Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

திங்கள், 23 பிப்ரவரி, 2015

பால் உறவைப் பற்றி

பல இடங்களில் பால் உறவைப் பற்றி என்னிடம் பல கேள்விகளை கேட்டிருக்கிறார்கள். அமெரிக்காவில் ஒரு பெண் என்னிடம் கேட்ட கெள்வி...
.
“அய்யா ஆண், பெண் உறவை பொறுத்தமட்டில் எங்கள் நாட்டுடன் ஒப்பிட்டுப்பார்த்தால் உங்கள் நாட்டில் கற்பு என்ற பெயரிலே கடுமை காட்டப்படுகிறதே, இதுபற்றி நீங்கள் என்ன சொல்கின்றீர்கள்” என்று கேட்டாள்
.
ஒரு பெண் விரும்பினால் யாருடனும் ஏன் தொடர்பு வைத்துக்கொள்ளக்கூடாது? அதற்கு என்ன கட்டுப்பாடு? அந்த கட்டுப்பாட்டிற்கு என்ன அவசியம் என்றும் கேட்டாள்....
.
.
நான் சொன்னேன் “ அத்தகைய கட்டுப்பாடு உடல் நலத்திற்கு அவசியம் வேண்டும். அதுமட்டுமல்லாது சமுதாயத்தில் ஒரு பொறுப்புணர்ச்சி தேவை.
உடல் நலத்தை எடுத்துக்கொண்டோமானால் ஒரு ஆணுடைய விந்து கருப்பையிலே சேர்ந்தால் அதைத் தன்வயப்படுத்திக்கொள்வதற்கு சில குறிப்பிட்ட நாட்கள் வேண்டும். அது சரியான முறையிலே பிடித்துக்கொள்வதற்கு முன்னதாக வேறு ஒருவகையான விந்து அதே இடத்திலே விழுமேயானால்..

.
இரத்தத்திலே Group வேறுபடுதல் போல விந்துவிலேயும் உண்டு. அது வந்து சேருகின்றபோது கிருமிகளாக மாறும். அவ்வாறு கிருமிகளாக மாறுகின்றபோது அது ரணங்களை ஏற்படுத்தலாம். அல்லது பால் சம்பந்தப்பட்ட நோய்களை உண்டுபண்ணி அந்த பெண்ணிற்கு முதலிலே துன்பம் வரலாம்.
.
.
அந்த பெண்ணுடன் பிறகு யார் யார் உறவு வைத்துக்கொள்கின்றார்களோ அவர்களுக்கெல்லாம் அந்த நோய் தொடரும். அதுமட்டுமல்ல அத்தகைய virus ஏற்பட்டு பற்றிக்கொண்டால் ‘எக்ஸிமா’ என்ற சரும நோய் வருகின்றது. அது எந்த நேரமும் ஒருவித நமச்சலை உண்டுபண்ணும்..
..
அதுபோன்ற நமைச்சல் கருப்பையிலே ஏற்பட்டுவிடுமேயானால் ஒருநாள்கூட உடலுறவின்றி அந்த பெண்ணினால் உறங்கவே முடியாது. அப்போது எந்நேரமும் அதில் லயிப்பதற்கு மானத்தைவிட்டு அதில் ஈடுபடுகின்ற அளவிற்கு அவளுடைய வாழ்க்கை வந்துவிடும்.
.
.
அப்படி அதிகமாக அனுபவிக்க அனுபவிக்க அவள் உடல் நலம் கெட்டு மேலும் பலவிதமான நோய்களுக்கு ஆட்பட்டு மரணத்திலே வந்து முடியும். ஆகையினாலேதான் முறைப்படுத்துதல் வேண்டும் என்பதற்காக இந்த திட்டங்கள் எல்லாம் எங்கள் நாட்டிலே வைத்திருக்கின்றார்கள்.
மேலும் எங்கள் நாடு வெப்ப நாடு. அதனாலேயும் கட்டுப்பாடு அவசியமாக உணரப்படுகிறது.அதுமட்டுமல்லாது பொருளாதார ரீதியிலே பின்தங்கியது. ஒரு குழந்தை பிறந்தது என்றால் இரண்டுபேருமே கூடி வளர்க்கக்கூடிய அளவிற்கு ஒரு பொறுப்புணர்ச்சி வேண்டுமென்ற காரணத்தினாலேயும் ஒரு பெண்ணிற்கு ஒரு ஆண் என்று வைத்திருக்கின்றார்கள்.
.
.
அந்த பெண்மனி தொடர்ந்து கேட்டார்,
அதுசரி ஆனால் திருமணத்திற்கு முன்னர் பழகுவது (Premarital Sex) ஏன் தடுக்கப்படுகிறது??
.
நான் விளக்கினேன்,
அவ்வாறு பழகுவதால் ஒரு குழந்தை உற்பத்தியாயிற்று என்றால் கூட பாதிக்கப்படுமல்லவா? எனவேதான் ஒவ்வொரு கட்டத்திலும் பொறுப்புணர்ச்சி வற்புறுத்தப்படுகிறது.
.
.
பாலுறவின் பின்விளைவுகளை பெண்கள் தான் அதிகமாக சமாளிக்கவேண்டியுள்ளது. எனவே பெண்களுக்கே அதிகமாக பொறுப்புணர்ச்சி உண்டாகின்றது. அதனால் பெண்கள்தான் இதை அதிகமாக எடுத்துக்கொள்கின்றார்கள் என விளக்கின போது... அந்த பெண்மணி சிறிதுநேரம் அமைதியோடு சிந்தனை செய்தாள்.
.
.
என்ன என்று விசாரித்தபோது என் பாதங்களை பிடித்துக்கொண்டே ”எனக்கு ஒரு வரம் தாருங்கள்(Please give a boon) என்று கேட்டாள்.
.
அடுத்த பிறவி என எனக்கு என்று ஒன்று இருக்குமானால் இந்தியக் குடும்பம் ஒன்றில்.. நான் மகளாக பிறக்க அருளுங்கள் (If all there is another birth for me, let me be a daughter in an Indian family)” என்று உள்ளம் உருகி வேண்டினாள்.
.
.
-வேதாத்திரி மகரிஷி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக