தித்து தீர்வு காண்பதே சிறந்தது.

* கவலைப்படுவதால் மட்டுமே சிக்கலில் இருந்து மீளமுடியாது. இன்னும் சொல்லப்போனால் கவலையின்போது பிரச்னை மேலும் பெரிதாகிவிடும்.

* தீர்க்க முடியாத துன்பம் என்ற ஒன்று வாழ்வில் கிடையவே கிடையாது. தீர்க்கும் வழிவகைகளை அறியாமல் தான் நாம் துன்பத்தைக் கண்டு அஞ்சுகிறோம். திறக்க முடியாத பூட்டு எதுவுமில்லை. அதற்கான சரியான சாவியைத் தேடிப்பிடித்தால் போதும்.

-அருட்தந்தை வேதாத்ரி மகரிஷி
 

சனி, 22 செப்டம்பர், 2012

கவலை




நினைப்புக்கும், நடப்புக்கும் இடையே வித்தியாசம் வரும்போது இருக்கும் மன நிலையை கவலை என்கிறோம். இருப்புக்குத் தகுந்தவாறு தேவையை மாற்றி அமைத்துக் கொள்ளும்போது கவலை இராது. கவலை உள்ளத்தில் நிலைபெறவொட்டாமல் அவ்வப்போது ஆராய்ந்து களைந்து கொண்டே இருக்க வேண்டும். கவலை வளர்ந்தால் மனதில் நல்லெண்ணங்கள் வரா; அவை நிலைக்கா; உடலாற்றல் செலவாகிக் கொண்டே இருக்கும்.

கவலையை ஒழிக்கத் தேவையானவை:
...
இயற்கை ஒழுங்கமைப்பை அறிதல்
சிந்திக்கும் திறனை பெருக்கிக்கொள்ளுதல்
தன்னம்பிக்கை
முயற்சி
துணிவு

கவலை எழாமல் காக்க
1. தேவையின்றி சிக்கலைத் தானே பெருக்கிக் கொள்ளாது இருத்தல்
2. அவசியமற்ற முறையில் பிறர் செயலில் தலையிடாது இருத்தல்
3. எந்தக் காரணத்தைக் கொண்டும் போதிய நீதி உணர்வு இல்லாமல் தன்கடமையிலிருந்து வழுவாது இருத்தல்

பிறரிடம் எழும் சினமும், தன்னிடம் எழும் சினமாகிய கவலையும் ஒருவரிடம் காணப்படுமானால், அவர் ஆன்மீகத்தில் முன்னேற முடியாது.

- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி -

வியாழன், 6 செப்டம்பர், 2012

வேதாத்திரிய சிந்தனைகள் : " வலி, நோய், மரணம் "


 உயிர் விண்ணாம் சூக்குமம் ஆம் உடலுக்குள்ளே
உயிர் சுழல விரியும் அலை சீவகாந்தம்
உயிர் காந்தம் உடலில் அணு அடுக்கைக் காக்கும்
...
உடலியக்கம் மனஇயக்கம் நடத்திவைக்கும்
உயிர் காந்தம் உடலில் மின்குறுக்கு ஆனால்
உடலில் வலி நோய்கள் இவையாக மாறும்
உயிர் காந்தம் மின் குறுக்கால் வற்றிப் போனால்
உயிர் தாங்கும் வித்துடையும் உயிரும் போகும்.

-வேதாத்திரி மகரிஷி

பஞ்ச பூதங்களின் கூட்டுதான் சீவன்கள் ஆகும். சீவன்களில்
கண்களால் காணக்கூடிய உடல் பரு உடலாகும். கண்களுக்குப்
புலப்படாத சூக்கும உடல் என்பது தன்னைத் தானே
சுற்றிக்கொண்டும் உடல் முழுதும் சுற்றிக்கொண்டிருக்கக்
கூடிய உயிர் துகள்களின் தொகுப்பே ஆகும். இதே போன்று
கண்களுக்குப் புலப்படாத காந்த உடல் என்பது தன்னைத்
தானே சுற்றிக்கொண்டிருக்கக் கூடிய உயிர் துகள்களிலிருந்து
வெளியேறும் நுண் துகள்களான காந்தமும் அது உடல் முழுதும்
சுற்றி கொண்டிருக்கும் ஓட்டமும் ஆகும். இக்காந்த ஓட்டம்தான்
அணு அடுக்குகளை சீராகக் காக்கிறது. இதுவே உடல்
இயக்கங்களையும் மன இயக்கங்களையும் பராமரிக்கிறது.
அணு அடுக்கில் ஏதேனும் காரணத்தால் சீர்குலைவு
ஏற்பட்டால் அதை சீர்செய்ய அதிகமான சீவகாந்தம்
அங்கே குவியும்போது அது மின் குறுக்காகி, வலியாக
உணரப்படுகிறது. பாதிக்கப்பட்ட பகுதி இடத்தால் அகன்றும்,
காலத்தால் நீட்டிக்கும்போது நோய் எனப் படுகிறது.
அதிகமான சீவகாந்தம் நோயைப் போக்க முயலும்போது
உடலை நடத்த போதுமான சீவகாந்தம் குறைவுபடுகிறது.
இத்தேவையை நிறைவு செய்யவேண்டி உயிர்த் துகள்கள்
வழக்கத்தைவிட வேகமாக சுழல்வதால் உடல் வெப்பம்
அதிகமாகி, அவ்வெப்பத்தைத் தாங்கமுடியாமல் வித்துக்
கலயம் உடைந்து சீவ வித்துக் குழம்பு உடலைவிட்டு
வெளியேறிவிடுகிறது. உயிரைப் பிடித்துக் கொண்டிருந்த
சீவ வித்துக் குழம்பு உடலைவிட்டு வெளியேறியதும்
உடலிலிருந்து உயிர் வெளியேறிவிடுகிறது. இதுவே
மரணம் ஆகும்.
 
வாழ்க வளமுடன்.

வியாழன், 12 ஜூலை, 2012

வேதாத்திரிய சிந்தனைகள் : " நிறைந்த உள்ளம் "




 
நீர் நிறைந்த பாண்டத்துள் காற்றேறாது
நித்தியமாம் மெய்ப்பொருளால் நிறைந்த உள்ளம்
ஊர் உலகப் பொருள் கவர்ச்சி உணர்ச்சி ஏதும்
... உள் நுழையா இப்பேறு தவத்தாலன்றி
யார் பெறுவர் யார் தருவர் அறிவு ஓங்கி
அதுவே தான் மெய்ப்பொருளென்றறியும் பேற்றை
சீர் நிலையில் மனம் வைத்து வேண்டாப் பற்றை
செதுக்கிக் கொண்டேயிருக்கும் விழிப்பு வேண்டும்.    - வே.மகரிஷி

ஒரு பாத்திரத்தில் நீரை நிரப்பும்போது அதிலுள்ள காற்று
எவ்வாறு வெளியேறி விடுகிறதோ அதைப் போன்றே
இறைநிலையோடு தொடர்ந்து தொடர்பு கொள்ளும்போது
நம் மனதுள் உள்ள எல்லா தீய குணங்குளும், எல்லா
உலகியல் பற்றுகளும் நம்மை விட்டு நீங்குவதோடு
நம் மனம் தூய்மை அடைகிறது. இந்நிலையை நாம்
அடைய வேண்டுமானால் அதற்கு 'தவம்' மட்டுமே
உதவி புரியும். வேறு எந்த வகையிலும் யாரிடமும்
பெறவும் முடியாது. தரவும் முடியாது. இந்நிலையில்
அறிவு உயர்வடைந்து தானே பரம்பொருள் என்பதை
அறிந்துகொள்ளும். இந்த விழிப்பு நிலையில் நம்மை
நாம் சீரமைத்துக் கொண்டு, நம்மிடமுள்ள வேண்டாத
குணங்களை நீக்கிக் கொள்ள வேண்டும். நாம் மனித
நிலையிலிருந்து மகான் என்ற நிலையை அடைய
முடியும். ஒரு கல் அல்லது மரத்தில் தேவையற்ற
பகுதிகளை நீக்கும்போது எப்படி அது ஒரு அழகிய
சிலையாக மாற்றம் பெறுகிறதோ அதைப் போன்று.


