Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

வியாழன், 19 மார்ச், 2015

அன்பு

"ஆராய்ச்சி அறிவின் எல்லையிலே, உயிர் நிலையை அறிந்த உயர்விலே, பேதங்கடந்த பேரறிவின் பெருங்கருணையிலே, ஜீவ இனங்களின் இன்ப துன்ப இயல்பறிந்த சிறப்பான ஞாபகத்திலே, கருத்துக்கு எட்டிய துன்பங்களைக் குறைக்க வழி காண வேண்டும் என்ற கணிவிலே ஏற்படும் பற்றுதலை 'அன்பு' என்று சொல்லுகிறோம்.
.
சமுதாயத்திற்கு நான் தொண்டு செய்வேன் என்று என்னும் போது அது 'அன்பு' நிலையாகும். என் மனைவியை என் குழந்தைகளைப் பாதுகாக்க நான் முயற்சிப்பேன் என்று என்னும் போது அது 'பாசம்' என்னும் நிலையாகும். மனிதர்களுக்கு... நிழல் கொடுக்க மரம் வைக்கிறேன் என்றால் அது 'அன்பின்' செயலாகும். எனது கிராமவாசிகளின் சவுகரியத்திற்காக மரம் நடுகிறேன் என்றால் அது 'பாசம்' என்று சொல்லப்படும். ஆகவே எல்லைக்குட்பட்ட அறிவின் குறுகிய நிலையே 'பாசம்' எனப்படும். அறிவு என்ற தத்துவத்தையும் அதன் இன்ப துன்ப அனுபோக அனுபவங்களையும் அறிந்து பரந்த ஞாபகத்தில் செயல்புரிய எழும் ஆர்வமே 'அன்பு' எனப்படும்."
.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
.
அன்பின் பெரு மதிப்பு :
"இறைநிலை தெளிந்த இன்பத்தில் உயிர்கள் பால்
எழும் நட்பே அன்பாகும். ஈகை ஒழுக்கம் இயல்பாம்;
நிறைவோடு மக்கள் நேர்மையில் மகிழ்ச்சியில்
நிலைத்து இன்பம் துய்க்கும் நேர்வழி அன்புதான்."
.
நல்லோர் தந்த பரிசு :
"வாழ்வை வளப்படுத்தும்
வழக்க பழக்கங்கள் எனும்
ஒழுக்கங்கள் எல்லாம்
ஆழ்ந்த சிந்தனையாளர்
அன்பினால் உலகுக்கு
அளித்த பரிசு ஆகும்."
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

புதன், 18 மார்ச், 2015

அன்பும் கருணையும் :


 ....
இயற்கையை ஆராய்ந்து பார்த்தால் அன்பும் கருணையும் தான் எங்கும் எதிலும் அமைந்திருக்கக் காணலாம். அன்பு என்பது எந்த ஒன்றையும் உடலாலோ, மனத்தாலோ தன்னோடு இணைத்துப் பிடித்துக் கொண்டிருப்பது. அப்படி இணைந்துள்ள மற்றொன்றுக்குத் தனது ஆற்றலைத் தொடர்ந்து அளித்து அதனைக் காத்து வருவது கருணை.
.
ஒரு முட்டையைப் பாருங்கள். அதிலுள்ள அணைத்துப் பொருட்களையும் ஒன்றிணைத்து அதன் ஓடு பிடித்துக் கொண்டிருக்கிறது. இது போன்றது அன்பு. முட்டைக்குள்ளிருக்கும் மஞ்சட் கருதான் குஞ்சு ஆக உருவாக இருக்கிறது. அந்த மஞ்சட் கருவுக்கு அதனைச் சுற்றியுள்ள வெள்ளைக்கரு தேவையான எல்லாப் பொருட்களையும் அளித்து நலமளிக்கின்றது. இது போன்றது கருணை.
.
ஒரு மாமரத்தில் பிஞ்சுவிடுகிறது. அதனைச் சிறு காம்பின் மூலம் விழுந்துவிடாமல் மரமானது பிடித்துக் கொண்டிருக்கிறது. இது அன்பு. அவ்வாறு பிடித்துக் கொண்டே பிஞ்சு வளர்வதற்குத் தேவையான ரசாயன நீரை அந்த மரம் பாய்ச்சிக் கொண்டே இருக்கிறது. அது தான் கருணை.
.
உயிரினங்களில் ஒரு குழந்தையைப் பெற்ற தாய் அதனை எப்போதும் தன்னோடு இணைத்துப் பிடித்துக்கொண்டோ அல்லது அது பிரிந்து போய் விடாமல் கண்காணித்துக் கொண்டோ இருக்கிறாள் இது அன்பு. அதே காலத்தில் அந்தக் குழந்தை வளர்வதற்கும் வாழ்வதற்கும் தேவையான பால், உணவு இவைகளை அது வளர்ச்சி பெரும் வரையில் ஊட்டிக் கொண்டே இருக்கிறாள். இதுதான் கருணை.
.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
.
"ஆறுகுணச்சீரமைப்பு பெற்று மனத்தூய்மை
பெறும் போது நம்மிடம் உள்ள அன்பும்
கருணையும் பீறிட்டு மேலோங்குகின்றன."
.
"அன்பையும் கருணையையும் கொண்ட மனிதன்
அதை உணர்ந்து தன் வாழ்விலும் செயலிலும்
பின்பற்றி வாழ்வதே இறைவழிபாடாகும்."
.
"அன்பிரக்கம் தொண்டு தவம் ஈகை இன்சொல்
ஆன்மிக நெறியாகும் போற்றிக்காக்க
துன்பங்கள் குறைந்துவரும்; மேலும் தெய்வத்
துணைகிட்டும்; வாழ்வில் புகழ் நிறைவு ஓங்கும்;
நன்முறையில் தனிமனிதன் வாழக்கற்றால்
நாட்டினிலும் வீட்டினிலும் அமைதி ஓங்கும்;
இன்பமயமே எங்கும், இந்த உண்மை
எளிதன்றோ கற்பதற்கும் வாழ்வதற்கும்".
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

செவ்வாய், 17 மார்ச், 2015

அறிவு தெளிவாக இருக்க வேண்டும்

" ஒரு பூட்டைத் திறக்க வேண்டும் என்று சொன்னால், அந்தப் பூட்டுக்குரிய சாவியைக் கொண்டு முறையாகத் திறந்தால் தான் திறக்க முடியும். ஆனால் வேறு சாவி போட்டுத் திறந்தால் என்னாகும்? அதே போல ஏதோ ஒன்றை நாம் நினைக்கிறோம். அதைப் பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும்? என்று நமக்குத் தெரிய வேண்டும். முதலாவது நாம் வேண்டுவது சரிதானா? தேவைதானா? என்றே தெரியவில்லை.
.

தேவை இல்லாததையெல்லாம் வேண்டி, தேவையுள்ளதை எல்லாம்... மறந்து போவதனால், தேவையுள்ளதைத் தேடுவதற்கே நமக்கு ஆற்றல் இல்லாது போகிறது. இது எதனால் வருகிறது? இந்நிலை அறிவின் வறுமையினால் தான் வருகிறது. அறிவு தெளிவாக இருக்க வேண்டும். உறுதியோடு இருக்க வேண்டும். திறமையாக இருக்க வேண்டும். அத்தகைய திறமை வந்துவிட்டால் வாழ்க்கையில் நிறைவு வரும்.
.

