Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

புதன், 8 ஏப்ரல், 2015

அலை இயக்கம் :


ஒரு வானொலி நிலையத்திலிருந்து ஒரு நிகழ்ச்சியை ஒலிபரப்புகிறார்கள். அது பாடல் என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்தப் பாடல் வெளியிலே போகும்போது அலையாகத்தான் போகும். அந்த அலையில் அந்தக் கருத்து வாசகம் எல்லாம் அடங்கியிருக்கும். வழியில் இதை யாராவது கண்டு பிடிக்க முடியுமா? முடியாது. இல்லை அலையில் இதையெல்லாம் தெரிந்து கொள்ள முடியுமா? முடியாது. ஆனால் இங்கே உள்ள கருவியில் மோதும்பொழுது மோதிப் பிரதிபலிக்கும்பொழுது அங்கே எந்தெந்த உச்சரிப்பு எந்தக் கருத்து அங்கே சொன்னார்களோ அவையனைத்தும் வெளிப்படும். இன்னொரு பாடல்; அதை ஒருவர் தாளம் போட்டுப் பாடுகிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்தத் தாள ஓசையோடு கேட்கிறது; அதுபோல இன்னும் வேறு பல கருவிகளை வைத்துப் பாடினாலும் கூட அவ்வளவும் இந்த அலையில் போகும். வெறும் பேசும் அலைக்கும் இந்த அலைக்கும் ஒரு வித்தியாசமும் இருக்காது அங்கே. ஆனால் அது மோதிப் பிரதிபலிக்கக்கூடிய இடத்தில் அத்தனையும் வரும்.
.

அதேபோல் எந்தப் பொருளும் உலகத்தில் அதன் அதன் இடத்திலிருந்து ஒரு அலை வீசிக் கொண்டேதான் இருக்கிறது. ஏனென்றால் அந்தப் பொருள் எதனால் ஆக்கப்பட்டது என்றால் சக்தியின் துகளினால். ஒவ்வொரு ஆகாசத்துகளும் தன் வேகத்தில் சுழன்று கொண்டேதான் இருக்கிறது. ஆகையினால் அலை வீசிக் கொண்டே தான் இருக்கும். எந்த அலைக்கும் மோதுதல், பிரதிபலித்தல், சிதறுதல், ஊடுருவுதல், ஒன்றுடன் ஒன்று திருப்பி திருப்பி இணைந்து பாய்தல் என்று ஐவகையான இயக்கங்கள் உண்டு. எத்தனையோ அலைகளை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அவற்றையெல்லாம் நல்லவையாக ஆக்கிக் கொண்டு நாம் நல்ல அலையை இயக்க வேண்டும்; நலம் செய்து கொண்டே இருக்க வேண்டும்; நன்மையேதான் செய்வேன் என்ற எண்ணத்தை உறுதியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
.

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
.

"நின்றிடு அகண்டாகாரம் நிலையினில்
வென்றிடுவாய் புலன் ஐந்தையும்; வெற்றியே"
.

"ஆன்மீகத்துறையினிலே முன்னேறும் அளவிற்கு
அமைதியும் இன்பமும் உண்டாகும் மனிதனுக்கு".
.

"இயற்கை விதியறிந்து ஏற்று மதித்து ஆற்றும்
முயற்சி வெற்றி பெற முழு அமைதி என்றும் இன்பம்"
.

"வெட்டவெளி சக்தி என்பதில்லையானால்
வேறு எந்தப் பொருள் வலிது பிரபஞ்சத்தில்?
தொட்ட, தொடப்பட்ட இரு பொருட்களூடே
தொட, தொட்டதாய் எண்ணும் அரூபம் யாது?
பட்டப் பகலில் வானில் மீன்கள் தோன்றா
பார்வையில்லார்க்கவை எந்த நாளும் காணா
எட்டவில்லை அறிவிற்கு என்றால், உள்ள
இயற்கைத் தத்துவம் எங்கே ஒளிந்து கொள்ளும்?."

.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

செவ்வாய், 7 ஏப்ரல், 2015

சீர்திருத்தமே வாழ்வின் வளம் :


 மனித இன வாழ்வு, முன்னேற்றம் சீர்திருத்தம் என்ற இருவகையாலும் வளம் பெறுகின்றது. தேவையுணர்வு, தொழில்திறமை, இன்ப துன்ப அனுபோக அனுபவங்கள், சிந்தனை, அறிவின் தெளிவு இவைகளுக்கேற்ப, மனிதர் வாழ்வு அறிவியல், சுகாதாரம், பொருளாதாரம், அரசியல், விஞ்ஞானம் என்ற ஐந்து துறைகளிலே நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகின்றது. முன்னேற்றம் வேகம் கொள்ளுகிறது.
.

முனேற்றத்தின் வளர்ச்சிக்கேற்ப சீர்திருத்தம் உயர்ந்தாலன்றி அது போதிய அளவில் நல் விளைவுகளைத் தராது. சீர்திருத்தத்தின் வளர்ச்சி குறைந்திருக்கும் அளவிற்கேற்ப முன்னேற்றத்தாலேயே தீய விளைவுகளும் உண்டாகிவிடும்.
.

வேகம் என்பதை முன்னேற்றமாகக் கொண்டால் அதை நிர்வகிக்கும் நுட்பம், திறமை இரண்டையும் சேர்த்து சீர்திருத்தமாகக் கொள்ளலாம். எளிதாகவும், வேகமாகவும் வாழ்க்கைத் தேவைப் பொருட்களை பெருக்கிக் கொள்ளும் சக்தி உயருகின்றதென்றால் அதுவே முன்னேற்றமாகும். பெருகும் பொருட்களைச் சேமித்து, நிர்வகித்து, தனி மனிதனுக்கும் சமுதாயத்திற்கும் அப்போதும் பிற்காலத்திலும் தீமை பயக்காத வகையில் அளவுடன் அனுபவிக்கும் முறையே சீர்திருத்தமாகும்.
.

இத்தகைய சீர்திருத்தமே ஒழுக்கம் என்றும் பேசப்படுகின்றது. கற்பனை, சிந்தனை, உடல் கருவிகளுக்கு உபகருவிகளை உபயோகிக்கும் திறன், இவைகளினால் ஒருவர் பலர் வாழ்விற்கு நன்மையோ, தீமையோ விளைவிக்கும் ஆற்றலைப் பெற்று முன்னேற்றத்தில் விருப்பங் கொண்டுள்ள மனித இன வாழ்வில் எப்போதுமே சீர்திருத்தம் தேவையாகவே இருக்கின்றது.
.

சீர்திருத்தம் என்பது உயர்ந்த அறிவின் நிலையையே உணரப்படுகின்றது. அது மதம், அரசியல் என்ற இரு வகையில் போதனைகளாகவும் சட்டங்களாகவும் சமுதாய வாழ்வில் பயன்படுகிறது.
.

இத்தகைய இலக்கணத்திற்கு முரணாக ஏதேனும் ஒரு விதிமுறை ஒரு மதத்திலேனும், அரசியல் நிர்வாகத்திலேனும் இருக்குமேயானால், அது மனித இனம் அறிவியல் துறையில் வளர்ச்சி பெறாத காலத்தில் சந்தர்ப்ப தேவையாகக் கொண்டு பழக்கத்தில் தொடர்ந்து வரும் ஒன்றாகவும், அதை அக்காலம் வரை சீர்திருத்தம் மக்களிடம் பக்குவம் இல்லாமலும் இருந்திருக்க வேண்டும். அவை இவ்விலக்கணத்தின் கீழ் அக்காலத் தேவைக்கேற்ப தோற்றுவிக்கப்பட்டிருக்க வேண்டும். அல்லது மயக்கவாதிகளாலோ, கயவர்களாலோ சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். தேவையுள்ள போது சீர்திருத்தமாகக் கொள்ளப்பட்டது ஒரு முறை. அது தேவையற்ற போது சீர்கேடாகவும் மாறிவிடக் கூடும்.
.

இயற்கையமைப்பு, எண்ணத்தின் ஆற்றல், பொருட்களின் தரம், அவைகளை அனுபவிக்கும் முறைகள், இன்ப துன்ப இயல்பு என்ற ஐவகையும் அறிந்து, நெறிதவறாது ஒழுக்கமுடன் தானும் வாழ்ந்து, பிறரையும் வாழவைக்கும் ஆற்றலும் கருணையும் உடையோன் சீர்திருத்தவாதி என்ற உயர்ந்த சொல்லுக்கு தகுதியயுடையவனாகிறான்.
.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
.