வாழ்க வையகம். வாழ்க வளமுடன்.

புதன், 11 ஜூலை, 2012

பிறப்பும் இறப்பும்




பிறப்பும் இறப்பும் உருவ தோற்றமான உடலுக்கே அன்றி, அரூபமாக இருக்கும் இயங்கும் உயிருக்கு அல்ல.

அணுக்களின் எழுச்சி, கவர்ச்சி என்ற இயக்கத்தால் ஏற்படும் அவைகளின் கூடுதல், பிரிதல் என்ற நிகழ்ச்சிகளே எல்லா உருவங்களின் தோற்ற, மறைவு சம்பவங்களாகும். தொடர்ந்து நடைபெற்று வரும் அணுக்களின் கூட்டு இயக்கத் தன்மாற்றச் சிறப்புகளின் அவ்வப்போதைய நிலைகளைக் காட்டுவதே பொருட்கள், ஜீவராசிகள் இவைகளின் உ
ருவ அமைப்புகளும் அவைகளின் பல்வேறு இயக்கங்களும் என்பது தெளிவான விளக்கம்.

உயிர் என்பது அரூபமனாது. அது அணுவுக்கு அப்பால் மெளனமாக உள்ளது. அதுவே அணுவில் இயக்கம், ஒலி, ஒளி இவைகளாக இருக்கிறது. ஜீவ ராசிகளின் புலன்கள் கூடுதலுக்கேற்பவும், தேவையுணர்வு, அனுபோகம், இன்ப துன்பம் என்பனவான அனுபவங்களுக்கு ஏற்பவும் அதே சக்தி அறிவாக இருக்கிறது. இந்தச் சக்தி எங்கும் நிறைந்து என்றும் உள்ளது. இந்தப் பேராதார நிலையாகிய உயிருக்கு பிறப்பும் இல்லை. இறப்பும் இல்லை.

- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி
-

செவ்வாய், 1 மே, 2012

வேதாத்திரிய சிந்தனைகள் : - " க ர் ம யோ க ம் "



கர்ம யோகம் என்பது கடமை அறம் என்பதாகும். தனக்கும்
சமுதாயத்திற்கும் எந்த துன்பமும் விளைவிக்காமல், நன்மையே
தரக்கூடிய செயல்களை மட்டும் செய்து வாழ்வது கர்ம யோகம்.
... கர்மம் என்றால் செயல். செயல் என்பது கடமையை குறிக்கின்றது. கடமை என்பது நன்றி உணர்வு. தொப்புள்கொடி (பிறப்பு) அறுப்பது
முதல் அரைஞான் கயிறு (இறப்பு) அறுப்பது வரை மனிதனானவன்
பிறருடைய உதவியால் வாழ்ந்துவருகிறான். அவனது வாழ்வில்
அவன் சாதித்ததாக நினைக்கும் அனைத்தும், அவன் பெற்றது
அனைத்தும் சமுதாயத்தால் அவனுக்கு அளிக்கப் பட்டவைகளே.
இதை மனித மனம் உணர்ந்து தன்னால் இயன்ற அளவு, தன்னுடைய
அறிவைக்கொண்டும் பொருளைக்கொண்டும், உடலைக்கண்டும்
சமுதாயத்திற்கு என்ன செய்யமுடியுமோ அதை செய்து இன்புறுவது
கடமை ஆகும். இதுவும் ஒருவகையில் தொண்டு ஆகும்.

யோகம் என்றால் அறவாழ்வு. அறவாழ்வு என்பது விளைவறிந்த
விழிப்பு நிலையில் தனது எண்ணம், சொல், செயல்களை ஒழுங்கு
படுத்தி சமுதாயத்திற்கும், தனக்கும் ஒத்தும் உதவியும்
வாழக்கூடிய வாழ்வு ஆகும். இறைநீதி ஆனது நமது செயல்களுக்கு
ஏற்ற விளைவாக இன்பத்தையோ துன்பத்தையோ அளிக்கிறது என்பதை உணர்ந்து நன்மைகளை மட்டுமே ஆற்றி இன்பத்தை
மட்டுமே பெற்று வாழ்வது விளைவறிந்த விழிப்பு நிலை ஆகும்.
நம்மை வாழவைக்கின்ற சமுதாயத்திற்கு நம்மால் முடிந்ததை
திருப்பிசெலுத்துவதே கர்ம யோகம் எனும் கடமை அறம் ஆகும்

வெள்ளி, 27 ஏப்ரல், 2012

வேதாத்திரிய சிந்தனைகள் : - " நான் யார் "

நான் யார் என்றே வினவ நல்லுடலும், உயிர், அறிவு
நல்லினைப்பியல்பாய்க் கூடியொரு நாட்டமுடனே ஒலிக்கும்
ஊன்உடலே வாகனமாம் உள்ளியங்கும் ஆற்றல் உயிர்
... வான்கடந்த மெய்ப்பொருளே வாலறிவாம் அதுவே நான்.
 
-வேதாத்திரி மகரிஷி

" நான் யார் ", மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் இக்கேள்வி கேட்டு விடைகான வேண்டியது அவசியம். அப்போதுதான் பிறவியின்
நோக்கம் நிறைவுபெறும். ஆனால் நாம் " நீ யார் " என்ற கேள்வியையே
எழுப்பிக்கொண்டிருக்கிறோம். இதனால் நமக்கு ஒரு பலனும் இல்லை.
பஞ்சபூதங்களால்தான் எல்லா தோற்றங்களும் உயிர்களும் உருவாகி
இருக்கின்றன. அப்படியானால் நாம் (மனிதன்) பஞ்சபூதங்களால்
ஆக்கப்பட்டவர்களே. பஞ்சபூதங்களுக்கு மூலம் விண். விண்ணுக்கு
மூலம் சுத்தவெளி. வெளி என்பதுதான் அனைத்துக்கும் மூலம்.
இதுவே தெய்வம். கடவுள். அப்படியானால் நாம் அனைவருமே
கடவுள்தான். உண்மை. இறைநிலையே உடலாகவும், உயிராகவும்,
அறிவாகவும் ஒரு குறிப்பிட்ட விகிதாச்சாரத்தில் இனைந்து
மனிதனாக வந்துள்ளது. உயிரை தாங்கும் வாகனமாக உடல்
செயல்படுகிறது. அனைத்தையும் இயக்கிகொண்டும், அறிந்துகொண்டும், வழிநடத்துவது அறிவு ஆகும். நமக்குள்
எல்லாமாக இறைநிலையே இருந்தாலும் அறிவே சிறப்பாக
இயங்குவதால் '' அறிவே நான் ''. எனவே அறிவே தெய்வம்.

வியாழன், 26 ஏப்ரல், 2012

வேதாத்திரிய சிந்தனைகள் : - "தொழில்"

* தொழிலும் வருவாயும் உள்ளவர்களே கடமைகளை ஒழுங்காகச்
... செய்யமுடியும். அறவழியில் நடக்கமுடியும். ஆகவே உடல்
வலிவுள்ள யாவரும் தொழில் செய்தேயாகவேண்டும்.
செலவுக்கேற்ற வருவாய் தேடியே ஆகவேண்டும்.

* முற்றிலும் தனக்குத் தெரியாத ஒரு வாணிபத்தில் இறங்குவது
கூடாது. பெரிய அளவில் செல்வ முதல் உடையோர்கள் ஊதியத்தின்
மூலம் பலருடைய தொழில் நுட்பத் திறமைகளை ஒன்றுசேர்த்து
பயன்பெறலாம். மற்றவர்களுக்கு புதுத் துறை ஏற்றதல்ல.