அனுபவம் என்பது எல்லோருக்கும் இருக்கிறது. இருந்தாலும், மீண்டும் மீண்டும் அதே தவற்றைத்தான் செய்கிறோம். நமக்கு ஏற்பட்ட அனுபவத்தை மனதில் கொண்டு, 'இனி இதைச் செய்யக் கூடாது. அதைத்தான் செய்ய வேண்டும். இந்த அளவில் தான் செய்ய வேண்டும்' என்று தேர்ந்து, தீர்வு கண்டு, அதன்படி செயல் ஆற்ற முடியாதா? முடியும். அந்த ஆற்றல் இருக்கிறது. அனால் செய்வதில்லை. எத்தகைய சூழ்நிலையிலும் நம் மனம் எடுக்கும் முடிவானது தீர்மானமான முடிவாக இருக்க வேண்டும் என்றால், அதற்கும்கூட மனதின் விழிப்பு நிலை வேண்டும். அதற்காக நம் மனதிற்கு நாம் கொடுக்கக் கூடிய முறையான ஓர் உளப்பயிற்சியின் மூலம் தான் இவையெல்லாம் சித்தியாகும்.
.

எண்ணம் ஆராய்தல், ஆசை சீரமைத்தல், சினம் தவிர்த்தல், கவலை ஒழித்தல் என்ற தற்சோதனைப் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அத்தகைய அகத்தாய்வுப் (Introspection) பயிற்சிகளையும், மனம் செம்மையுற அகத்தவப் பயிற்சியாகிய (Meditation) எளிமைப்படுத்தப்பட்ட 'குண்டலினி யோகத்தையும்' (Simplified Kundalini Yoga) அளித்து நேரடியாக ஒவ்வொருவரும் உணரும்படியாகச் செய்கிறது 'உலக சமுதாய சேவா சங்கத்தின்' மனவளக்கலை மன்றம். இந்தப் பயிற்சிகளைச் சரியாகச் செய்து விட்டால் 'மனம்' எவ்வளவு தெளிவாக இருக்கிறது? என்பதை அனுபவத்தில் தெரிந்து கொள்ளலாம். அதன் பிறகு வாழ்க்கை நிலையே தெளிவாக இருக்கிறது என்பதையும் அனுபத்தில் நாம் தெரிந்து கொள்ளலாம்."
.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
.

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
.

அன்பின் அழைப்பு :

"விருப்பம், சினம், வஞ்சம், மதம் பால்கவர்ச்சி
விளைவறியா கடும்பற்று என்ற ஆறும்
உருக்குலைந்து நிறைந்த மனம் சகிப்புத் தன்மை
உளமார்ந்த மன்னிப்பு மெய்யுணர்வு
கருத்துடைய கற்புநெறி ஈகையென்ற
களங்கமிலா நற்குணங்களாக மாற்றும்
பொருத்தமுள உளப் பயிற்சி முறை பயின்று
புகழ் இன்பம் அமைதி பெற வாரீர் ! வாரீர் !."
.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

திங்கள், 16 மார்ச், 2015

குடும்ப நலம் உயர்வதற்கு ஒரு நல்ல வாய்ப்பு

"உடல் நலம் இல்லையானால் எந்த நேரமும் துன்பமாகத்தான் இருக்கும். எந்த வேலையையும் செய்ய முடியாது. ஆக்கம் இழந்த மனிதனாகத்தான் இருப்போம். மனவளம் இல்லையானால் ஒருவருக்கொருவர் விரோதம், கோபம், திட்டுவது, இவையெல்லாம் உண்டாகும். ...
.

உடல் நலமும் வேண்டும்; மனநலமும் வேண்டும் என்றால் திடீரென்று வந்துவிடாது. விலைக்குப் போய் வாங்க முடியாது. உடல் நலம் வேண்டும் என்று நினைப்பவர்கள் மருத்துவரிடம் போய் மாத்திரை வாங்குகிறார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். மாத்திரை மட்டும் சாப்பிட்டால் உடல் நலமாகிவிடும் என்று நினைத்துக் கொள்கிறார்கள். உடல் நலம் என்பது மாத்திரையால் மட்டும் வந்துவிடாது. ஏதோ அந்தச் சமயத்தில் வைத்திய முறையானது சில நோய்களைப் போக்கிவிடும் என்பது சரிதான். அவரவர்களே உடலில், உள்ளத்தில் இருக்கக்கூடிய சக்தியை நல்ல முறையில் வெளிப்படுத்தி அந்த ஆற்றலைக் கொண்டே உடலில் உள்ள பெரும்பான்மையான வியாதிகளைப் போக்கிக் கொள்ளலாம் அல்லது வராமல் தடுத்துக்கொள்ளலாம். இளமைப் பருவத்திலேயே அதற்கான உளப் பயிற்சியையும், உடற் பயிற்சியையும் முறையாக கற்றுகொள்வது என்பது உள்ளத்தையும் உடலையும் பக்குவப்படுத்தி தயார் படுத்திக்கொள்ள பெருந்துணையாக இருக்கும்.
.

உணவு, உழைப்பு, உறக்கம், உடலுறவு, எண்ணம் இவைகளை அளவோடும், முறையோடும் வைத்துக் கொண்டால் நோயே வராது. நோய் வந்தாலும் தடுத்துக் கொள்ளலாம். இவற்றையெல்லாம் தெரிந்து பழகிக் கொள்வதற்கு 'உடற்பயிற்சியும்' (Simplified Physical Exercises) வேண்டும். 'உளப்பயிற்சியும்' (Simplified Kundalini Yoga) வேண்டும். சத்சங்கமும் வேண்டும். அதற்கேற்ற பயிற்சியை கற்றுக் கொள்ளக்கூடிய ஒரு நிலையம் தான் "அறிவுத்திருக்கோயில்" (Temple of Consciousness). குடும்பத்தில் உள்ளவர்கள் ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, 14, 15 வயது நிரம்பிய அனைவரும் இளமைப் பருவத்திலேயே மனதை வளப்படுத்திக் கொள்வதற்கு, உடல்நலத்தைப் பெறுவதற்கு, அதன்மூலமாக 'குடும்ப நலம்' உயர்வதற்கு ஒரு நல்ல வாய்ப்பு 'உலக சமுதாய சேவா சங்கத்தின்' மனவளக்கலை பயிற்சி முறை ஆகிய 'குண்டலினியோக பயிற்சி (Simplified Kundalini Yoga)' ஆகும்.
.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

ஞாயிறு, 15 மார்ச், 2015

உள்ளத்தின் உள்ளே உளபல தீர்த்தங்கள்

இன்பமும் அமைதியும் மனதிற்குள்ளிருந்து தான் வர வேண்டும் என அறியாமல் எங்கெல்லாமோ அவற்றைத் தேடி அலைந்து துன்புறுகிறார்கள். ...
.

"உள்ளத்தின் உள்ளே உளபல தீர்த்தங்கள்
மெள்ளக் குடைந்துநின் றாடார்; வினைகெடப்
பள்ளமும் மேடும் பறந்து திரிவதே
கள்ளமனமுடை கல்வியில் லோரே" - திருமந்திரம்.
.

மனதின் தன்மை எதுவோ அதுதான் மனிதனுடைய தன்மை. மனதின் மாண்பு எதுவோ அதுதான் மனிதனுடைய மாண்பு. மனதின் உயர்வு எதுவோ அதுவேதான் மனிதனுடைய உயர்வு. ஆகவே, மனதை எந்த அளவில் உயர்த்திக் கொள்ளுகிறோமோ, தூய்மை செய்து கொள்ளுகின்றோமோ, வலுப்படுத்திக் கொள்ளுகிறோமோ, நெறிப்படுத்திக் கொள்ளுகிறோமோ, அந்த அளவிலேதான் மனிதனுடைய வாழ்வு மனிதனுடைய மதிப்பு, மனிதனுடைய வெற்றி, மனிதனுடைய அறிவாட்சித்தரம் (Personality), மனிதனுடைய எல்லா வளங்களும் அமையும். இந்த அற்புதத்தைத் தான் தொடர்ந்து நாம் நமது சிந்தனை ஆற்றல் துணை கொண்டு நுணுகி நின்று பயிலும் 'மனவளக்கலை' பயிற்சியாகிய "குண்டலினியோகத்தால்" (Simplified Kundalini Yoga) சாதிக்கின்றோம்."
.