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
.

"நாள்தோறும் செய்தவற்றின் பயனை நீங்கள்
நல்லுறக்கம் கொள்வதற்கு முன் கவனித்துச்
சீர்திருத்திக் கொள்வீர்".
.

"அனைத்தையும் கற்பதற்கும், கற்றபடி வாழ்ந்து
பயன் பெறுவதற்கும் மனிதனிடம் போதிய
அறிவு அமைந்துள்ளது".
.

சீர்திருத்தத்திற்கு முறை:

சீர்திருத்தம் எனில் அது நம் நல்வாழ்விற்குச்
சிறந்த தெனப் பலர் உணர்ந்து ஏற்க வேண்டும்
சீர்திருத்தம் படிப்படியாய் மக்கள் வாழ்வில்
சிறிது சிறிதாய்ச் செயலில் மலர வேண்டும் ;
சீர்திருத்த விளக்கமது மக்கள் வாழ்வைச்
சிதைக்காமல் முன்னேற்றம் அளிக்க வேண்டும்
சீர்திருத்தம் புகுத்துதற்கே இத்தகைய
சீர்திருத்த முறையைப் பின் பற்ற வேண்டும்.
.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

திங்கள், 6 ஏப்ரல், 2015

"கிரகண நாட்களில் உண்ணாநோன்பு, தியானம் செய்வது சிறப்பு என்று சொல்கிறார்களே, இது பற்றி தங்கள் கருத்து என்ன? கிரகணம் முடிந்தவுடன் குளிக்க வேண்டும் என்று சொல்கிறார்களே ஏன்?"

சந்திரகிரகணம்" பற்றி மகரிஷியிடம் அன்பரின் கேள்வி :-...
----------------------------------------------------------------------------------------


 .
மகரிஷியின் பதில் :-
------------------------------
"ராகு, கேது காந்த அலை வீச்சால் சூரிய ஒளி, சந்திர ஒளி பாதிக்கப்படும் போது நம் உடலில் உள்ள இரசாயனமும் வித்தியாசப்படும். அந்த மாறுதல் ஏற்படும்போது நமது உணவு செரிமானம் குறைவாக இருக்கிறது. அந்த நேரத்தில் தெய்வீக நினைவு அல்லது வேறு ஏதாவது சங்கற்பம் செய்வது நல்லதே. அப்படி இல்லாமல் இஷ்டம் போல் சுற்றும்போது உடல் உறவு கொள்ள நேரிடும். அந்த நேரத்தில் விளையக் கூடிய குழந்தை கேடுற்ற உடலும் மனமும் உடையதாக இருக்கக் கூடும் என்பதை நாமே யூகித்துக் கொள்ளலாம்.
.
ஆகவே இத்தகு விபத்துக்களை தடுப்பதற்காகவே அந்த நாட்களையும், நேரத்தையும் விரத நாட்களாக ஆக்கி வைத்திருக்கின்றார்கள். கிரகண நேரத்தில் சாப்பிடாமல் இருப்பது நல்லது. இதனால் உடலினுடைய சக்தி அழிவு இல்லாமல் Immunity அப்படியே காப்பாற்றப்படும். கிரகணம் முடிந்து குளிப்பது என்பது எப்பொழுதும் குளிப்பது போலத்தான். அப்பொழுது குளிக்காமல் போனால் ஒன்றும் கெடுதல் இல்லை. தூய்மை வேண்டும் என்று நினைக்கும்போது எதற்குமே குளித்துவிட்டுச் செய்வது ஒரு சடங்குதான்

ஞாயிறு, 5 ஏப்ரல், 2015

"கிரகணம் எவ்வாறு ஏற்படுகிறது ?" :-

 .
மகரிஷியின் பதில் :-
----------------------------
"சூரியனுடைய மையத்தில் ஏற்படுகின்ற காந்த அலைப்பாதையை (Black Hole) ராகு, கேது, என்று பார்த்தோம். அந்த ராகு, கேது காந்த அலைப் பாதைகளுக்கு நேராக சந்திரன், பூமி, சூரியன் இந்த மூன்றும் வரும்போது அங்கு மறைவு ஏற்பட்டுவிடும். ஒவ்வொரு மாதமும் மூன்றும் ஒன்றாகத்தான் வருகின்றன. அனால் கிரகணம் வருவதில்லை. ராகு, கேது என்ற அந்த Black Hole க்கு நேரில் இவை மூன்றும் வருகின்ற பொழுதுதான் அந்த மறைவு உண்டாகிறது. அதை கிரகணம் பிடித்துவிட்டது என்று சொல்கிறோம்.
.
சந்திரன் மத்தியில் வந்து சூரியனை மறைக்கும் பொழுது நேரடியாக அந்த இடத்தில் ராகு அல்லது கேதுவினுடைய காந்த அலைப்பாதை அமையும்பொழுது அது சூரிய கிரகணம். பூமி நிழல் சந்திரனுடைய ஒளியை மறைக்கும் பொழுது அது சந்திர கிரகணம் என்கிறார்கள்.
.
சந்திரனை பூமி மறைக்கும் போது அதாவது பூரண சந்திரன் தினத்தில் (Full Moon) சூரியனுக்கும், சந்திரனுக்கும் நடுமையத்தில் பூமி இருக்கும். அப்பொழுது பூமியின் நிழல் சூரியனிடமிருந்து வரக்கூடிய வெளிச்சத்தை மறைக்கும். அதைத் தான் "சந்திரகிரகணம்" என்கிறார்கள். அதுவும் ராகு, கேது என்ற Black Hole க்கு நேரில் வந்தால்தான் அந்த நிழல் தெரியுமே தவிர மற்றபடி மறைப்பதில்லை. ஆகையினால் ஒவ்வொரு கிரகணத்தின் பொழுதும் ராகு பிடித்து விட்டது என்றும் இவற்றை சூரியனை பாம்பு விழுங்குகின்றது என்றும், சந்திரனை பாம்பு விழுங்குகின்றது என்றும் சொல்கிறார்கள. ராகு, கேது இரண்டும் கரு நிறமான நீண்ட காந்த அலைப்பாதைகள். நீளமாக வருவதையெல்லாம் பாம்பு என்றுச் சொல்லிக் கொள்வது வழக்கம். அதேபோல் இராகு, கேது இரண்டையும் பாம்பு என்று சொல்லி நம்ப வைத்துள்ளார்கள்.
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

சனி, 4 ஏப்ரல், 2015

"மகரிஷி அவர்களே, எண்ணமற்ற நிலை தான் யோகம். எனவே சில தியான முறைகளில் மனத்திலிருந்து எண்ணங்களை அகற்ற வேண்டும் என்றும் கூறுகிறார்கள். ஆனால் தங்களது எளிய முறை குண்டலினி யோகத்தில் அவ்வாறு எண்ணங்களை மனதில் இருந்து அகற்றுவது பற்றி கூறப்படுவதில்லையே? ஏன்?


மகரிஷியின் பதில் :-
-----------------------------
"சாதாரணமாக சாதகன் மனதை நிறுத்தி வைப்பதென்பது இயலாத காரியம். தியானப் பயிற்சியாளரை அவ்வாறு செய்யச் சொல்வது எந்த பயனுமளிக்காது. நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் மன இயக்கத்தைச் சற்று ஒழுங்குபடுத்துவது தான். அவ்வாறு ஒழுங்குபடுத்தல் தவமுறையிலும் அகத்தாய்வின் மூலமும் சாத்தியமான ஒன்றே.
.
இயல்பாக மனம் ஓர் இடத்தில் நிலைப்பதில்லை. ஏனெனில் உணர்ச்சி வயப்பட்டும், வேகமாகவும் செயல்பட்டே அது பழகி விட்டிருக்கிறது. உதாரணமாக, மலை நீரானது புவிஈர்ப்பு விசைகேற்றபடித் தனது பாதையை அமைத்துக் கொண்டு ஓடும். மீண்டும் மழை வரும் போது அது பழைய பாதையையே சேரும். அது அதனுடைய இயல்பு.
.
மனதின் தன்மையும் அது போன்றது தான். ஆனால் எளிய முறை குண்டலினி தியானத்தில் (Simplified Kundalini Yoga) உயிர் மேல் மனம் வைத்து நிற்கப் பழகுவதால் மனம் உயிரில் ஒடுங்கி மன அலை சுழலில் விரைவு குறைந்து எண்ணமெழாத நிலை தானே கிட்டும். இந்த திறனில் வெற்றி கிட்டச் சில காலமாகும். ஆனால் இடையில் மனந்தளராமலும் முயற்சியைக் கைவிடாமலும் இருக்க வேண்டும்.
.
எண்ணத்தை அகற்றும் முயற்சியானாலும் மனம் அதோடு உறவாடிக் கொண்டே இருப்பதால் எண்ணத்தை அகற்றுவது என்பது இயலாது."
.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
.
******************************************************************************
.
"மன அலைச்சுழல் விரைவை (mind frequency) குறைத்து
நுணுக்கமான அமைதி நிலைக்கு மனதை பழக்க,
மனம், உயிர், மெய்(Truth) ஆகிய மறைபொருட்களை
உணர்ந்துகொள்ள - உயிர்ச்சக்தி (Life Force) யின் மேல்
மனம் வைத்துப் பழகும் (Energy Meditation) எளிமைப்படுத்தப்பட்ட
குண்டலினி தவத்தால் (Simplified Kundalini Yoga) தான் சித்தியாகும்."
.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

வெள்ளி, 3 ஏப்ரல், 2015

சினம் எழாத மனம் :


 ....