* முறையாகச் செய்யும் தொழிலானது உடல், உள்ளம், குடும்பம்,
ஊர், நாடு, உலகு இவற்றிற்கு மேன்மை தரும். வசதியிருந்து
பொருள் ஈட்டாமல் உணவு கொண்டு வாழ்பவர்கள் பொருளாதாரச்
செழிப்பை அரிக்கும் கிருமி, சமுதாயாத்திற்கு ஒரு நோய்.



புதன், 11 ஏப்ரல், 2012

வாழ்வுக்கு ஆதாரமான அறநெறிகள்





 1. வாழ்வின் நோக்கம்,, தேவைகள், விருப்பங்கள் இவற்றை மதிப்பிட்டுக் கொள்ள வேண்டும். இவை ஒன்றுக்கொன்று முரண்படாமல் அமைத்துக்கொள்ள வேண்டும்.

2. தனக்கு அமைந்துள்ள சூழ்நிலைகளையும் வாய்ப்புகளையும் கணித்துக் கொள்ள வேண்டும்.
...
3. இயற்கையின் ஒழுங்கமைப்பும், அதன் ஆற்றலின் விளைவான காரண காரிய விளைவு விதியைப் பற்றி உணர்ந்து கொண்டு மதித்து போற்றி நடக்க வேண்டும்.

4. வாழவேண்டிய முறைகளையும், ஆற்றவேண்டிய செயல்களையும் வரிசைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

5. இத்தகைய வாழ்வுக்குத் தன்னைத் தகுதியாக்கிக் கொள்வதற்கு உடல் வலிமையையும், திறனையும், அறிவையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

6. விடாமுயற்சியோடும், எண்ணம், சொல், செயல் இவற்றைப் பயன்படுத்த வேண்டும்.

7. அவ்வப்போது வாழ்க்கையில் ஏற்படும் தவறுகளைத் தற்சோதனை, செயல்திருத்தம் என்ற இரண்டு வழிகளிலும் திருத்தித் தன்னை தூய்மையாக்கிக் கொண்டே இருத்தல் வேண்டும்.

இத்தகைய அறநெறிகளை வாழ்விலே பின்பற்றி செயல்பட்டால், வாழ்வு இனிமையாகவும், அமைதியாகவும், சிறப்பாகவும் இருக்கும்.

அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி

புதன், 30 நவம்பர், 2011

வேதாத்திரிய திருக்குறள் உட்பொருள் விளக்கம்

“பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவனடி சேரா தார்”

ஓர் உயிருக்குப் பிறவித் தொடர் நீண்டு கொண்டே போவதற்கு மூன்று காரணங்கள் உள்ளன.

1) உலகப் பொருட்களைத் துய்த்தும் நிறைவு பெறாமல் அவற்றின்மீது பற்றி நிற்பது.
2) விளைவறியாது பழிச்செயல்களை ஆற்றி ஆன்மாவில் பாவப் பதிவுகளைக் கூட்டிக் கொண்டிருப்பது.
3) தனக்கு மூலநிலையான தெய்வ நிலை உணர்ந்து அதனோடு இணைப்பு பெறாதது.

இம்மூன்று குறைபாடுகளால் உயிர் உலகக் கவர்ச்சியில் நிற்கின்றது. வான் கவர்ச்சிக்கு வழியில்லை. பரம்பொருளாகிய இறைவனின் நிலையுணர்ந்து தன்னை அதனோடு இணைத்துக் கொள்ளும் பேற்றை ஒருவன் பெறாவிட்டால் வினைப்பதிவுகளால் பிறவித் தொடர் நீண்டு கொண்டே போகும். பிறவிக் கடலைக் கடக்க முடியாது என்று தெளிவுபடுத்துகின்றார் இந்தக் குறளில்.

வியாழன், 10 நவம்பர், 2011

ஐக்கிய நாடுகள் சபையில் வேதாத்திரி மகரிஷி ஆற்றிய உரை

(9 சனவரி, 1973)

(ஆங்கில உரையிலிருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது.)

அன்பான நண்பர்களே, ஆன்மீக மேம்பாடு பற்றிக் கேட்பது என்ற நல்ல நோக்கத்தோடு இங்கு குழுமியிருக்கும் உங்களனைவரையும் பார்த்து நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். ஆன்மீக அறிவு என்பது வாழ்க்கையை முழுமையாக்குவதற்கும், ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும், உலக மக்கள் அனைவரது வாழ்விலும் அமைதியைப் பராமரிப்பதற்கும், மிக அவசியமான ஒன்றாகும்.

மிகப் பெரிய நிறுவனமான ஐக்கியநாடுகள் சபை இதற்காகத் தொடங்கப்பட்டது. மனிதகுலத்தில் அமைதியை ஏற்படுத்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் ஐ.நா. சபை இயங்கி வருகின்றது. அரசியல் துறையிலும் பொருளாதாரத் துறையிலும் அமைதியைக் கொண்டு வருவதற்கு ஐ.நா. சபை மிகக் கடினமாக உழைக்கின்றது.

எல்லா நாட்டுப் பிரதிநிதிகளையும் ஒருங்கிணைத்து உலக அமைதியைப் பற்றி எண்ணுவதற்கான ஒரு நல்ல திட்டமே ஐக்கிய நாடுகள் சபை. ஆபத்தான அணு ஆயுதங்களுக்கு எதிராக மனித இனம் உயிர் வாழ்வதற்கான ஒரே நம்பிக்கை உலக சமாதானமாகும்.

தத்துவ ஞானத்தில் சிறந்தவர்களும், உலகளாவிய எண்ணங்களில் சிறந்த அறிஞர்களும் ஐக்கிய நாடுகள் சபை ஆற்றும் நற்பணிகளைப் பாராட்டுகிறார்கள்.

ஆன்மீக அறிவு மேம்பாடு:
இங்கே, நான் உலக அமைதிக்கு மிக முக்கியமான மற்றொன்றையும் குறிப்பிட வேண்டும்.. அது மனித இனம் ஆன்மீக அறிவில் மேம்பாடு அடைவதாகும்.

உண்மையிலேயே, அமைதியான வாழ்க்கைக்குப் பொருளாதார வசதிகள் அவசியமானவை. ஆனால் ஆன்மீக அறிவு இல்லாமல், பொருள் வசதிகள் மட்டும் வாழ்க்கையில் திருப்தியையும், அமைதியையும் கொண்டு வர முடியாது. இங்கு ஓர் எடுத்துக்காட்டு தருகிறேன்.

உணவு, உறைவிடம், உடை ஆகியவை உலகியல் வாழ்வில் அவசியமான பொருட்கள். உலகையும் இம்மூன்று அவசியமான பொருட்களின் சேமிப்பையும் அகக்காட்சியாகப் பாருங்கள்.

துணிகள் உற்பத்தியை உலகம் இன்று உடனடியாக நிறுத்தி விட்டாலும் இப்போது நாம் உற்பத்தி செய்து சேமித்து வைத்துள்ள துணிகள் எல்லா மக்களுக்கும் இரண்டு ஆண்டுகளுக்குப் போதுமானதாக உள்ளன. இதுபோல், சேமித்து வைத்துள்ள உணவு ஓராண்டிக்குப் போதுமானதாக உள்ளது. உறைவிடமும் ஒருவருக்குத் தேவையான பரப்பளவிற்கு எடுத்துக் கொண்டால், யாருக்கும் உலகில் வீடு இல்லை என்று தவிக்க வேண்டியதில்லை.

சில மனிதர்களிடமும் சில நாடுகளிலும் இந்த வசதிகள் குறைவாக இருக்கலாம். மற்ற மனிதர்களிடமும் நாடுகளிடமும் இவை உபரியாக உள்ளன.

ஆன்மீக அறிவின் மேம்பாடுதான் இவ்வாழ்க்கைத் தேவைகளை உலக மக்களுக்கு அன்பு, மதிப்பு, பொறுப்பு இவற்றுடன் பகிர்ந்து கொள்ள வழிவகுக்கின்றது.