இயற்கையை எவ்வளவுக்கெவ்வளவு நாம் அறிந்து கொள்கிறோமோ, அவ்வளவுக்குத்தான் நம் மனம் விரிவும், திண்மையும் பெறும். மனதின் திண்மைக்கு ஏற்பவே செயல் திறம் அமையும். செயல் திறமைக்கு ஏற்ப வாழ்க்கையானது வெற்றியும், மகிழ்ச்சியும் நிரம்பியதாக விளங்கும்; மனிதனின் துன்பமெல்லாம், அவனுடைய குறையெல்லாம் - இயற்கையை 'அறியாமலும்' அல்லது அறிந்தும் அதனை 'மதியாமலும்' அவன் நடந்து கொள்வதாலேயே தோன்றுகின்றன."
.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

சனி, 14 மார்ச், 2015

அடிப்படைத் தேவைகள்:

உடலையும் அதன் இயக்கத்தையும் காக்க 'ஆகாரம்',
.

ரத்த ஓட்டத்தையும், ஜீரணத்தையும் சரியானபடி வைத்திருக்க 'மிதமான உழைப்பு',
.

உள்ளம் அமைதியாகவும், உற்சாகமாகவும் இருக்க கடல் நதிகள், மலைகாடுகள் முதலான இயற்கைக்காட்சி, இவைகளைப் பார்க்க 'உலகத்தைச் சுற்றி வரும் வாய்ப்பு',
.

புலன்களையும் அறிவையும் ஒன்று படுத்தித் தனக்கும் பிறருக்கும் இன்பத்தை ஊட்டும் 'நடனம், பாட்டு, சிற்பம், ஓவியம்' முதலிய கலைகள்,
.

அறிவைப் பண்படுத்த வயதுக்கேற்ற 'தியான, தவ முறைகள்', இவையனைத்தும் மனிதனுக்கு - மனிதர் வாழ்வுக்கு அவசியமாகும்.
.

மற்றத் தேவையற்ற பொருட்களையும் செயல்களையும் விட்டு ஒழிக்க வேண்டும். தேவையற்ற பொருட்கள் எவை என்று அறிந்து அவைகளின் உற்பத்தியையே நிறுத்தி விட வேண்டும். இவ்விதம் வாழ்ந்தால் உலகில் துன்பம் செயற்கையால் தோன்றாமலும், பெருகாமலும் இருக்கும்.
.

மனித இனம் சுகமாக வாழ்வதற்குத் தேவையான அனுபோகங்களை மட்டும் அளவுடன் கொண்டு, தேவையற்றவைகளை விட்டுவிட வேண்டும்.
.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
.

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
.

உலகமெனும் சத்திரம் :

"உலகம் ஒரு சத்திரமே. உயிர்கட் கெல்லாம்
ஒத்தபல வசதிகளையடைய ஒன்று.
தலைவரியோ கிடையாது, உள்நுழைவைத்
தடுப்பதற்கு யாருமில்லை; தேவையான
பலபொருளும் வசதிகளும் நிறைந்தகோட்டை.
பஞ்சமில்லை ஆற்றல் என்ற விலைகொடுத்தால்
நில உலகம் நேர்மதிப்பில் வாழ்வளிக்கும்
நிறை அறிவோர் அருள்வெள்ளம்-நேர்மை நல்கும்".
.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

வெள்ளி, 13 மார்ச், 2015

அறியாப்பருவத்திலே வளரும் குழந்தைகளிடம் சினம் வராமல் காப்பாற்றி வளர்ப்பது எப்படி ? முடியுமா? அவசியமா?

குழந்தைகளிடம் மிக்க எச்சரிக்கையாக விழிப்போடுதான் நடந்துகொள்ள வேண்டும். இந்த உலகின் மீது வாழும் ஒவ்வொரு உயிர்க்கும், செடி, கொடி உட்பட அனைத்துக்கும், இந்த உலகை விட்டு வெளியேறும் வேகம் உள்ளது.
....
.
அதை velocity என்று ஆங்கிலத்தில் சொல்லுவார்கள். ஒவ்வொன்றுக்கும் ஒரு அளவு உண்டு. தென்னை மரத்துக்கு 60அடி என்று வைத்துக்கொள்ளலாம். சாதாரண செடிக்கு ஒரு அடி என்று வைத்துக்கொள்ளலாம்..

விடுதலை வேகம் மனித இனத்துக்கு ஆறு அடி. அந்த அளவான ஆறு அடி வளர்ந்த பிறகு அது தணிந்து விடுகிறது.எனவே தான் அதன் பிற்கு மனிதனுக்கு வளர்ச்சியில்லை.
..
.
ஆனால் இந்த ஆறு அடி வேகம், ஒருமாத குழந்தையாக இருக்கும்போதே அந்தக்குழந்தையிடம் உள்ளது; ஊக்கிவிடுகிறது; எப்போதும் புடைத்துக்கொண்டிருக்கிறது. அதனால் எந்தக்காரியத்தை செய்தாலும் துடுக்காகத்தான் செய்யும்.. நீங்கள் ஏதேனும் தடுத்தாலும் அதைக் குழந்தையால் ஒப்புக்கொள்ளமுடியாது.
.
நாம் என்ன செய்யவேண்டும்?
அந்த வேகத்தை பயன்படுத்தும் முறையிலே அவர்களுக்கு வழிகாட்டவேண்டும்.
.
ஏதோ ஒரு பொருளை குழந்தை எடுத்துவிட்டது. அதை கீழே போட்டு உடைத்துவிடுமென்று எண்ணுவீர்களானால், அதைவிட கவர்ச்சியான பொருளை உடனடியாக எடுத்து அதனிடம் நீட்டி, இதோ பார் , இது நல்ல பொருள், எவ்வளவு அழகாக இருக்கிறது என்று காட்டினீர்களேயானால், அதை வாங்கிக்கொள்ள தயாராக இருக்கும் அந்த அளவிலே குழந்தைகளிடம் அன்புகாட்டி விழிப்போடுதான் நடந்துகொள்ளவேண்டும்.
.
.
வாழ்க வளமுடன்
-வேதாத்திரி மகரிஷி

வியாழன், 12 மார்ச், 2015

சிந்தனையின் சிறப்பு :

நம் வாழ்க்கையில் அவ்வப்போது நாம் எதைச் செய்வது என்ற ஒரு சிக்கல் வரலாம்; அல்லது பெருமளவிலான ஒரு மகிழ்ச்சியேகூட வரலாம். அந்தச் சிக்கலிலே அழுந்திவிடக் கூடாது, அல்லது அந்த மகிழ்ச்சியிலே அழுந்திவிடக் கூடாது. இந்தச் சிக்களிலேயிருந்து விடுபட வேண்டிய வழி என்ன என்று நினைத்தாலே போதும். சிக்கலிலே தவித்துக் கொண்டிருக்கக் கூடிய மனம் முனையில் இருக்கிறது. அந்த மனத்தின் அடியிலே இறைவன் இருக்கின்றான். அவன் சிக்கலைத் தீர்த்து வைப்பதற்குத் தயாராக இருகின்றான். அவன் பக்கம் திரும்புவதற்கு வழி காண வேண்டும் என்று சொல்கின்றேன்.

சிந்திக்கின்றவர்கள் அதை காணுகின்றார்கள். சிந்தனைக்கு என்று திரும்பினாலே போதும், மற்றதையெல்லாம் அவன் பார்த்துக் கொள்வான். அதைத்தான் வள்ளுவர் கூட, தனது குறல் ஒன்றில் ஒரு மனிதன் முயற்சி எடுத்தால் இறைவன் அவனை நோக்கிப் பத்து அடி எடுத்து வைக்கின்றான் எனக் குறிப்புத் தந்துள்ளார். அது உண்மை தான். இந்த உண்மையை நேரடியாக, அனுபவபூர்வமாகப் பல இடங்களில் நான் உணர்ந்து இருக்கிறேன்.
.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
.

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
.

பண்பு :

"சிந்தனையுடன் செயலும், செயலுடன் சிந்தனையும்,
பந்தித்து நிற்கப் பழகுதல் நற்பண்பு".
.

"பிறஉயிர் வருத்திப் பிழைப்பவன் அரக்கன்.
பெரியோர் சொற்படி நடப்பவன் பக்தன்.
அறவழி யொழுகி அகத்தே தெய்வம்
அறிந்தோன் தேவன். அர்த்தமே பெயர்கள்".
.

குரு வணக்கம் :

"அறிவேதான் தெய்வமென்றார் தாயுமானார்
அகத்ததுதான் மெய்ப்பொருள் என்றெடுத்துக்காட்டி
அறிவதனை அறிவித்தார் திருவள்ளுவர்
அவ்வறிவை அறிவதற்கு முறைகள் சொன்னார்
அறிஞர் திருமூலர் அவ்வறிவில் ஆழ்ந்து
ஆனந்தக் கவியாத்தார் இராமலிங்கர்
அறிவில் அறிவாய் நிலைத்து அறம்வகுத்தோர்
அதை வாழ்ந்து காட்டினோர் நினைவு கூர்வோம்".
.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

புதன், 11 மார்ச், 2015

நிஷ்காமியம்:-


 --------------------...
.
"பொருட்களினோடு தேவைப்படுகின்ற தொடர்பினது தன்மையை அறிந்து அளவோடு விழிப்போடு வைத்துக் கொள்ளும் உறவுதான் துறவு. அது அனுபோகத்தில் விழிப்புடன் கூடிய உறவு. இன்ப நுகர்ச்சியில் மனம் சிக்கிக் கொள்ளாத மனநிலை. வெறுத்து ஒதுக்குவது துறவாகாது. அறிந்து, உணர்ந்து, தொடர்பு மற்றும் உறவைச் சரியாகக் கணக்கிட்டு அனுபோகம் கொள்ளும் மனநிலை தான் 'துறவு'. எண்ணமோ அனுபோகத்தோடு ஒட்டாத துறவு நிலையில் இருக்க வேண்டும். எண்ணத்தால் பூணும் துறவாகிய உறவின் தெளிவுதான் வாழ்வினை உய்விக்கும். ஆசைகளை சீரமைத்துக் கொள்ளவும் உதவும். இதைத் தான் "நிஷ்காமியம்" என்று சொன்னார்கள். இந்த மன நிலையை மனம் ஏற்று நடத்தும் கடமைகள் தான் "நிஷ்காமிய கர்மம்". இது தான் உறவில் - துறவு [Detached attachment]. உண்மையான துறவு இதுதான். துறவு ஆன்மீகத்தின் அதாவது அருள் துறையின் உள்நாடி. விழிப்பு நிலையில் பொருட்களோடு - அளவோடும், முறையோடும் வைத்துக் கொள்ளும் உறவே துறவாகும்."
.

"பழக்கத்திற்கும், விளக்கத்திற்கும் இடையே போராடிக் கொண்டிருக்கக்கூடிய மனதின் பழக்கத்தை முறையான உளப் பயிற்சியாகிய 'குண்டலினி யோகத்தை' (Simplified Kundalini Yoga) கற்று இப் பயிற்சியின் மூலம் நம் பழவினையை மாற்றி மேற்கொண்டு விளக்கத்தை 'நல் விளக்கமாக' பெற்று அதன் வழியே வாழ்க்கையை உயர்த்தி அமைத்துக் கொள்ள உதவும் உன்னதக் கலை தான் 'உலக சமுதாய சேவா சங்கத்தின்' 'மனவளக்கலை' பயிற்சி ஆகிய "குண்டலினி யோக" (Simplified Kundalini Yoga) பயிற்சி முறை ஆகும்."
.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
.

***************************************************
.

"அறியாமை (Innocence),
அலட்சியம் (Ignorance),
உணர்ச்சிவயம் (Emotional Moods) -
என்ற மூன்று வகையில் தான்
அறிவின் குறைபாடுகள் ஏற்படுகின்றன."
.

அளவு முறை :

"உணவு, உறக்கம், உழைப்பு, உடலுறவு, எண்ணம் -
இந்த ஐந்தையும் அலட்சியப்படுத்தக் கூடாது;
அதுபோல மிகையாக அனுபவிக்கவும் கூடாது;
முரண்பாடாகவும் அனுபவிக்கக்கூடாது. இந்த
மூன்று விதிகளைக் கடைப்பிடித்தால் நோய்த்
தடுப்பிற்கு அதைவிட ஒன்று வேண்டியதே இல்லை".
.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

உண்மையான துறவு யாது?

ஒரு அன்பர் கேட்டார்; ''எல்லாவற்றையும் துறந்தால் தான் ஞானம்
வரும் என்று சொல்கின்றார்களே'' என்றார். சரி, துறந்து விட்டால், எங்கே
போவீர்கள் என்று கேட்டேன். பதில் இல்லை. இந்த உலகத்தின் மேல்தான்
இருக்கப் போகின்றீர்கள். பசி எடுத்தால் என்ன செய்யப் போகிறீர்கள்?
உணவைத் தானே நாட வேண்டும்? அப்படியென்றால் எதைத் துறந்ததாக
அர்த்தம்? இருக்கின்ற இல்லத்தை விட்டு இன்னொரு வீட்டுக்கோ
விடுதிக்கோ சென்றால் என்ன மாற்றம்? இங்கு அதிகாரத்தோடு உணவு
கேட்டதை விட்டு அங்கு பிறர் தயவை நாடிக் கையேந்தி வாங்க வேண்டியது
தானே தவிர வேறு என்ன விளையும்? துறவு என்றால் அது அன்று. அளவு
முறை அறிந்து ஒழுகும் போது துறவு தானாக அமைந்து விடும்.

சாப்பிட்டுக் கொண்டே இருக்கின்றீர்கள், உணவு சுவையாக இருக்கிறது.
ஆனால், உங்களுடைய அனுபவத்தின் அடிப்படையில் இதுவரைக்கும் தான்
உங்களால் ஜீரணிக்கச் செய்ய முடியும் என்று நன்றாக தெரிகிறது. அதைத்
தெரிந்து கொண்டு இனிமேல் வேண்டாம் என்று சொல்லி விட்டு அங்கயே
அதோடு நிறுத்தக் கூடிய அறிவும், செயலும் வந்து விட்டன என்றால் அதாவது
அறிந்த அறிவுக்கு செயல் ஒன்றுபட்டால் அதுதான் துறவு. '' அடுப்பிலே சாதம்
வைக்கின்றீர்கள், அல்லது சமையல் செய்கின்றீர்கள், வெந்து போன பிறகு
ஏன் இறக்குகின்றீர்கள்?'' என்று என்று கேட்டேன். ''சட்டியில் உள்ளது அடிப்பிடித்துவிடும்''. வேக வைக்கின்றவரை உறவு; இறக்குவது துறவு. இதற்கு
மேல் போனால் கெட்டுவிடும் எனத் தெரியும்போது உடனே விடுதலை
செய்துவிட வேண்டும்; அளவோடு வைத்துக் கொள்ள வேண்டும். அளவு,
அனுபவிக்கக்கூடிய முறை இந்த இரண்டும் தெரிந்தால் அது தான் துறவு.

நம்மைத் திருத்துவோம்:

"உறவிலே காணுகின்ற உண்மைநிலை தெளிவே
துறவாகும், துன்பமிலா இன்பம் நல்கும்
அறவோர்கள் கண்டநெறி அன்புநெறி அதைவளர்ப்போம்,
திறமான வாழ்வுபெற நம்மைநாம் திருத்திடுவோம்".
.

"அணுவில் அமைந்துள்ள சட்டங்கள் விதியாகும்.
அறிவாய் அனுபவிக்கும் ஆற்றலே மதியாகும்".
.