வாரம் ஒருமுறை ஏற்படுத்திக் கொள்ளும் ஒரு மணி நேரத்தில் அகத்தாய்வு (Introspection) செய்து ஆராய வேண்டும். சினம் தோன்றும் காரணம், சினத்தின் தீமை, சினத்தை ஒழிக்க எடுத்த முயற்சி, அடைந்த வெற்றியின் அளவு, இனியும் எடுக்க வேண்டிய முயற்சிகள் என்ற முறையிலே ஆராய வேண்டும். மீண்டும் சங்கற்பம், மீண்டும் வாழ்த்து என்று முயற்சி எடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். ஏன், ஒவ்வொரு கனமும் கூடத் தற்சோதனையாகவே இருக்க வேண்டும். "சென்ற கணம் நான் பேசியது சரியா? சென்ற கணத்தில் எனக்கு ஏற்பட்ட மனநிலை சரிதானா?", என்று ஒவ்வொரு கணமும் சோதனையாகவும் ஆராய்ச்சியாகவும் கழிய வேண்டும். தவத்தினால் ஏற்பட்டிருக்கும் மனத்தின் விழிப்பு நிலை இந்த வழியில் பெரிதும் துணையாக இருக்கும்.
.

இவ்வாறு செய்துவந்தால் ஓர் ஆறு மாதங்களுக்குள்ளாக சினம் அழிந்து பொறுமையின் திருவுருவாகவே திகழலாம். சினம் எழாத மனம் பிரகாசமாக இருக்கும். சினம் அகன்ற ஒருவரிடம் அவர் மனைவியும், மக்களும் மற்றவர்களும் எவ்வளவு இனிமையோடும் அன்போடும் பழகுகிறார்கள். அவர் குடும்பம் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறதென்று கவனித்துப் பார்க்க வேண்டும். அவரது குடும்ப உறுப்பினர்கள் அனைவருமே வெற்றிமேல் வெற்றியாக எல்லாத் துறைகளிலும் பிரகாசிப்பார்கள்.
.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
.

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
.

கவலை சினம் ஒழிக்க வழி :

"சினம் கவலை என்னும் இரண்டும் மனிதர் வாழ்வைச்
சீரழிக்கும் நச்சாகும் உணர்ந்து கொள்வீர்
மன வலிவும் உடல் வலிவும் முயற்சி மற்றும்
மதி நுட்பம் ஆராய்ச்சி குலைந்து போகும்
தினம் சிறிது நேரம் இதற்கென ஒதுக்கி
சிந்தித்துச் சீர் திருத்த இவ்விரண்டு -
இனமும் இனி என்னிடத்து எழாமல் காப்பேன்
என்று பல முறை கூறு; வெற்றிகிட்டும்."
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
.

"தன்னைத்தான் காக்கின் சினம்காக்க காவாக்கால்
தன்னையே கொள்ளும் சினம்". - திருவள்ளுவர்.
.

"சினம் மாண்டுபோக அருள் சேர்ந்திருப்ப தெக்காலம்" - பத்திரகிரியார்.
.

"அருளா! நான் வேண்டுதல் கேட்டருள் புரிதல் வேண்டும்
அணுத்துணையும் சினம் காமம் அடையாமை வேண்டும்"

- அருட்பிரகாசவள்ளலார்.
.

"சினமென்னும் பாம்பு இறந்தால் தாண்டவக்கோனே! யாவும்
சித்தியென்றே நினையேடா தாண்டவக்கோனே"

-- இடைக்காட்டுச் சித்தர்.
.

"நாணத்தை கவலையினை சினத்தைப் பொய்யை
அச்சத்தை வேட்கைதனை அழித்துவிட்டால்
அப்போதே சாவுமங்கே அழிந்து போகும்
மிச்சத்தைப் பின்சொல்வேன் சினத்தை முன்னே
வென்றிடுவீர்' மேதினியில் மரணமில்லை". - பாரதியார்.
.

"கோபமே பாவங்களுக் கெல்லாம் தாய் தந்தை
கோபமே குடி கெடுக்கும்,
கோபமே ஒன்றையும் கூடிவர ஒட்டாது
கோபமே துயர் கொடுக்கும்..... -- சதுரகிரியார்

வியாழன், 2 ஏப்ரல், 2015

வாழ்க்கையின் வெற்றிக்கு 20 கோட்பாடுகள்:-


*எந்த விசயமாக இருந்தாலும் அல்லது எந்த பிரச்சினையாக இருந்தாலும் அதை அழகாக கையாளுங்கள்.
* அர்த்தமில்லாமலும்,தேவையில்லாமலும் பின் விளைவுகளை அறியாமலும் பேசிக் கொண்டிருப்பதை விடுங்கள்.
* தானே பெரியவன்,தானே சிறந்தவன் என்ற அகந்தையை விடுங்கள்.
...
* விட்டுக் கொடுங்கள்.
* சில நேரங்களில்,சில சங்கடங்களை சகித்துத்தான் ஆக வேண்டும் என்பதை உணருங்கள்.
* நீங்கள் சொன்னதே சரி,செய்வதே சரி என்று கடைசி வரை வாதாடாதிர்கள்.
* குறுகிய மனப்பான்மையை விட்டொழியுங்கள்.
* உண்மை எது,பொய் எது என்று விசாரிக்காமல் இங்கே
கேட்டதை அங்கும்,அங்கே கேட்டதை இங்கும் சொல்வதை விடுங்கள்.
* மற்றவர்களை விட உங்களையே எப்போதும் உயர்த்தி நினைத்து கவலைப்படாதீர்கள்.
* அளவுக்கதிகமாய் தேவைக்கதிகமாய் ஆசைப்படாதீர்கள்.
* எல்லோரிடத்திலும் எல்லா விசயங்களையும், அவர்களுக்கு சம்பந்தம் உண்டா இல்லையோ,சொல்லி கொண்டிருக்காதீர்கள்.
* கேள்விபடுகிற எல்லா விசயங்களையும் அப்படியே நம்பி விடாதீர்கள்.
* உங்கள் கருத்துகளில் உடும்புபிடியை இல்லாமல் கொஞ்சம் தளர்த்திக்கொள்ளுங்கள்.
* மற்றவர்களுக்கு உரிய மரியாதையை காட்டவும்,இனிய இதமான சொற்களை பயன்படுத்தவும் மறக்காதீர்கள்.
* புன்முறுவல் காட்டவும்,சிற்சில அன்பான சொற்களை சொல்லவும் கூட நேரமில்லாமல் நடந்து கொள்ளாதீர்கள்.
* பேச்சிலும்,நடத்தையிலும்,திமிர்த்தனத்தயும் தேவையில்லாத மிடுக்கையும் தவிர்த்து அடக்கத்தையும் பண்பாட்டையும் காட்டுங்கள்.
* அவ்வபோது நண்பர்கள் உறவினர்கள் நேரில் சந்தித்து மனம் திறந்து பேசுங்கள்.
* பிணக்கு ஏற்படும்போது அடுத்தவர் முதலில் இறங்கி வர வேண்டும் என்று காத்திருக்காமல் நீங்களே பேச்சை துவக்க முன்வாருங்கள்.
*தேவையான இடங்களில் நன்றியும்,பாராட்டையும் சொல்ல மறவாதீர்கள்.
-வேதாத்திரி மகரிஷி

புதன், 1 ஏப்ரல், 2015

"இயற்கை விதி (Law of Nature)"

ஆகர்ஷண சக்தி (Attractive Force), பிரதிகிருஷ்ண சக்தி (Repulsive Force) என்ற இரண்டுதான் பிரபஞ்சத்தில் நடைபெறும் எல்லா நிகழ்ச்சிகட்கும் அடிப்படை. அணுவின் இயக்கத்தால் பிரதிகிருஷ்ண சக்தியும், வெட்ட வெளியின் அழுத்தத்தால் ஆகர்ஷண சக்தியும் உண்டாயின. ஆகர்ஷண சக்தியை எதிர்த்துப் பிரதிகிருஷ்ண சக்தி இயங்குகின்றது. பிரதிகிருஷ்ண சக்தி தோல்வியுறும் போது அந்த அளவில் ஆகர்ஷண சக்தி செயல்படுகிறது....
.