ஆன்மீக வளர்ச்சியினால் ஒரு மனிதனிடம் இயற்கையாக மலர்கின்ற அன்பு மற்ற மனிதர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ள வைக்கிறது. அன்பு மற்றவரது தேவைகளையும் ஆசைகளையும் மதிக்கின்றது. திருப்திகரமான வாழ்க்கைக்கு, மற்றவர் எடுக்கின்ற முயற்சிகளுக்கு அன்பு உதவுகிறது. ஒருவரது அன்பு தனது சொந்த உடலுழைப்பையும், பொருளாதார வசதியையும், அறிவாற்றலையும் மற்றவர்களுக்குத் தந்து, தியாக உணர்வுடன் விரும்பி வாழ உதவுகிறது.

அரசியல்> பொருளாதார வழிகளில் ஒருவரது வாழ்க்கை வசதிகளை அதிகப்படுத்த முயற்சிகள் எடுப்பதோடு, மனித சமுதாயத்தில் ஆன்மீக முன்னேற்றமும் ஏற்பட ஒரு வாய்ப்பு தர வேண்டும். ஏனெனில், தகுதியுடைய மக்கள் அனைவரும் ஆன்மீக அறிவில் குறிப்பிட்ட காலத்தில் மேம்பாடு அடைவர்.

ஆன்மீக மேம்பாடு என்றால் என்ன? என்பதைக் கவனிப்போம். வாழ்கின்ற முறையில் மனம்தான் மையப் பொருளாக உள்ளது. சிறப்பான இயக்கமாக உள்ளது. ஒருவன் மனதின் மதிப்பையும், அதன் அற்புதமான செயலையும் புரிந்து கொள்ளும்போது, அவனால் வெற்றிகரமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ்க்கையை அனுபவிக்க முடிகிறது.

உயிரும் மனமும்:
உயிரின் படர்க்கை நிலையே மனம் என்பதால், முதலில் உயிரைப் பற்றி நன்கு தெரிந்து கொள்வோம். ஏனெனில், உயிர்தான் மனதிற்கு அடிப்படை. உயிரும் மனமும் மனிதனின் அறிவாட்சித் தரத்தில் (ஆளுமைத்திறனில்) இரகசியமான அம்சங்கள். ஐம்புலன்கள் மூலம் பெறும் அறிவைக் கொண்டு இவற்றைப் புரிந்து கொள்ள முடியாது.

ஓர் ஒழுங்குமுறையான மனப்பயிற்சியின் மூலம்தான் இவற்றைப் புரிந்து கொள்ள முடியும். மனம் அதனுடைய மூலத்தைத் தேடுவதும், உயிர், மனம் இவ்விரண்டின் இருப்பையும், அவற்றின் இயக்கத்தையும், இவை ஒவ்வொன்றிற்கும் இடையே உள்ள தொடர்பையும் புரிந்து கொள்ள மனப்பயிற்சி உதவுகிறது. இத்தகைய மனப்பயிற்சிதான் தவம் அல்லது எளியமுறை குண்டலினி யோகம் எனப்படுகிறது.

குண்டலினி என்ற பெயர் இறையாற்றலைக் குறிக்கிறது. இது பிரபஞ்சத்திலுள்ள எல்லா ஆற்றல்களுக்கும் அடிப்படையான உயர்ந்த பேராற்றல். உயிரினங்களிலுள்ள உயிராற்றல் இறைநிலையின் பேராற்றலின் ஒரு பகுதிதான். இறைநிலையின் பேராற்றல்தான் பிரபஞ்சத்தின் இயக்கங்களை வழி நடத்துகிறது. உண்மையிலேயே அடிப்படையான விண்துகள்களின் தொகுப்புதான் வெவ்;வேறு திணிவுகளுடன் விளங்கும்போது தோற்றப் பொருட்களாக அமைகின்றன.

எனவே, விண்துகள் (அல்லது உயிர்த்துகள்) தான் பௌதிகத் தோற்றப் பொருட்கள் உற்பத்திற்கு அடிப்படையான தத்தவமாகவும், மனம் மன இயக்கத்திற்கு அடிப்படையானதாகவும் விளங்குகின்றன என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

விண்துகள்> அதன் இருப்பு> இயக்கம், விளைவு இவற்றை அறிந்து உணர்ந்து கொள்ளுதலே ‘ஆன்மீக அறிவு’ எனப்படும். இந்த அறிவுதான் எல்லா விஞ்ஞானங்களுக்கும் விஞ்ஞானம் ஆகும். பொருளாதார அறிவோடு மட்டும் வாழுதல் என்பது மனதிற்கு ஒருபுறம் பாரமாக இருக்கும். அதைச் சரிசமன் செய்வதற்கு ஆன்மீக அறிவு கட்டாயம் தேவை.

உயிரை உணர்தல்:
நமக்குள் உயிராற்றலாக இயங்குகின்ற உயிரை எப்படி உணர்ந்து கொள்வது? உயிர்த்துகள் உடல் முழுவதும் ஊடுருவிச் சென்றாலும் பரு உடலின் நடுப்பகுதியில் ஓர் இயக்க மையம் உயிருக்கு அமைகின்றது. பொதுவாக, உயிரின் இயக்க மையம் என்பது முதுகுத்தண்டின் அடியில் அமைந்து உள்ளது. இதை ‘மூலாதாரம்’ என்று முந்தைய யோகியர்கள் அழைக்கின்றனர்.

இந்த உயிரியக்க மையத்தை மூலாதாரத்திலிருந்து ஆக்கினைச் சக்கரம் என்ற புருவ மத்திக்கு மாற்றி அமைத்தாலன்றி, உயிரின் இருப்பையும் இயக்க நிலையையும் மனதால் உணர முடியாது.

முற்கால யோகிகள் மூச்சுப் பயிற்சியின் மூலமாகவும், மந்திரங்களை உச்சரிப்பதன் மூலமாகவும் இந்த உயிர் மையத்தை மாற்ற முயற்சி செய்தனர். ஆனால், இவ்விரண்டு முறைகளும் கடினமானவை. அதிகக் காலம் எடுத்துக் கொள்பவை. சக்தியை மேலே கொண்டு வருவதற்குப் பல ஆண்டுகள் பயிற்சி செய்ய வேண்டும்.

இதற்கிடையில் இந்த ஆற்றலை மேலே கொண்டு வரும்போது, வழியில் தடை ஏற்பட்டால், உயிருணர்வு பெறுபவர் சில தீய விளைவுக்கான பயன்களை அனுபவிக்க நேரிடும். எனவே, குடும்ப வாழ்வில் ஈடுபட்டோர் இந்த யோகத்தின் நன்மைகளை உணர முடியாமல் போயிற்று.

இப்போது ஒரு புதிய முறையை நாம் கண்டுபிடித்துள்ளோம். இது பாதுகாப்பானது;;. உண்மையானது. விரைவானது. குண்டலினி யோகத்தில் சிறந்து விளங்குகின்ற குருவானவர் கற்றுக் கொள்ளும் மாணவரது உயிராற்றலைச் சில நிமிடங்களிலேயே எளிதாகத் திணிவு பெறச் செய்து, தொடுதல் முறையில் மேலே கொண்டு வர முடியும்.

குருவானவர் குண்டலினி சக்தியின் இயக்க மையத்தை மாற்றி, நிலை நிறுத்தியவுடன் கற்பவர் உயிர்ச்சக்தியின் அழுத்தத்தைப் புருவமத்தியில் மனதால் கவனிக்க வேண்டும். இந்த வழிமுறையே ‘தவம்’ எனப்படும். உயிராற்றலை மனதால் கவனிக்கும்போது மனதின் விழிப்புநிலை முன்னேற்றம் அடைகிறது. உயிராற்றல் வீணாகச் செலவாவதைச் சேமிக்கிறது. மனதில் உறுதியையும் அமைதியையும் அதிகப்படுத்துகிறது.

மனம் அதன் அடிப்படையான உயிரைக் கவனிக்கின்றபோது உயிரும் மனமும் இருப்பதையும் இயங்குவதையும் இவற்றிற்கு இடையே உள்ள தொடர்பையும் செய்முறை பயிற்சியின் அனுபவத்தால் நன்கு உணர்ந்து கொள்ள முடிகின்றது.

தவத்தில் தெளிவாக இறைநிலையை உணர்ந்த குருவின் மூலம் ஆன்மீக சாதனை கற்பவரின் உயிராற்றலை> குண்டலினி சக்தியை மூலாதாரத்திலிருந்து ஆக்கினை மையத்திற்குக் கொண்டு வந்து, நிலை நிறுத்தி, உணர வைப்பது ‘தீட்சை’ எனப்படும். இது ஆன்மீக சாதனைப் பயிற்சியில் முதல்படி. மேலும் சில பயிற்சிகள் உள்ளன. அவை ஒவ்வொன்றையும் கற்றுப் பழக வேண்டும். உலக சமுதாய சேவா சங்கத்தின் உறுப்பினர்களான நாங்கள் இந்தக் குண்டலினி தவத்தை ‘எளியமுறைக் குண்டலினி யோகம்’ (Simplified Kundalini Yoga) என்று அழைக்கிறோம்.

எளியமுறைக் குண்டலினி யோகம் (SKY):
இது நான்கு பயிற்சி முறைகளை உள்ளடக்கியது. அவை:
(1) அகத்தவம் (Meditation)

(2) அகத்தாய்வு (Introspection)
(3) குணநலப்பேறு (Sublimation)
(4) முழுமைப்பேறு (Perfection)

அகத்தவம் மன உறுதியையும் மன அமைதியையும் பெருக்குகிறது.

அகத்தாய்வு அறிவு ஒளி வீசச் செய்கிறது. ஒருவரது வாழ்க்கையில் ஒளி விளக்காக வழி காட்டுகிறது.

குணநலப்பேறு ஒருவரது பழக்கங்களிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாகத் திருத்தி, நல்ல குணங்களை உண்டாக்குகின்றது.

முழுமைப்பேறு என்பது ஆன்மீக மேம்பாட்டில் சிறப்பாகக் கிடைத்த கனி,

இந்த எளியமுறைக் குண்டலினியோகம் முழுவதையும் பத்து (10) வகுப்புகளில் (வகுப்பிற்கு ஒரு மணி நேரம் என்ற முறையில்) கற்றுக் கொள்ள முடியும்.

அன்புள்ள நண்பர்களே, மனிதன் பழக்கத்திற்கும், விளக்கத்திற்கும் இடையே போராடிக் கொண்டிருக்கின்ற விநோதமான உயிரினம். ஒழுங்கான ஆன்மீகப் பயிற்சியின் மூலம் சிந்தனை ஆற்றலை வளர்த்துக் கொண்ட பின்னர்தான், மனிதன் முழுமைப்பேறு என்ற இலட்சியத்தை அடைய முடியும்.

உலக சமுதாய சேவா சங்கத்தின் நோக்கமே ஆன்மீக அறிவை எல்லா நாட்டு மக்களுக்கும் பரப்புவது ஆகும். என்னுடைய வாழ்வில் நாற்பது (40) ஆண்டுகள் ஆராய்ச்சி செய்த பிறகு ஆன்மீக அறிவு மட்டுமே தனிமனிதனிடத்திலும் சமுதாயத்திலும் நாடுகளுக்கிடையேயும் அமைதியை விளைவிக்கும் என்பதை நான் கண்டு கொண்டேன். ஆன்மீக மேம்பாட்டிற்கு ஒரு பாதுகாப்பான, முழுமையான முறையை நான் வழிவகுத்தேன். அதைத் தகுதியான மனிதர்களுக்குப் போதித்து வருகிறேன்.

அற்புதமான உளப் பயிற்சியில் ஈடுபடுத்திக் கொள்ள விரும்புகின்ற எந்த நண்பருக்கும் என்னுடைய அறிவைப் பகிர்ந்து கொள்ள நான் எப்போதும் தயாராக இருக்கிறேன். இச்சொற்களோடு என்னுடைய உரையை நிறைவு செய்கிறேன்.

“நீங்களனைவரும் உடல்நலம், நீளாயுள், நிறைசெல்வம், உயர்புகழ், அமைதி பெற்று, ஓங்கி வாழ்க வளமுடன்” என வாழ்த்துகிறேன்.


Vethathiri Maharishi’s Immortal Speech at the United Nations Organization, New York, U.S.A.On 9th January 1975 :
“Dear Friends, I am very much glad to see all of you gathered here with a noble aim of hearing something about spiritual development. The spiritual knowledge is very important to make our life perfect and to maintain peace in the life of one and all on the Globe. This great Organizati...on U.N.O. has been started and is functioning only with the aim of establishing peace among mankind. In both political and economic fields, the U.N.O. strives hard to bring peace.

”It is a noble scheme to bring the representatives of all nations under one roof and make them think about the international peace which is the only hope of survival of mankind against the dangerous atomic weapons. The world of philosophical wisdom and intellectuals of international thought will appreciate the useful works of U.N.O.
Spiritual Knowledge Development:

”Here I have to point out one more things which are also very much important for peace. That is the development of spiritual knowledge among mankind.

“Of course material comforts are essential for peaceful life but without spiritual knowledge, material comforts alone will not bring satisfaction or peace in life.

“Here I will give an example. Food, shelter and clothes are the important commodities in materials comforts. Please visualize the whole world and the available stocks of these three main commodities.

“The clothes in stock at present will be sufficient for the next two years for all people even though the whole world stops production at once. Similarly, the present stock of food will be sufficient for one year. If the shelters are restricted to the area of actual need, no one in the world will have to suffer for want of shelter. With some persons and with some countries these commodities may be less; and with others they are in surplus.

”The development of spiritual knowledge only will enable mankind to share all the needs with love, respect and responsibility. The love which blossoms in a man as a natural process by spiritual development will enable him to understand the feelings of others, to respect the needs and ambitions of others and to cooperate in the effort of satisfactory living by willing sacrifice on one’s own physical, financial and intellectual abilities. Therefore, in addition to the efforts for increasing the material comforts by political and economic means, an opportunity for spiritual development in the human society should be provided so that all deserving persons will develop spiritual knowledge in time.

“Let us consider: What is the spiritual development? In the process of living, the mind is the nucleus and important phenomenon. When one understands the values and wonders of the mind, he can enjoy life successfully and happily.

Life force and mind:

“As the mind is only the psychic extension of the life force, it is imperative first to know about the life force which is the base of the mind. The life force and the mind both are secret phenomena in the personality of man. These cannot be understood by any of our conventional five senses.

”It is only by a systematic psychic practice, with the mind tracing its own base, the existence and functions of both the life force and the mind and their relationship with one another can be understood. Such a psychic practice is called ‘meditation’ or ‘Kundalini Yoga’. Kundalini is the name of the fundamental supreme universal energy, the divine spirit. The life force in any living being is a part and parcel of the universal force, which governs the universal functions. In fact, it is the association of such force (energy-particles) in various intensities that conditions all the manifestations.

“Therefore, it is to be understood that the spirit is the basic principle of all the physical manifestations as well as the psychic function, the mind. Realization of the spirit, its existence, functions and results is spiritual knowledge or wisdom. This is the Science of all sciences. Living with material knowledge alone is one sided load to the mind. For balanced life, spiritual knowledge also is a must.

Realization of life force:

“How to realize the spirit within us, which is working as the life force? Although the life force is pervading the entire body, it has a working centre in a particular place in the physical body. Generally the working centre of the life force is at the base of the spine which is called Mooladar by ancient yogis. Unless this centre is changed from Mooladar to Agna Chakra, the point between the eye-brows, the presence of the life-force cannot be perceived by the mind.

“The ancient yogis tried to change the centre by breathing exercises or by chanting mantras. Both the methods were strenuous and time-consuming. Many years were required to bring the energy up. Meanwhile if the energy got stuck up on the way, the aspirant had to suffer from some ill-effects too. Therefore, family people could not practice and get the benefit of this yoga.

”Now, we have found out a safe, sure and quick method to bring up the working centre of the life force. A master trained in Kundalini Yoga can easily intensify the life force of an aspirant within minutes and bring it up by a touch method.

“After the master has fixed up the working centre of Kundalini power, the aspirant has to simply observe the force of the power mentally. This process becomes Meditation. Mere observation of the force mentally develops awareness of the mind, conserves the life force from wastage, and improves steadiness and peace of mind. By the mind observing its own base, the existence and functions of both the life force and mind and the relationship between them will be understood as a practical experience.

“Activating the life force, the Kundalini power, from Mooladar and fixing it up at the Agna Centre of an Aspirant by an eminent master is the Initiation. This is the first step in the spiritual practice. There are some other practices which are to be learnt and followed one by one. We, the members of the World Community Service Centre call this Kundalini Meditation as Simplified Kundalini Yoga (SKY).

Simplified Kundalini Yoga:

“SKY has four processes on the whole. They are:
(1) Meditation, (2) Introspection, (3) Sublimation and (4) Perfection.
Meditation develops will power and peace of mind.
Introspection enlightens the knowledge and guides one as a life light.
The process of Sublimation metamorphoses the character by gradual changes in one’s habits.

Perfection is the fruit and significance of the spiritual development.

The full course of SKY can be completed in ten sittings of one hour each.

“Dear friends, man are a peculiar living being who is always struggling between habit and wisdom. After he is developed in thinking abilities, only through a systematic spiritual practice he can achieve the goal of perfection.

“The aim of the World Community Service Centre is to spread the spiritual knowledge to the people of all nations. After a long period of research over forty years of my life, I found out that only spiritual knowledge will result in peace, within self, in the society and among nations. I formulated a safe and perfect method for spiritual development and am teaching it to deserving persons. I am ready to impart my knowledge to any friends who is willing to undergo the wonderful psychic practice SKY.
With these words, I conclude my speech and wish all of you good health, long life ,prosperity wisdom and peace…

ஞாயிறு, 30 அக்டோபர், 2011

மனிதனின் ஆறு குறைகள்


  • 1.மற்றவற்றை ஒடுக்குவதால், தான் உயர முடியும் என்ற பேதமை.


  • 2.மாற்ற முடியாதவற்றைப் பற்றியும், திருத்த முடியாதவற்றைப் பற்றியும் கவலைப்படுவது.


  • 3.நம்மால் செய்ய முடியாத ஒன்றை வேறுயாராலும் செய்ய முடியாது என்று அடித்துப் பேசுவது.


  • 4.அற்ப விஷயங்களைக் கூட விட்டுக் கொடுக்க முடியாமல் இருப்பது.


  • 5.மனதையும் அறிவையும் பக்குவப்படுத்திக் கொள்ளாமல் இருப்பது.


  • 6.நாம் வாழ்வது போலவோ, நமது விருப்பு வெறுப்புப் போலவோ பிறரையும் இருக்கத் தூண்டுவது. இக்குறைகளைச் சரிப்படுத்திக் கொண்டால் மனிதன் நிம்மதியாக வாழலாம்.

  • ஞாயிறு, 23 அக்டோபர், 2011

    "How to Eat " by Vethathiri Maharishi

    "At the dining table, we are for the most part under the influence of the taste-sense. It is an emotional condition actually, where our judgement could be impaired. Only in order to generate the appropriate corrective, awareness, some special exercise called 'Kaya Kalpa' is prescribed before taking food or drink. What should be remembered is that nourishment is not in direct proportion to the quantity of food-intake. The food-items should be such as are suited to our digestive system and we should have felt appetite well in advance.
    Actually when your stomach remains hungry for a while, the cells of the body naturally get oriented to draw sustenance from the atmosphere,(space) and from inner- earth radiations. Then you go to your lunch or dinner and there is balance in intake. If you follow this advice you will find that your intellectual faculties are rendered more brisk and sharp as a result."

    KAYA KALPA COURSE – THE ART OF LIVING GIVEN BY SIDHDHAS



    The term KAYA means "body" and KALPA means "immortal". "KAYA KALPA" is a wonderful technique of the SIDDHAS of South India and has a threefold objective.

    1. Withstanding the ageing process.
    2. Maintaining youthfulness and physical health.
    3. Postponing death


     Benefits of Kaya Kalpa Practice:-
    a. Nerves systems will become strengthen.
    b. Can prevent from diseases like Asthma, sinus problem, diabetis, skin diseases.
    c. For ladies Menses problems will be solved. Menopause problems will be solved.
    d. Sexual vital fluid becomes thickened and the stock is increased so that the life force and bio-magnetism are sufficiently maintained in the body. It strengthens and rejuvenates the body. It will help to cure and prevent diseases and relieve the practitioner of the troubles of old age. "Sexual Potency" is enhanced but craving is brought within control.
    e. Kaya Kalpa practice improves character and personality. There will be genetic improvement for healthier and more intelligent progeny.
    f. Conception can be controlled at will when either of the partners has become successful in the practice over a sufficient period of time.
    Kaya Kalpa is a precious gift to mankind. This practice helps one to maintain physical and mental health, further spiritual development and rejuvenates the physical system to withstand the ageing process. The practice will help all people regardless of sex, race, religion or creed, to enjoy a happy and satisfactory life.

    வானியலும் சோதிடமும்

    மனிதனாக உருவாகும் அமைப்புகள் ஒரு மனிதனுக்கு ஏற்படும் நன்மை தீமைகள் எல்லாமே கோள்களால் தான் என்று கொள்ள முடியாது, விளைவுகள் சிறிதாகவோ பெரிதாகவோ நலமோ தீதோ விளைவிக்கின்றன என்பது உண்மைதான். எனினும் மற்ற வழிகளில் ஏற்படும் நன்மை தீமைகளும் கலந்துதான் ஒரு மனிதனின் தரத்தையும் தன்மையையும் நன்மை தீமைகளையும் உருவாக்குகின்றன.

    பிரபஞ்ச இயக்கத் தொடராக ஒவ்வொரு மனிதன் உடலும் அறிவும் இயங்கிக் கொண்டிருக்கின்றன. அறிவால் சில மாற்றங்களையும் பெறுகிறோம். பேரியக்க ஒழுங்கமைப்பையும் அறிவின் உண்மையையும் இணைத்தறிந்து ஒழுகி வாழ்ந்தால் இன்பமும் அமைதியும் எய்தலாம்.

    வெள்ளி, 7 அக்டோபர், 2011

    உருவ வழிபாடு ஏன்?

    உருவமைப்பு, குணம், அறிவின் உயர்வு, உடல்வலிவு, சுகம், செல்வம், இவ்வேழு சம்பத்துக்களும் சரியாக இருந்தால்தான் ஒரு மனிதன் வாழ்க்கையில் தங்கு தடையின்றி எல்லாவற்றையும் சரிப்படுத்திக் கொள்ளமுடியும்.

    இது கருவமைப்பின் மூலமாகவோ அல்லது சமுதாயத்தில் உள்ள ஏற்றத் தாழ்வின் காரணமாகவோ ஒவ்வொருவருக்கும் ஒன்றில் சிறப்பு இருக்கும். ஒவ்வொன்றில் குறைவு இருக்கும்.

    குறைவாக உள்ளதை சரி செய்து, சமப்படுத்திக் கொள்வதற்கு அவரவர்கள் அறிவினாலேயே மனதில் சங்கல்பத்தின் மூலம் திடப்படுத்தி, பல தடவை அதையே எண்ணி எண்ணி குறைபாட்டைக் களைந்து நிறைவு செய்து வருவதற்கு, அறிவிற்குத் துணை செய்வதற்கு பூஜாவிதிகள் என்பதை முற்காலத்தில் ஏற்படுத்தினார்கள்.

    பூஜாவிதி என்பது சடங்குகள் என்றாலும் எந்தக் குறைபாடு மனிதனிடம் இருக்கிறதோ, அந்தக் குறைபாட்டை அவனே நீக்கிக் கொள்வதற்காக மனஎழுச்சி, மனோதிடம், கற்பனையாக இருந்தாலும், பலதடவை செய்து செய்து இம்மாதிரி எனக்கு வேண்டும் என்று எண்ணும்போது முனைமனமானது, அடிமனதோடு தொடர்பு கொள்ளும்., அடிமனமானது பிரபஞ்சம் முழுவதும் உள்ள ஆற்றல் களத்தோடு தொடர்பு கொண்டு, எங்கேயிருந்தாலும் இவனுக்கு வேண்டியது தானாக வந்து சேரும் அளவுக்கு உண்டாக்கும்.
    இயற்கைச் சட்டம் என்ன என்றால் fraction demands totality supplies
    இயற்கையிலிருந்து துண்டுபட்டுள்ளதே ஜீவன், மனிதன்
    முழுமுதற்பொழுதாக உள்ள இறைநிலை, அறிவு என்ற நிலையில் பிரபஞ்சம் முழுவதும் கலந்து, உயிருள்ள, உயிரற்ற எல்லாவற்றிலும் நிரம்பி இயங்கி கொண்டிருக்கிறது.
    அதனால் எங்கே யாருக்கு என்ன தேவைப்பட்டாலும், விரும்பினாலும் அது கிடைக்கத்தான் வேண்டும்

    ஆனால் விரும்புவர்கள் மனதை அதற்குரிய முறையில் அழுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும், தகுதியாகவும் வைத்துக்கொள்ள வேண்டும்.

    ---வேதாத்திரி மகரிஷி,

    சனி, 24 செப்டம்பர், 2011

    குண்டலினி - அறிமுகம்

     

     குண்டலினி என்பது என்ன?, அது எங்கே இருக்கிறது?,எப்படி இருக்கிறது?, என்னவெல்லாம் செய்யக் கூடியது? இந்த குண்டலினியை எழுப்புவது, அதன்  செயல்பாடுகள், விளைவுகள், அனுபவங்கள் குறித்து பார்க்க வேண்டி  இருக்கிறது.

    நமது உடலில் எழுபத்தி இரண்டாயிரம் நாடிகள் இருப்பதாக இந்த நாடிகளைப்  பற்றிய சிறிய அறிமுகம் இப்போது அவசியமாகிறது.

    நாடி என்கிற தமிழ் வார்த்தைக்கு நாடுதல், நோக்குதல் போன்றவை நேரடி  அர்த்தமாகிறது. நமது உடலின் தேவைகளை நாடுவதால் கூட இவைகளுக்கு நாடி என  பெயர் வந்திருக்கலாம். கொஞ்சம் புரிகிற மாதிரி சொல்வதானால் நவீன அறிவியல்
    சொல்லும் நரம்பு மண்டலத்தை இந்த நாடிகளுக்கு இணையாகச் சொல்லலாம். ஆனால் நரம்புகளைப் போல இவற்றை நேரடியாக பார்க்க முடியாது என்றும் இவை சூட்சுமமானது என்கின்றனர்.

    மனித உடலானது எழுபத்தி இரண்டாயிரம் நாடிகளால் பின்னப் பட்டிருப்பதாக சித்தர் பெருமக்கள் கூறியிருக்கின்றனர். இன்னும் விரிவாக சொல்ல வேண்டுமெனில்,

    தலையில் 7000ம் நாடிகளும்,
    வலது கண்ணில் 2000ம் நாடிகளும்,
    இடது கண்ணில் 2000ம் நாடிகளும்,
    மூக்கில் 3330 நாடிகளும்,
    வலது காதில் 1500 நாடிகளும்,
    இடது காதில் 1500 நாடிகளும்,
    பின்கழுத்தில் 1000ம் நாடிகளும்,
    பின்னங் கழுத்தின் கீழே 8000ம் நாடிகளும்,
    முதுகில் 3680 நாடிகளும்,
    கண்டத்தில் 1000ம் நாடிகளும்,
    நாபியில் 8990 நாடிகளும்,
    வலது கையில் 1500 நாடிகளும்,
    இடது கையில் 1500 நாடிகளும்,
    விலாப் பகுதியில் 3000ம் நாடிகளும்,
    கால்களின் இடுக்கில் 8000ம் நாடிகளும்,
    பிஜத்தின் கீழே 2000ம் நாடிகளும்,
    பிஜத்தின் மேல்2000ம் நாடிகளும்,
    கோசத்தில் 13000ம் நாடிகளும்,
    பாதத்தில் 1000ம் நாடிகள் என ஆக மொத்தம் 72000ம் நாடிகள் இருக்கின்றதாம்.

    இவற்றில் பத்து நாடிகளை சித்தர் பெருமக்கள் முக்கியமானவைகளாகச் சொல்கின்றனர்.அவை பிங்கலை, இடங்கலை, சுழுமுனை, சிகுவை, காந்தாரி, புருடன், அத்தி, அலம்புடை, சங்கினி, குரு என்பதாகும்.

    பிங்கலை என்பது வலது நாசியிலும், இடங்கலை என்பது இடது நாசியிலும், சுழுமுனை என்பது இவை இரண்டிற்கு நடுவிலும், சிகுவை என்பது உள்நாக்கிலும், காந்தாரி என்பது இடது கண்ணிலும், புருடன் என்பது வலது கண்ணிலும், அத்தி
    என்பது வலது காதிலும், அலம்புடை என்பது இடது காதிலும், சங்கினி என்பது பிறப்பு உறுப்பிலும், குரு என்பது சனவாயிலிலும் ஓடுகிறதாம்.

    இப்படி பின்னிப் பினைந்து ஓடும் இந்த எழுபத்தி இரண்டாயிரம் நாடிகளில்தான் நமது உயிர்சக்தி இயங்கிக் கொண்டிருப்பதாக சித்தர் பெருமக்கள் கூறுகின்றனர். இந்த நாடிகள் ஏழு மையங்களில் இணைந்து பிரிந்து செல்கிறதாம். இவற்றையே சித்தர்கள் ஆதார மையங்கள் என்கின்றனர். இந்த ஏழு ஆதார மையங்கள்தான் நமது உடலை இயக்கிக் கொண்டிருக்கின்றன. இவை மூலாதாரத்திற்கும், உச்சந்தலையான துரியத்திற்கும் இடையே உடலின் ஊடாக
    அமைந்திருக்கின்றன.

    இது பற்றி காகபுசுண்டர் பின் வருமாறு விளக்குகிறார்.

    உச்சிதலை நெற்றிவிழி புருவமத்தி
    உரச்சங்கு மார்புநெஞ்சு உந்திமூலம்
    பிச்சிகலை யிடுப்பின் கீழ் முழங்கால் பாதம்
    பெரும்பாடு விரல் நகக்கண் வாசிபாய …………

    நெற்றிவிழி புருவமத்தி
    உரச்சங்கு மார்புநெஞ்சு உந்திமூலம்
    பிச்சிகலை யிடுப்பின் கீழ் முழங்கால் பாதம்
    பெரும்பாடு விரல் நகக்கண் வாசிபாய
    கச்சிலை சொன்னாரோ முத்தர் சித்தர்
    கால்வாசி கால்யோகம் காணாப்பித்தர்
    கொச்சிநரை சொல்லவில்லை வெளுத்தமார்க்கம்
    குண்டலியைக் கண்டாக்காற் கருக்கும்பாரே.

    - காகபுசுண்டர் -

    1.மூலாதாரம்
    2.சுவாதிஷ்டானம்
    3.மணிபூரகம்
    4.அநாகதம்
    5.விசுத்தம்
    6.ஆக்ஞேயம்
    7.துரியம்
    என்பதே இந்த ஆதார மையங்கள். இவை மனித உடலில் முறையே
    1.மூலம்
    2.தொப்பூழ்
    3.மேல்வயிறு
    4.நெஞ்சம்
    5.மிடறு
    6. புருவநடு
    7. உச்சந்தலை என ஆறு இடங்களில் அமைந்திருக்கிறது.