இல்லறமும் துறவறமும் :

"இல்லறமும் துறவறமும் வேறுவேறாய்
இதுவரையில் கருதிவந்தார் உலகமக்கள்,
இல்லறத்தில் வழுவாது கடமையாற்றி
எண்ணத்தைப் பண்படுத்தி எனையறிந்தேன்;
இல்லறமே கடமைகளின் தொகுப்பு என்றும்
இன்பதுன்பம், உடலுயிர் தத்துவம் உணர்ந்து
இல்லறத்தைத் திறமையுடன் நடத்த ஏற்ற
எண்ண நிலை துறவறம் என்றும் உணர்ந்தேன்."
.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

                                                                        --தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

செவ்வாய், 10 மார்ச், 2015

Swamiji, you say that there is nothing called death. Could you please explain?


      A : Death is only a change in the regular functioning of the body. When the sexual vital fluid, biomagnetism, life energy particles, physical body, senses and the mind function together it is a living being. Death occurs when they separate due to some reason and the harmony of their function is lost. It cannot however be said that there is no death.
The life energy keeps the physical... body and the associated functions working smoothly. When the life energy is lost, all the energy particles that constitute the body cease to function as a single unit, disperse, and begin to function as individual particles. This can be compared to a company undergoing liquidation as per the orders of a judicial authority. Once the liquidation process is complete, the company is no longer in existence, but all the partners, officials and the other staff, who made up the firm, continue to exist. They may have lost their designations and their positions in that particular company, but they exist and work as individuals.
In the same way with the loss of the life energy, the atoms and the molecules that make up the body disperse into individual particles. That is all. They don’t really die; they merely separate and become individual particles. Atoms coming together to become something, and then separating to become something else, is the law of Nature.

திங்கள், 9 மார்ச், 2015

உணர்வு, உறவு:

உணர்வு, உறவு, துறவு, இந்த மூன்று சொற்களையும் நாம் ஆன்மீகத் துறையில் அடிக்கடி பயன்படுத்தி வருகின்றோம். இப்பொழுது அந்த வார்த்தைகளிலே இன்னும் ஆழமாகச் செல்ல உள்ளோம். உணர்வுக்கும் உறவுக்கும் ஓரளவு வித்தியாசம் உண்டு. ஒரு எஜமான் இருக்கிறான்; அவர் கீழே ஒரு பணியாள் இருக்கிறான். எதற்காக அந்தப் பனியாள் அங்கே வேலைக்குச் சேர்ந்தான்? தனக்கு உணவு வேண்டும். அதற்கு ஊதியம் வேண்டும் என்ற எண்ணத்தோடு அவன் தொழில் செய்கிறான், வேலையாளாக இருக்கிறான். இங்கே ஒரு எதிர்பார்ப்பு இருக்கிறது ; இது "உணர்வு" திட்டமிட்ட முறையில் தான் இந்தத் தொடர்பு அமைந்துள்ளது; எனவே தான் "உணர்வு" என்ற எல்லைக்குள் அதனை வைக்கிறோம்.
.

'உறவு' என்பது அத்தகையதல்ல. இவன் எஜமானனுக்காக வேலை செய்கிறான். வேலையாளுடைய பணிகளையெல்லாம், அவற்றின் பயன்களையெல்லாம் அந்த எஜமானன் அனுபவிக்கிறான். காலம் செல்லச் செல்ல எஜமானன் பணியாளுடைய உயிரோடு ஒன்றி விடுகிறான். அன்பு கொள்கிறான், அவனுடைய சுக துக்கங்களில் கலந்து பார்க்கிறான். அதற்கு மேலாகவும் அந்தச் சுக துக்கங்களைப் பகிர்ந்து கொள்கிறான். இந்த இடத்திலே தான் "உறவு" என்பதாக அமைகிறது. அப்படிப் பகிர்ந்து கொள்ளக்கூடிய உறவு எஜமானனிடம் ஏற்பட்ட பிறகு ஆரம்பத்தில் "உணர்வு" மட்டும் இருந்த அந்தப் பணியாளிடம் என்ன ஏற்படும் என்றால் அவனுக்கும் அதே 'உறவு' ஏற்படும்.
.

'உறவு' என்பது உறைந்து போவது; "தோய்வு" என்றும் சொல்லலாம் அதனை. அந்தத் தோய்வானது இரண்டற இருக்க வேண்டும்.
.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
.

அன்பின் செயல்:

"அனைத்துயிரும் ஒன்றென்று
அறிந்த அடிப்படையில்
ஆற்றும் கடமையெல்லாம்
அன்பின் செயலாகும்".
.

கடவுளும் கடமையும் :

" கடமையில் உயர்ந்தவர்
கடவுளை நாடுவார்.
கடவுளை அறிந்தவர்
கடமையில் வாழ்வார்".
.

உய்யும் வழி:

"தவமுறையும் அற நெறியும் பற்றப் பற்றத்
தறுக் கென்ற தன் முனைப்புக் குன்றிப்போகும்
பலவினைகள் புதிது எழா; முன்னம்செய்த
பதிவுகளும் மறைந்து மெய்ப்பொருளும் காணும்
சிவ நிலையை சீவனிலே உணர்ந்து கொண்டால்
சிறுமை தரும் மனமயக்க மாயை ஏது?
எவரெனினும் இவ்வழியாலன்றி உய்ய
ஏது வழி வேறுலகில் எண்ணிப்பாரீர்."

.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

ஞாயிறு, 8 மார்ச், 2015

எண்ணம், சொல், செயல் :


 ....

மனிதனிடம், மனமாக, பார்வையாக, சொல்லாக அல்லது எண்ணமாக வெளியேறும் அலை எந்தவகையாக இருப்பினும், அவ்வலை அவனுடைய தன்மைகள் அனைத்தையும் எடுத்துச் செல்கின்றது. ஒவ்வொரு மனிதனும் முன் அனுபவத்தினால் ஏற்பட்ட பதிவுகள் மூலம் செயல்படுவதினால் அவனுடைய எண்ணம், சொல், செயல், அனைத்தும் அவனுடைய பதிவின் அடிப்படையில் அமைந்திருக்கும். அவனுடைய தன்மைகள் யாவும் அலை மூலமாக வெளிப்படுகின்றது.
.

ஒவ்வொரு மனிதனும் தனக்குள் நல்ல பதிவுகளையும், தீயபதிவுகளையும் பெற்றிருக்கின்றான். ஆகவே மனதின் நிலைக்கேற்ப அவனிடமிருந்து வரும் எண்ணம் சில நேரங்களில் நேர்மையானதாகவும், சில நேரங்களில் முரண்பாடுடையதாகவும் இருக்கின்றன. இங்கு நேர்மையான அல்லது முரண்பாடான எண்ணம் அது சென்று அடையக்கூடிய பொருள் அல்லது மனிதனைப் பொறுத்து அமைவது இல்லை. அவை யாரிடமிருந்து செல்கின்றனவோ அவர்களுடைய தன்மையைப் பொருத்து அமைகின்றன. இந்த விஞ்ஞானத்தை, தத்துவத்தை அறிந்து கொள்ளாமல் நாம் எண்ணற்ற பதிவுகளை ஏற்படுத்திக் கொண்டு அவற்றை நன்றாக வேரூன்றச் செய்து கொண்டோம். தேவையற்ற தீய பதிவுகளை நாம் ஊக்குவிக்கும் பொழுது அது மேலும் ஆழமாகப் பதிந்து நம் குணங்களை தீய பதிவுகளே கட்டுப்படுத்துகின்றன. நேர்மையற்ற முரண்பாடான எண்ணங்களை மாற்றி தீயபதிவுகளை களைவது சிறந்த ஆன்மீக முயற்சியாகும். தூய எண்ணம், சொல், செயல்களினால் இனிமையான நல்ல அலைகள் ஏற்படுத்தும் பயிற்சியினை மேற்கொள்ள வேண்டும். ஒருவரை வாழ்த்துவதினால் ஏற்படும் நற்பயனை நாம் இங்கு தான் உணரமுடியும்.
.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
.

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

.
"பிறர் நலமாக வாழ வேண்டும் என்ற கருத்தோடு
எழும் ஒரு ஒலியே வாழ்த்து என்ற வார்த்தையாகும்".
.