ஆகர்ஷண சக்தி, பிரதிகிருஷ்ண சக்தி என்ற இரண்டும் வெட்ட வெளியின் அழுத்தச் சக்தி என்ற ஒரே சக்தியின் பிரிவு இயக்கங்களே. பரம அணுக்களும் வெட்ட வெளியும் ஒரு மண்டலத்தில், அல்லது கொத்து நிகழச்சியில் எந்த அளவு விகிதத்தில் அடங்கியுள்ளனவோ அதற்கு ஏற்ப அந்த மண்டல நிகழ்ச்சி சிறப்புறும். ஆகர்ஷண சக்தி, பிரதிகிருஷ்ண சக்தி இவற்றின் இயக்க விதியும் அதன் விளைவுகளும் தான் இயற்கை விதி (Law of Nature) யாக மதிக்கப் பெறுகின்றன. இந்த விதி அணு முதல் அண்டம் வரையில் ஒரு சீரானது, மாறாதது, தவறாதது.
.
ஆகர்ஷண சக்தியின் அடித்தளத்தையும் அறிவின் மூலத்தையும் விஞ்ஞானம் உணரும்போது அது மெய்ப்பொருள் விளக்கமாக, தத்துவ ஞானமாக ஆகிவிடும்.
.
தத்துவஞானம் வேறு, விஞ்ஞானம் வேறு என்று கூற முடியாது. பொருள் நிலையை யூகித்து உணர்ந்து அதன் நிகழ்ச்சி நிலைகளைக் கூறுபடுத்தி விளக்குவது தத்துவம். பொருள் நிலையை மறந்து அல்லது காணமுடியாமல் விடுத்து அதன் நிகழ்ச்சிகளையே பொருள் என மதித்தும் விளக்கிப் பிரித்தும் பேசுவது விஞ்ஞானம். தத்துவ ஞானத்தில் விஞ்ஞானம் அடங்கியுள்ளது. விஞ்ஞானம் தத்துவ ஞானத்தை நாடிச் சென்று கொண்டிருக்கிறது.
.
விஞ்ஞானமாயினும் தத்துவஞானமாயினும் இன்ப துன்ப உணர்ச்சிகளை முறைப்படுத்த மனிதன் எடுத்த முயற்சியின் விளைவுகளே. எனவே வாழ்வின் நலத்திற்கே - தெளிவிற்கே - இனிமைக்கே - விஞ்ஞானமும் தத்துவ ஞானமும் உரியன."
.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
.
விஞ்ஞானத்தோடு மெய்ஞ்ஞானமும் வளர வேண்டும் :
" விஞ்ஞான அறிவு வாழ்வில் இன்பம்
விளைக்கவெனில் பொறுப்புடைய தலைவரெல்லாம்
மெய்ஞ்ஞானம் பெறவேண்டும் அகத்தவத்தால்
மெய்யுணர்வும் உயிர்த்தொண்டும் உலகைக்காக்கும்."
.
விஞ்ஞானிகளுக்கு:
" அறிவினிலே மிக உயர்ந்து நுட்பத்தோடு
அணுவினிலும் நின்றொடுங்கி ஆழ்ந்தாராய்ந்து
அறிவாலே அண்டம், பிண்டம், அரூபம், ரூபம்
அறிந்து விட்டீர் விஞ்ஞான நிபுணரே ! நம்
அறிவு எது? எங்குள்ளது? அந்தமென்ன?
அணுவினிலே உள சக்தி பிறந்த தெங்கே?
அறிவாலே ஒன்றி ஒன்றி ஆய்ந்து பாரீர் !
அணுநிலைக்கு அப்பாலே இரண்டும் ஒன்றாம்."
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

செவ்வாய், 31 மார்ச், 2015

விஞ்ஞானம், மெய்ஞ்ஞானம் :


 ....
உருவம், ஒலி, ஒளி, சுவை, மணம் எனும் ஐந்து விளைவுகளுக்கும் மூலமானதும், மெய்ப்பொருளானதும், காலம், தூரம், பருமன், வேகம் எனும் கணிப்புக்கு அப்பாற்பட்டதும் ஆகிய மெய்ப்பொருளினைப் பற்றியும், ஐயுணர்வுகளாகவும் சிந்தனை ஆற்றலாகவும் உள்ள அறிவைப் பற்றியும் உணர்ந்து கொள்ளும் தெளிவு மெய்ஞ்ஞானம். இயக்கத்தைக் கண்டது விஞ்ஞானம். இயக்க மூலத்தை உணர்ந்தது மெய்ஞ்ஞானம். உடலை வளர்ப்பதும் அதை அழகுபடுத்துவதும் விஞ்ஞானம். உள்ளத்தை மேன்மையாக்குவதும், தூய்மையாக்குவதும் மெய்ஞ்ஞானம். வாழ்வில் சிறப்பளிப்பது விஞ்ஞானம். வாழ்வில் அமைதி தருவது மெய்ஞ்ஞானம். இயங்கி அறிவது விஞ்ஞானம். நிலைத்து உணர்வது மெய்ஞ்ஞானம். வாழ்வின் முன்னேற்றம் "விஞ்ஞானம்" வாழ்வின் சீர்திருத்தம் "மெய்ஞ்ஞானம்".
.
வாழ்வை வளப்படுத்தும் ஒரு உயர்நிதி விஞ்ஞானம். அந்த நிதியைப் பாதுகாக்கும் பெட்டகம் மெய்ஞ்ஞானம். துணைக்கருவிகளைக் கொண்டு உடல் கருவிகளை ஆற்றல்களைப் பெருக்கிவருகிறது விஞ்ஞானம். உடற்கருவிகளை திறமையோடு ஆற்ற அறிவை முழுமையாக்குகிறது மெய்ஞ்ஞானம். மனிதனுக்கு களிப்பூட்டவல்லது விஞ்ஞானம். அக்களிப்பு சலிப்பாக மாறாமல் அளவு கட்டிக்காவல் புரியவள்ளது மெய்ஞ்ஞானம். மெய்ஞ்ஞானத்தோடு இணைந்த விஞ்ஞானம் வாழ்வின் நலம்காக்கும். மெய்ஞ்ஞானத்தைப் புறக்கணித்த விஞ்ஞானம் வாழ்வின் வளமழிக்கும். மறைபொருள் விளக்கம்தான் மெய்ஞ்ஞானம். உருப்பொருள் விளக்கம் தான் விஞ்ஞானம். அறிவைப் பற்றி, உயிரைப் பற்றி, உயிருக்கும் மூலமெய்ப்பொருளைப் பற்றி அறிந்து கொள்வது மெய்ஞ்ஞானம். உடலைப் பற்றி, உலகைப் பற்றி அறிந்து கொள்வது விஞ்ஞானம். அறிவின் சிறப்பு மெய்ஞ்ஞானம்.
.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
.
"விஞ்ஞானம் விளக்கைப் போல் இயற்கையில் நிகழ்ந்திடும்
விந்தைகளை மக்களுக்கு வெளிப்படுத்தும் ஒளியென்றால்;
மெய்ஞ்ஞானம் சூரியன் போல் எங்கும் எக்காலத்தும்
மேல் நிலையை அறிவெய்த மிகச் சிறந்த ஒளியாகும்".
.
"அஞ்ஞானம் அறிவினது ஆரம்ப நிலையாகும்.
விஞ்ஞானமோ அறிவின் வேகநிலை,
மெய்ஞ்ஞானம் அறிவதனின் பூரணமாம்,
இஞ்ஞானம் மூன்றும் இயற்கையின் எண்ண நிலை".
.
"விஞ்ஞானம் சிறப்புற்று விண் வெளியுணரப் பெற்றால்
அஞ்ஞானம் மறைந்து விடும் அன்பும் அருளும் பொங்கி
மெய்ஞ்ஞானம் ஒளி வீசும் மெய் உயிர் அறிவறிவு
இஞ்ஞால முழுமைக்கும் ஏற்றமுறும் இன்பமே".
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