    இதுவரை நாடிகள் மற்றும் அவை குவிந்திருக்கும் ஆதார மையங்கள் நமது குண்டலினியானது இந்த ஆதார மையங்களின் ஊடாகவே பயணிக்க வேண்டியிருப்பதால் நாடிகளைப் பற்றிய ஆரம்பத் தெளிவு வேண்டி குண்டலினி என்பது மாயமோ,
    மந்திரமோ இல்லை. அது ஒரு வகையான உள்நிலை உளவியல் தொழில்நுட்பம். இதை புரிந்து கொள்ள முயற்சிப்பதில்தான் இதன் செயலாக்கம் மற்றும் தொழிற்படுதல் சித்திக்கிறது. இந்த பயிற்சியில் நமது உடலில் நிலை கொண்டிருக்கும் ஆற்றலை
    மாற்றுவதையே உயர்த்துதல் என்கிறோம். உயர்த்துதல் என்பதை விட பரவுதல் என்கிற வார்த்தை பிரயோகம் சரியானதாக இருக்கும்.

    குண்டலினியை எழுப்பிட பல்வேறு உத்திகளை நமது முன்னோர்கள் சொல்லியிருக்கின்றனர். அது பற்றி பின்னர் பார்ப்போம். இத்தகைய பயிற்சியை மேற் கொள்வோருக்கான தகுதிகளை பற்றி சித்தர் பெருமக்கள் விரிவாகவே
    கூறியிருக்கின்றனர்.

    குண்டலினியை எழுப்ப முயற்சிக்கும் சாதகன் முதலில் மெய்யான குருவினை கண்டறிய வேண்டும். இதற்கு அவன் ஆசைகளை குறைத்தவனாக இருப்பது மிகவும் அவசியமாம். தீவிர வைராக்கியமுள்ளவனாகவும் இருக்க வேண்டும். சுத்தமான
    மனமுள்ளவனும், மனத்தின் ஆவேசமான ஆசைகளைத் துறந்தவனை மெய்யான குரு தானாகவே
    அண்மிப்பார் என்கின்றனர். மேலும் அவரே முன்னின்று அரவனைத்து வழி நடத்துவார். இத்தகைய குருவின் வழிகாட்டுதலில் பயிலும் சாதகனே குண்டலியை
    எழுப்புவதால் உண்டாகும் முழுப் பலனையும் அடைவான் என்கின்றனர்.

    நிறைந்த அழுக்குள்ள ஒருவன் ஒருவன் ஆசனம், பிராணாயாமம், மத்ரை இவற்றின் பலத்தால் மாத்திரம் சக்தியை எழுப்பினானால், அவன் இடறி விழுந்து தன்னையே கெடுத்துக் கொள்வான் என்கின்றனர். யோக ஏணியில் ஏற அவன் சக்தியற்றுப்
    போவானாம். இதுவே, சிலருக்குத் தேகத்தில் பல ஊனங்கள் (குறைவுகள்) ஏற்படவும், வழி பிசகவும் காரணமாய் அமையும் என்கின்றனர்.

    யோகத்தில் ஒன்றும் கெடுதல் இல்லை. ஆனால் மக்கள் முதலில் ஒழுக்கமாக இருக்க வேண்டும். பயிற்சியின் பூரண அறிவு இரண்டாவதாகத் தேவை. பிறகு ஒரு தக்க ஆசிரியன் அவசியம். கடைசியாக நிதானமானதும் குண்டலினி எழுப்பப்படும்போது
    சாதகனுக்கு வழியில் பல தவறுகள் செய்ய ஆவல் (சோதனை) உண்டாகும். ஆதலால் சாதகன் ஒழுக்கமானவனாக இல்லாவிடில் அந்த ஆவலைத் தகர்க்கத்தக்க சக்தியற்றவனாகி விடுவான்.

    குண்டலினி பயிற்சியைப் போலவே அந்த சம்பந்த முழு விபரமும் தெரிந்திருக்க வேண்டியது மிக அவசியம். குண்டலினி பற்றிய விபரங்களோ விளக்கங்களோ முழுமையாக தெரியாதவர்கள் இதில் வெற்றியடைவது கடினம். இதன் பொருட்டே
    இத்தனை நீளமாக குண்டலினி பற்றிய அறிமுகத்தினை பகிர நேர்ந்தது.

    சித்தரியலில் குண்டலினி பற்றி பேசாத சித்தர்கள் வெகு குறைவு. அநேகமாய் எல்லோரும் ஏதோ ஒரு வகையில் இந்த குண்டலினியின் மகிமையை கூறியிருக்கின்றனர். இதனை உயர்த்துவதன் மூலம் சாதாரண உணர்வினை, பரபிரம்ம
    உணர்வாக உயர்த்திடலாம் என்று கூறுகின்றனர்.

    சுருள்சுருளாய் நெளிந்த ஒரு காதணியை குண்டலம் என வழங்குகிறோம். இப்படி சுருண்டு வளைந்து பாம்பினைப் போல இந்த நிலை சக்தி மூலாதாரத்தில் இருப்பதால் இதனை குண்டலினி என அழைப்பதாக ஒரு பெயர் காரணம் கூறுகிறது. இதை
    ஒரு யோக வித்தையின் மூலம் எழுப்பிடலாமாம். இதன் ஆற்றலை ஒருனியை பாம்பினை ஒத்ததாக கூறுகின்றனர்.

    குண்டலினியின் இருப்பிடத்தை காகபுசண்டர் பின் வருமாறு விளக்குகிறார்.

    குண்டலியைக் கண்டாக்காற் கருக்குமென்பார்
    குண்டலியி னிருப்பிடமும் மூலமென்றார்
    குண்டலிதா னென்றாக்கால் நரம்போதோலோ
    குருந்தண்டோமுள்ளெலும்போ பிடரிமார்போ
    குண்டலியே யென்றவர்கள் பெயரார் சொன்னார்
    கொத்தளத்தின் பெருமைதனைச் சொல்லினார்கள்
    குண்டலியே வாய்திறக்கப் பேசுமென்றார்
    குருவென்றார் வாலையென்றார் குமரனென்றாரே.

    - காகபுசுண்டர் -
    குண்டலினியை சித்தர் பெருமக்கள் வெவ்வேறு பெயர்களில்
    அழைத்திருக்கின்றனர். அதைச் சொல்லும் கொங்கணவர் பாடல் ஒன்றை பார்ப்போம்.

    சிறந்திட்ட குண்டலியின் பேர் செப்பக் கேளு
    சிறப்பான சிவயோக மென்றுபேரு
    சிறப்பான வாசி யென்று மிதுக்கே பேரு

    • பஞ்சபூதங்களின் சேர்க்கையால் ஆனது நம்முடைய இந்த உடல்
    • உடலின் உள்ளேயும் வெளியேயும் நின்று இயங்கும் ஆற்றலையே நாம் உயிர் என்கிறோம்.
    • உயிரின் படர் நிலைதான் மனம்.
    • மனத்திற்கு “ஞானம்”, “உறுதி” என இரண்டு முகங்கள் உள்ளது. இவை தனித்துவமானவை.
    • உணர்தல், உணர்த்துதல் என்கிற இரண்டு வேலைகளை மட்டுமே மனம் செய்திறது.
    • நம்முடைய உணர்தல் மற்றும் உணர்த்தும் நிலைமை மேம்பட விழிப்புணர்வு தேவைப் படுகிறது.
    • குண்டலினியை தூண்டுவதன் மூலம் இந்த விழிப்புணர்வினை உயர் தனித்துவ நிலைக்கு கொண்டு செல்லலாம்.
     
    இவை எதுவும் புதிய விஷயங்கள் இல்லை. நம்மில் பலரும் ஏற்கனவே அறிந்த ஒன்றுதான். இருப்பினும் அடிப்படை கூறுகளின் மீதான புரிதலை உருவாக்கிட இந்த பதிவுகள் உதவி இருக்கும் என நம்புகிறேன்.

    வாழ்க வளமுடன்
    குருவே துணை