"உண்ணும் உணவு உடல் மட்டும் பாயும்,
எண்ணும் எண்ணங்கள் எங்குமே பாயும்".
.

"மனம் ஒரு நிரந்தரமான பொருள் இல்லை; தொடர்ந்து
வந்து கொண்டேயிருக்கக் கூடிய ஒரு இயக்கம்".
.

"இன்பத்தும் துன்பத்தும், இயற்கையும் கற்பனையும்,
சிந்தித்து அறிபவன், சிறப்பாக வாழ்வான்".
.

"வேதத்தை யான்படித்த தில்லை ஆனால்
வேதத்தின் உட்பொருளாய் என்னைக்கண்டேன்,
வாதத்தில் யான் கலந்து கொண்டதில்லை
வாதிப்போர் அனைவருக்கும் பொருளாய் உள்ளேன்;
பேதித்த அண்டங்கள் உயிர்கட்கெல்லாம்
பிறப்பிடமாய்க் கருப்பொருளாய் என்னைக் கண்டேன்
சோதிப்போர் புலனறிவால் என்னைக் காணார்
சுயநிலையை அகத்துணர அவர் நான் ஒன்றே."
.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

சனி, 7 மார்ச், 2015

Q : Before regular meditation we do purification of the atmosphere around us. Is this required when we do meditation during work, walk etc.?


A : Not necessary. But it is better to keep the atmosphere Divine. For this purpose, it is not difficult to start your meditation saying "the atmosphere around me is purified by the Divine Power", whenever and wherever you meditate. Even a fraction of a second will do. That thought itself will bring harmony and peaceful energy around you. Even otherwise there will be no negative effect. Only there may be some loss of benefit to you.

வெள்ளி, 6 மார்ச், 2015

ஊனுடலே வாகனம்

நாம் சமுதாயத்தில் ஓர் அங்கம். இந்த உடல் சமுதாயத்தின் சொத்து. அதனைக் கெடுப்பதற்கு நமக்கு அதிகாரம் இல்லை. இந்த உடலுக்காக நாம் சமுதாயத்தில் கடன்பட்டிருக்கிறோம். மற்றும் அன்றாட அனுபோகப் பொருட்களையும் அதனிடமிருந்து பெற்று அனுபவித்து வருகிறோம். இந்தக் கடனைத் திருப்பித் தரும் வழியே கடமை எனப்படுகிறது.
.
அவர்களது உடலாற்றலையும், அறிவாற்றலையும் அந்தந்த நேரத்திற்கும் சூழ்நிலைக்கும் ஏற்றபடி குறைவில்லாமல் சமுதாய நலத்திற்கு அர்ப்பணமாகச் செலவிடல் தான் கடமை.
உடலைக் கொண்டு தான் இந்தக் கடமையை ஆற்ற வேண்டும்.
.
உடல் நலக்குறைவு ஏற்படும் போதும், நலிவுற்ற போதும் சமுதாயம் நம்மைக் கவனிக்க வேண்டி வந்து விடுகிறது. இதனால் சமுதாயத்திற்கு வரவேண்டிய வரவும் நின்றுபோய் மருந்தென்றும் உபசரணை என்றும் நம்மால் சமுதாயத்திற்கு இழப்பு உண்டாகிறது. எனவே தான் கடமையை வகைப்படுத்தும் போது உடல், குடும்பம், சுற்றம், ஊர், உலகம் என்று உடல் கடமைகளை மற்றவற்றின் முன்னால் வைக்கப்பட்டது.
.
இனி ஆன்மீக நோக்கில் உடல் நலத்தின் அவசியத்தை ஆராயலாம். இதுவரை மனிதனிடம் ஏற்பட்டுள்ள களங்கங்கள் பாவப்பதிவுகள் நீங்கினால் தான் உயிருக்கு வீடுபேறு, விடுதலை கிடைக்கும். பாவப்பதிவுகள் எப்படிப் போகும். உடலை எடுத்தால் தான் அந்தப் பாவப் பதிவுகள் துன்பமாக அனுபோகமாகி நீங்கும் அல்லது யோக சாதனைகள் மூலம் நீக்கிக் கொள்ளலாம். அதற்குத் தான் இந்த உடலை உயிர் எடுத்து வந்தது. உயிர் தன் மூலத்தை அறிந்து கொள்ள எடுக்கின்ற முயற்சிக்கும் இந்த உடல் தேவைப்படுகிறது. ஆகவே உடலை உயர்வாகக் கருதி, சீர்கேடு அடையாமல் போற்றிப் பாதுகாக்க வேண்டும். அப்போது தான் ஆன்மீகப் பயணம் தடைபடாமல் இருக்கும்.
.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
.
"அண்டத்தில் கடவுளாய் அழைக்கப்படுபவன்
பிண்டத்தில் உயிரெனப் பேசப்படுகிறான்;
கண்டத்தின் மேலே கருவில் நிலைத்தவன்
அண்டத்தும் பிண்டத்தும் அவனையே காண்கின்றான்".
.
"அவனில் அணு, அணுவில் அவன்,
உன்னில் எல்லாம், நீ அறி உன்னை".
.
பழிச்சுமை கழி:
"ஐயுணர்வின் வயம் ஏற்ற
ஆன்மாவின் பழிச் சுமையை
மெய்யுணர்வு பெற்றாற்றி
மிக எளிதில் கழித்திடலாம்.
தெய்வ நிலையுடன் அறிவைச்
சேர்த்தொன்றும் தவம் பயின்று
உய்ய நினைந்தால்; உலகீர் !
உடனே என் தொடர்பு கொள்வீர்!"
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

வியாழன், 5 மார்ச், 2015

சீரமைப்பு (Streamline) :

"மனம் நிற்க வேண்டும் என்று அதாவது மற்ற எண்ணங்கள் எழாமல் நிற்க வேண்டும் என்று பலர் நினைப்பது போல் மனம் சும்மா நிற்கவே நிற்காது. நிற்கவே முடியாது. எப்போது நிற்கும் என்றால், இந்த உயிர்ச்சக்தி ஓட முடியாமல் திணறி அதிலிருந்து இயங்காமல் உடல் என்ற இயந்திரமே கெட்டுப் போய்விட்டது என்றால் மன இயக்க அலையே நின்று போய்விடுகிறது. அதோடு மரணம் தான். அல்லது உயிர்ச்சக்தி பலகீனமாக இருக்கிறபோது அதற்குப் போதிய அளவுக்கு ஆற்றலைப் புதுப்பிப்பதற்காக ஓய்வு எடுத்துக் கொள்கிறபோது தூக்கம் வருகிறது. தூக்கம், அல்லது மரணம், இந்த இரண்டு சூழ்நிலைகளில் தான் மனம் (Mind) செயல்படாது நிற்கும்.
.
எண்ணமே வரக்கூடாது.. மனம் நிற்க வேண்டும்.. என்று அடிக்கடி பலர் நினைக்கிறீர்கள். உதாரணமாக - உங்களது ஸ்டோர் ரூமில் நூறு பொருட்களை வைத்திருக்கிறீர்கள். ஒரு பொருள் தேவையாக இருக்கிறது. ஆனால் நீங்கள் அந்த ஒரு பொருளைத் தேடி எடுக்கப் போகும்போதும் அங்கு அடுக்கி வைக்கப்பட்டுள்ள மற்ற நூறு பொருட்களும் கண்ணுக்குப்படுகிறது. நாம் தேடி எடுக்கப் போகும் பொருள் போக மீதி எல்லாமும் சேர்ந்து தென்படுகிறதே என்று ஏன் சிரமப்படுகிறீர்கள் ?. உங்களுக்கு வேண்டிய பொருளை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். மிச்சப் பொருட்களை விட்டுவிடுங்கள். தேடும் பொருள் போக மற்றப்பொருள் எல்லாம் என் கண்ணுக்குத் தெரியவே கூடாது என்று சொல்கிற மாதிரி - அப்படி மற்ற எண்ணமெல்லாம் வரவே கூடாது என்று நீங்கள் நினைத்தால், அப்போது எந்த எண்ணம் வரும்? இன்றைக்கு நான் எண்ணுகிற எண்ணம் மட்டும் தான் வர வேண்டும் என்றால் எப்படி வரும்? ஏற்கனவே எண்ணி இருப்பு வைத்த எண்ணங்களும் சேர்ந்தே தான் வரும். ஏனென்றால் அது கருமையத்தில் இருப்பாகி உள்ளது. அதனால் எண்ணமே அடியோடு நின்று போக வேண்டும் என்று நினைப்பதே தவறு.
.
நீங்கள் உங்களது எண்ணம் நிற்க வேண்டும் என்று நினைத்தாலும் நினைக்காவிட்டாலும் கடைசியாக அது ஒரு நாளைக்கு உடலைவிட்டு உயிர் பிரியும் போது எண்ணம் நிற்கத்தான் போகிறது !. இன்று மனதில் எழும் மற்ற எண்ணமெல்லாம் நின்றுவிட வேண்டும் என்று நாமாக ஏன் நினைக்க வேண்டும் ? அப்படி நினைப்பதும் தவறு. அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?.
.
நாம் செய்ய வேண்டியதெல்லாம் நம் எண்ண ஓட்டத்தைச் சீர்படுத்த வேண்டியது தான் (You have to Streamline) நாம் செய்ய வேண்டிய வேலை. முறையான அகநோக்குப் பயிற்சியும் (Simplified Kundalini Yoga), அகத்தாய்வு (Introspection) பயிற்சியில் எண்ணம் ஆராய்தல், ஆசை சீரமைப்பு, சினம் தவிர்த்தல், தத்துவ விளக்கங்கள் போன்ற சிந்தனையை தூண்டும் பயிற்சிகளின் மூலம் மனதை ஒழுங்குபடுத்திக் கொண்டால் எண்ணத்தின் ஆற்றல் வளரும். மனோபலம் உண்டாகும். அதோடு மட்டுமல்லாது, அதனுடைய பயன் வாழ்நாள் முழுவதும் நம்மை எல்லாத் துறைகளிலும் சிறப்படையச் செய்யும்."
.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
.
***************************************************************
.
"எந்த இடத்தில் மனம் விரிகிறதோ அங்கு ஆராய்ச்சிவயமாகும்.
மனதை விரிவிலேயே வைத்துக் கொண்டு இருக்கும்போது
ஆசை பேராசையாக மாறாது. சினம் வராது. ஏனென்றால்,
மனவிரிவில்தான் எல்லாம் விளங்கிக் கொள்கிறது."
.
"எண்ணத்தை எண்ணத்தால் ஆராய்ந்தால்
எண்ணத்தின் இருப்பிடமும் இயல்பும் தோன்றும்
எழும் எண்ணம் யாவும் நற்பயனாய் மாறும்."
.
"எண்ணம் எழும் இடமோ ஓர் புள்ளியாகும்
இயங்கி முடியும் அளவோ அகண்டாகாரம்."
.
"எண்ணத்தில் எண்ணமாய் இருப்பதே யோகம்."
.
"அறிவை அடக்க நினைத்தால் அலையும்
அறிவை அறிய நினைந்தால் அடங்கும்."
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

புதன், 4 மார்ச், 2015

உலகுக்குத் தேவை இரண்டு ஒழுக்கப்பண்பாடு


"முன்பு தோன்றிய மகான்கள், 'மனிதர்களிடையே குழப்பங்கள் என்றுமே வரக்கூடாது, பிணக்குகள் இருக்கக் கூடாது, மனிதன் மனிதனை உணர்ந்து கொள்ள வேண்டும். இயற்கைச் சட்டத்தை உணர்ந்து கொள்ள வேண்டும்' என்று ...
.

(1) இறைவழிபாடு,

(2) அறநெறி
.

என்ற இரண்டு செயல் திட்டங்களை உருவாக்கி மக்களுக்குப் போதித்தார்கள்.
.

'அறநெறி, இறைவழிபாடு' இரண்டும் வேண்டும் என்று எந்த நாட்டில், எந்தக் காலத்தில் ஒருவர் போதித்தாரோ, அங்கு அன்று உள்ள மக்கள் அதைப் போற்றி, அவரது பெயரிலேயே வாழ்க்கை முறையை வழங்கி வந்தார்கள். அதுதான் மதம் எனப்படுகிறது. மதத்திற்கு என்று தனியாகப் பெயர் இல்லை. மதச் சட்டத்தை உருவாக்கிய பெரியோர்கள் பெயரால் தான் இந்த உலகத்தில் உள்ள மதங்களெல்லாம் வழங்கப்படுகின்றன.
.

இங்கு முக்கியமான ஒரு கருத்தைக் கவனிக்க வேண்டும். எத்தனையோ மதங்கள் உலகத்தில் தோன்றியுள்ளன. மேலே விளக்கிய இரண்டு அடிப்படைக் கொள்கைகளைத் தான் எல்லா மதங்களும் போதித்திருக்கின்றன என்பதை முதிலில் நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.
.

இறைநிலை ஒவ்வொரு உயிரிலும் உள்ளும் புறமும் நிறைந்து இயக்கிக் கொண்டிருக்கிறது என்று தெரிந்து கொள்வது உயிர் வழிபாடு. பிறருக்குத் துன்பம் செய்யாது வாழ வேண்டும். ஏற்கனவே துன்பப்படுபவர்களுக்கு இயன்ற வரையில் உதவி செய்ய வேண்டும். இவை இரண்டும் தான் உலகுக்குத் தேவை.
.

(1) துன்பம் தரும் செயல்களைச் செய்யாது நான் வாழ வேண்டும்,

(2) துன்பப்படும் மக்களுக்கு முடிந்த உதவியைச் செய்ய வேண்டும்.
.

இவ்விரண்டு கருத்துக்களை உலக மக்களனைவரும் எடுத்துக் கொண்டார்கள் என்று கற்பனையாக வைத்துக் கொள்ளுங்கள். யாருக்கும் துன்பமில்லாது தானும் சிறப்பாக வாழ்ந்து, முடிந்த வரையில் பிறருடைய துன்பத்தைப் போக்குவது என்று வந்து விட்டோமேயானால், அது தான் வேதம், புராணம், அரசியல் எல்லாவற்றின் உட்கருத்துமாகும்."
.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