திங்கள், 30 மார்ச், 2015

நற்பண்புகாக்க:


 ....
தேவை, பழக்கம், சூழ்நிலை இவற்றின் உந்துதளால் தன்னை மறந்து, புலன் வழி நின்று வாழும் மயக்க நிலையிலிருந்து விடுபட்டு அறிவின் தெளிவோடு, வாழ்வின் பயனுணர்ந்து, புலன்களைக் கருவிகளாகக் கொண்டு விழிப்பு நிலையில் வாழும் பேறு பெற்றிருக்கிறோம். மெய்யுணர்தவத்தால் ஆன்மலயம், அறிவின் விழிப்பு, விளைவைக் கணித்துத் திட்டமிட்டுச் செயல்புரியும் பெருங்கணக்கு இவை நமக்கு நாளுக்கு நாள் இயல்பாக ஓங்கி வருகின்றன. இவ்வுயர் அன்பு பேற்றினைக்கொண்டு நாம் சிறப்பாகவும் வளமுடனும் வாழ வேண்டும். வாழும் மக்களுக்கும் வருங்கால உலகுக்கும் நாம், வாழ்க்கை வழி காட்டிகளாக விளங்க வேண்டும். இத்தகைய பொறுப்புக்கள் நமக்கு இருக்கின்றன. இப்பொறுப்புகளை நமது கடமையாகக் கொண்டு நாம் செயலாற்றி வாழ வேண்டும்.
.
பொருள் வளம், ஒழுக்கம், இறையுணர்வு மறவாத மனநிலை, தொண்டு என்ற நான்கு பண்புகளும் மனிதன் வாழ்வின் உயர்வுக்கு இன்றியமையாத தேவைகள். மயக்கமுற்ற உலகின் பலதரப்பட்ட மக்களுடன் ஒட்டி, உறவு பூண்டு நாம் கடமையாற்றி வாழ்கிறோம். இதனால் இந்த நான்கு பண்புகளையும் காப்பது மிகவும் கடினம்தான் என்றாலும் நாம் மதிப்பு மிக்க நற்பண்புகளைக் காத்தே ஆக வேண்டும். அது தான் நமது தலையாய கடமை. வரவுக்குட்பட்டுச் செலவை வரையறுத்து வாழ்வதிலும், தேவையின் அவசியமுணர்ந்து பொருள் பெற்றுத் துய்ப்பதிலும் மிகவும் விழிப்போடு இருக்க வேண்டியுள்ளது.
.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
.
"இன்பமும் அமைதியும் மனதிற்குள்ளிருந்து தான்
வர வேண்டும் என்பதை அறியாதோர் எங்கெல்லாமோ
அதைத் தேடி அலைந்து துன்புறுகிறார்கள்."
.
அமைதியின்மை எதனால்?
"அறிவறிந்தோர் அகத்ததை மெய்ப்பொருளாய்க் காண்பார்
அறியாதோர் உடலளவில் எல்லையானார்
அறிவறிந்தோர் அறுகுணங்கள் நிறைவமைதி,
அன்பு, கற்போடு, ஞானம், மன்னிப்பாச்சு
அறிவறியார் அறுகுணத்தால் பகை, பிணக்கு,
அச்சம், போர், இவையாகித் துன்பம் ஏற்பார்
அறிவறிந்த அறியாத ஏற்றத் தாழ்வே
அமைதியின்மை விளைந்துளது மனிதர் வாழ்வில்."
.
அமைதி பெறுவீர்:
"அறிவு என்பதோ களங்கமற்றது
அன்பு ஒன்றே அதன் இயல்பாகும்;
அனுபவம் தேவைகள் என்னும் இரண்டால்
அதுவே குணங்களாய்க் களங்கமுற்றது ;
அறிவு அகம் நோக்கித் தன்னிலை கண்டிட
அகன்று போகும் களங்கம். சுயமாகும்
அன்பு தொண்டு அறம் இயல்பாகிவிடும்
அந்த நிலைநாடி அமைதிபெறுவீரே!."
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

ஞாயிறு, 29 மார்ச், 2015

ஆசைகளை முறைப்படுத்திக் கொள்வோம் :


நம்முடைய மனம் சில நிமிடங்களுக்குள்,
நூற்றுக்கணக்கான ஆசைகளை நினைக்கவல்லது.
...
ஆனால், அவற்றில் ஒரு சில ஆசைகளை, நம்முடைய உடம்பால் ஏற்றுச் சமாளிக்க முடியாது. சில விருப்பங்களை ஈடேறச் செய்வதற்குப் போதுமான வாய்ப்பும் நமக்குக் கிடைப்பதில்லை.
ஆசைகளை மேலும் மேலும் வளர்த்துக் கொண்டு அவை நிறைவேறாமல் போகும்போது நாம் ஏமாற்றத்தில் ஆழ்ந்து விடுவோம்.
இப்படி மனதைக் கீழ்நிலைக்குச் செல்லாமல் பக்குவப்படுத்த நம்மை தயார் செய்ய வேண்டும்.

ஆசைகளைக் குறைத்துக் கொள்வது அல்லது கட்டுப்படுத்திக் கொள்வது மட்டுமே இதற்கு முதல்படியாக அமையும்.

முதலில் நாம் எண்ணும் ஆசைகள் நம் நிலைக்கு பொருத்தமானவையாகவும், மனஅமைதியைக் கெடுக்காத வகையிலும் அமைவது அவசியம்.

இரண்டாவதாக நம் ஆசைகள் பிறரைப் பாதிக்காத வகையில் அமைய வேண்டும்.

மூன்றாவதாக இயற்கை நியதிகளை ஒட்டியதாக ஆசை இருத்தல் வேண்டும்.
இயற்கையின் ஒழுங்குக்கு மீறிய எண்ணங்கள் நிச்சயமாக நம்மைத் தண்டித்து விடும்.

இப்படி ஆசைகளை முறைப்படுத்தி விட்டால் நாம் நலமுடன் வாழலாம்.
பரலோகத்திலும் நன்மைகளைப் பெறலாம்.
--- அருள்தந்தை

சனி, 28 மார்ச், 2015

மெய்விளக்கம் :

விஞ்ஞான அறிவு வளர்ச்சி பெற்று விட்டால் மாத்திரம் மனித வாழ்வு நிறைவு பெற்று விடாது. மெய்யறிவு இல்லாத விண்ணறிவும், புலனறிவும், தன்முனைப்பிலிருந்து மனிதனை விடுவித்து அறிவின் முழுமையையும் அமைதியையும் அளிக்க முடியாது. புலனறிவால் விரிந்து காணும் உலகம், சிந்தனையால் சுருங்கிக் காணுகிறது என்பது தெளிவு. இயற்கையின் முழுமுதல் நிலையான பேராதார நிலையையும், அதையும் ஐயமின்றி உணரக் கூடிய அறிவையும், உணர்ந்து கொள்ளும் அறிவின் முழுமைப் பேறுதான் மெய்யறிவாகும். புலன் அறிவால் பல கோடி தோற்றங்களாகக் காணும் உலகம் சிந்தனை அறிவு எனும் விஞ்ஞானத்தால் வெளி-விண்-அறிவு என்ற மூன்று பொருட்களுக்குள் சுருங்கி விடுகிறது.
.
இவற்றில் வெளி, விண் எனும் இரண்டு பொருட்களுக்கிடையே உள்ள உறவும், இவ்விரண்டில் எது முந்தியது எது பிந்தியது என்ற விளக்கம் காணும் போது, விண் என்பது இருப்பு நிலையாகிய வெளியின் நுண்ணியக்கச் சுழலலையே என்று உணரும் போது வெளிவிண் இரண்டும் ஒன்றாகி விடுகிறது. அகத்தவத்தின் மூலம் அறிவு ஒடுங்கி அந்த முழுமுதற் பொருளான இருப்பு நிலையறியும் பேறுகிட்டும் போது அகக்காட்சியில் அப்பேராதாரப் பரம் பொருளில் அறிவு அடங்கி உறைந்து ஒன்றுபட்டு அதன் தனித்தியங்கும் செயலொழிந்து இருப்பு நிலையாகி விடுகிறது. இந்த அனுபவமே மெய் விளக்கமாகும்.
.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
.
"உயிருக்குள்ளாகத் தெய்வமே அறிவாக இருக்கிறது -
என்று விளக்கிக் காட்டுவது தான்
அகத்தவப்பயிற்சி (Simplified Kundalini Yoga)."
.
"அறிவு என்பது அறியப்படுவது.
ஞானம் என்பது உணரப்படுவது."
.
"அறிவை ஏடுகளில் பெறலாம்.
ஞானத்தை தவத்தால் பெறலாம்."
.
"ஆறாவது அறிவைக் கொண்ட
இந்த மனிதனின் வாழ்வின் நோக்கம்,
அறிவு முழுமை பெறவேண்டும் என்பதே."
.
"அறிவு என்பது - உண்மை மெய்ப்பொருள் நிலை".
.
"அண்டத்தில் கடவுளாய் அழைக்கப் படுபவன்
பிண்டத்தில் உயிரெனப் பேசப் படுகிறான்
கண்டத்தின் மேலே கருவில் நிலைத்தவன்
அண்டத்தும் பிண்டத்தும் அவனையே காண்கின்றான்".
.
பழிச்சுமை கழி:
"ஐயுணர்வின் வயம் ஏற்ற
ஆன்மாவின் பழிச் சுமையை
மெய்யுணர்வு பெற்றாற்றி
மிக எளிதில் கழித்திடலாம்.
தெய்வ நிலையுடன் அறிவைச்
சேர்த்தொன்றும் தவம் பயின்று
உய்ய நினைந்தால்; உலகீர் !
உடனே என் தொடர்பு கொள்வீர்! "
.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

வெள்ளி, 27 மார்ச், 2015

என் வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்வுக்கும் முன் செய்த வினை (செயல்) தான் காரணம் என்றால், நான் இவ்வுலகில் முதன் முதலில் ஒரு பிறப்பு எடுத்திருப்பேன் அல்லவா? [அதற்கு முன் பிறப்பில்லை.] அப்படிபட்ட முதல் பிறப்பில் நான் செய்த செயல்களுக்கு எது காரணமாக இருந்தது?


வேதாத்திரி மகரிஷியின் பதில்:
முதல்ல இந்த கேள்வியின் அடிப்படை முதல் மனிதன் திடீரென தோன்றினான். எனவே மனிதன் திடீரென படைக்கப் பட்டதால் அதற்கு முன்னதாக எந்த செயலும் இல்லை, விளைவும் இல்லை.பின் எப்படி விளைவு வந்தது ? என்பதே .
முதல் பிறப்பு, முதல் மனிதன் அப்படிங்கறதே இல்லை, எந்தக் கடவுளும் மனிதனைப் படைக்கவில்லை. மனிதன் விலங்கிலிருந்து பரிணாம வளர்ச்சியில் வந்தவன்தான். விலங்கினங்களிடம் இருந்த அடிப்படைக் குணங்கள் அவனிடமும் இருந்தன,
எனவே விலங்கினத்தொடர் மனிதன், அப்படின்னா
விலங்கினப் பதிவுகள் நம் வினைகள், அவ்வளவுதான்.
பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக நான்கு கால்களோடு வாழ்ந்த ஐயறிவு உயிரினங்கள்,
பின்கால்கள் இரண்டைக் கொண்டே நிற்கப் பழகிக் கொண்டு, இரண்டுகால் உடைய உயிரினமாகவும், அதிலிருந்து ஆதிமனிதனாகவும் பரிணாமம் அடைந்தன.
ஆதிமனிதன் ஒருபோதும் கடவுளால் இப்போது உள்ளவாறு திடீரென படைக்கப் படவில்லை.
பரிணாம வளர்ச்சியில் யூகம், அனுமானம் என்கிற ஆறாவது அறிவுடன் மனிதன் வந்தான்.
இவையெல்லாம் வருவதற்கு பலகோடி ஆண்டுகள் ஆகிவிட்டன. இதுவே மனித பரிணாம வளர்ச்சியின் சாரம்.
மனிதன் எங்கிருந்து வந்தான் எனப்பார்த்தால் பல கோடி வருடங்களாக பல உயிரினங்களின் வித்துத் தொடராக வந்து இன்றைய நிலையை அடைந்திருக்கிறான்.
அப்போது அது ஒரு செல் உயிரினமாக நீரில் தோன்றியதிலிருந்து விலங்கினம் வரை வித்துத் தொடராக அவற்றின் வாழ்க்கை முறைப் பதிவுகள் அனைத்தும் நம்முள்ளே உண்டு.
ஆகையால் மனிதனிடத்தில், அவனுடைய வித்தில், கருமையத்தில் இவை அனைத்தின் சாரம்சமும் உள்ளடங்கியே இருக்கும்.
இந்த விலங்கினத்தின் வித்தில், உடலில், மூளையில் பிற உயிரைப் பறித்து உண்ணும் செயல்களும், குணங்களுமே பதிவுகளாக உள்ளன.
அதே விலங்கினத்தின் வித்துத் தொடராகத்தான் மனிதன் வந்திருக்கிறான்.
இது மேலும் மேலும் அதிகமாகி தீவினைப் பதிவுகளாக நமக்கு சேர்ந்து கொண்டே வருகிறது. மனிதனுக்கு வினை வந்த வழி இதுதான்.
இதை உணர்வது ஆறாவது அறிவு, உணர்ந்துபின் வினைப்பதிவை களைவதுதான் நமது வாழ்வின் அமைதிக்கு வழி.
---வாழ்க வளமுடன்

வியாழன், 26 மார்ச், 2015

தத்துவம்

இது(assumption) யூகம் என்றாலும் எந்த ஒரு  உண்மையையும் கண்ணால் பாராமலே யூகித்தாலும் அதை மற்ற இயக்கங்களுடன்   பொருத்திப் பார்க்கும்பொழுது முரண்படாது  இருக்குமானால் அந்த அனுமானம் தான் தத்துவம்.
.
..
ஏன் எனில் கண்ணால் காண்பது, புலன்களால் உணர்வது, கருவிகளால்
உணர்வது, காலம் , தூரம், பருமன், வேகம் என்ற அளவைகளால் அறிவது
எல்லாம் சிற்றெல்லைகளைக் கொண்டது. இதுதான் விஞ்ஞானம்
.
.
விண் என்ற அறிவை வைத்துக்கொண்டு  அதிலிருந்து வளர்ப்பது விஞ்ஞானம்.
விண் என்பது சுழல் இயக்கம் உடையது. அதுவே வேகம் என்பதாகும். அந்த சுழற்சிக்கு  ஒரு மையம் இருக்கிறது. அதன் இயக்கத்திற்கும்  மற்றொரு இயக்கத்திற்கும் இடையே  ஒரு தூரம் இருக்கிறது. அதன் இயக்க
தொடர் நீளமே காலம் ஆகும்.
.
.
ஆகவே இந்த காலம், தூரம், பருமன், வேகம் என்ற நான்கையும் வைத்துக்கொண்டு  பொருட்களை கணிப்பது விஞ்ஞானம். ஆனால்,
.
.
இந்த நான்கும் தோன்றுவதற்கு முன்னதாக  எது இருந்ததோ, எந்த மூலத்திலிருந்து இந்த  நான்கும் பிறந்தனவோ அதை அறிந்துகொள்வதுதான்
தத்துவ ஞானம். அந்த அறிவை அறிந்தால்தான்  மனிதன் மனிதனாக வாழமுடியும்.
.
.
சூரியனுக்கும், பூமிக்கும் உள்ள தூரத்தை எடுத்துக்கொண்டால் சுமார் 9 கோடிமைல். பூமி, சூரியனைச் சுற்றி வரும் பாதையில்   ஒருநாளைக்கு ஓடும் தூரம் பதினைந்து   லட்சத்து ஐம்பதாயிரம் மைல்.

நாம் 10 நிமிடத்தில் ஐந்து மைல் ஓடிவிட்டால்  தன்முனைப்பு வந்துவிடுகிறது. இந்தச் சூரிய  மண்டலம் அதன் உடம்பை தூக்கிக்கொண்டு  அந்த மாதிரி ஓடுவதற்கு சக்தியையும்  கொடுத்துக்கொண்டு தன்னைக் காட்டிக்கொள்ளாது
இருக்கின்றதே அதுதான் இறைநிலை.
.
.
இத்தகைய கணிப்புக்கெட்டாத  ஆற்றலுடைய இறைநிலையைத்தான்
நான் “இறைவெளியென்றும், சுத்தவெளியென்றும்” கூறிவருகிறேன்
.
.
-வேதாத்திரி மகரிஷி

புதன், 25 மார்ச், 2015

மனவளக்கலை:


 ....

"உலக சமுதாயச் சூழ்நிலையில் விரிந்த கண்ணோட்டத்தோடு மக்களுக்குத் தொண்டு முறையில் ஆன்மீக அறிவை ஊக்குவிக்கவும், அதனைத் தடுத்துக் கொண்டிருக்கும் கற்பனைப் புகையையும், துன்பங்கள், சிக்கல்கள், இவற்றைக் குறைப்பதற்காகவும் திட்டமிட்டுத் தொடங்கப்பெற்ற நிறுவனமே "உலக சமுதாய சேவா சங்கமும்" அதன் செயல்வழியாகிய "மனவளக்கலையுமாகும்". "கர்மயோகம்" என்னும் வாழ்க்கை நெறியை மக்கள் பண்பாடாக வளர்ப்பது சிறந்ததோர் சீர்திருத்தத் திட்டமாகும். சிந்தனையை வளர்க்கவும், அறிவுக்கு நுண்மை, கூர்மை, உறுதி, தெளிவு இவற்றையளித்து அமைதியை உருவாக்கவல்ல "அகத்தவமுறை" இதில் இருக்கிறது.
.

நான் என்ன செய்கிறேன், இதனால் என்ன விளைவு ஏற்படும் என்பதையுணர்ந்து நலனை தேர்ந்து செயலாற்றும் பண்பாட்டை வளர்க்க "அகத்தாய்வுப் பயிற்சி" இருக்கிறது. நோய்களைப் போக்கிக் கொள்ளவும், நோய் வராமல் காக்கவும் ஏற்ற உடற்பயிற்சியும் உடலோம்பும் அறிவுப் பாடங்களும் உள்ளன. விளைவறிந்து செயலாற்றும் விழிப்பு நிலையில், ஒவ்வொரு செயலிலும் இறையுணர்வைப் பெற்றும் "அறவழி வாழவும்" ஏற்ற கர்மயோக நெறி நிற்கும் வாழ்க்கை முறை இருக்கிறது. பிறவிப் பயனாகிய அறிவை அறிய, இறைநிலையோடு ஒன்று கலந்து பேரின்ப வாழ்வினை அனுபவிக்க ஏற்ற அறிவு விளக்கப் பயிற்சியும் வாழ்வு முறையும் உள்ளன. தன் தகுதியை விளங்கிக் கொண்டும், அதை வளர்த்துக் கொண்டும், தன்னம்பிக்கையோடு வாழ்வை நடத்த அச்சமின்மையும், தகைமையும் வளர்த்துக் கொள்ள ஏற்ற ஆக்கமுறை வாழ்க்கை நெறி இருக்கிறது. பொதுவாகவும் சுருக்கமாகவும் சொல்லுமிடத்து மனிதன் மனிதனாக வாழ ஏற்ற ஒரு சாதனை வழியே "மனவளக்கலையாகும்".
.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
.

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
.

ஒடுங்கி-உணர்ந்திடு:

"நினைவை யடக்க நினைத்தால், நிலையா.
நினைவை யறிய நினைத்தால், நிலைக்கும்."
.

பற்றற்ற வாழ்வு :

"நெற்றியில் உச்சியில் ஞாபகமாயிரு,
உற்றுற்றுப் பார்த்திடு உன்னை உலகை பின்,
கற்றபடி நட கருத்து விழிப்புடன்,
பற்றற்று வாழும் பழக்கம் உண்டாகிவிடும்."
.

குழந்தைகட்கே பக்தி நெறி :

"உருவ வழிபாடு சிறுகுழந்தைகட்கு மட்டும்
உயர்ந்த முறை; மனதுவளம், அடக்கம் இவைபழக
பருவமடைந்தோர்கட்குப் பதினெட்டாண்டின் மேல்
பருப் பொருட்கு மூலநிலை விண்ணுணரும் அறிவும்
அருவநிலை அகத்துணரும் அகத்தவம் இப்பார்
அனைத்தும் வாழ்மக்களுக்கும் பொதுத்தேவை உய்ய
கருவழியே நற்பிறப்பும் மும்மலங்களான
கரை மறைந்து மனிதகுலம் மேன்மை வளம் எய்தும்."
.

மனித மாண்பு (Simplified Kundalini Yoga) :-

"மனிதவுயிர் பிறவியதன் மதிப்புணர வேண்டும்
மனம் உயிர்மெய்மூன்றான மறைபொருட்களான
மனிதனுடைய ஆற்றல்களை மலரவைக்க வேண்டும்
மறைந்திருக்கும் உட்பதிவாம் பலவினைகடம்மை
மனிதனேமாற்றி அறச்செயல் பதிவு செய்து
மனத்தூய்மை வினைத்தூய்மை பெற்று பரத்துறைந்து
மனிதனவன் உயர்மனிதனாக வாழச்செய்யும்
மனவளக்கலையிதனைப் பரப்பி நலம் காண்போம்."
.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

செவ்வாய், 24 மார்ச், 2015

கற்பனைகள் மலரும் விதம் :



ஒரு செயலை அல்லது அனுபோகத்தை அது நடவாத முன் ஞாபகத்தினால் உருவாக்கினால் அது கற்பனையே ஆகும்.
.

புலனுணர்ச்சிகளிலே குறுகி நிற்கும் அறிவின் நிலையில் எழும் கற்பனைகளுக்கு, அந்த உடல் பலம், அந்த நிகழ்ச்சிக்குரிய சமய சந்தர்ப்பப் பலம் இவைகள் மாத்திரம் உதவியாக இருக்கும்.
.

விரிந்த அகண்டகார ஆராய்ச்சி எல்லையிலே எழும் கற்பனைகளுக்கு, இயற்கையில் அமைந்துள்ள எல்லாவகையான பலமும் நீண்டகாலமாக சமுதாயத்தைத் தொடர்ந்து வரும் உலக அனுபவங்களும், அக்கால மக்களின் அறிவின் பலமும் ஒன்று சேர்ந்து, அக்கால கற்பனைகளைச் செயல்படுத்தும் சூழ்நிலைகளை உருவாக்கிப் பின்னர் அவை செயலாக மலரும் படி செய்யும்.
.

புலனடக்கம்:
முதன் முதலாக சித்திரம் எழுதப் பழகுபவனுக்கு எண்ணத்தில் உள்ளபடி உருவம் அமைவதில்லை. பழகப் பழக எந்தவிதமாக எண்ணுகிறானோ அவ்விதமே அவன் எழுதும் உருவமும் அமைந்து விடுகிறது.
.

ஆராய்ச்சி முடிவுகளில் அறிவின் விழிப்புடன் செயலாற்ற வேண்டுமென முயற்சிப்பவர்களுக்கு, இது போன்றே ஐம்புலன்களும் உடனே கட்டுப்பட்டு விடாது. பழகப் பழக எதை எண்ணுகிறானோ அதன்படி செயலாற்றும் திறமையும் வல்லமையும் ஏற்பட்டுவிடும்.
.

ஆகவே பொறுமையுடன் திட மனத்துடன் நீடித்துப் பழகி இலட்சிய எல்லையை அடைய வேண்டும்.
.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
.

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
.

"கரு வளர வளர கருப்பையும் அகன்று தேவைக்கேற்ப
விரிவு அடைகிறது. இது போல அறிவு வளர வளர
அது செயல் புரிய ஏற்ற வாய்ப்பும் வசதிகளும்
பெருகிக் கொண்டே இருக்கும்".
.

"அறிவும் புலன்களும் :

"அறிவைப் புலங்களில் அதிக நாள் பழக்கினேன்
அதன்பலன் உணர்ச்சிகள் அறிவை வென்றன,
அறிவையறிவால் ஆராயப் பழக்கினேன்
அந்தநிலையிலும் புலன்களை இயக்கினேன்;
அறிவு அகண்டாகாரத்தில் நிலை பெற
அதிகவிழிப்பும் வழக்கமும் பெற்றது,
அறிவு புலன்களை அறிந்தது, வென்றது
அங்கு வாருங்கள் அமைதி விரும்புவோர்".
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

திங்கள், 23 மார்ச், 2015

இறையுணர்வு பெறும் ஆற்றல் எல்லாருக்கும் உண்டு :

.
"அறிவு ஒரு மறை பொருள். அதைக் கொண்டு தான் பேரியக்க மண்டலப் பொதுவான மறைபொருள் தெய்வ நிலையை உணர முடியும். எந்த இயக்கமானாலும் இருப்பு நிலையில்தான் மோதவேண்டும். அதில்தான் முடியவும் வேண்டும். இங்கே உணர்ந்து கொள்வது எது? அலையாக இயங்கி மோதுவதா? அல்லது இருப்பாக இருந்து தாங்குவதா? இருப்புதான் உணர்கிறது. எல்லாத் தோற்றங்களிலுள்ள இயக்க அலையை எங்கும் நி...றைவாயுள்ள நிலைபொருள் இருப்பு நிலை - இறைவெளிதான் உணர்வாகப் பெறுகிறது. ஆகவே இறைவெளியான இருப்பு நிலை பேரறிவு - (Super Consciousness) எனவும் அகண்டாகாரமாக அது நிறைந்திருப்பதால் (Cosmic - consciousness) வாணறிவு எனவும் போற்றப்படுகிறது.
.

அறிவுதான் நான் என்னும் பொருளாக உள்ளது என்றும் அதுதான் இருப்பு நிலையாக தெய்வமாகவும் உள்ளது என்றும் உணரும் பெரும் பேறு மனிதனுக்குக் கிட்டிவிட்டால் அவன் தெய்வமாகவே திகழும் பெருமையுடையவனாகிறான். ஆதி முதல் அணுவரையில் அவனேயாகி அனைத்திலும் அவனே நிறைந்த பொருளாக இருப்பதால் அறிவே தான் நான் என்று உணர்ந்து அதுவே தெய்வமாகவும் இருக்கிறது என்ற பேரறிவில் அவன் எல்லாம் உணரும் ஆற்றல் பெற்றவனாகிறான். இதனை அறிவறிந்த பெரியார் 'வள்ளுவப்' பெருந்தகை
.
"ஐயப்படாது அகத்தது உணர்வானைத்
தெய்வத்தோ டொப்பக் கொளல்".
என்ற கவி மூலம் விளக்கியிருக்கிறார்.
.
இந்தப் பேரறிவில் விழிப்போடு இருப்பவர்களுக்கு எதைப் பற்றி நினைத்தாலும் அதிலிருந்து வரும் விளக்கம் இறைவனே பேசுவது போல இருக்கும். இந்த மனநிலையில்தான் முழுமையான அமைதி மனிதனுக்குக் கிட்டும். அறிவை அறியும் வரை அது குறையுடையதாகவே இருக்கும். அந்த நிலையில் பொருள், புகழ், அதிகாரம், புலனின்பம் என்ற நான்கில் தன்னை இணைத்துக் கொண்டு இன்னும் வேண்டும், இன்னும் வேண்டும் என்ற குறையுடையதாகவே, வறுமை மிஞ்சியதாகவே இருக்கும். அறிவையறியும் ஆற்றல் அனைவரிடமும் உண்டு. அதற்கு பயிற்சி வழி அகத்தவமும் (Simplified Kundalini Yoga), அறநெறி பற்றி வாழும் முறையும் ஆகும்.
.
அகத்தவமும் அற வாழ்வும்".
--------------------------------------------
"மறைபொருளாம் அறிவு சிவம் இரண்டும் ஒன்றாய் நானாய்
மனிதன் தெய்வமாய்த் திகழும் மாபதம் பேறானால்
இறையுணர்வால் தன்முனைப்புப் பேரறிவாய் மாறும்
எப்போதும் ஈசன் குரல் உள்ளுணர்வாய்க் கேட்கும்;
குறையறிவில் பொருட்கள் புகழ் புலன் இன்பம் இவற்றில்
கொடிய வறுமை பெருகும். நிறைவு கிட்டா வாழ்வில்
நிறைநிலையை எவரெனினும் முயற்சித்தால் பெறலாம்
நேர்வழியோ அகத்தவமும் நிறையற வாழ்வாகும்".
.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

ஞாயிறு, 22 மார்ச், 2015

Thoughts and Bio-Magnetism


The thoughts of men occur according to the following: (1) Needs, (2) Satisfaction and experiences (3) Realization. These three are otherwise called ICHA SAKTHI, KIRIYA SAKTHI, and GNANA SAKTHI respectively. Each state is of several kinds. When the thought is no Needs, there if is in emotional state. The six temperaments such as greed, anger, miserliness, immoral sexual passion, vanity and vengeance will come out in this state only. Here the bio-mag...netism will be quickly converted and also consumed to a greater extent. As a consequence, the chemical qualities and activities will be affected in the body. Out of all the emotional activities of thought sexual passion anger and mental anxieties or worries will result in greater loss of energy of the soul. If these become habits, the adverse effects would naturally be more. The State of thought in satisfaction and experience is harmonious to the body and the mind. This state will keep the body and its chemical activities in a normal condition.
- Vethathiri Maharishi

சனி, 21 மார்ச், 2015

"கருமையம்"

"கருமையம்" இறைநிலையின் பிரபஞ்ச பரிணாமச் சரித்திரம் முழுமையாக அடக்கம் பெற்றுள்ள தெய்வீகப் பெட்டகம். காந்த ஆற்றலின் திணிவு பெற்ற பிரபஞ்சப் பிரதிபலிப்பு கண்ணாடி. 'கருமையம்' தான் சீவ இனங்களில் 'ஆன்மா' எனப்படுகிறது. கல்வியறிவு பெறாதவர்களும், சிந்திக்கும் திறம் குறைந்தவர்களும் கூடக் கருமையத் தூய்மை பெறுவதற்கு எளியவழி உண்டு. உலக நலம் நாடி, மக்கள் குலம் உய்ய வேண்டும் என்ற பெரு நோக்கத்தில், அத்தகைய வாழ்க்கை நெறி எளியமுறை என்னவெனில்,
.
1] "எவருக்கும் மறைமுகமாகவோ, நேர்முகமாகவோ
மனதுக்கும...் உடலுக்கும் துன்பம் இழைக்கக் கூடாது".
.

2] "தேவை உள்ளவர்களுக்கும் துன்பத்தினால் வருந்துபவர்களுக்கும் உடல் ஆற்றல், அறிவுஆற்றல், பொருட்கள் இவற்றைக் கொண்டு இயன்றவரை உதவி செய்ய வேண்டும்."
.
என்ற இந்த இரண்டு செயல்களும் ஆழமான கருத்தில், விரிவான மனித சமுதாயத்திற்கு அளப்பரிய நலன்களை விளைவிக்கும்.
.
"பலஆயி ரம்பிறவி எடுத்துஏற்ற பாவப்
பதிவுகளை ஒருபிறவிக் காலத்தில் மாற்றி,
நலமடைந்து மனிதனாகித் தெய்வமாகி உய்ய,
நல்வாய்ப்பு ஆற்றல்இவை கருணையோடு இயற்கை
நிலஉலகில் மனிதரிடம் அமைத்துளது உண்மை.
நேர்முகமாய்க் கருமையத் தூய்மைஉணர்ந் தாற்றி,
பலனடைய அகத்தவத்தால் பரமுணர்ந்து, அறத்தின்
பாதையிலே ஒத்துதவி வாழும்முறை போதும்!"
.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

வெள்ளி, 20 மார்ச், 2015

அறிவின் அகநோக்குப் பயணம்

ஆன்மீகத்துறை யென்ற அகல வழிப்பாதையிலே
அடிவைத்து மென்மேலும் முன்னேறிப்போகுங்கால்...
அறிவுபெறும் அனுபவங்கள் வியப்பாகும் இனிமையம்
ஆன்ம ஒளி சுடர்விட்டு உள்ளுணர்வு பேறாகும்
.
.
ஊன்உருவமான உடல் ஊர்தி இதன் ஊடே
உயிர் என்ற சூக்குமமே “நான்” என்ற உணர்வு வரும்
ஒடுங்க ஒடுங்க காணும் உண்மையோ அறிவதுவே
உயிரிலிருந்தோங்கி யெழுந்து உலகம் விரியும்.
.
.
”நான்” அதுவே இருப்புநிலை மெய்ப்பொருள் தெய்வமெனும்
நன்முடிவு விளக்கமாம் அந்த முழுமுதற்பொருளே
நல்ல ஒழுக்காற்றலாய் நன்னுணர்வாய் அறிவறியும்
நல் ஊற்றாய் திருவருளாய் நல்லின்ப வெள்ளமாய்
.
.
தேன்பொழியும் பேரின்பம் திகட்டாது சலிக்காது
திருத்தங்கள் எண்ணம் சொல் செயல்களிலே மலர்ந்துவரும்
செருக்கொழிந்து தான் அடங்கி தெய்வநிலை எங்கெதிலும்
திருவருளின் காட்சியாம். திரும்புங்கள் உட்புறமாய்.
.
.
-வேதாத்திரி மகரிஷி