செவ்வாய், 3 மார்ச், 2015

சாதனை வழி


இன்றைய உலக சமுதாய சூழ்நிலையில் விரிந்த கண்ணோட்டத்தோடு மக்களுக்குத் தொண்டு முறையில் ஆன்மீக அறிவை ஊக்குவிக்கவும், அதனைத் தடுத்துக் கொண்டிருக்கும் கற்பனை புகையையும், துன்பங்கள், சிக்கல்கள் இவற்றை குறைப்பதற்காகவும் திட்டமிட்டுத் தொடங்கப் பெற்ற நிறுவனமே உலக சமுதாய சேவா சங்கமும் அதன் செயல் வழியாகிய மனவளக் கலையுமாகும். கர்மயோகம் என்னும் வாழ்க்கை நெறியை மக்கள் பண்பாடாக வளர்ப்பது சிறந்ததோர் சீர்திருத்தத் திட்டமாகும்.
.
சிந்தனையை வளர்க்கவும், அறிவுக்கு நுண்மை, கூர்மை, உறுதி, தெளிவு இவற்றையளித்து அமைதியை உருவாக்க வல்ல அகத்தவ முறை இதில் இருக்கிறது. நான் என்ன செய்கிறேன். இதனால் என்ன விளைவு ஏற்படும் என்பதையுணர்ந்து நல்லன தேர்ந்து செயலாற்றும் பண்பாட்டை வளர்க்க அகத்தாய்வுப் பயிற்சி இருக்கிறது. நோய்களைப் போக்கிக் கொள்ளவும் நோய் வராமல் காக்கவும் ஏற்ற உடல் பயிற்சியும், உடலோம்பும் அறிவுப் பாடங்களும் உள்ளன.
.
விளைவறிந்து செயலாற்றும் விழிப்பு நிலையின் ஒவ்வொரு செயலிலும் இறையுணர்வைப் பெற்றும், அறவழி வாழவும் ஏற்ற கர்மயோக நெறி நிற்கும் வாழ்க்கை முறை இருக்கிறது. பிறவிப் பயனாகிய அறிவை அறிய இறை நிலையோடு ஒன்று கலந்து பேரின்ப வாழ்வினை அனுபவிக்க ஏற்ற அறிவு விளக்கப் பயிற்சியும் வாழ்வு முறையும் உள்ளன. தன் தகுதியை விளங்கிக் கொண்டும், அதை வளர்த்துக் கொண்டும், தன்னம்பிக்கையோடு வாழ்வை நடத்த அச்சமின்மையும், தகைமையும் வளர்த்துக் கொள்ள ஏற்ற ஆக்க முறை வாழ்க்கை நெறி இருக்கிறது. பொதுவாகவும், சுருக்கமாகவும் சொல்லுமிடத்து மனிதன், மனிதனாக வாழ, ஏற்ற ஒரு சாதனை "மனவளக்கலை" ஆகும்.
.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
.
"பிரபஞ்சத்திற்கு ஆதி பொருளாக உள்ள
(Universal Being) தெய்வ நிலை, மெய்ப்பொருள்
நிலைதான் மனிதனுடைய அறிவாக உள்ளது".
.
சேர வாரீர் :
"பல நாட்கள் தவம் செய்து, கனல் மிகுந்த
பக்குவமும் தனையறிந்த நிலையும் கொண்டு
நலமொன்றே பலனான ஞானமார்க்கம்
நாடிநிற்கும் எவர்க்கும் அவர் அறிவிற்கேற்ப
சில நாளில் சீவனையே சிவனாய்க் காணும்
சிந்தனையின் சிகரத்தில் கொண்டு சேர்த்து
உலக சமாதானப் பெரும் திட்டம் காட்டி
உயர்ஞானம் உணர்த்துகின்றேன் கொள்வீர்,வாரீர்."
.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

திங்கள், 2 மார்ச், 2015

சுவாமிஜி, மரணத்தருவாயில் எண்ணம் எப்படி இருக்கும்?"


மகரிசியின் பதில்: -
" கடைசி எண்ணமானது உயிர் விடும் மனிதனின் குணத்தைப் பொருத்தது. ஆன்மீகப் பயிற்சியிலேயே சிந்தனை செய்து கொண்டிருந்தவர் மரணமுறும் போது தெய்வீக எண்ணங்களாகத் தோன்றும். சிற்றின்பப் பிரியர்களுக்குக் கடைசி நேரத்திலும் சிற்றின்பம் பற்றிய எண்ணமே தோன்றும். கடைசி எண்ணம் என்பது ஏதோ கடைசி கடைசியாகத் திடுக்கென்று வந்துவிடுவதில்லை. வாழ்நாளெல்லாம் எந்தத் தன்மையை ஒருவர் உருவாக்கிக் கொண்டாரோ அதற்கு நிகரான எண்ணமேதான...் கடைசியிலும் தோன்றும்.
.
இறைநிலையடைய வேண்டும் என்று ஆசைப்படுபவர், வாழ்நாளெல்லாம் அதே முயற்சி பயிற்சியில் இருந்தால்தான் கடைசி எண்ணமும் அதே போன்று ஏற்பட்டு, அவரது வாழ்நாளின்பின் அவருக்கு இறைநிலை சித்திக்கும்.
.
அப்படியின்றி தவறான முறையில் வாழும் ஒருவருக்குக் கடைசி கடைசியாகவும் கீழான எண்ணமே தோன்றி, அவரது ஆன்மாவானது அத்தகு தன்மை கொண்ட வாழ்வோரைப் பற்றிக் கொண்டு தன் எண்ணத்தையும் ஆசையையும் அவர் மூலம் பூர்த்தி செய்து கொள்ளும்.
.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

ஞாயிறு, 1 மார்ச், 2015

உலக சமுதாய சேவா சங்கம் :


நல்வாழ்வுக்கு வழிகான வேண்டுமெனில் வாழ்வின் நலக்கேட்டுக்கு காரணங்களை முதலில் அறியவேண்டும். பழக்கத்தால் செயலும், கருத்தும் உருவாகி அவற்றுக்கு அடிமையாகி வாழும் மக்களுக்கு விழிப்பூட்டி நல்வழிக்குத் திருப்புவது ஒரு சில நாளில், ஒரு சில மனிதரால் முடிக்கக்கூடிய செயலன்று. ஒரு மனிதன், மக்கள் வாழ்வின் நோய்களுக்கு மருந்து கண்டுபிடிக்கலாம். அது சரியானது தானா என்று நேர்மையில் சிந்தித்து முடிவெடுக்க, விளக்க அறிவு பெற்றவர்கள் உலகில் பெருக வேண்டும்.
.

பல துறைகளிலும் பல நாட்டிலும் வாழும் மக்களுடைய அறிவு மயக்க நிலையிலிருந்து விடுபட்டு விளக்க நிலை பெறத்தக்க சூழ்நிலையும் வாய்ப்பும் பெருக வேண்டும். செல்வந்தர்கள், அரசியல் தலைவர்கள், வணிகர்கள், எழுத்தாளர்கள், விஞ்ஞானிகள் இவர்கள் பலரிடம் இன்று உலக நல நோக்கம் மிகுந்து வருகின்றது. அவர்களுடைய ஒத்துழைப்பால் ஓருலகப் பண்பாட்டு அரங்கு நிறுவி அதன் மூலம் திட்டமிட்ட முறையில் மக்கள் பண்பாட்டை உயர்த்த வேண்டும். விஞ்ஞான அறிவு பெருகியுள்ள இக்காலத்தில் இளைஞர்களுடைய உள்ளத்தைத் தொட்டு, ஊக்கி நலம் பெருக்கும் நிறுவனம் செயல்புரியவேண்டும். ஆம், இதனை யார் தொடங்குவது? எப்படி மக்களை மயக்க நிலையிலிருந்து விளக்க நிலை வாழ்வுக்கு மாற்றுவது? மக்கள் நலம் பேசிப் பேசி மாண்டவர்கள் எண்ணிக்கை கொஞ்சமல்ல. சீரிய திட்டங்களும், அவற்றால் விளைந்த பயன்களும் எடுத்துக்காட்ட முடியவில்லையே ! மீண்டும் இச்சோர்வு மனப்பான்மையில் வினாக்கள் எழுகின்றன. "உலக சமுதாய சேவா சங்கம்" என்னும் நிறுவனமே தக்கபதிலாக இயங்குகின்றது.
.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

.
*******************************************************

.
"ஞானம் பெற தவம் வேண்டும்;
தவத்தைப் பெற குரு வேண்டும்".
.

"அவனில் அணு, அணுவில் அவன்,
உன்னில் எல்லாம், நீ அறி உன்னை".
.

குண்டலினி தீட்சை :

"இனி இந்தச் சங்கடங்கள் எவர்க்கும் வேண்டாம்
எண்ணத்தின் ஓர்மைக்கு ஏற்றதான
தனிச்சிறப்பாம் குண்டலினி தீட்சை உண்டு
தகுதியுளோர் விருப்பமுளோர் அனைவர்கட்கும்
கனிவுடனே கைவிரலால் நெற்றி தொட்டு
கனல் மூட்டிக் கருவெழுப்பிக் கருத்துணர்த்தும்
புனிதமுறையைப் பரப்பஉளம் உவந்தும்
பொறுப் பேற்றும் இருக்கின்றேன் தொடர்பு கொள்வீர்."
.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி